Monday, December 26, 2011

டெரர் கும்மி விருதுகள் 2011 - இன்றுமுதல் பதிவுகளை இணைக்கலாம்!


அனைவருக்கும் வணக்கம்,
ஒரு இனிமையான பொழுதில் மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. முதல் முறையாக இதைப் படிப்பவர்கள் சிரமம் பாராமல் டெரர் கும்மி விருதுகள் அறிவிப்பு மற்றும் டெரர் கும்மி விருதுகள் போட்டி விதிமுறைகள் ஆகிய இரண்டு பதிவுகளையும்  படித்துவிட்டு இதை தொடருங்கள். நாங்கள் ஏற்கனவே அறிவித்தபடி இன்று டிசம்பர்  26-ம் தேதி உங்கள் பதிவுகளை இணைப்பதற்கான அறிவிப்போடு வந்துள்ளோம்.




முதலில் நாங்கள் கொடுக்கும் இணைப்பை தொடுத்து எங்கள் போட்டிக்கான தளத்தை திறந்துகொள்ளுங்கள். அதில் உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்து முதலில் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்களுடைய பதிவு ( ரெஜிஸ்டர் ) ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டால் விரைவில் உங்களுக்கு ஆக்டிவேசன் லிங்க் அனுப்பப்படும் என்ற தகவல் ( மெசேஜ் ) வரும். உங்கள் மின்னச்சல் முகவரிக்கு அந்த லிங்க் வரும்வரை தயவுசெய்து காத்திருங்கள். எதற்கும் உங்களுடைய ஸ்பேம் அல்லது ஜங்க் மெயிலையும் சோதனை செய்துகொள்ளுங்கள். மின்னஞ்சலில் ஆக்டிவேசன் லிங்க் கிடைக்கப்பட்டு அதை அழுத்தினால் நீங்கள் இப்போது பதிவுகளை இணைப்பதற்கு தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

பதிவுகளை இணைப்பதற்கு இரண்டு பிரிவுகளாக வைத்துள்ளோம். பொதுப்பிரிவில் நீங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்ட மூன்று பதிவுகளை மட்டுமே இணைக்கமுடியும். அடுத்து புதுமுக பதிவர்களுக்கான பிரிவு. இதில் அவர்களின் சிறந்த பதிவாகக் கருதும் மூன்று பதிவுகளை இணைக்கலாம். மேலும் புதுமுக பதிவர்கள் மட்டும் பொதுப்பிரிவில் இணைத்த பதிவுகளையும் புதுமுக பிரிவில் இணைக்கலாம். பதிவுகளைஇணைக்க கடைசி தேதி 2012 ஜனவரி 6 என்று விதிமுறைகளில் அறிவித்தோம். பல வாசகர்கள் தொடர்புகொண்டு விடுமுறை நாட்கள் அதிகம் வருவதால் கால அவகாசத்தை நீட்டிக்க சொன்னார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 2012 ஜனவரி 10 வரை நீட்டிக்கப்படுகிறது. அதற்க்கு பிறகு இணைக்கப்படும் பதிவுகள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களுடைய விதிமுறைகள் பற்றிய பதிவை மீண்டும் ஒருமுறை படியுங்கள். இதையும் மீறி ஏதேனும் சந்தேகம் அல்லது பதிவு செய்வதில் ( ரெஜிஸ்டர் ) பதிவுகளை இணைப்பதில் பிரச்னை அல்லது குழப்பம் இருந்தால் தயங்காமல் கருத்துரைகளில் கேளுங்கள் அல்லது  contest_2011@terrorkummi.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கேள்விகளை அனுப்புங்கள்.உங்களுக்கு  உதவுவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

இப்போது நீங்கள் செய்ய வேண்டியது சுலபமான  ஒன்றுதான். கீழே கொடுக்கப்பட்டிருக்கும்  இணைப்பை பயன்படுத்தி எந்த பிரிவில் உங்கள் பதிவுகளை இணைக்கப்போகிறீர்கள் என்று தேர்வு செய்து உங்கள்  பதிவுகளைஇணைக்கவும். இணைப்பதற்கு முன் ஒரு முறைக்கு இரு முறை சரியான பிரிவில் சரியான பதிவை இணைக்கிறீர்களா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள், ஏனென்றால் ஒருமுறை  இணைத்த பதிவை மறுமுறை மாற்ற இயலாது. மீண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறிக்கொண்டு தொடர்ந்து உங்களோடு இணைந்திருக்கிறோம். நன்றி.

                                                                                      



Friday, December 16, 2011

டெரர் கும்மி விருதுகள் 2011 - போட்டி தேதி, விதிமுறைகள்.






அனைவருக்கும் வணக்கம்,

கடந்தவாரம் ஞாயிற்று கிழமை எங்கள் டெரர் கும்மியின் ஓராண்டு நிறைவை ஒட்டி நாங்கள் அறிவித்த டெரர் கும்மி விருதுகள் 2011 முயற்சிக்கு நீங்கள் அளித்துவரும்  ஆதரவிற்கு மிகவும் நன்றி. அதோடு  எங்கள் டெரர் கும்மி இரண்டாம் ஆண்டில் அடிவைப்பதற்கும் வாழ்த்துக்கள் கூறிய  சொன்ன அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.ஒருவித தயக்கத்துடன்தான் இந்த விருதுகள் அறிவிப்பை அறிவித்தோம்,ஆனால் நீங்கள் தந்த/தந்துகொண்டிருக்கும் ஆதரவு எங்களை மேலும் உற்சாகப்படுத்துகிறது. பல நண்பர்கள் கருத்துரைகளிலும், மின் மடலிலும் மற்றும் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு தங்கள் யோசனைகளையும் சொன்னார்கள் அவர்களுக்கு எங்களது நன்றிகள். பலபேர் எங்களிடம் சொன்ன ஒரு யோசனை விருதுகளின் பிரிவை அதிகப்படுத்துவது,  அதோடுமட்டுமல்லாது  அவர்களே பல பிரிவுகளையும் சொன்னார்கள்.  கண்டிப்பாக அவற்றையெல்லாம் புறந்தள்ளாமல் எடுத்துக்கொள்கிறோம்.

எங்கள் ஆண்டு நிறைவையே நாங்கள் மறந்திருந்த வேளையில் திடீரென்று நண்பர்களால் நினைவுபடுத்தப்பட்டு அந்த சந்தோசத்தை உங்களோடு பகிரவே இதை ஏற்பாடு செய்தோம். கால அவகாசம் குறைவாக இருந்ததால் குறைவாகச் செய்தாலும் நிறைவாக செய்யவேண்டும் என்பதற்காக இந்த வருடம் இந்த பிரிவுகளை மட்டும் முடிவு செய்தோம். இனி வரும் ஆண்டுகளில் உங்கள் யோசனைப்படியே இன்னும் பிரமாண்டமாய் செய்வதற்கு எங்கள் முயற்சிகள் தொடரும் என்று இந்த வேளையில் சொல்லிக்கொள்கிறோம். போட்டிக்கு உங்கள் பதிவுகளை இணைப்பதற்கென்று எங்கள் நடுவர்களின் யோசனைகளுடன் சில விதிமுறைகளை வகுத்துள்ளோம். தகுதியான பதிவை தேர்ந்தெடுக்க மட்டுமே இந்த விதிமுறைகள் என்ற உங்கள் புரிதலுக்கு நன்றி.

போட்டிக்கான விதிமுறைகள்.

1. போட்டிக்கு இணைக்கப்படும் பதிவுகள் முழுக்க முழுக்கத் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும்ஆகவே தமிழில் எழுதும்  அனைத்துப்  பதிவர்களும்  இதில் கலந்துகொள்ளலாம்.

2. இணைக்கப்படும் பதிவுகள் 2011 ஜனவரி முதல் தேதியில் இருந்து 2011 டிசம்பர் 31 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் வெளிவந்ததாக இருக்கவேண்டும்.

3. இணைக்கப்படும் பதிவுகள் போட்டியாளர் தன் சொந்த வலைப்பதிவில் எழுதியதாக இருக்கவேண்டும், குழும பதிவுகளுக்கு அனுமதி இல்லை மேலும் குழுமமாக செயல்படும் தளத்தில் வெளிவந்த தனிநபர் பதிவுகளுக்கும் அனுமதி இல்லை.


4. ஒரு போட்டியாளர் ஒரு பிரிவுக்கு ஒரு பதிவு மட்டுமே இணைக்கலாம். அதிக பட்சமாக மூன்று  பிரிவுகளுக்கு தங்கள் பதிவுகளை இணைக்கலாம்.


5. போட்டியாளரின் விபரங்கள் நடுவர்களுக்கு கொடுக்கப்படமாட்டாது, பதிவுகள் மட்டுமே நடுவர்களின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்.

6. இணைக்கப்பட்ட பதிவுகளை பற்றியோ அல்லது மற்ற பதிவுகள் பற்றிய விபரங்கள் அறியவோ டெரர் கும்மி உறுப்பினர்களுடன் எந்த தொடர்பும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

7. போட்டியாளர்கள் போட்டி சம்பந்தமாக நடுவர்கள் யாரையும் தொடர்பு கொண்டால் போட்டியில் இருந்து உடனடியாக எந்தவித முன்னறிவிப்பும் இன்றி போட்டியிலிருந்து நடுவர்களால் நீக்கப்படுவார்கள்.

8. போட்டியாளர்கள் தங்கள் சொந்தப் பதிவை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும், மற்ற தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட பகிர்வுகள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது.

9. ஒரு நபருக்கு அதிகபட்சமாக 2 வலைப்பூக்களை மட்டுமே அனுமதிக்கபடும், வலைப்பூக்கள் நவம்பர் 30, 2011 க்கு முன்பு தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.

10.  புதுமுக பதிவர் பிரிவிற்கு இணைக்கப்படும் வலைத்தளங்கள்  2011 ஆம் வருடம் தொடங்கப்பட்டதாக இருக்க வேண்டும்.  மேலும் சம்பந்தப்பட்ட பதிவர் வலையுலகிற்கும் புதியவராக இருத்தல் வேண்டும், ஏற்கனவே வலையுலகில் எழுதிகொண்டிருக்கும் பதிவர்கள் கடந்த வருடத்தில் புதிதாக ஒரு வலைத்தளம் உருவாக்கியிருந்தால் அது புதுமுக பதிவர் பிரிவில் ஏற்றுக்கொள்ளபடமாட்டாது.

11. புதுமுக பதிவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்கள் 3 பொது பிரிவுகளில் தலா ஒரு பதிவையும் புதுமுகபிரிவில் தங்கள் சிறந்த மூன்று பதிவுகளையும் இணைக்க அனுமதிக்கப்படுகிறது. அதாவது புதுமுக பதிவர்கள் மட்டும் அதிகப்ட்சமாக 4 பிரிவுகளில் கலந்து கொள்ளலாம்.

12. இணைக்கும் பதிவுகளில் கூடுமானவரை தீவிர தனிமனித தாக்குதல், ஜாதி மத துவேசம், ஊனமுற்றவர்களை கிண்டல் செய்வது இவையெல்லாம் இல்லாமல் இருப்பது நலம்.

13. ஒருமுறை இணைத்த பதிவுகளை மறுபடியும் மாற்ற இயலாது. ஆகவே சரியான பிரிவில் சரியான பதிவை இணைத்துவிடுங்கள்.

14. போட்டிக்கு இணைப்பதற்கான சுட்டி டிசம்பர் 26ம் தேதி உங்களிடம் அறிமுகப்படுத்தப்படும், அன்றிலிருந்து ஜனவரி 6 ம் தேதி வரை இணைக்கப்படும் பதிவுகள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

15. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு புத்தக கூப்பனாக மட்டுமே வழங்கப்படும், ஒவ்வொரு பிரிவுக்கும் முதல் பரிசு ரூ.600 - க்கான கூப்பனும், இரண்டாம் பரிசு ரூ.400 - க்கான கூப்பனும் தபாலில் அனுப்பப்படும்.  ஹால் ஆஃப் ஃபேம் பதிவருக்கு மட்டும் ரூ.1000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும். வெற்றிபெறும் வெளிநாட்டில் உள்ள பதிவர்கள்  கண்டிப்பாக உள்ளூர் முகவரி தரவேண்டும். புத்தகங்கள் எப்படி வாங்குவது என்பதை முடிவு அறிவித்தவுடன் சொல்லுகிறோம்.

16. போட்டி சம்பந்தமான எந்த முடிவையும் முன்னறிவிப்பின்றி மாற்றவோ நிறுத்தவோ டெரர்கும்மிக்கு முழு அதிகாரம் உள்ளது. 

இந்த வேளையில்மற்றொன்றையும்  சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம், இந்த போட்டியில் நடுவர்களாக செயல்படும் யாரும் போட்டிக்கு தங்கள் பதிவை இணைக்கமாட்டார்கள். அனைத்து நடுவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை இங்கு நன்றி சொல்லிக்கொள்கிறோம். விதிமுறைகளில் அல்லது போட்டி சம்பந்தமான ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தயங்காமல் கருத்துரையிலோ அல்லது terrorkummi@gmail.com என்ற இந்த மின்னஞ்சல் முகவரிக்கு  தொடர்புகொள்ளுங்கள். போட்டியில் கலந்துகொள்ளப்போகும் அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறிக்கொண்டு விரைவில் பதிவுகளை  இணைப்பதற்கான அறிவிப்போடு உங்களை சந்திக்கிறோம்.



Sunday, December 11, 2011

டெரர் கும்மி விருதுகள் அறிவிப்பு - மொத்தப்பரிசு RS10000 !




அனைவருக்கும் வணக்கம்,

ஒரு சந்தோசமான தருணத்தில்  சந்தோசமான அறிவிப்போடு உங்களைச் சந்திப்பதில் எங்களுக்குப் பெருமகிழ்ச்சியே! தமிழ்நாட்டில்  பிறந்து உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களை இந்த இணையம் ஒன்றாகக் கொண்டு வந்து சேர்த்தது. சிதறிக் கிடந்த எங்களை இரும்புத் துகள்களைக் காந்தம் இழுப்பது போல இழுத்துச் சேர்த்துக் கொண்டது எங்களின் நட்புதான்! ஒரு குழுவாக மின்மடலிலும் பதிவுகளிலும் கூடி கும்மி அடித்த நாங்கள் கடந்த வருடம் இதே நாளில்தான் இந்த டெரர் கும்மி தளத்தை ஆரம்பித்தோம்! ஆரம்பத்தில் எந்த இலக்கும் எங்களுக்கு இருக்கவில்லை.. எங்களின்  ஒரே நோக்கம் வாசக நண்பர்களின் சந்தோசம் மட்டுமே! அதனை இலக்காக கொண்டுதான் அற்புத விளக்கு என்ற நகைச்சுவை தொடர்.. அதன் பின் ஹன்ட் ஃபார் ஹின்ட் என்ற கேம் அதன் தொடர்ச்சியாக புதிய முயற்சியாக  பூமியை தேடி என்ற அறிவியல் கதை என்று எங்களை நாங்களே அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முயற்சி செய்தோம்... அதற்கு உங்களின் ஆதரவும் வரவேற்பும்தான் முதல் காரணம் என்றால் அது மிகையில்லை!


இதே நம்பிக்கையோடு எங்களின் சந்தோசத்தை பகிரவும் உங்களுக்கு எங்களது நன்றியினை தெரிவிக்கும் விதமாகவும் எங்கள் அடுத்தகட்ட  முயற்சியினை இன்று விதைக்கிறோம்! அதாவது இந்த வருடத்தில் வந்த சிறந்த பதிவுகளைக் கண்டறிந்து ஊக்குவித்து பரிசு வழங்குவதே அது.  அனைத்துப் பதிவுகளையும் பத்து பிரிவுகளாக வகைப்படுத்தி இருக்கிறோம்.. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.. இந்த வருடம் ஜனவரி முதல் தேதியில் இருந்து டிசம்பர் இறுதி வரை பதிவிடப்பட்ட/பதிவிடப்போகும்  உங்களுடைய பதிவுகளில் சிறந்த பதிவு எந்த பிரிவின் கீழ் வருகிறது என்று பார்த்து தயங்காமல் எங்களுக்கு அனுப்புங்கள். ஒவ்வொரு பிரிவிற்கும் இரண்டு நடுவர்களை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்  அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த இரண்டு இடுகைகளுக்கு (ஒவ்வொரு பிரிவிலும்) டெரர் கும்மி விருதுடன் முதல் பரிசும் இரண்டாம் பரிசும் வழங்கப்படும்! மொத்த பரிசுத்தொகை  RS 10000/-!





எப்படி உங்கள் பதிவுகளை இணைப்பது என்று இப்பொழுது குழம்ப வேண்டாம் அதைப்பற்றியும் எந்த தேதியில் இருந்து இணைக்க ஆரம்பிக்கலாம், இணைப்பதற்கு இறுதி தேதி எது மற்றும் மற்ற விதிமுறைகளை அனைத்தையும் அடுத்தடுத்த பதிவுகளில் தருகிறோம்.  இப்போது என்னென்ன பிரிவுகள் என்று தந்திருக்கிறோம், அதற்கு தகுந்தாற்போல் உங்கள் சிறந்த பதிவுகளைத் தேர்ந்தெடுத்து/தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்!


1 . நகைச்சுவைப்  பதிவுகள்.
இந்த பிரிவின் கீழ் உங்கள் ஆகச்சிறந்த நகைச்சுவை படைப்பு என்று கருதும் எந்த படைப்பையும் இணைக்கலாம்! உங்கள் பதிவுகளை தேர்ந்தெடுக்க இரண்டு நகைச்சுவை ஜாம்பவான்கள் தயாராக இருக்கின்றனர்! இன்னும் என்ன தாமதம்? கிளப்புங்கள் பட்டையை :-)

2 . கவிதைகள்
இந்த பிரிவின்கீழ் உங்கள் கவிதைகளை இணைக்கலாம். கவிதை என்றால் அது எந்த வடிவமாக இருந்தாலும் கவலை வேண்டாம் மரபுக் கவிதை, புதுக்கவிதை இப்படி தனித்தனிப் பிரிவுகள் இல்லை.  எப்படிப்பட்ட கவிதையையும் எங்களிடம் தாருங்கள். அதில் இருந்து சிறந்த முத்துக்களை தேர்ந்தெடுக்க எங்கள் கவிஞர்கள் தயாராக உள்ளனர்!

3 . விழிப்புணர்வு
இந்தப் பிரிவின் கீழ் உங்கள் விழிப்புணர்வு பதிவுகளை இணைக்கலாம்.. விழிப்புணர்வு என்றால் அது சமூகம், சுற்றுச்சூழல், கல்வி, மொழி இப்படி எதைப்பற்றி வேண்டுமானால் இருக்கலாம்! உங்கள் பதிவு சமூக மாற்றத்திற்கு சின்ன விதையை விதைக்கும் என்று கருதினால் அதை தயங்காமல் எங்களிடம் இணையுங்கள்! சிறந்ததை தேர்ந்தெடுக்க எங்கள் நடுவர்கள் தயாராக உள்ளனர்!

4 . கதைகள்
இந்தப் பிரிவின் கீழ் சிறந்த கதை என்று நீங்கள் நினைக்கும்  உங்கள் கதைகளை இணைக்கலாம்! கதைக்களன் எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம்... சமூகம், குடும்பம், க்ரைம், த்ரில்லர் இப்படி.. அப்பறம் என்ன தயக்கம்? உடனே தயாராகுங்கள்! (தொடர்கதைகளுக்கு அனுமதி இல்லை, மன்னிக்கவும்)

5 . அனுபவம்/பயணக்கட்டுரை
இரண்டு பெயர் கொண்ட தலைப்பை பார்த்து குழம்ப வேண்டாம்.. சிலர் ஒரு கடைக்குச் சென்று வந்த அனுபவத்தைக் கூட அழகாகச் சொல்லியிருப்பார்கள்... சிலர் ஒரு இடத்திற்கு போய் வந்தால் அவர்களின் கட்டுரையின் வாயிலாக நம்மையும் அந்த இடத்திற்கே அழைத்துச் செல்வார்கள்! உங்கள் பதிவுக்கு இப்படி ஒரு தகுதி உண்டென்று நீங்கள் நினைத்தால் தயங்காமல் பதிகளை இந்த பிரிவின்கீழ் இணைக்கலாம்!

6 . அரசியல் கட்டுரை
கடந்த கால அரசியல் ஆகட்டும் சம கால அரசியல் ஆகட்டும், இரண்டைப் பற்றியும் திறம்பட எழுதக்கூடிய பதிவர்கள் நம் பதிவுலகத்தில் எத்தனையோ பேர் உள்ளனர். இப்படி ஒரு பதிவாக உங்கள் பதிவு இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் தயங்காமல் இந்த பிரிவின் கீழ் இணைத்துவிடுங்கள்!

7 . திரை விமர்சனம்
இன்று இயக்குனர்கள் கூட நம் பதிவர்களுக்கு சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யும் நிலைக்கு நம் பதிவர்களின் விமர்சனம் தரமாகவும் நடுநிலையாகவும் இருக்கின்றது! மோசமான திரைப்படத்தின் விமர்சனத்தைக் கூட நல்ல விமர்சனம் என்று சொல்ல வைக்கும் வகையில் எழுதக்கூடியவர்கள் இங்கு அதிகம். இப்படி ஒரு விமர்சனத்தை நீங்கள் எழுதியிருந்தால் இந்த பிரிவின்கீழ் இணைத்துவிடுங்கள்!

8 . தொழில்நுட்பம்
தொழில்நுட்ப பிரிவில் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் சம்பந்தமான பதிவுகள் மட்டுமல்லாது, அறிவியல், விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட பதிவுகளையும் இணைக்கலாம். கணினி சம்பந்தமான அனைவருக்கும் தெரிந்த விளக்கம் அளிக்கும் பதிவுகளாக அல்லாமல் வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் புதிதாக அறிமுகமாகும் கணினி மென்பொருள்களை பற்றி விளக்குவதாகவும்,  அறிவியல், விஞ்ஞானம், தொழில்நுட்பம் சம்பந்தமான எல்லோருக்கும் புரியும்படியான கட்டுரைகளாகவும் இருத்தல் நலம்.

9 . சிறந்த புதுமுக பதிவர்கள்
நீங்கள் இந்தவருடம் ( 2011 )  ஜனவரி முதல் தேதிக்கு பிறகு பதிவுலகிற்கு வந்து வாசகர்களிடம் நல்ல வரவேற்பை அல்லது அவர்களால் கவனிக்கப்படாமல் போன நல்ல பதிவுகளை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் என்று நினைத்தால் தயங்காமல் இந்த பிரிவின் கீழ் இணைத்துவிடுங்கள்! உங்களை அங்கீகரிக்க நாங்கள் தயாராக உள்ளோம்! இதற்கு நீங்கள் எந்தக் குறிப்பிட்ட இடுகையையும் இணைக்க வேண்டாம். உங்கள் தளத்தின் முகவரியை மட்டும் இணைத்தால் போதுமானது. மற்றதை எங்கள் நடுவர்கள் பார்த்துக்கொள்வார்கள்!

10 . ஹால் ஆஃப் ஃபேம் பதிவர்.
இந்த பிரிவில் நீங்கள் இணைக்கமுடியாது. இது இந்த வருடம் முழுவதும் தொடர்ச்சியாக பல துறைகளிலும் படிக்க சுவாரஸ்யமான பதிவுகள் தந்த பதிவர் ஒருவரை அடையாளம்  காட்டும்  முயற்சி!  இது முழுக்க முழுக்க டெரர் கும்மி நண்பர்கள் நாங்கள் பதினாறு பேரும் ஒவ்வொருவரை நாமினேட் செய்து அதில் இருந்து ஒரு சிறந்த பதிவரை  தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளோம். இதில் எங்களுக்கு என்று சில விதிகளை வகுத்துள்ளோம். இந்த பிரிவு மட்டும் முழுக்க டெரர் கும்மி முடிவு சார்ந்தது!  

சரி.. எல்லா பிரிவுகளையும் பார்த்தாயிற்று.. இனி நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் பதிவுகளை பிரிவுகளுக்கு தகுந்தாற்போல் வகைப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். விரைவில் அடுத்த அறிவிப்பில் எந்த தேதியில் இருந்து எந்த தேதி வரை எப்படி இணைக்கலாம் என்றும் இணைப்பதற்கு என்னென்ன விதிமுறைகள் என்றும் சொல்லுகிறோம்! இந்த நேரத்தில் இன்னொன்றும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறோம். மேலே குறிப்பிட்ட பிரிவுகளில் 10 வது குறிப்பிட்ட ஹால் ஆஃப் ஃபேம் பதிவரை தேர்ந்தெடுப்பது மட்டுமே டெரர் கும்மி உறுப்பினர்கள். மீதமுள்ள ஒன்பது பிரிவுகளும் டெரர் கும்மியில் உறுப்பினர் அல்லாத நடுவர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படும்... மேலும் எந்த ஒரு பிரிவிலும் டெரர்கும்மி உறுப்பினர்கள் யாரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறோம். இது வரை நீங்கள் கொடுத்து வந்த ஆதரவை இனிமேலும் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்களிடம் இருந்து இப்போது விடைபெறுகிறோம்!

டெரர் கும்மி நண்பர்கள்

Thursday, December 8, 2011

சில கீச்சுகள்!

எனது சில டிவிட்டுகள் உங்களுக்காக :))


*.எனக்கு விக்கல் வரும்போதெல்லாம் எனது நண்பர்கள் நீ சிறந்த அறிவாளி என்பார்கள். உடனே விக்கல் நின்றுவிடுகிறது!

*.துவைத்து வைத்திருக்கும் பேன்ட்டில் ஜிப் போடவில்லை என்று சுட்டிக்காட்டி சிரித்துக்கொண்டிருக்காதீர்கள்!

*.யாரையும் சாதாரணமாக எடை போட வேண்டாம். தராசைப் பயன்படுத்துங்கள்!

*.கோபத்துடன் பிள்ளையார் முன் வந்த எலி கேட்டது “யாரைக் கேட்டு என்னை உமது வாகனமாக்கினீர்? “ நீண்ட யோசனைக்குப் பின் சொன்னார் “மறந்துட்டேன்!”

*.கிணறு ஒன்று செத்துப்போய்விட்டது. அதை எப்படிப் புதைப்பது ?

*.யானை ஒன்றை கனவில் பார்த்தேன்.கருப்பாகவும் 4 கால்கள் ஒரு வாலுடனும் இருந்தது.தும்பிக்கை எங்கே என்றேன்.எருமைக்கு எதற்குத் தும்பிக்கை என்றது!

*.திரியில் தீயை வைத்தும் வெடிக்காமல் உறங்கிக் கொண்டிருக்கிறது பட்டாசு. முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பிவிடப் போகிறேன்!

*.போலீஸ்காரர் வீட்டில் திருடுபவர் சிறந்த திருடரல்ல. இன்னொரு சிறந்த திருடன் வீட்டில் திருடுபவனே மிகச் சிறந்த திருடனாவான்!


*.வயிற்றுவலி என்று மாத்திரை ஒன்றை விழுங்கினேன்.உள்ளே சுற்றி பார்த்துவிட்டு இருட்டென்று வெளியே வந்துவிட்டது. அதை வாந்தி என்கின்றனர் மூடர்கள்!

*.நிலா என்னை முறைத்துக்கொண்டேயிருக்கிறதென கடவுளிடம் முறையிட்டேன். அதிகமாக மிரட்டிவிட்டார் போலும் நாளுக்கு நாள் இளைத்துக்கொண்டே போகிறது!

*.தலை முழு சொட்டையாக இருப்பவர் மொட்டை அடிக்கிறேன் என்று வேண்டியதை நம்பிக்கொண்டு வரம் தருவது கடவுளின் அறியாமையன்றி வேறென்ன?

*.மிகச் சிரமப்பட்டு புள்ளியே வைக்காமல் ஒரு கோலம் வரைந்தேன். “ ரொம்ப அழகா இருக்கு, எத்தன புள்ளி கோலம்? “ என்று கேட்கிறார்கள்!

*.தோல்விகளே வெற்றிகளின் படிக்கட்டுகளாம். படிக்கட்டுகள் யாருக்கு வேண்டும்? எனக்கு லிஃப்ட்டிற்கான வழி சொல்லுங்கள்!

*.சேற்றில் விழுந்த என் நிழல் குளிக்காமலே வீட்டிற்குள் வந்துவிட்டது. விரட்டினேன் வெளியேற் மறுத்தது.விளக்கை அணைத்ததால் பயத்தில் ஓடிவிட்டது!

*.சத்தமில்லாமல் சுடவேண்டுமென்பதற்காய் சைலென்சர் துப்பாக்கி கொடுத்தார்கள். “டாய்ய்ய்” என்று கத்திக்கொண்டே துப்பாக்கியை எடுத்தார் வில்லன்!

*.நல்லவேளையாக என் வலது கையில் ஒரு மச்சம் இருக்கிறது. இல்லையென்றால் கண்ணாடியில் தெரியும் எனது உருவத்தை அடையாளம் தெரியாமல் குழம்பியிருப்பேன்!

*.என் மூளையைக் குழப்பி விடுவதாக எனக்கும் என் நண்பனுக்கும் ஒரு பந்தயம். நிச்சயம் வெற்றி எனக்கே. இல்லாத ஒன்றை அவனால் எப்படிக் குழப்ப முடியும்?

*.அவ்வளவு பெரிய வீட்டையே சுத்தம் செய்துவிடுகிறது என்று உங்கள் உடலை விளக்குமாரால் சுத்தம் செய்ய நினைத்தால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை!

*.பொன் நகையை விட புன்னகை சிறந்தது என்பதற்காக நகை அடகு கடையில் இளித்துவிட்டுப் பணம் கேட்டால் உடனே உங்கள் மூக்கில் தக்காளிச் சட்னி வரலாம்!

*.தூக்கம் வரவில்லை என்பதற்காக தூக்க மாத்திரைகளை விழுங்கினேன், உள்ளே சென்ற தூக்க மாத்திரைகள் தூங்கிவிட்டன போலும்; எனக்கு தூக்கமே வரவில்லை!

*.பயமாயிருக்கிறதென்று கதவு, ஜன்னல்களை மூடி வைத்திருந்தேன். வெளியில் செல்ல வழியில்லாமல் என்னுடனே தங்கிவிட்டது பயம்!

*.இறந்தவரை எழுப்பும் மருந்தொன்று கண்டுபிடித்துள்ளேன்.உங்களை வைத்துதான் சோதனை செய்யவேண்டும்!உதவ முடியுமா? தோல்வியடைந்தால் நான் உங்கள் அடிமை!

*.எனது கவிதை ஒன்றை பக்கத்துவீட்டு பாட்டியிடம் படித்துக்காட்டினேன்.அருமை என்று பாரட்டினார்கள்.அவர்களுக்கு காது கேட்காதென்பதை நம்பமுடியவில்லை!

Thursday, December 1, 2011

டெரரான ராசிபலன்!!!

மாலுமி(புரபஷனல் குடிகாரன்) ராசி நேயர்களே இன்றைய நாள் உங்களுக்கு மப்பும் மந்தாரமுமாக அமையும். வழக்கம் போல உங்கள் மேலதிகாரி உங்களை தூக்கிபோட்டு மிதிப்பார். கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டுவார். இன்று வடக்கே சூலம் என்பதால் உங்களுக்கு தெற்கே உள்ள டாஸ்மாக்கில் சரக்கு கிடைக்க வாய்ப்புண்டு. இன்று கடை அடைப்பின் காரணமாக சைடிஷ் கிடைப்பதற்கு நாயாய் அலைய வேண்டிதிருக்கும்.

ராசியான நிறம்: ஒயின் சிவப்பு.
இன்றைய ட்ரிங்க்: காய்ச்சின சாராயம், நெத்திலி கருவாடு...

டெரர் ராசி நேயர்களே இன்றும் வழக்கம் போல ஊசி போன பிரைடு ரைஸ் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் சும்மா இருந்தாலும் உங்க வாய் சும்மா இருக்காது. உங்க வாய் சும்மா இருந்தாலும் உங்க பாஸ் சும்மா இருக்க மாட்டாங்க. அவரோட லேப்டாப்ப கொடுக்காமலையே உங்களை சரி பண்ண சொல்லுவாரு. ஒட்டகம் உங்களை உதைக்க வாய்ப்புள்ளதால் இன்று ஒருநாள் மட்டும் ஒட்டகத்திடம் நெருங்கி போகவேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

ராசியான நிறம்: ஒட்டக பாலின் நிறம்.
இன்றைய ட்ரிங்க்: ஒட்டகப்பால் வித் ஊறுகாய்

வைகை ராசி நேயர்களே உங்களால் டைகர் கம்பனிக்கு வருமானம் அதிகமா இல்லை டைகரால் உங்களுக்கு லாபம் அதிகமா என குழப்பம் வரலாம். இதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் நீங்கள் வழக்கம்போல் கரோக்கியில் போயி சரக்கடிக்கவும். கலாங்க் கோவிலில் தரிசனம் செய்தால் பாவ விமோசனம் உண்டு.

ராசியான நிறம்: டைகர் எல்லோ
இன்றைய ட்ரிங்க்: டைகர் டீ

வெறும்பய ராசி நேயர்களே உங்கள் வாழ்வில் ஜோதி ஒளிருமா ஒளிராதா என PHD பண்ண வேண்டிய நேரம் இது. மாணவ ராசி நேயர்களால் சில சிக்கல்கள் வரலாம். ஏற்கனவே நீங்கள் இறந்துவிட்டதால் இதை பற்றிகவலைப்படாமல் லக்கி பிளாசா வாசலில் பிச்சை எடுத்தால் வாழ்க்கையில் மறுபடியும் ஜோதி ஒளிர வாய்ப்புள்ளது.

ராசியான நிறம்: ஜோதி மஞ்சள்
இன்றைய ட்ரிங்க்: சுடு தண்ணி...

செல்வா ராசி நேயர்களே பலபேர் உங்கள் மேல் கொலைவெறியுடன் அலைவதால் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது உங்கள் டாமியை கூட்டி செல்லவும். கோழிக்கு வைத்த தீவனத்தை அதிகமாக திங்க வேண்டாம். வடிவேலு ஒரு படத்தில் கதை சொல்லி அடி வாங்குவது போல செல்வா கதைகளால் நீங்கள் தர்மடி வாங்கும் நேரம் மிக அருகில் உள்ளது. பார்த்து சூதானமாக இருக்கவும்.

ராசியான நிறம்: இதுவா இருக்கும் இல்லைன்னா அதுவா இருக்கும்.
இன்றைய ட்ரிங்க்: காம்ப்ளான்(நீ இன்னும் வளரனும் தம்பி)

எஸ்.கே ராசி நேயர்களே உங்கள் வீட்டில் பொறுக்கிகளுடன் சேராதே என எவ்ளோ திட்டினாலும் உங்களுக்கு பொறுக்கிகள் சகவாசம் மட்டுமே கிடைக்கும். எல்லா பொறுக்கிகளுக்கும்  உதவி செஞ்சே ஓஞ்சு போயிடுவீங்க. ஊமை ஊரைகேடுக்கும் பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும் என்கிற பழமொழிக்கேட்ப அமைதியா இருந்துக்கிட்டு பயங்கர நக்கலா கமென்ட் போடுவீங்க.

ராசியான நிறம்: டெரர் சிவப்பு
இன்றைய ட்ரிங்க்: பாலிடால்(பொறுக்கிங்க சகவாசம் வச்சிகிட்டதுக்கு)

பன்னிகுட்டி ராசி நேயர்களே... இன்று உங்கள் ராசிக்கு கக்கா என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. பயங்கர டேட்டா வடிவில்  உங்களுக்கு பாதகம் வரலாம் இருந்தாலும் முடிவில் நண்பர்கள் துணையுடன் அதனை கடந்து விடுவீர்கள், ஒரு நாளைக்கு பத்து ப்ளாக் வீதம் நாற்பது நாளைக்கு தொடர்ந்து இதே போல கமென்ட் போட்டு வந்தால் நீங்கள் நினைத்த பிரபல பதிவர் என்ற பட்டதை தக்க வைத்து கொள்ளலாம்! பக்கத்துக்கு நாட்டில் இருக்கும் பரதேசியுடன் பழக்கத்தை குறைத்துக்கொண்டால் இன்னும் முன்னேறலாம்!

ராசியான நிறம்: பிலிம் ப்ளூ,பத்திரிகை மஞ்சள்!!!
இன்றைய ட்ரிங்க்: வோட்காவுடன் ஒட்டகப்பாலை கலந்து ஒரு மண்டலம் குடிக்கவும்

Friday, November 25, 2011

'கொலவெறி', 'வடகறி'யாக


பிரபல ஆளு ஒருத்தரு, ஒரு girl கிட்ட பல்பு வாங்கிட்டு 'கொலவெறி' சாங் பாடினது உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். ப்ளாஷ்-பேக்ல அந்த girlளோட அறிமுகம் ஆன புதுசுல ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போனாரு. முதல்ல சூப் மற்றும் வடகறி ஆர்டர் பண்ணாரு, அவங்களுக்காக..

அப்ப அவரே டியூன் போட்டு பாடின பாட்டு.. இதோ உங்களுக்காக .. ('கொலவெறி' மெட்டுல). இந்த லிரிக்ஸ, ஒரிஜினல் பாடல கேட்டுகிட்டே பாருங்க, படிங்க

யூ  Girl, அயாம் சிங் சாங்
சூப் சாங்
ப்ளாக்-டீ சாங்

ஹொவ் திஸ் வடகறி வடகறி வடகறி டி
ஹொவ் திஸ் வடகறி வடகறி வடகறி டி

டேஸ்ட் கரேக்ட்
ஹொவ் திஸ் வடகறி வடகறி வடகறி டி
மெனு.. ப்ளீஸ்..
ஹொவ் திஸ் வடகறி... ...........  ...... அடி
ஹ.... ஹ..
டிஷ்ஷு இங்க க்ளீனு.. க்ளீனு...
டிஷ்ஷு கலரு ஒயிட்டு..
ஒயிட்டு பாக்ரவுண்டு ரோஸு ரோஸு
ரோஸுகலரு reddu ..
ஹொவ் திஸ் வடகறி வடகறி வடகறி டி
ஹொவ் திஸ் வடகறி வடகறி வடகறி டி

ஒயிட் ஸ்கின் eggu eggu 
eggu உள்ள yolkku 
ஓவன்ல வெச்ச Meatடு... Meatடு..
நம்ம பியுச்சர் வாட்டு?
ஹொவ் திஸ் வடகறி வடகறி வடகறி டி
ஹொவ் திஸ் வடகறி வடகறி வடகறி டி  

பேரர் ஆர்டர் எடுத்துக்கோ
அப்படியே கைல ஸ்நாக்ஸ்.. எடுத்துக்கோ..
பா பா பான் பா பா பான் ப ப பா ப ப பான்
(எழுதினத ஒரு தபா)சரியா வாசி

சூப்பர் மாமா ரெடி
ரெடி onee.. twooo three four
ஹ.. ஹ.. ஹ.. 
வாட் எ சேஞ்ஜ்  ஓவர் மாமா
ஓகே மாமா நவ் மெனு சேஞ்சு

கைல ப்ளேட்டு
ஒன்லி இங்கிலீஷ் ..
ஹான்ட் ல ப்ளேட்டு
ப்ளேட்ல ஆம்லேட் 
டிஷ்ஷு புல்லா சிப்ஸ்ஸு
எம்ப்டி பர்ஸ்ஸு
ஓனர் கம்மு..
மாவு grinda கோயிங்கு...
மாவு.. மாவு
grinder மாவு
யு ஷோ டு மீ wherரு
ஸ்டவ்வு ஸ்டவ்வு தோசை ஸ்டவ்வு
ஐ வான்ட் யு ஹியர் நவ்வு
God ஐ ம் ஃஹாபா டையிங்கு
ஷி இஸ் ஹாப்பி ஹொவ்வு  ?
திஸ்ஸு சாங்  ஃபார் சூப் பாய்ஸ்ஸு
வி டோன்ட் ஹவ் சாய்ஸ் ஸு...

ஹொவ் திஸ் வடகறி வடகறி வடகறி டி
ஹொவ் திஸ் வடகறி வடகறி வடகறி டி
ஹொவ் திஸ் வடகறி வடகறி வடகறி டி
ஹொவ் திஸ் வடகறி வடகறி வடகறி டி
 
..பிளாப் சாங்.

Thursday, November 24, 2011

பதிவர்கள் எழுதிய புத்தகங்கள்-சூடான விற்பனை!!!

ஒரு பதிப்பகம் ஆரமிச்சு கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாம். நம்ம பிரபல(!!!) பதிவர்களிடம் கொஞ்சம் புத்தகம் எழுதி கொடுங்க, அதுக்கு முன்னாடி தலைப்ப கொடுங்கன்னு டெரர் கும்மி சார்புல போயி கேட்டோம். அவங்களும் எழுதி கொடுத்தாங்க. அவங்க என்ன தலைப்பு கொடுத்தாங்கன்னு நீங்களே பாருங்க.

வைகை:

சுடச் சுட அறுத்துக் கிழிப்பது எப்படி?

டெரர் பாண்டியன்:

“ எவனா இருந்தா எனக்கென்ன: ஒரு இரத்த சரித்திரம் “

பதிவே போடாமல் பிரபல பதிவரா இருப்பது எப்படி?

முரட்டு ஓட்டகத்துக்கு பல்லு விளக்கி விடுவது எப்படி..? ( படங்களுடன் )

போரம் வைத்து நடத்துவது எப்படி?

பொறுக்கிகளை உருவாக்குவது எப்பிடி?

அம்பியாக இருந்துகொண்டு அன்னியனாக காட்டிக்கொள்வது எப்படி?

எஸ்.கே:

பொறுக்கிகளோடு வாழ்வது எப்படி? -எஸ்கே

பன்னிக்குட்டி ராம்சாமி:

டாகுடர்களின் ரத்த சரித்திரம்

கக்கா போவது  எப்படி?

அருண் பிரசாத்:

புதிரா புனிதமா?

புதிர்களில் வாழ்கிறேன்

வந்தார்கள்.. உல்டா செய்தார்கள்

பாபு:

வம்பிழுப்பது எப்பிடி?

பல்புகளும் திமுக ஆட்சிக் கொடுமைகளும்

தமிழில் எழுதுவது எப்படி?

தப்புத்தாளங்கள்

மாணவன்:

கதவுக்கு பின்னே ஒரு வரலாறு

வரலாற்றுப் பொறுக்கிகள்

கடைசி வரை நல்லவனாகவே நடிப்பது எப்படி?

வருத்தமான வரலாறு

மாலுமி:

" சரக்கடிக்க தேவையான சைட் டிஷ் செய்வது எப்படி..? "

தண்ணீர் தேசம்

" குவார்டர் " பக்க கதைகள்

பெ.சோ.வி:

மொக்கை கத்தி முனுசாமி

மங்குனி:

I am a xerox man

எஸ்.எம்.எஸ்.களும் ப்ளாக்ஸ்பாட்டும்

செந்தமிழும்., நொந்த ( என் ) தமிழும்

ஏழரை அறிவு

செல்வா:

“ நானும் என் மொக்கைகளும் பின்னே சில வடைகளும் “

வெங்கட்:

என் சங்கத்து ஆள அடிச்சது எவண்டா?

கவிதை மாதிரி எழுதுவது எப்படி?

ஜெயந்த்:

ஜோதி தரிசனம்

பட்டாப்பட்டி:

அன்னையின் ஆணை

ரமேஷ்:

" ஓசி சோறும், ஊசி போன வடையும் "

திருமணத்துக்கு பெண் தேட 100 எளிய வழிகள்

திருமணத்துக்கு பெண் தேட 100 கடினமான வழிகள்

காலமெல்லாம் காத்திருப்பேன்

மேட்ரிமோனியல் பக்கங்கள்

ராஜ்டீவியும் மொக்கைப் படங்களும்

டாகுடர் விஜயக்காந்த் வாழ்க்கையும் வரலாறும்

படங்களை மட்டும் வைத்து பதிவு தேத்துவது எப்பிடி?
 :
நாகராஜா சோழன் MA :

பின்  நவீனத்துவம் ஒரு பார்வை

டெரர் கும்மி:

19 அப்பாவிகள் - டெரர் கும்மி

பதிப்புகளுக்கு முந்துங்கள். பரவச நிலையை அடையுங்கள்!!!

Friday, November 18, 2011

என்னாது வெளிநாட்டு மோகமா?? - 2



ஒரு வழியா மேல வந்தாச்சி அப்படினு மூச்சிவிடரதுகுள்ள வாழ்க்கை மறுபடியும் கீழ தள்ளும். நீங்க மூழ்கிகிட்டு இருக்கிங்க அப்போ வெளிநாட்டில் இருந்து ஒரு கைமட்டும் நீளுது என் கையை பிடிச்சிகோன்னு. பத்தாவது படிக்கிர அப்போ வெளிநாட்டில் நல்ல வேலை கிடைச்ச யார் எல்லாம் போவிங்க அப்படினு வகுப்பாசிரியர் கேட்டதும் எல்லாரும் கையை தூக்க நாம மட்டும் பெரிய ஹீரோ மாதிரி (@#@$#$%%) சும்மா இருக்க. வாத்தியார் ஏன் அப்படினு கேக்க. நான் படிச்சிட்டு இந்தியாவுக்கு தான் சேவை செய்வேன் சொன்னது அதுக்கு அவரு குட் சொன்னது எல்லாம் தேவையில்லாம நியாபகத்துக்கு வரும். ஆனா அதை எல்லாம் ஓரம் தள்ளிட்டு நீட்டின கையை பிடிச்சி முதல்ல மேல வாடா அப்படினு வாழ்க்கை சொல்லும். அதான் செஞ்சேன். ப்ளாஷ் பேக் கட்.. (இல்லைனா ஏழு வருஷத்து கதையை சொன்னா டைம் பத்தாது)

//நம் நாட்டை குறை சொல்ல ஆயிரம் காரணங்களை அடுக்கலாம். ஆனால் ஏன் இங்கே உழைக்க முடியவில்லை என்ற கேள்விக்கு சரியான பதில் இருக்கிறதா ? அப்படி உங்களுக்கு சாதகமாக பதில் வைத்திருந்தாலும், இங்கே இருக்கும் மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையும் சொல்ல வேண்டி வருமே...?! //

அது என்ன சாதகமான பதில் இருந்தாலும்னு இழுக்கறிங்க? சரின்னு தெரிஞ்சாலும் ஒத்துக்க மாட்டிங்க அப்படியா?? வாழராங்க ரைட்டுங்க. உங்க வழிக்கே வரேன்? உங்க வீட்டில் கார் இருக்கா? சரி பைக்? எதுக்குங்க அதை எல்லாம் வாங்கறிங்க? கார் பைக் இல்லாதவன் எல்லாம் வாழவில்லையா? ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்துக்கு போகவில்லையா? இப்படி ஆள் ஆளுக்கு பைக் வாங்க போய்தான் பெட்ரோல் தேவை அதிகரிச்சிகிட்டே போகுது. அப்படினு நான் சொன்னா நீங்க ஒத்துபிங்களா? உங்க வாழ்க்கை தரம் உயரலாம் அடுத்தவன் அப்படியே இருக்கனுமா? :) இந்தியாவில் ஐம்பதாயிரம் ரூபாக்கு வேலை செய்யர ஒரு மேனேஜர் வெளிநாட்டில் வேலை தேடினால் குறைந்தது இரண்டு லட்சம் ரூபாய்க்கு வேலை கிடைக்கும் அப்படினு என்னால சொல்ல முடியும். ஆனே வெளிநாட்டில் ஒரு லட்சம் ரூபாய்க்கு வேலை செய்யரவன் இந்தியாவுக்கு திரும்பி வந்தா முப்பதாயிரம் ரூபாய்க்கு வேலை கிடைக்கும்னு உங்களால சொல்ல முடியுமா??

// ஆயிரம் வசதிகள் இருந்தாலும் சொந்த நாட்டில் சொந்த பந்தங்களுடன், மனைவி குழந்தைகளுடன் ஒன்றாக வாழும் வாழ்க்கைக்கு ஈடு இணை ஏதும் இல்லை. மனைவி குழந்தைகளை விட்டு சென்று, பல வருடம் கழித்து திரும்பி வரும் சிலருக்கு,நெருங்கிய அந்த உறவுகளே அன்னியமாகி விட்டதை போல தெரியும் சோகம் மிக கொடுமை//

எல்லாருக்கு ஆசை அதான் பொண்டாட்டி புள்ளை எல்லாம் விட்டு வெளிநாட்டி போய் சந்தோஷமா இருக்காங்க.

// முதலில் அன்பை பொழிந்த உறவுகள், வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தை அனுபவித்த பின்னர், வெறும் பணம்காய்ச்சி மரமாக மட்டுமே உங்களை பார்க்க கூடிய நிலை சகஜம் !! //

சும்மா ஊர்ல இருக்க எங்க சொந்தகாரங்களை எல்லாம் அசிங்க படுத்தாதிங்க. கஞ்சியோ கூழோ கூட இருந்தா போதும் திரும்பி வந்துடு அப்படினு கூப்பிடத வீடு மிக குறைவு. இருந்தாலும் நாம கஷ்டபட்டாலும் நம்ம சேர்ந்தவங்க கஷ்டபடாம இருக்கனும் அப்படினு நாடுவிட்டு நாடுவந்து நாங்க வேலை பார்த்தா. எருதின் புண் காக்கைக்கு தெரியுமான்னு சொல்ர மாதிரி ஏறி உக்காந்து கொத்தாதிங்க. வேனும்னா உங்க அட்வைஸ் எல்லாம் இன்னும் பணம் இன்னும் பணம் அப்படினு எவனாவது வேலை செய்வான் அங்க போய் சொல்லுங்க. அப்படி சொல்லனும் ஆசைபட்ட இந்தியாவில் இருந்துகிட்டு அளவுக்கு மிறி பணம் சம்பாதிக்கரவனும் இருக்கான் அங்க இருந்து ஆரம்பிங்க.. :))

//வெளிநாட்டு வேலையை பற்றி இப்படி என்னை ஆதங்கப்பட வைத்துவிட்டது நேற்று நடந்த ஒரு சிறிய சம்பவம்...//

இவ்வளவு பேச்சி பேசிட்டு அங்க என்ன படம் போட்டு இருக்கிங்க? ஏன் அந்த உழைப்பாளி, உண்மையான இந்தியன் தன்னோட படத்தை போட வேண்டாம் சொல்லிட்டாரா? அப்படினா கூகுள்ள போய் தேடினா ஒரு உழைப்பாளி படம் கூட கிடைக்கவில்லையா? #சும்மா டவுட்டு. நீங்க பிறந்ததில் இருந்து இந்தியா / இந்தியன் அப்படினு எத்தனை முறை சொல்லி இருக்கிங்களோ அதைவிட அதிக முறை நான் இங்க இந்த மூனு வருஷத்தில் சொல்லி இருக்கேன். நாட்டை பற்றி நினைப்பு உங்களைவிட எங்களுக்கு அதிகம்.

பல பேரு இங்க இஷ்டபட்டு இல்லை கஷ்டபட்டு தான் வேலை செய்யரோம். வேற வழியே இல்லாம ஒரு ஸ்டேஜ்ல இந்தியா வருவோம். அப்போ வந்து இப்போ வந்தா இல்ல இப்போ வந்த இல்லை இப்போ மட்டும் இதில் வாழ முடியுதா அப்படினு வடிவேல் மாதிரி காமடி பண்ணாதிங்க. அது வரை எங்க குடும்பங்களும் பொருளாதார ரீதியா கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டுமே. அதில் உங்களுக்கு என்ன வருத்தம்? அதுவரை வேணும்னா நீங்க இப்படி அட்வைஸ் பண்ணி கட்டுரை எழுதிகிட்டு இருங்க... வாழ்க ஏசி ரூம் பதிவர்கள்.

டிஸ்கி : நண்பர்களே! இது வெளிநாட்டில் இருப்பவர்கள் எல்லாம் ஏதோ மோகத்தில் வாழ்கிறார்கள் என்ற கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எழுதபட்டது. இறைவன் அருளால் நான் இன்று நலமுடனும் வளமுடனும் இருக்கிறேன். ஆனாலும் இன்றும் பல இளைஞர்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் விமானம் ஏறி கொண்டு தான் இருக்கிரார்கள். அவர்கள எல்லாம் ஏதோ தேச தூரோகிகளை போல் பார்க்க வேண்டாம் என்ற வேண்டுகோளுடன்... டாடா.
.

என்னாது வெளிநாட்டு மோகமா??? - 1


.
இங்க சகோதரி கௌசல்யா அவர்கள் எழுதின கட்டுரையை படிச்சேன். அப்பா சாமிகளா ஏன் ஆ..ஊனா வெளிநாட்டு மோகம் அப்படினு முத்திரை குத்திடறிங்க. இதே பதிவை தன்னம்பிக்கை அப்படினு தலைப்பு வச்சி எழுதி இருந்தா பாராட்டி இருப்பேன். என்னாமோ அங்க வாய்ப்புகள் எங்க வீட்டு வாசல் படியில் தவம் கிடக்கர மாதிரியும் நாங்க தான் அதை எட்டி உதைச்சிட்டு ராக்கெட் ஏறி சந்திர மண்டலத்துக்கு போன மாதிரியும் சொல்லிடறிங்க. இதில் வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் அப்படினு ஒரு பாட்டு. வழியா இல்லை பூமியில் தான் நீங்களே சொல்லி இருக்கிங்க வழியா இல்லை இந்தியாவில் அப்படினு இல்லை.

//இந்த நாட்டில் வேலை கிடைக்கவில்லை என்று அப்பாவிடமோ, அடுத்தவரிடம் கடன் வாங்கியோ விமானத்தை பிடிக்கும் இளைஞனை சொல்கிறேன்...கடன் வாங்கி வெளிநாட்டை தேடி செல்வதை விட அதே பணத்தை வைத்து சொந்த ஊரில் சிறு தொழிலை தொடங்கலாமே என ஏன் யோசிப்பதில்லை...?! பிழைக்க வழி வகை தெரியவில்லையா ??// அப்படினு கேக்கராங்க. கேள்வி கேக்கரது சுலபம்.. :))

அங்க எல்லாம் கொட்டி கிடக்கு தான் ஆனா அதை அள்ளி எடுக்க இல்லை கிள்ளி எடுக்க எவ்வளவு கஷ்டபடனும் எனக்கு தெரியும். சுயதொழில் சொல்றிங்க, லோன் சொல்றிங்க எல்லாம் நல்லா தான் இருக்கு. அந்த லோன் வாங்க பேங்க் பக்கம் போனதும் சார் வாங்க உட்காருங்க அப்படினு காப்பி, டீ எல்லாம் கொடுத்து ஒரு லட்சம் போதுமா இல்லை ஐந்து லட்சம் தரட்டுமா அப்படினு அன்பா கேட்டு. முடியவில்லைடா சாமி. இளைஞார்களே வாருங்கள் சுயதொழில் செய்ய நாங்கள் யோசனை சொல்லி உதவுகிறோம் அப்படினு டி.வியில் பெருசா பேட்டி கொடுத்து போன் நம்பர் எல்லாம் கொடுத்தான். நானும் நம்பி ஐயா நான் ஒரு ஆர்வம் மிக்க இளைஞன் அப்படினு அங்க போய் நின்னா. எவனுக்கும் நின்னு பதில் சொல்ல கூட பொருமை இல்லை. கடைசியில் ஒரு பியூன் பரிதாப பட்டு ஒரு ஊர் பேரை சொல்லி நீங்க அங்க போய் பாருங்க ஒருத்தர் காலான் பண்ணை வச்சி இருக்காரு அவரை கேட்டு பாருங்கனு. 

நாமளும் மனசை தளர விடாம அங்க போய் தெரு தெருவா தேடி அவரை கண்டுபிடிச்சி ஐயா நான் சொந்தமா தொழில் தொடங்கனும். அதுக்கு உங்க ஆலோசனை என்ன அப்படினு கேட்டதும் அவர் சொன்ன முதல் பதில் தம்பி சொந்தமா ஒரு வேலை தேடிக்கோங்க. அப்புறம் பார்ட் டைமா இதை எல்லாம் செய்யலாம். சரி நீங்க விபரம் சொல்லுங்க அப்படினு கேட்டேன். நல்ல மனுஷன் எல்லாம் விளக்கினாரு. கடைசியா இதுக்கு முதலீடு அறுபத் ஆயிரம் வரை ஆகுன்னு சொன்னாரு. என்னது அறுபதா!!!! என்கிட்ட அறுபது ரூபாய் கூட இல்லியே. சரி சரி வாழநினைத்தால் வாழலாம் தட்டுடா பேங்க் கதவை. உங்க ஆர்வம் எல்லாம் சரி தம்பி ஆனா எதைவச்சி அவ்வளவு பணம் கொடுக்கரது? குடும்ப சொத்து இல்லைனு சொல்றிங்க, சொந்தமா இடம் எதுவும் இல்லைனு சொல்றிங்க. கேரண்டி கையெழுத்து போடவும் யாரும் தெரியாது சொல்றிங்க. அதுவுமில்லாம இந்தா காலன் வளர்ப்பு எல்லாம் வேலைக்கு ஆகாது தம்பி வேற ஏதாவது யோசிங்க இப்படி அயிரம் கதை.

நானும் கண்ணுலபடுகின்ற, மூளையில் தோன்றுகின்ற எல்லா தொழில் பத்தியும் முயற்சி பண்ணேன். அறுபதாயிரமில்லை வெறும் ஆயிரம் ரூபாய் நம்பி கொடுக்ககூட ஆள்கிடையாது. நம்பி கேரண்டி கையெழுத்து போட ஆள்கிடையாது. ஆனா சுயதொழில் எல்லாம் வேலைக்கு ஆகாது உருப்படர வழியைபாரு அப்படினு வாய் வலிக்காம யோசனை மட்டும் சொல்லி அனுப்புவாங்க. சரி என்னைக்காவது ஒரு நாள் புள்ளை தொழில் ஆரம்பிச்சி குடும்பத்த காப்பத்தும் அப்படினு பெத்தவங்க வேனா பொருமையா இருக்கலாம் ஆனா குடும்ப சூழால் அப்படி எல்லாம் உங்களை விடாது. முகவரி அப்படினு ஒரு அஜித் படம் பார்த்து இருப்பிங்களே? கடைசியில் லட்சியத்தை தூக்கி போட்டு வேலைக்கு போவாரு. உங்க கண்ணுகு தெரியாம தினம் ஆயிரம் பேரு இப்படி மாறிகிட்டு இருக்கான்.

வேலைன்னா ஐ.ஏ.எஸ் ஆபிசர் வேலை கிடைச்சி போய்ட்டேன் நினைக்காதிங்க தினம் முப்பது ரூபாய் சம்பளத்துக்கு (25 ரூபாய் சம்பளம் + 5 ரூபாய் பேட்டா) வீடு விடா போய் சோப், பேஸ்ட் விற்கின்ர வேலை. என்னைக்காவது கையில் ஒரு பை நிரைய சோப், பேஸ்ட் எல்லாம் அடுக்கி வச்சிகிட்டு ஒரு ஒரு மணி நேரம் வெயில்ல நடந்து பாருங்க. அதுலையும் ஹவுஸிங் போர்ட் ஏறியா, அப்பார்ட்மெண்ட்ஸ் எல்லாம் சூப்பர்!! படி ஏறி இரங்கி பெண்டு நிமிர்ந்திடும். தோள்கள் வலித்தாலும் உடைகள் வியர்வையில் நனைந்தாலும் மனதை தளரவிடாதே அப்படினு நாமளே உற்சாகம் பண்ணிகிட்டு யார் வீட்டு கதவையாவது தட்டினா அவங்க வாங்க வேண்டாம், நங்க சொல்வதை கேக்க வேண்டாம். எதுவும் வேண்டாம் அப்படினு மெதுவா சொல்ல கூட பொருமை இருக்காது. ”வேண்டாம்” அப்படினு ஒரு வார்த்தை அடுத்த சகெண்ட் படார் முகத்தில் அடிக்காத குறையாக கதவு மூடபடும். வீரனுக்கு இது எல்லாம் சகஜமப்பா அப்படினு அடுத்த வீட்டுக்கு போவோம். பத்து வீடு ஏறி இருக்க மாட்டிங்க வாட்ச் மேன் வருவாரு. இங்க எல்லாம் இப்படி எல்லாம் வந்து விற்க்க கூடாது கிளம்பு கிளம்புன்னு அன்பா சொல்லுவாரு.

இது எல்லாம் பராவயில்லை. ஒரு வீட்டு கதவை தட்டினா கூட படிச்ச புள்ளை வந்து கதவை திறக்குது. ”ஹேய்!! என்ன நீ இந்த வேலை செய்யர? (நான் என்ன பிச்சையா எடுக்கரேன்). தண்ணி குடிக்கிறியா? ஏதாவது சாப்படரியா? எங்க வீட்டில் இந்த பிரண்ட் உபயோகபடுத்தரது இல்லை ஆனா உனக்காக வாங்கிக்கிரேன்” அப்படினு சொல்லி ஒரு பத்து ரூபாய் நீட்டுச்சி அதை வாங்க சுய கௌரவம் எவ்வளவு தடுத்து இருக்கும் அப்படினு அந்த இடத்தில் இருந்தவனுக்கு மட்டும் தான் புரியும். இருந்தாலும் அதையும் வாங்கிட்டு தான் வந்தேன். இதுக்கு நடுவில் மதிய சாப்பாடு சாப்பிடனும் பாருங்க. நம்ம இப்போ செஞ்சிகிட்டு இருக்க வேலைக்கு ஹோட்டல் எல்லாம் போனா சங்கு தான். கூட வேலை செய்யர எல்லாரு சேர்ந்து எங்கையாவது ரோட்டோரத்தில் ஒரு மரத்தடியில் உக்காந்து சாப்பிடுவோம். கற்று வீசுது சாப்பாட்டில் மண் விழுது இது எல்லாம் பார்க்க கூடாது. அப்புறம் மாலைவரை யார் வேலை செய்வது.

எல்லாம் முடிச்சி அதுக்கு அப்புறம் ஆபீஸ் வந்து ரிப்போர்ட் எழுதி கொடுத்துட்டு அதுக்கு நடுவில் மேனேஜர் கூப்பிட்டு தம்பி போய் சிகரெட் வாங்கி வா சொல்லுவாரு. வாங்கி வந்து கொடுக்கும் பொழுது சொல்லுவாரு. “தம்பி பார்த்தா படிச்ச புள்ளை மாதிரி இருக்க உனக்கு எல்லாம் இந்த வேலை வேண்டாம்பா. உன் பயோ டேட்டா இருந்தா கொடு நானே நல்ல வேலை வந்தா சொல்லி விடரேன்” (மரியாதையா உனக்கு வேலை இல்லைனு சொல்ராரு) இதுக்கும் அந்த வாரம் நான் 200% டார்கட் கொடுத்து இருந்தேன். உடனே மனசு உடைஞ்சி வெளிநாட்டுக்கு ஓடி போய்ட்டியா கேக்காதிங்க. ஏழு வருஷம் கஷ்டபட்டு இருக்கேன் ஒரு ஒரு முறையும் மேல ஏறி கீழ விழுந்து... அடிபட்டு (அதிகமா மேல ஏறி இருந்தா அதிகமா அடிபடும்). ரோட்ல சோப் விக்கரதுல ஆரம்பிச்சி கார்பரேட் கம்பனில ஒரு ப்ராஞ்ச் இன்சார்ஜா வரனும்னா நான் எவ்வளவு படிகள் தாண்டி இருக்கனும் உங்களுக்கு தெரியுமான்னு தெரியவில்லை.... :))

Friday, November 11, 2011

KLUELESS 7 - அறிவாளிக்கான விளையாட்டு

கடந்த ஆகஸ்ட் மாதம் உங்கள் அனைவரையும் கட்டிப்போட்ட “HUNT FOR HINT” கேமின் முன்னோடி “KLUELESS” தனது 7 ஆம் பாகத்தை இன்று காலை இந்திய நேரம் 11.11 க்கு வெளியிடுகிறது.

இது இந்தூர் ஐஐஎம் மாணவர்களால் வருடா வருடம் நடத்தப்படும் ஒரு அறிவுசார்ந்த போட்டி. இந்த போட்டியின் மேல் இருந்த இன்ஸ்பைரேஷனால் தான் நாங்கள் இதை அடிப்படையாக கொண்டு HUNT FOR HINT நடத்தினோம். எதிர்பார்த்தது போலவே நல்ல ஆதரவு கிடைத்தது . பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 


இப்பொழுது அதன் ஒரிஜினல் வெர்ஷனை விளையாட நீங்கள் தயாரா? எங்களுக்கு தெரிந்து HUNT FOR HINT விளையாட்டு KLUELESS விளையாட்டை விட மிகவும் சுலபமாக அமைத்து இருந்தோம். க்ளூலெஸ் விளையாட்டுக்கு ஐந்தில் ஒரு பங்கு கடினம் தான் ஹண்ட் பார் ஹிண்ட்க்கு வைத்து இருந்தோம். ஆனாலும் நம் பதிவர்கள் க்ளூலெஸ் கேமில் வெற்றி பெற எங்களால் ஆன உதவிகளை செய்ய முயற்சியாக தான் இந்த பதிவு. 


HUNT FOR HINT விளையாட்டின் அதே விதிமுறைகள் தான் இங்கும். ஆனாலும் புதியவர்களுக்காக ஒரு சிறு அறிமுகம்.

எப்படி விளையாடுவது?

  • பல லெவல்கள் கொண்ட இந்த போட்டியில் ஒவ்வொரு லெவலுக்கான விடையையும் கண்டு பிடித்து அடுத்த லெவலுக்கு முன்னேற வேண்டும்
  • கேள்விகள் படங்களாகவே பெரும்பாலும் இருக்கும்
  • விடைகள், ஆன்சர் பாக்ஸ்சிலோ கொடுத்தோ, URL மாற்றியோ,  கிளிக் செய்வது போன்றோ இருக்கும்
  • அனைத்து விடைகளும் கூகுளில் தேடுவதால் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்
  • விடைகளுக்கான க்ளூக்கள், வெப் பேஜ் டைட்டில்லிலோ, URL, Image Name, Page source என பல விதங்களில் இருக்கும். குழப்புவதற்காகவே சில தேவையற்ற க்ளூக்களும் இருக்கும், ஜாக்கிரதை....
விளையாடுபவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுடைய பிரத்தியேக தளத்திலேயே க்ளூக்களை கொடுக்கிறார்கள் இருந்தாலும் நம் தமிழ் பதிவுலக நண்பர்களுக்காக நாங்களும் இங்கு கமெண்ட்களில் க்ளூக்கள் கொடுக்கலாம் என இருக்கிறோம்.

எந்த காரணம் கொண்டும் நேரடி விடைகள் கொடுக்கப்பட மாட்டாது. 

நாங்களும் இனிதான் விடைகளை கண்டுபிடிக்க வேண்டி இருப்பதால் சில சமயங்களில் உங்களை விட பின்னால் இருப்பதறக்கு வாய்ப்புகள் அதிகம், அதனால் க்ளூ கொடுப்பது தாமதமாகலாம்.

உங்களுக்கு விடை தெரிந்தால் நீங்களும் க்ளூகளை கமெண்ட்களில் தெரிவிக்கலாம். (எங்களுக்கும் உதவும் :) )

அனைத்து கமெண்ட்டுகளும் மாடரேட் செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்கு இங்கு செல்லவும்....

விளையாட்டை தொடங்க இங்கு கிளிக் செய்யவும்.


LETS PLAY TOGETHER....
ENJOY THE GREAT GAME :) with us



Tuesday, November 8, 2011

கற்பூர வாசனை தெரிந்த கழுதை




முன்னொரு காலத்தில் சவகர் என்ற குதிரை வியாபாரி வாழ்ந்துவந்தார். அரசன் முதல் ஆண்டி வரை இவரிடம் தான் குதிரைகள் வாங்கிவந்தனர். ஆண்டி எதற்காக குதிரைகளை வாங்குகிறார் என்று நாம் இப்பொழுது ஆராய வேண்டாம். அது நம் கதைக்குச் சம்பந்தம் இல்லாத ஒன்று. உலகத் தரமான குதிரைகள் இவரிடம் கிடைக்கும் என்பது நமீதா வந்து சொல்லாமலேயே எல்லோருக்கும் தெரிந்தது.

சவகர் எப்போதும் சற்று வித்தியாசமாக எதையாவது யோசிக்கும் குணமுடையவர். குதிரை வியாபாரம் மட்டும் செய்துவந்த சவகருக்கு திடீரென ஒருநாள் கழுதை வியாபாரம் செய்யலாம் என்று தோன்றிற்று. அசரீரியெல்லாம் வந்து சொல்லவில்லை. தானாகவே தோன்றியது. கழுதை வியாபாரம் ஒன்றும் குதிரை வியாபாரத்தைப் போல எளிமையானதல்ல. நாட்டில் பாதி பேருக்கு கழுதை என்றாலே சுத்தமாகப் பிடிக்காது. இருந்தாலும் தன் மனதில் ஒரு யோசனை தோன்றிவிட்டால்  அவரே அவர் பேச்சைக் கேட்கமாட்டார்.அதனால் எப்படியேனும் கழுதை வியாபாரம் செய்தே தீருவதென முடிவெடுத்தார்.

கழுதை வியாபாரத்தை குதிரைகளை வைத்துச் செய்யமுடியாது. அது என்ன தோசை மாவா ? தோசைக்கு என்று மாவரைத்துவிட்டு இட்லி சுடுவதற்கு ? அதனால் கழுதைகளை வாங்கித்தான் கழுதை வியாபாரம் செய்யமுடியும் என்று நான் சொல்லாமலே அவருக்குத் தெரிந்திருந்தது.உடனேயே கழுதை வாங்குவதற்காகப் புறப்பட்டுவிட்டார். ஊர் ஊராகச் கழுதைகள் எங்கு கிடைக்கும், எப்படிப்பட்ட கழுதைகளை நல்ல விலைக்கு விற்கலாம் என்பதைப் பற்றித் தெரிந்துகொண்டார். ஒரு ஊரில் கற்பூர வாசனை தெரிந்த அதிசயக் கழுதை ஒன்றைப் பற்றிய தகவல் கிடைத்தது.உடனடியாக அதை எப்படியாவது வாங்கிவிட வேண்டுமென முடிவெடுத்து  அதிக விலை கொடுத்து அந்தக் கழுதையை வாங்கிவந்தார்.

தன் வீட்டிற்கு வந்ததும் அதற்கு கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றிப்போட்டார். பெரும்பாலும் அவர் வீட்டிற்கு எதை வாங்கிவந்தாலும் இவ்வாறு செய்வது வழக்கம். ஏன் திருஷ்டி பொம்மைக்குக் கூட திருஷ்டி சுற்றிவிட்டுத்தான் வீட்டுக்குள் அனுமதிப்பார்.ஆனால் இந்தமுறை வீட்டிற்கு வந்திருப்பது கற்பூர வாசனை தெரிந்த கழுதையாயிற்றே. மிக்க சந்தோசத்துடனேயே திருஷ்டி சுற்றினார். ஆனால் அவரின் துரதிர்ஷ்டம் கற்பூரத்தைப் பற்றவைத்ததும் அந்தக் கழுதை பிடுங்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தது. என்னதான் கற்பூர வாசனையைப் பற்றித் தெரிந்தாலும் அதை எதற்குப் பயன்படுத்துவார்கள் என்றெல்லாம் அதற்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லையே!ஓடிய கழுதையை மிகச் சிரமப்பட்டுத்தான் பிடித்துவந்தார்கள். 

அந்தக் கழுதையை வாங்கியதிலிருந்து சவகருக்கு ஒருவித செருக்கு அவன் மனதில் ஏற்பட்டது. ஊரிலேயே ஏன் உலகத்திலேயே யாரிடமும் இல்லாத அதிசயப் பொருள் தன்னிடம் உள்ளது என்று நினைத்து நினைத்துச் சந்தோசப்பட்டான். அவன் சந்தோசம் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை.அந்தக் கழுதைக்காக தன்னிடமிருந்த சொத்துக்களை எல்லாம் விற்று அதற்குத் தேவையானவற்றை வாங்கிக்கொடுத்தான். தினமும் காலையில் இட்லி வாங்கிக்கொடுத்தான். அது இட்லியைச் சுற்றியிருந்த காகிதத்தை மட்டும் தின்றது. மதியம் பார்சல் சாப்பாடு வாங்கிக்கொடுத்தான். அது அதைச் சுற்றியிருந்த காகிதத்தை மட்டும் தின்றது. இரவில் புரோட்டா, பூரி என்று வாங்கிக்கொடுத்தான். அது அதைச் சுற்றியிருந்த காகிதத்தை மட்டும் தின்றது. ஆக மொத்தத்தில் அது காகிதத்தை மட்டுமே தின்றது. கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்பதற்காக சுவையான உணவுப் பொருட்களை எல்லாம் அது கேட்கவேயில்லை.
விடுவானா சவகர் ? உடனே அதை கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று “ கற்பூர வாசனை தெரிந்த கழுதை ஒன்று காகித்தத்யே தின்கிறது, அதனை காகிதம் தின்னாதவாறு மருந்தொன்று கொடுங்கள்” என்று கேட்டான். மருத்துவருக்கு ஆச்சர்யம்; தனது இருபத்தைந்து கால மருத்துவச் சேவையில் இப்படியொரு கழுதையைப் பார்த்ததேயில்லையே என்றவாரு அதைப் பார்க்கச் சென்றார். உண்மையில் அது கழுதையைப் போலவே இருந்தது. கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்பதற்காக அதற்குக் கொம்பெல்லாம் முளைத்திருக்கவில்லை.

பேப்பர் தின்னாமல் இருப்பதற்காக ஒரு பேப்பரை எடுத்து சில மருந்துகளின் பெயரை எழுதினார். ஆனால் மருத்துவரின் கையிலிருந்த குறிப்பேட்டினைப் பிடுங்கி ஒரு முழுங்காக முழுங்கிவிட்டது கழுதை. மருத்துவர் இஞ்சி தின்ன குரங்கைப் போல முழித்துக்கொண்டிருந்தார். அதென்ன இஞ்சி தின்ன குரங்கு? குரங்குகளைப் பற்றி கழுதைக் கதையில் சொல்லவேண்டாமென்பதால் வேறொரு கதையில் பின்னர் சொல்கிறேன். முதலில் நாம் இந்தக் கதையை முடிப்போம். டாக்டரின் குறிப்பேட்டை முழுங்கியதும் டாக்டருக்கு கடுங்கோபம் ஏற்பட்டது.சவகருக்கும் கடுங்கோபம் ஏற்பட்டது. ஆனால் சவருக்கு டாக்டர் மேல்தான் கோபம் ஏற்பட்டது. ”பேப்பர் தின்பதை நிறுத்துவதற்காக இவரிடம் கூட்டிவந்தால் இவரே பேப்பரைத் தருகிறாரே ?” என்று நினைத்துக்கொண்டு “ நீயெல்லாம் என்னையா பேப்பர் விக்குற ? “ என்று கேட்கவேண்டும் போல இருந்தது. மன்னிக்கவும், பேப்பர் பேப்பர் என்று எழுதி எனக்கே அப்படிக் கேக்கவேண்டும் போலத்தான் உள்ளது. அவன் மட்டும் எம்மாத்திரம் ?

இவர்கள் இப்படிக் கோபப்பட்டுக்கொண்டிருந்த போது கழுதை மறுபடியும் பிடுங்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தது. ஆனால் இந்த முறை அது யார் கையிலும் சிக்கவில்லை. ஒருவேளை கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்ற பெருமை அதற்கும் வந்துவிட்டதோ என்னவோ ? சவகர் இத்தனை நாட்களாகக் காட்டிய கருணையை சிறிதும் மதிக்காமல் சென்றுவிட்டது இந்த எருமை. கழுதையைக் கழுதை என்று எப்படித் திட்டுவது? அதனால்தான் எருமை என்று திட்டுகிறேன்.

இப்படிப் பிடுங்கிக்கொண்டு ஓடிய கழுதை ஒரு அழகான காட்டில் நுழைந்தது. அதென்ன அழகான காடு, அசிங்கமான காடு ? காடுகளுக்கிடையில் அழகிப்போட்டியா நடக்கிறது ? சரி விடுங்கள், இதிகாச காலத்திலிருந்து இதையே எழுதிப்பழகிவிட்டோம்.

அப்படி அழகான காட்டுக்குள் நுழைந்த நமது நாயகனான கற்பூர வாசனை தெரிந்த கழுதை ( வெறும் கழுதை என்று எழுதினால் எங்கே மறந்துவிடுவோமோ என்பதற்காக ஒவ்வொருமுறையும் கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்றே எழுதித் தொலைக்கவேண்டியுள்ளது ) முதலில் அங்கிருந்த ஒரு ஆட்டிடம் சென்று தான் அதிசயமான விலங்கு என்றும் தனக்குக் கற்பூர வாசனை தெரியும் என்றும் கூறிக்கொண்டது. ஆனால் ஆடோ கழுதையை ஏறெடுத்தும் பார்க்காமல் அங்கிருந்த சில நுனிப்புல்லை மட்டும் ”வரக் வரக் “ என்று கடித்துக்கொண்டு திரும்பிக் கூடப் பார்க்காமல் போய்விட்டது. ஒருவேளை ஆட்டிற்கு காதில் ஏதேனும் கோளாறோ என்னவோ ?

ஆட்டின் இந்தச் செயலால் மனம் நொந்த கழுதை அடுத்து மானிடம் சென்று தனக்குக் கற்பூர வாசனை தெரியும் என்று கூறிக்கொண்டது. மானிற்கும் கற்பூரம் என்றால் என்னவென்றே தெரியவில்லை. இங்கேயும் அசிங்கப்பட்டது கழுதை. அடுத்து யானையிடம். அதற்கும் தெரியவில்லை.

இறுதியாகச் சிங்கத்திடம் சென்று தனக்கு கற்பூர வாசனை தெரியும் என்றும் எனவே தான் ஒரு அற்புத விலங்கென்றும் தான் தான் இனிமேல் இந்தக் காட்டிற்கே ராஜா என்றும் கூறியது. சிறிது நேரம் உட்கார்ந்து யோசித்தது சிங்கம். உண்மையில் அதற்கு ராஜா என்பதின் அர்த்தமே தெரியாது. சில நாட்கள் மனிதர்களுக்கு மத்தியில் வாழ்ந்ததால் கழுதைக்கு மட்டும் ராஜா என்பதின் அர்த்தம் தெரிந்திருந்தது. அதுமட்டுமல்லாமல் காட்டின் ராஜா சிங்கம் என்பதால்தான் சில மனிதர்கள் தங்களை “நான் சிங்கம்டா” என்று சொல்லிக்கொள்கிறார்கள் என்று அதற்கு ஞாபகத்தில் வந்தது. எனவே தான் காட்டிற்கு ராஜாவாகிவிட்டால் அதே மனிதர்கள் “ நான் கழுதைடா” என்று சொல்லிக்கொள்வார்களல்லவா ? அதற்காகத்தான் இத்தனை போராட்டங்கள்!

சிங்கம் யோசித்து முடித்ததும் தனக்கு இந்தக் காட்டை ஆளும் பாக்கியம் கிடைக்கும் என்றும், ரஜினியே கூட “ பன்னிங்கதான் கூட்டமா வரும் , கழுதை கண்ணமூடிட்டுத்தான் வரும் “ என்று பஞ்ச் வசனம் பேசுவார் என்றும் நினைத்து நினைத்துப் புல்லரித்தது, பேப்பர் அரித்தது. ஆனால் நடந்தததோ வேறு. உண்மையில் சிங்கம் இதுவரையில் யோசிக்கவெல்லாம் இல்லை. அது தூங்கிக்கொண்டிருந்து. அதுமட்டுமல்லாமல் இரண்டு நாட்களாக எந்த இரையும் கிடைக்காமல் கோபத்தில் இருந்தது. கண் விழித்துப்பார்த்தால் எதிரில் கழுதை. அது கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்று அதற்கு எப்படித்தெரியும்? பாவம்! சடாரென ஓங்கி ஒரு அடி அடித்துக் கழுதையைக் கீழே தள்ளியது. கண்களில் பொறிதட்டக் கீழே விழுந்த கழுதைக்கு ஒன்று மட்டும் புரிந்தது. கழுதைக்கு மட்டுமல்ல வேறு எந்த விலங்கிற்கும் கற்பூர வாசனை தெரியாதென்பது!



Monday, October 31, 2011

ஆனைக்கும் பானைக்கும் சரி

முன்குறிப்பு : யானைக்கும் பானைக்கும் சரி அப்படின்னு ஒரு பழமொழி இருக்கிறது நம்ம எல்லோருக்குமே தெரியும். அது எப்படி யானைக்கும் பானைக்கும் சரியாகும் ? அந்தப் பழமொழி எப்படி வந்திருக்கும் ? அதற்கான கற்பனையான காரணம்தான் இந்தக் கதை!

கி.பி. 12 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில்தான் இந்த மயிர்க்கூச்செரியும் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. பட்டிக்காடு என்ற ஒரு மாநகரத்தில் மட்பாண்டங்கள் செய்து வியாபாரம் செய்யும் குயவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அந்த நகரத்திலேயே அவருக்கு மட்டும்தான் மட்பாண்டங்கள் செய்யத்தெரியும் என்பதால் அவர் எப்படிப்பட்ட பானைகள், பாத்திரங்கள் செய்தாலும் அவரது திறமையை ஊர்மக்கள் வியந்து பாராட்டி வந்தனர்.

ஒருசமயம் இவரிடம் எண்ணற்ற பானைகள் விற்காமல் தேங்கிவிட்டிருந்தது. அதே நகரத்தில் இத்தனை பானைகளுக்கு தேவை இருக்காது என்பதை உணர்ந்த அவர் இன்னும் சில பானைகளைத் தயாரித்து அயல் தேசங்களில் சென்று விற்றுவிடலாம் என்று முடிவெடுத்தார். அதன்படியே இன்னும் சில பானைகளைத் தயாரித்து தன்னிடமிருந்த அனைத்துப் பானைகளையும் ஒரு மாட்டுவண்டியில் ஏற்றினார். ஆனால் எண்ணற்ற பானைகள் இருந்தபடியால் வண்டியில் பூட்டப்பட்டிருந்த மாடுகளால் அவற்றை இழுக்க முடியவில்லை. உடனே யானை ஒன்றை விலைக்கு வாங்கி மாட்டிற்குப் பதிலாக யானையைப் பூட்டி தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

தொடர்ந்து நான்கு நாட்கள் காடுகள், மலைகள் போன்றவற்றைக் கடந்து ஒரு பாழடைந்த கிராமத்தை அடைந்தார். அந்த கிராமத்தில் இருந்த மக்கள் நாகரீகத்தில் மிகவும் பின்தங்கியிருந்தனர். அவர்களிடம் தண்ணீர் தேக்கி வைக்க , சமைக்க என்று இன்னமும் பானைகளைப் பயன்படுத்தும் பழக்கம் வந்திருக்கவில்லை. அவர்களுக்குப் பானைகளைப் பற்றிய அறிமுகமே இல்லாமலிருந்தது கண்டு வியந்துபோனார். இங்கே பானைகளையும் அவற்றின் பயன்களையும் எடுத்துக்கூறினால் அனேக பானைகளை விற்றுத் தீர்த்துவிடலாம் என்று கருதி பானைகளின் பயன்கள்களைப் பற்றி விரிவாக எடுத்துக்கூறினார். அவர் நினைத்தது போலவே அவரிடம் இருந்த பாதிக்கும் மேலான பானைகள் அந்தக் கிராமத்தில் விற்றுப்போயிற்று.

அளவில்லாத மகிழ்ச்சியுடன் மீதமிருந்த பானைகளை எடுத்துக்கொண்டு அடுத்த நாட்டினை நோக்கிப் பயணம் மேற்கொண்டார். அடுத்த நாட்டில் எல்லா பானைகளையும் விற்றுத் தீர்த்துவிட்டு நாடு திரும்பலாம் என்று நினைத்தபோதுதான் டாலரின் மதிப்பு குறைந்து வருவது கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் தாமதித்தால் தான் நஷ்டப்படவேண்டும் என்பதை அறிந்துகொண்டு தன்னிடமிருந்த முருகன் டாலர் உட்பட அனைத்து டாலர்களையும் ரூபாயாக மாற்றி எடுத்துக்கொண்டு தன் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்.

வரும்வழியில் அந்தப் பாழடைந்த கிராமத்தின் வழியாக வந்துகொண்டிருந்தார். அப்பொழுது அந்த கிராம மக்கள் அவரை வழிமறித்து அவர் கொடுத்த பானைகள் அனைத்தும் உடைந்துவிட்டது என்றும் அதற்குத் தகுந்த நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் மிரட்டினர். கீழே விழுந்தால் பானைகள் உடைந்துவிடும் என்று தான் முதலிலேயே சொன்னதாகவும் அதற்கெல்லாம் நஷ்ட ஈடு கொடுக்க முடியாதென்றும் சமாளித்தார் நமது வியாபாரி. ஆனால் மக்களோ “ USER MANUAL " இல் தண்ணீருடன் கீழே போட்டால் உடைந்துவிடும் என்றுதான் இருக்கிறதே ஒழிய வெறும் பானையைக் கீழே போட்டால் உடைந்துவிடுமென்று அதில் இல்லை என்றும் எனவே கண்டிப்பாக நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் என்றும் வாதிட்டு அவரை அந்த ஊர் நாட்டாமையிடம் அழைத்துச் சென்றனர்.

நாட்டாமையோ ஆலமரம் இருந்தால்தான் தீர்ப்புச் சொல்லுவேன் என்று கூறிக்கொண்டு ஆலமரத்தைத் தேடிக்கொண்டிருந்தார். ஊர் முழுவதும் தேடியும் ஒரு ஆலமரம் கூடக் கிடைக்கவில்லை. எனவே ஆலமர விதை ஒன்றை எடுத்துவந்து ஊரின் முக்கிய இடத்தில் விதைத்துவிட்டு இந்த விதை வளர்ந்து பெரிய மரமான பிறகுதான் இந்த வழக்கிற்குத் தீர்ப்பு வழங்குவேன் என்றாவாரு நடையைக் கட்டினார்.

அவர் நல்ல தீர்ப்பைச் சொல்லுவார் என்று எதிர்பார்த்த நம் வியாபாரிக்கோ சப்பென்று ஆகிவிட்டது. சரி இனியும் தாமதித்தால் மேலும் பிரச்சினைகள் வரலாம் என்று நினைத்துக்கொண்டு தன்னிடமிருந்த ரூபாய் நோட்டுக்களை எடுத்து ஒவ்வொரு பானைக்குமான விலையைத் திருப்பித்தந்துவிடுவதாகக் கூறினார். ஆனால் அந்தக் கிராமத்தில் ரூபாய் நோட்டுக்கள் செல்லாதென்பதால் மக்கள் அதனை வாங்க மறுத்துவிட்டு வேறு ஏதேனும் தருமாறும் தங்களை ஏமாற்ற நினைத்தால் உயிருடன் திரும்பமுடியாதென்றும் மிரட்டினர்.

நீண்ட யோசனைக்குப் பிறகு நமது பானை வியாபாரி தான் வந்திருந்த யானையை அந்தக் கிராமத்து மக்களிடம் ஒப்படைத்துவிட்டு நாடு திரும்பினார். யானையுடன் சென்ற தனது கணவர் தனியாக வருகிறாரே என்ன நேர்ந்தது என்று வினவினாள் அவரது மனைவி. அதற்கு நமது வியாபாரி “ ஆனைக்கும் பானைக்கும் சரியாப் போச்சு!” என்று பதிலளித்தார். அப்பொழுதிலிருந்து “யானைக்கும் பானைக்கும் சரி!“என்ற பழமொழி வழக்கத்திற்கு வந்தது.

பின்குறிப்பு : ”யானைக்கும் பானைக்கும் சரி”ன்ற பழமொழிக்கு நான் விளக்கம் சொல்லுறேன் பேர்வழினு இந்தக் கதைய வெளில சொல்லிறாதீங்க. அப்புறம் ஏதாச்சும் பிரச்சினைனா நான் பொறுப்பில்ல.இது முழுக்க முழுக்க கற்பனை. வரலாற்று நிகழ்வல்ல. நன்றி வணக்கம்!

இந்தப் பழமொழிக்கான உண்மையான கதை நம்ம ஜெய்சங்கர் அண்ணன் அவர்கள் கீழ பின்னூட்டத்துல சொல்லிருக்கார். அது என்னன்னா

ஒரு நாள் பானை வியாபாரி கல்லெடுத்து யானையை அடிக்க யானை செத்துப்போயிடுச்சு
யானைப்பாகன் தனக்கு அந்த யானை தான் வேணும்னு சொன்னான். புது யானைக்கு ஒத்துக்கலை

ஜட்ஜ் என்ன பண்ணினாருன்னா பானை வியாபாரிய வீட்டு கதவோரம் உள்ள எல்லா பானையும் அடுக்க சொன்னார்
யானை வியாபாரி வந்து கதவ தொறந்த வுடனே எல்லா பானையும் உடைஞ்சுடுச்சு
ஜட்ஜ் சொன்னார் யானைக்கும் பானைக்கும் சரின்னு.

இதன்மூலம் அவருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்,

Thursday, October 27, 2011

வேலாயுதம் ஒரு கவிதை!





உன் படத்தை நான் பார்த்த ஒவ்வொரு மணித்துளியும்

மரணப்படுக்கையிலும் மறக்காத கன்றாவியே!

மூன்று மணி நேரங்கள் படம் பார்த்த காலம்தான்

இரண்டு நாட்க்களாய் இதயத்தில் வலிக்குதடா..

பார்க்காமல் சிலநிமிடம்... பயத்தோடு சில நிமிடம்.

கதறி அழுதபடி கண்ணீரில் சிலநிமிடம்...

இரக்கமே இல்லாமல்..

எல்லா சீன்களிலும் டயலாக் பேசியே டரியல் ஆக்கிய சிலநிமிடம்!

உன் படத்தை நான் பார்த்த ஒவ்வொரு மணித்துளியும்

மரணப்படுக்கையிலும் மறக்காத கன்றாவியே!

எது நியாயம் எது பாவம்

உனக்குகூட தெரியவில்லை!

அது படமா இல்ல எனக்கு வச்ச பாம்மா அதுபற்றி அறியவில்லை!

யார் முதலில் யார் முடிவில் ஒருவருக்கும் தெரியவில்லை!

படம் பார்த்த அனைவருக்குமே சங்குதானே?..

ஒருத்தனுக்கும் தோன்றவில்லை..

அச்சம் கலைந்தேன்..ங்கொய்யால..

அடுத்த படமும் நடிப்பேன் என்றாய்..

தூக்கம் கலைந்தேன்..

துயரங்கள் தொடரும் என்றாய்!

படம் பார்த்த காலத்தை கனவாக நினைத்தாலும்..

உன் படம் பார்த்து கடைசியாக அழுத கண்ணீர் கைகளிலே ஒட்டுதடா...

உன் படத்தை நான் பார்த்த ஒவ்வொரு மணித்துளியும்

மரணப்படுக்கையிலும் மறக்காத கன்றாவியே!
 
ஹி..ஹி....வேலாயுதம்  படத்தை பார்த்ததின்  விளைவு இது!
நன்றி - வைரமுத்து (இருவர் பட கவிதை)
 
**********************************************************************************
ஒவ்வொரு விடியலிலும்

உன்னை நோக்கியே என் பிராத்தனை..

என் ஒவ்வொரு பாதச்சுவடும்..

உன்னை நோக்கியே அணிவகுக்கும்..

இரவுவரை உனைப்பார்த்து

உறவாடி வந்தாலும்..

விடிந்ததுமே என் மனது

உன்னை நோக்கி திரும்புவதை...

காதல் என்று சொன்னால் கயவர்கள்

நம்பமாட்டார்கள்!

என் ஆலயத்தின் மூலஸ்தானம்

திறப்பதற்கு காத்திருந்து..உன்

தரிசனத்தை நான் காண- இன்னும்

எத்தனை மணித்துளிகள் காத்திருக்க வைப்பாயோ?

# என்னங்கடா அநியாயம்...10 மணி ஆகப்போகுது...இன்னும் டாஸ்மாக் தொறக்கலை?

**********************************************************************************
ஒவ்வொரு இரவிலும்

உன்னுடைய தாலாட்டு..

ஒவ்வொரு விடியலிலும்

உன்னுடைய உற்சாகம்...

பல இரவுகளின் பொழுதை

உன்னோடு கழித்ததும்..

பல பயணங்களில்

என் மனதில் நீ தவழ்ந்ததும்...

என் தனிமையை பங்கிட்டு

தாரமாய் நின்றதும்..

பல நேரம் ஆனந்தம் 

சில நேரம் அதிர்ச்சி - இப்படி

கலவையான உணர்சிகளை

கண்மூடி ரசித்ததும்...

எப்படி தொலைத்தேன் உன்னை?

இன்றுவரை புரியவில்லை....

இப்போது யாரிடம் நீ?

என் நண்பனைகூட நம்பவில்லை...

இருந்தாலும் இருக்கலாம்!

# என் பாக்கெட் ரேடியோ தொலைஞ்சி போச்சி.. பார்த்தவங்க சொல்லுங்களே?

**********************************************************************************

Monday, October 24, 2011

பயடேட்டாவின் பய(ங்கர)டேட்டா!


பெயர்                                                         : பயோடேட்டா 

புனைப்பெயர்                                         : பய(ங்கர)டேட்டா

தொழில்                                                    : சிரிக்கவைப்பது

உபதொழில்                                            : தீ வைப்பது 

உப உபதொழில்                                  : பெட்ரோல் ஊத்துவது

தலைவர்                                                  : சிக்குபவர்கள்
 
துணைத்தலைவர்                               : இதை திட்டுபவர்கள்
 
பொழுதுபோக்கு                                   : கலாய்ப்பது

துணைப்பொழுதுபோக்கு                 : கலகம் வர வைப்பது

வயது                                                         : கொஞ்ச நாள்தான் ஆகுது 
பலம்                                                           : நகைச்சுவை

பலவீனம்                                                 : சில சமயம் அதில் உண்மைகள் வருவது

நம்பிக்கை                                               : இனிமேலும் தொடரும் என்று

பயம்                                                           :  நாட்டாமைகள் 
லட்சியம்                                                 : நகைச்சுவை மட்டும்

நீண்டகால சாதனை                       :  யாருமே கண்டு கொள்ளாமல் இருந்தது

சமீபத்திய சாதனை                         : கண்டுகொள்ளாமல் யாருமே இல்லாதது

இதுவரை மறந்தது                          :  கவலைகளை

இனி மறக்க வேண்டியது           : கவலை படுபவர்களை

பாடாய் படுத்துவது                         : சொம்புகள்
இதுவரை புரியாதது                       : அப்பிடி என்ன செய்திட்டோம்?


விரும்புவது                                          : தன்னால் வந்து மாட்டும் ஆடுகளை

விரும்பாதது                                        : அந்த ஆடு நான்தான் என்று வெளியில் சொல்வதை
நசுங்கியது                                            : சொம்புகள்

நசுங்காதது                                           : நட்புகள்

அடையாளம் காட்டியது              : நண்பர்களை

அடையாளம் தெரிந்தது                : சாயம் வெளுத்த நரிகளை
 
எச்சரிக்கை இல்லை... உங்க கைய காலா நினைச்சு சொல்றோம்... இது நகைச்சுவைக்கு மட்டுமே :-)) 


Wednesday, October 19, 2011

தமிழ்மணம் பிரச்சனையில் டெரர் கும்மியின் நிலைப்பாடு!


அனைவருக்கும் வணக்கம், 
கடந்த இரண்டு வாரங்களாக நடந்து வரும் பிரச்சனைகளைப் பற்றி அனைவருமே அறிவீர்கள்.. அதன் தொடக்கம் எங்களுடைய அந்த பயடேட்டா பதிவு என்பதால் நாங்களும் சில விளக்கங்களை இதன் மூலம் கொடுப்பது அவசியமாகிறது! இதற்காக அந்த பதிவு தெரியாமல் போட்டுவிட்டோம் என்றோ அதில் தமிழ் மண நிர்வாகி திரு. பெயரிலி அவர்கள் போட்ட பின்னூட்டங்கள் ஏற்றுக்கொள்ள கூடியது என்றோ பின்வாங்க வில்லை. அந்த பதிவு தமிழ் மணத்தின் மேல் காழ்ப்புணர்ச்சி கொண்டோ அல்லது வேறு உள்நோக்கத்திலோ வெளியிட வில்லை. மேலும் ஒட்டுமொத்த தமிழ்மணத்தை விட அவரின் கருத்துரைகளையும் எதேச்சாதிகரா போக்கையும்தான் நாங்கள் எதிர்க்கிறோம்..  இதுதான் எங்கள் நிலைப்பாடு.. இதற்கு மேலும் விளக்கங்கள் போதும் போதும் என்ற அளவிற்கு பல இடங்களில் கொடுத்தாகி விட்டது.


பதிவு போட்ட பிறகு தமிழ்மணத்தின் செயல்பாடு எங்களுக்கு பிடிக்கவில்லை அதனால் எங்கள் குழுவில் உள்ள பதினேழு பேரும் அதில் இருந்து விலகுவதாக நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி விலகிக்கொண்டோம். ( கவனிக்கவும்... கடிதம் எழுதி மட்டுமே... எதிர்ப் பதிவு போட்டு அல்ல ) யார் அந்த பதினேழு பேர் என்று தெரிந்து கொள்ள எங்கள் தளத்தில் பார்க்கவும்.

நாங்களாக யாரையும் கட்டாயபடுத்தி தமிழ் மணத்திற்கோ அல்லது திரு.பெயரிலி அவர்களுக்கு எதிராக பதிவு போடச் சொல்லவும் இல்லை தமிழ் மணத்தில் இருந்து விலகும் படி அறிவுறுத்தவும் இல்லை.. அது அவரவர் சொந்த விருப்பங்களின் பேரில் எடுத்த முடிவு. 

இதுவரை தமிழ்மணத்திற்கு எதிராகவும் திரு.பெயரிலிக்கு எதிராகவும் பல பதிவுகள் வந்து விட்டன.. அதில் ஒரு இடத்தில கூட நாங்கள் அவர்களை ஆபாசமாகவோ அல்லது கண்ணியக்குறைவாகவோ பேசவில்லை என்பதை எங்களால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும்.

இஸ்லாமிய நண்பர்கள்  சுட்டி காட்டும் அந்த முகமனை கிண்டல் செய்தது பற்றி அந்த நேரத்தில் எங்களுக்கு தெரியாது.... இன்று வரையிலும் அந்த முகமனை பற்றி எங்களுக்கு சரியான தெரிதல் இல்லை.. அதனாலேயே அதை பற்றி நாங்கள் கருத்து எந்த இடத்திலும் கூறவில்லை... தவறாக இருக்கும் பட்சத்தில் அவர் மன்னிப்பு கேட்ப்பதும் அவரை மன்னிப்பதும் அவர்களது நிலைப்பாடு.. இதில் நாங்கள் கருத்து சொல்ல ஒன்றுமில்லை... ஆனால் ஒன்றை  கூறிக்கொள்கிறோம்.. முகமனையை அவர் கிண்டல் செய்ய எங்கள் பதிவுதான் வாய்ப்பாக அமைந்தது என்று நினைத்தால் முஸ்லிம் சகோதரர்களிடம் வருத்தம் தெரிவிக்க எந்த ஈகோவும் எங்களுக்கு இல்லை.. சகோதரர்களே நீங்கள் அப்பிடி யாரேனும் நினைத்தால் எங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்!

ஆனால்.. இந்த பிரச்சனையில் குளிர் காய நினைக்கும் சிலர் நாட்டாமை பண்ண வருவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வில்லை.. மேலும் எங்களை ஏதோ மத உணர்வோடும் ஜாதி உணர்வோடும் சம்பந்தபடுத்த சிலர் ஆசைப்பட்டு பின்னூட்டம் இடுவது தெரிகிறது.. இதன் மூலம் நாங்கள் சொல்வது நாங்கள் எந்த மதத்துக்கோ ஜாதிகோ எதிரானவர்கள் இல்லை..அது எங்களுக்கு தேவையும் இல்லை.. எங்கள் குழுமத்தில் பதினேழு பேர் இருக்கிறோம்.. இதுவரை யார் எந்த மதம் எந்த ஜாதி என்று தெரியாமல்தான் பழகுகின்றோம்... எங்களுடைய சொந்த பதிவில் கூட மத ஜாதி உணர்வை தூண்டும் விதத்தில் ஏதேனும் உங்களால் சுட்டி காட்ட இயலுமா? இதை சவாலாகவே கூறுகிறோம்.. அப்படி சுட்டிகாட்டுங்கள்.. இப்போதே அந்த கருத்துரையை நீக்கச் சொல்லி, வருத்தம் தெரிவிக்க சொல்கிறோம். அது தப்பு மாதிரி தெரியுது ஆனா தப்பு இல்லையென்று நாங்கள் நியாயப்படுத்திச் சொல்ல மாட்டோம்!

இதற்கு மேலும் அந்த பயடேட்டா பதிவில் எங்களிடம் பதிலை எதிர்பார்த்தோ அல்லது விவாத நோக்கிலோ யாரும் கருத்துரை இடவேண்டாம். அதே போல் தூங்கி எழுந்த சிலர் நாட்டாமை பண்ணுகிறேன் என்று விடும் பதிவிலோ பஸ்சிலோ எங்கள் பதிலை எதிர்பார்க்கவேண்டாம்! போதுமான பதில்களை கொடுத்தாகி விட்டது... தமிழ்மண நிர்வாகிகளுக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் பல வேலைகள் உள்ளது.

தமிழ்மணத்தை பற்றி இனி நாங்கள் கருத்து எதுவும் சொல்லப் போவதும் இல்லை.. தேவையுமில்லை. நாங்கள் விலகி விட்டோம் இனியும் இணைவதாக இல்லை.. ஆகவே இதன் மூலம் நாங்கள் சொல்வது இதுவரை அவர்கள் தந்த ஆதரவிற்கு நன்றி. இனிமேலும் அவர்களின் புரிந்துணர்வுடன் கூடிய முன்னேற்றங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!

இந்த பிரச்சனைக்கு பிறகு இதுவரை வெளிவந்த பதிவுகளில் எங்கள் குழுமத்தை சேர்ந்தவர்கள் இட்ட கருத்துரைகளை நாங்கள் எங்கள் குழுமத்தின் கருத்தாகவே ஏற்றுக்கொள்கிறோம்.. அதில் ஏதேனும் தவறு இருந்தால் சொல்லுங்கள் அதற்காக ஏதோ ஒரு பதிவில் பகிர்வுக்கு நன்றி என்று போட்டால் மதத் துவேசம் என்று சொல்ல வேண்டாம்..  இனி எங்கள் உறுப்பினர்கள் சொல்லும் கருத்துரைகள் அவரவர் சொந்த கருத்துரைகளே.. அதை டெரர் கும்மியோடு சம்பந்தப்படுத்த வேண்டாம் ( நன்றி - தமிழ்மணம் ) ஒருவருக்கு சொந்த கருத்துக்கள் இருக்க கூடாதா என்ன?

அந்த பதிவில் வந்த ஆபாச கருத்துரைகளை கண்டித்தும்...  இதுவரை எங்களோடு துணையாக இருந்து... இன்றும் இருந்துவரும் நண்பர்களுக்கு எங்கள் நன்றிகளையும் சொல்லிக்கொள்கிறோம்!

இந்த விளக்கம் கூட இது அடிப்படை பிரச்சனையில் இருந்து திசைமாறி மத ரீதியாக போய்விட்டதாலும் அதை வைத்து நாட்டமை செய்ய சிலர்ஆசைப்பட்டதாலுமே அவசியமாகி இருக்கிறது.. மற்றபடி நாங்கள் என்றுமே தவறென்றால் தட்டி கேட்க தயங்க மாட்டோம் என்பதையும் இதன்மூலம் சொல்லிக்கொள்கிறோம்! நன்றி.. டாட். :)


டெரர்கும்மி நண்பர்கள்