Friday, March 2, 2012

கருவேலம் உண்மையில் கருங்காலியா...? பிரச்சாரங்களும் உண்மைகளும்....!

நாம் அடிக்கடி சொல்வதுதான், எல்லோர்க்கும் விழிப்புணர்வு தருகிறேன் என்ற பெயரில் ஆதாரமற்ற, அபத்தமான விசயங்களை எழுதுபவர்கள் திருந்தினால் நல்லது என்று. அப்படியே அவர்கள் எழுதினாலும் படிப்பவர்கள் என்ன சொல்லி இருக்கிறது, அது சரியா என்றெல்லாம் ஆராய்ந்து பார்ப்பது இல்லை. ஆஹா அருமை என்று டெம்ப்ளேட் கமெண்ட்டுகளை போட்டு அதற்கு துணைபோய் அதே விசயம் மென்மேலும் பரவ காரணமாகிவிடுகின்றனர். இதுதான் இந்த மாதிரி  எழுதுபவர்களுக்கு இன்னும் பலம். இன்னும் சிலர் அடிப்படை அறியாமல் அவர்கள் சொல்வதை முழுதும் நம்பி விடுகின்றனர்.

அண்மையில் ஒரு விசயம் மிக பிரபலமாக இணையத்தில் வளம் வந்தது. அதுவும் மரங்களை வெட்டுங்கள் என்ற தலைப்பில். இதை எழுதியவர் அதனை ஒரு வருடம் முன்பே வெளியிட்டு இருந்தார். அந்த நேரத்தில் சிலர் அப்படி இல்லை என்ற கருத்தை நாசூக்காகச் சொல்லி இருந்தார்கள். சிலரோ இதோ நான் அருவாள் எடுத்துவிட்டேன் எங்கே மரம், வெட்டுகிறேன் என கிளம்பியதே இதில் இருக்கும் தவறான தகவல்களை யாரும் அலசி பார்க்காமல் நம்பிப் போனதுக்கு காரணமாக இருக்கலாம்.  

சில நாள்களில் அந்த பிரச்சினை ஓய்ந்து இப்போது மீண்டும் எங்கேபார்த்தாலும்அதே விசயம் பரவ ஆரம்பித்து இருக்கிறது. சரி நாமும் அப்படி என்னதான் கெடுதல் விரிவாக அறிந்து கொள்வோமே என்று தேடிப்பார்த்தால் ஆச்சர்யமான, அதிர்ச்சியான சில உண்மைகள் விளங்கின. அவைகளைத்தான் இங்கே விளக்கமாக பார்க்க போகிறோம். விசயத்திற்கு செல்லும் முன் வெட்டசொன்ன மரத்தினை பற்றி சிறு அறிமுகம்.

இதன் அறிவியல் பெயர்   : Prosopis Juliflora

நம்மூரில் அறியப்படுவது  :  சீமை கருவேலம் அல்லது வேலிமரம்

இதனை பற்றி முழுவதுமான அறிவியல் விளக்கங்களை தெளிவாக இந்த சுட்டியில் காணலாம்

இந்த மரத்தின் தீமைகளாக எடுத்து வைக்கப்படும் விசயங்கள்... 

1) இந்த மரம் அதிகம் விஷத்தன்மை கொண்டது.

2) இதன் வேர்கள் ஆழமாக சென்று நீரை உறிஞ்சி விடுவதால் நீராதாரம் பாதிக்கப்பட்டு தென்தமிழகத்தின் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் நிலவும் வறட்சிக்கு இவைகளே முக்கிய காரணம்.

3) இந்த மரத்தின் எந்த ஒரு பொருளும் பயன்பாட்டுக்கு உதவாது, முக்கியமாக இலை,காய் (நெத்து), பூ என எல்லாமே விஷத்தன்மையுள்ளது. ஆகையால் கால்நடைகள் தெரியாமல் உண்டுவிட்டால் உயிரிழப்பு ஏற்படும்.

4) நிலத்தடி நீரை விஷமாக மாற்றுவதோடு இல்லாமல் மண்ணின் வளத்தை முற்றிலுமாக சீரழித்து விடும். இது வளர்ந்த இடத்தில் எதையுமே பயிரிடமுடியாது. விவசாய நிலங்களை  ஆக்கிரமித்து விவசாயத்தை கெடுக்கிறது

5) இந்த மரத்தில் கால்நடைகளை கட்டிவைத்தால் அவைகள் மலடாக மாறும் அல்லது கன்றுகள் ஊனமாக பிறக்கும்.

இதே விசயங்கள் இணையம் முழுதும் எங்கும் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் உண்மை அப்படியே நேர்மாறாக இருக்கிறது. அதனால் ஒரேயடியாக இந்த மரத்தை விஷம் நிறைந்த மரம் என்று ஒதுக்கி தள்ளுவதற்கு முன் இதனை பற்றி சரியாகத் தெரிந்து கொள்வது கொஞ்சம் அவசியமாகிறது.

இதை இங்கு தெரிவிப்பதின் காரணம் இந்த மரம் நமக்கு மிகவும் அவசியமானது, இதை வீட்டுக்கு ஒன்றாக வளர்க்க வேண்டும் என இந்த மரத்துக்கு பரிந்துபேசி வலியுறுத்த போவதில்லை. மாறாக இந்த மரத்தைப் பற்றிய தவறான தகவல்களை ஆதாரங்களோடு மறுப்பதோடு, சொல்லிக்கொள்ளும் அளவில் இருக்கும் இம்மரத்தின் நன்மைகளையும் பார்க்கப் போகிறோம். 

ஆனால் இதன் பொதுவான தீங்கு விவசாய நிலங்களில் வளர்ந்து விவசாயிகளுக்கு பெரும் தொந்தரவாக இருப்பது. இது பெரியதாக வளர்ந்து விட்டால் இதன் வளர்சித்தன்மையின காரணமாக வேகமாக பரவும். அதுவும் எந்த காலநிலையும்,மண் தன்மையும் இதன் வளர்ச்சியை ஒன்றும் செய்ய முடியாது. பெரும்பாலும் எந்த விவசாயியும் இதனை தனது நிலத்தில் வளர அனுமதிப்பது இல்லை அந்த நிலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்யும் பொருட்டு. இது ஒன்றுதான் நாம் எதிர்கொள்ளும் தீமை.அதுவும் நாமே அதை வளர அனுமதித்தால் ஒழிய. 

இந்த மரத்தைப் பற்றிய விஷயங்களை கீழ்கண்ட தலைப்புகளில் பார்க்கலாம். 

1) இது விஷம் நிறைந்தது அல்ல.

2) தமிழகத்தின் சில மாவட்டங்களில் நிலவும் வறட்சிக்கு இது தான் காரணமா?

3) இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் பொருள்களை  வைத்து எவ்வாறு பயனடையலாம்.

4) இதனை ஒன்றுக்கும் உதவாத அதாவது உப்பு, உவர் நிலங்களில் வளர்ப்பதால் என்னமாதிரியான பயன்களை தருகிறது.

5) இது கால்நடைகளுக்கு எவ்வாறு மருந்தாக,உணவாக பயன்படுகிறது.

6) இதனால் சமூகத்தில் இருக்கும் பொருளாதார தாக்கம் என்ன முக்கியமாக ஏழைகளின் வாழ்வில்.

7) மின்சார தயாரிப்பில் இதன் பங்கு. 

1. விஷச்செடியா?? 

இது விஷச்செடி வகையை சார்ந்ததா என்றால் நிச்சயமாக இல்லை. விஷச்செடி என்றால் அரளிச்செடியை சொல்லலாம். இந்த முறையில் பார்த்தால் இந்த மரத்தினால் உயிரினங்களுக்கு அந்த மாதிரியான எந்த பாதிப்பும் இல்லை. மேலும் இதன் முள் விஷத்தன்மை வாய்ந்தது, இலையை தின்றால் உயிரிழப்பு என்பதெல்லாம் முற்றிலும் ஆதாரமற்ற விசயங்களே. 

2. வறட்சிக்குக் காரணமா? 

அடுத்து சில மாவட்டங்களில் நிலவும் வறட்சிக்கு இதுதான் முக்கிய காரணம் என்பது அபத்தமானது. வறட்சி என்பது ஒருவகையில் மட்டும் வருவது இல்லை. பல காரணிகள் பின் நிற்கின்றன. மண்வளம், நிலத்தடி நீரின் அளவு, காற்றில் நிலவும் ஈரப்பதம் போன்ற காரணிகள். இந்த மரமே இதை சுற்றியுள்ள காலநிலையை நிர்ணயிக்கிறது என்பதும் சரியில்லை.

குறிப்பாக விருதுநகர்,ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவும் வறட்சிக்கு அங்கு நிலவும் மண்வளமே காரணம். மண்ணில் காணப்படும் கால்சியம் கார்பனேட் (Calcium carbonate) மண்ணின் வளம் மேம்படுவதை வெகுவாக பாதிக்கிறது. வைகைப் படுகை இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மணல், உவர்நிலங்களாகவே இருக்கின்றன

இப்படி அதிகமாக காணப்படும் தரமற்ற மண்ணில் மரவகைகள் செழித்து வளர்வது முடியாத காரியம். ஆனால் இந்த கருவேலம் மரத்துக்கு மண் வளம் பெரிய பிரச்சினையே இல்லை. முக்கியமாக உவர், உப்பு நிலங்களில் கூட செழித்து வளரும். இதுவளரும் சூழ்நிலையில் மற்ற மரங்கள் வளர்வது சாத்தியமற்றது.

இந்த வறட்சியான சூழ்நிலையை கருத்தில் கொண்டுதான் பென்னி குக் பெரியார் அணையே கட்டினார். ஏனென்றால் வைகை ஆற்றில் இருந்து கிடைக்கபெரும் நீர் அங்கு நிலவும் வறட்சியை தாக்குப்பிடிக்க முடியாது என்று எண்ணியதே. முக்கியமான விசயம் என்னவென்றால் பல நூறு வருடங்களுக்கு முன்னரே இந்த வறட்சி இருந்து இருக்கிறது. ஆனால் கருவேலம் இந்தியாவுக்கு வந்தது 1857 ல் தான். அதுவும் தமிழகத்துக்கு இதன் வருகை கொஞ்சம் காலம் தள்ளியே இருக்க வேண்டும். பார்க்க..

///the earliest recorded introduction of P. juliflora was in 1857, the first systematic plantations were not carried out until 1876 ~ 77 in the Kaddapa area of Andhra Pradesh. It was introduced into parts of Gujarat in 1882 ///

ஆனால் பெரியாறு அணை கட்டும் திட்டம் 1807 ல் அடிப்படை வேலைகள் தொடங்கி சில பிரச்சினை வந்து அப்புறம் 1882 ஆம் ஆண்டில் முழுவதும் கட்டி முடிக்கபெற்று இருக்கிறது. இந்த அணை கட்டுவதற்க்கு முன்பே நிலவிய வறட்சியின் காரணமே இதனை உருவாக்கும் எண்ணம்அவருக்கு தோன்றி இருக்கிறது.


எனவே இந்த கருவேலம் மரம்தான் அங்கு நிலவும் வறட்சிக்கு முழுக்காரணம் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்வதில் அர்த்தமில்லை. மேலும் மற்ற மரங்கள் வளரமுடியாத அந்த உவர் நிலங்களில் இந்த கருவேல் மரம் வளர்ந்து அப்பகுதி மக்களுக்கு கரிமூட்டம், அடுப்பு எரிக்க விறகு போன்ற விசயங்களுக்கு உதவுகின்றது.

 3. எப்படி பயனளிக்கிறது...?

எரிபொருளாக

இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் பொருள்களை அப்படியே விஷம் என்று சொல்லி ஒதுக்கி இருந்தால் இந்நேரம் அதிக இழப்புகளை சந்தித்து இருப்போம். முக்கியமாக ஏழை மக்கள். அவர்களுக்கு முக்கியமான எரிபொருளாக பயன்படுவது இந்த மரமே. பார்க்க பக்கம் 137 & 138, http://www.iamwarm.gov.in/Environment/report.pdf

அதோடு ஏழைமக்களுக்கு வேலையோடு நிலையான வாழ்வாதாரத்தையும் இந்த மரங்கள் கொடுத்து வருகின்றன. மிகவும் வறட்சி மற்றும் பொதுவான மரங்கள் செழித்து வளர முடியாத இடங்களில் வாழும் மக்களுக்கு இந்த மரத்தை விட்டால் வேறு மாற்றுவழி இல்லாததே காரணம். இதன் விதைகளையும் மாவாக்கி பயன்படுத்தலாம் என்றும் சொல்கிறார்கள். பார்க்க பக்கம் 7 ~ 10 .. http://www.cazri.res.in/envis/pdf/3no3-4.pdf

வாழ்வாதாரத்தைப் ஏழைகளுக்கு கொடுப்பதில் இதன் விறகு முக்கியத்தன்மை பெறுகிறது. இதில் இருந்து கரிமூட்டம் மூலமாக தயாரிக்கப்படும் கரி பல்வேறு உபயோகங்களுக்கு பயன்படுகிறது. முக்கியமாக் சிறு தீப்பெட்டி தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள் உணவகங்கள், கொள்ளபட்டரை, தாது பொருள்களை பிரித்து எடுக்கும் பெரிய தொழிற்சாலைகள் என பட்டியல் நீளும். பார்க்க பக்கம் 1 ~ 2 http://www.currentsciencejournal.info/issuespdf/Saraswathi%20Prosophis.pdf.  

உணவாக

அடுத்து இதன் நெத்து (காய்), மற்றும் அதில் இருந்து பெறப்படும் விதைகள் விலங்குகளுக்கும்,மனிதர்களுக்கும் உதவுகின்றன. ஆடு மாடுகளுக்கு இதையே உணவாக கொடுக்கிறார்கள். இதில் ப்ரோடீன் சத்து நிறைவாக இருப்பதாகவும் இதை உணவாக உண்பதால் கால்நடைகள் நலமாக வளர்வதாக சொல்கிறார்கள். பார்க்க பக்கம் 11 ~ 14 & 28.  http://www.issg.org/database/species/reference_files/progla/Mwangi&Swallow_2005.pdf 

இதனை மரமாக எப்படி திறன்மிக்க முறையில் வீட்டு உபகரணங்கள், கரிமுட்டம் இவற்றிக்கு பயன்படுத்தலாம் என்பதை பார்க்க பக்கம் 77 ~ 81 http://www.gardenorganic.org.uk/pdfs/international_programme/ManagingProsopisManual.pdf 

ஆச்சரியப்படும் விசயம் என்னவென்றால் இதன் விதையை மாவாக்கி அதை மனிதர்களும் உணவுப் பொருள்களாக பயன்படுத்துவதுதான். அதுவும் இது மிகவும் சத்து நிறைந்த ஒன்றாக அதாவது இதில் ப்ரோடீன் 10%, fiber 14%  கலந்து இருப்பதுதான். இதை கொண்டு தயாரிக்கப்பட்ட ரொட்டிக்கும், கோதுமை மாவினால் செய்த ரொட்டிக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. அதோடு பிரேசில், பெரு போன்ற நாடுகளில் இந்த விதைகளை அரைத்து காபியாக குடிக்கிறார்கள். பார்க்க பக்கம் 84 ~ 86  (தொடர்ந்து வரும் பக்கங்களில் எப்படி மருந்தாக பயனளிக்கிறது என்பதயும் பார்க்கலாம்) http://www.gardenorganic.org.uk/pdfs/international_programme/ManagingProsopisManual.pdf

4. உவர்நிலங்களில் மண்ணின் வளம் மேம்படுதல் 

இது வளர மண்வளம் தேவை இல்லை என்பதை பார்த்தோம். சாதாரண மரங்கள் வளர முடியாத மண்வளத்தில் அதாவது உப்பு,உவர்,மற்றும் அமிலத்தன்மை அதிகம் கொண்ட மண்ணில் இது செழித்து வளருவதோடு அந்த மண்ணின் தன்மையை மாற்றியமைக்கிறது. அதாவது அதில் உள்ள கேடுகளை நீக்கி ஒருவகையில் மண்ணின் வளத்தை மேம்பட செய்கிறது.

உவர்,உப்பு தன்மை கொண்ட நிலங்ககளில் உள்ள அமிலத்த தன்மையை இந்த மரத்தை அதில் பயிரிடுவதன் மூலம் அந்த மண்ணை மேம்படுத்தலாம் என்பதை ஆராய்ச்சியின் மூலமாக நிரூபித்து உள்ளார்கள்,

கர்நாடக மாநிலம் சித்திரதுர்க்கா என்னும் மாவட்டத்தில் அதிகம் உப்புத்தன்மை கொண்ட சாதரணமாக மரங்கள் வளர முடியாத நிலம் சோதனைக்கு எடுத்துகொள்ளப்பட்டு அதில் இந்த மரத்தை நட்டுவளர்த்து அதற்கு பின் அந்த மண்ணில் ஏற்ப்பட்ட மாற்றத்தை கணக்கிட்டு இதனை நிரூபித்து உள்ளார்கள்

இந்த ஆய்வில் முற்றிலும் உப்புத்தன்மை கொண்ட நிலமாக இருந்த இடத்தில் கருவேலம் மரத்தை சில வருடங்கள் வளர்ததின் மூலம் அதில் உள்ள கனிமங்கள் எவ்வாறு மாறி இருக்கிறது என்பதை தெளிவாக இங்கு காணலாம். பார்க்க பக்கம் 1 ~ 3   http://pub.uasd.edu/ojs/index.php/kjas/article/viewFile/354/339 

அவர்களின் ஆய்வின்படி இந்த மரம் மண்ணில் உள்ள ஆர்கானிக் கார்பன் (organic carbon) மண்ணில் அதிகமாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த organic கார்பன் மண்ணின் வளத்தில் முக்கியபங்கை வகிக்கிறது என்பதை இந்த இணைப்பில் படித்து தெரிந்து கொள்ளலாம். பார்க்க பக்கம் 1 ~ 3   http://www.esd.ornl.gov/~wmp/PUBS/post_kwon.pdf 

இன்னொரு ஆய்வு தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் இடமான கோயம்புத்தூர் பகுதியில் செய்யப்பட்டு இருக்கிறது. பொதுவாக தொழிற்சாலைகள் இருக்கும் இடங்களில் அதில் இருந்து வெளியாகும் சிறு உலோக துகள்களால் மண்ணின் வளம் கண்டிப்பாக பாதிக்கப்படும்

கொஞ்சம் கொஞ்சமாக சேரும் இந்த துகள்கள் நாளடைவில் மண்ணின் மேற்பரப்பில் ஒரு தடுப்பு போல அமைந்து மற்ற தாவர இனங்கள் வளர முடியாதபடி செய்துவிடும். இந்த ஆய்வின் படி அந்த பகுதியில் இருந்த தாமிரம் மற்றும் காட்மியம் போன்ற உலோகதுகள்களால் பாதிப்படைந்த நிலத்தில் இம்மரங்களை வளர்த்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் அதிகமாக உலோகதுகல்களால் பாதிப்படைந்த நிலம் கொஞ்சம் கொஞ்சமாக அதன் தன்மையில் இருந்து மாறி வருவது கண்டறியப்பட்டது

இதில் காட்மியம் எனும் உலோகம் மிக அபாயம் நிறைந்த ஒன்று என்பதால் இந்த நிலங்ககளில் வளரும் மரத்தின் எந்த ஒரு பொருளையும் மக்கள் தங்கள் கால்நடை பயன்பாட்டுக்கு கிடைக்காமல் செய்யப்படவேண்டும் என அறிவுருத்தபடுகிறது.  மண்ணில் இருக்கும் ஆபத்தான உலோகங்களை மரமே உறிஞ்சி எடுத்துக் கொள்வதாலேயே இப்படி சொல்லப்படுகிறது (இந்த காட்மியம் உலோகம் ஒரு வகைp புற்றுநோய்க்கு காரணமாக இருக்கிறது என்று அறிக). பார்க்க  http://www.ncbi.nlm.nih.gov/pubmed/16054919 

5. கால்நடைகளுக்கு மருந்து 

இதை உண்டால் கால்நடைகள் இறந்துவிடும் அல்லது மலடாக மாறிவிடும் என்ற ஜல்லியடிப்புகள் விழிப்புணர்வு என்ற போர்வையில் பரப்பப்பட்டு இருக்கிறது என்பதை கிழே உள்ள விசயங்களை படிப்பதின் மூலம் உணரலாம்.

இதன் இலைகளை கால்நடைகள் உண்ணாது எனபது உண்மை. இதன் நெத்து (காய்) சத்து பொருள்கள் நிறைந்த ஒரு உணவாக கால்நடைகளுக்கு கொடுக்கப்படுகிறதுவறட்சி காலங்ககளில் ஏற்க்கனவே சேகரித்து வைக்கப்பட்டு இருக்கும் இந்த நெத்துக்களை தங்களின் கால்நடைகளுக்கு கொடுக்கின்றனர், வறட்சியான நிலங்களில் வசிப்பவர்கள். பார்க்க பக்கம் 82   http://www.gardenorganic.org.uk/pdfs/international_programme/ManagingProsopisManual.pdf 

இந்த மரத்தினால் மலட்டுத்தன்மை உண்டாகிறது என்று அபத்தமாக எந்த வித ஆதாரமும் இல்லாமல் எப்படி பொத்தம் பொதுவாக சொல்ல முடிந்ததோ தெரியவில்லை. காரணம் இந்த விதைகளே ஆடுகளின் மலட்டுத்தன்மையை போக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. எப்படி உண்மையை நேர்மாற்றமாக பரப்பி வருகிறார்கள் பார்த்தீர்களா?

அதாவது ஒருகிராமத்தில் உள்ள இரண்டு வெவ்வேறு ஆட்டுமந்தைகள் சோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டு ஒரு பிரிவில் இந்த நெத்தை அல்லது இதன் விதைகளை பார்லி உடன் சேர்த்து உணவாகக் கொடுக்கபட்டது. மற்ற பிரிவில் இந்த உணவு வழங்கப்படவில்லை.இந்த விதைகளை சினை காலங்களில் ஆட்டுக்கு கொடுப்பதின் மூலம் அவற்றின் சினை பிடிக்கும் திறன் அதிகரித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பார்க்க http://www.dfid.gov.uk/r4d/PDF/Outputs/R6953e.pdf 

6. பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி 

விவசாயம் ஏதும் செய்ய முடியாத, வறட்சி மிகுந்த நிலங்களில் வாழும் ஏழை மக்களுக்கு இந்த மரங்களினால் ஏற்படும் நன்மைகள் ஏராளம். இதனை ஏழைகளுக்கான மரம் என்றே சொல்கிறார்கள். ஆனாலும் முதலில் சொன்னபடி இது தொடர்ச்சியாக விவசாயம் செய்யும் நிலங்களில் வளருவதால் விவசாயிகள் பாதிப்படைந்து அரசாங்கத்திடம் இதன் முற்றிலும் அளிக்கும் திட்டத்தினை செயற்படுத்துமாறு நிர்பந்திக்கிரார்கள்.

இவர்கள் சொல்படியே நமது மாநிலத்தில் இருக்கும் எல்லா மரங்களையும் அழித்துவிட்டால் இதனை எரிபொருளாக,தொழிலாக பயன்படுத்துவோரின் நிலை என்னவாக இருக்கும். அதே நேரத்தில் நல்ல செழிப்பான பகுதிகளில் இருக்கும் மற்ற எல்லா விவசாயிகளும் இதனை தனது நிலத்தில் வளரவிடாமல் முன்னெச்சரிக்கையாக இருந்தாலே போதுமானது அல்லவா?

அதற்கு விளை நிலங்களை எந்த காரணம் கொண்டும் தரிசாக வைத்து இருக்கக் கூடாது. தொடர்ந்து சில வருடங்ககள் வரை கண்டுகொள்ளாத நிலங்களாக இருந்தால் கண்டிப்பாக இந்த மரங்கள் வளர வாய்ப்பு இருக்கிறது. எனவே முடியாத பட்சத்தில் வருடத்தில் ஒருமுறையாவது தனது நிலத்தில் இருக்கும் தேவையில்லாத செடிகளை அகற்றும் பணியில் செயல்பட வேண்டும். அது ஆட்களை வைத்து அகற்றுவதாக அல்லது உழவு அடிப்பதான முறையில் இருக்கலாம். இதுதான் அவர்களுக்குண்டான விழிப்புணர்வைக் கொடுக்கும் விசயமாக இருக்கழ்மே தவிர மற்றவர்களுக்கு வேறு விதத்தில் பயனளிக்கும் ஒன்றை மொத்தமாக அழிப்பது என்பதை எதில் சேர்ப்பது ?

இந்த மரத்தைப் பயன்படுத்துவோரின் நலனை கருத்தில் கொள்ளும் வகையில் சில விசயங்களை இந்த இணைப்பில் காணலாம் பார்க்க  http://www.gardenorganic.org.uk/pdfs/international_programme/Prosopis-PolicyBrief-2.pdf 

7. மின்சார தயாரிப்பில் இதன் பங்கு   

மின்சாரம் தயாரிப்பதில் இருக்கும் சிக்கல்கள், மின்சாரத்தின் அவசியம் எல்லாவற்றையும் தமிழ்நாட்டு மக்களுக்கு இப்போதைய நிலையில் நான் எதையும் ஆதாரத்தோடு விளக்க வேண்டிய அவசியம் இல்லையென நம்புகிறேன். அனைத்தையும் அனுபவப் பாடமாக படித்துக்கொண்டு இருக்கிறோம்.

இருக்கும் மின்தட்டுப்பாட்டை அணுமின்நிளையம் வைத்து போக்க முயன்றால்பாதுகாப்பு,சுற்றுப்புற சூழ்நிலை நலன் கருதி முடக்கி வைத்தாயிற்று. மற்ற முறையில் எடுக்கப்படும் மின்சார முறையில் ஏற்ப்படும் இழப்புகளும் அதிகம். அனல்மின்சாரம் எடுக்கும் இடங்களில் இருந்து வெளியேற்றப்படும் புகை, பிற கழிவுகளை எல்லோரும் அறிந்ததே.

இந்த மாதிரியான நிலையில் ஒரு நல்ல தீர்வை முடிவாக எடுப்பது உடனடி தேவை. அந்த தீர்வும் உடனடியாக கிடைக்கும் தருவாயில் இருப்பதாக இல்லை.இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மிக அதிகச்செலவில் மாற்று மின்சார முறைகளை புதியாதாக ஆராய்ந்து புதிய தொழில்நுட்பங்களை நடைமுறைபடுத்துவது என்பது அதிக காலமும்,பண விரயத்தையும் கொண்ட செயல். அதிலும் முழு பயன் கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது.   

இந்த நிலையில் நமது நாட்டில் கிடைக்கும் அதிகமான உதிரிப்பொருள்களை   ஆதாயமாக வைத்து சில திட்டங்ககளை செயல்படுத்தினால் நல்ல பலனோடு அதை கொடுப்பவர்களின் வழக்கையும் உயர வாய்பிருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் Biomass Power Generation  என்ற முறை சிறப்பான ஒன்று.

இந்த முறையில் இயற்கையாக கிடைக்கும் கனிம அல்லது மற்ற பொருள்களை வைத்து மின்சாரம் தயாரிக்கப்படுகின்றதுநாம் கொட்டும் குப்பைகள் கூட ஒருவிதத்தில் இதுக்கு உதவும் என்கிறார்கள். குப்பையை பயன்படுத்துவதின் மூலம் அதை வேறொரு முறையில் அழிக்கும் போது இருக்கும் பாதிப்புகள் தவிர்க்கப்படுவதோடு பயனாக மின்சாரம் கிடைக்கிறது.

தமிழ் நாட்டில் இந்தமாதிரியான சிறு மின்நிலையங்கள் சில இடங்களில் நடைபெற்றுவருகிறது. இங்கே முக்கியமான விசயம் என்னவென்றால் அதற்கு எரிபொருளாக கருவேல் மரத்தின் விறகுகள் பயனபடுத்தப்படுகின்றன.  இந்த மரவிறகுகள் அதிக எரிசக்தி கொண்டவையாக இருப்பதால் நல்ல பலனும் கிடைக்கிறது. மற்ற வழிமுறைகளைவிட குறைந்த அளவே கார்பன் டை ஆக்சடை வெளியிடுகிறது. (பக்கம் 23, 24). http://www.sgsqualitynetwork.com/tradeassurance/ccp/projects/395/BMC-PDD-Final%5B1%5D.pdf 

இதனால் இன்றைய அத்தியாவசியத்த் தேவையான மின்சாரமும் கிடைப்பதோடு பிந்தங்கிய மாவட்டங்களில் வாழும் இந்த மரத்தை சார்ந்து தொழில்செய்வோரின் வாழ்வாதாரமும் உயரும் என்பதில் சந்தேகமில்லை

இந்த Biomass Power Generation  எவ்வாறு இயங்குகிறது அதற்கு உண்டான வழிமுறைகள் என்னென்ன போன்ற விசயங்களை தெளிவாக இந்த இணைப்பில் படிக்கலாம். கொடுமை என்னவென்றால் இது திருநெல்வேலி பகுதிகளில்தான் அதிகமாக இருக்கிறது. சொந்த ஊரில் இந்த மாதிரியான விசயங்ககளை வைத்துக்கொண்டு விழிப்புணர்வு என்ற பெயரில் எதையுமே ஆராய்ந்து பார்க்காமல் ஜல்லியடித்து இருப்பவர்களை என்ன சொல்வது....? பார்க்க  

இது எவ்வாறு சாத்தியம் என்பதில் சந்தேகம் இருந்தால் அறிவியல்பூர்வமான செயல்முறை விளக்கம் இங்கே காணலாம் பார்க்க,

ஒவ்வொன்றையும் தெளிவாக விளக்கவே நினைத்தோம். படிப்பவர்களுக்கும் எளிதாக இருந்திருக்கும். ஆனால் கட்டுரையின் அதிக நீளம் கருத்தில் கொண்டு பல இடங்களில் "பார்க்க பக்கம்" என்று போடவேண்டியாதாகிவிட்டது. எப்படியோ இதன் மூலம் கருவேலம் ஒரு நச்சுப்பொருள் இல்லை என்பதோடு அதனால் எப்படியெல்லாம் பயனடைகிறோம் என்பதை விளக்கமாக தெரிந்து இருப்பிர்கள். முக்கியமாக விழிப்புணர்வு என்ற பெயரில் உண்மை என்னவென்று அறிந்து கொள்ளாமல் அபத்தங்களை எழுதி பரப்பியவர்களின் நோக்கம் என்னவென்றாவது புரிந்து இருக்கும்.

டெரர் கும்மிக்காக எழுதியவர்கள்
.

125 comments:

அருண் பிரசாத் said...

இதே வேலையா போச்சு....

கேட்சியா ஒரு தலைப்பு வைக்கறது.... பதிவுல இல்லாததை பொல்லாதை எல்லாம் சொல்லி பயம்புருத்துறது...... அப்படியே ஊர் எல்லாம் பரப்புறது.....

நல்ல கிளப்புறாங்கய்யா.....

வைகை said...

யோவ்.. யாருயா இந்த போஸ்ட் போட்டது? விவாதம் பண்ணிக்கிட்டு இருக்கைல விவாதம் இத்துடன் முடிவடைகிறதுன்னு நீயும் கடைய சாத்துன... மவனே உனக்கு இருக்கு... உனக்கு தில்லும் திராணியும் இருந்தா கடைசிவரை விவாதம் பண்ணனும்.... ஓக்கேன்னா அண்ணன் இங்க இருக்கேன் :-))

TERROR-PANDIYAN(VAS) said...

@வைகை

/யோவ்.. யாருயா இந்த போஸ்ட் போட்டது? விவாதம் பண்ணிக்கிட்டு இருக்கைல விவாதம் இத்துடன் முடிவடைகிறதுன்னு நீயும் கடைய சாத்துன... மவனே உனக்கு இருக்கு... உனக்கு தில்லும் திராணியும் இருந்தா கடைசிவரை விவாதம் பண்ணனும்.... ஓக்கேன்னா அண்ணன் இங்க இருக்கேன் :-))//

மச்சி!! இது பப்ளிசிட்டிக்கு எழுதின பதிவுயில்லை. அதனால அப்படி எல்லாம் கடையை மூட மாட்டோம்.. :)

இம்சைஅரசன் பாபு.. said...

பதிவ இப்ப தான் படிச்சு முடிச்சேன் ..லிங்க் எல்லாம் படிச்சிட்டு நீங்கள் சொல்வது எல்லாம் உண்மையா என்னான்னு கேள்வி கேப்பேன் ..

நீங்க பாட்டுக்கு கமன்ட் மாடரேசன் வச்சுகிட்டு போய்டாதீங்க .... யோவ் கேள்வி கேட்டா பழைய கமெண்ட்ஸ் எல்லாம் எடுத்து போடுவீங்களா ..? ஹையோ மானம் போயிருமே

வைகை said...

TERROR-PANDIYAN(VAS) said...
@வைகை

மச்சி!! இது பப்ளிசிட்டிக்கு எழுதின பதிவுயில்லை. அதனால அப்படி எல்லாம் கடையை மூட மாட்டோம்.. :)//


அப்ப.. பப்ளிகுட்டிக்கும் பதிவு எழுதலாமா? சொல்லவேயில்ல? :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இன்று என் வலையில்

இறால் மீனே கிடைத்தது

வைகை said...

இதில் சொல்லியிருக்கும் அனைத்தும் நாட்டு கருவேல மரங்களுக்கும் பொருந்துமா? ஏன்னா எங்க ஊர் பக்கம் பல கண்மாய்களில் அந்த மரம்தான் அதிகமா நட்டுருக்காங்க... தண்ணீரை அதிகளவில் உறிஞ்சும்னா அரசாங்கம் ஏன் கண்மாயில் நடுவில் இந்த மரங்களை நடணும்? விஞ்ஞானி ஐயா.. தெரியாமத்தான் கேக்குறேன்..கோவிச்சுக்காம பதில் சொல்லுங்க :-))

புதுகை.அப்துல்லா said...

ஊர் பஞ்சாயத்துல யாராவது ஒரு பெருசு உக்காந்துகிட்டு, "ஒரு பக்கம் பார்த்தா இவஞ் சொல்றதும் செரி.. அங்குட்டு பார்த்தா அவஞ் சொல்றதும் செரி" அப்படின்னு டயலாக் பேசிகிட்டு இருக்கும். அது மாதிரி ஆயிருச்சு எங்க நெலமை :)

இம்சைஅரசன் பாபு.. said...

மின் நிலையம் ,மின்சாரம் இப்படி எல்லாம் புது வார்த்தையா சொல்லுறீங்களே இது தமிழ்நாட்டுல எந்த எடத்துல விக்கிறாங்க ..நல்ல ருசியா இருக்குமா ? அல்லது இது ஒரு வகை பெரிய பொருளோ ..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்துல்லா அண்ணா பஞ்சாயத்துன்னு சொல்லாதீக. இங்க சொம்பு திருடுரவணுக ரொம்ப பேர் இருக்கானுக

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இம்சைஅரசன் பாபு.. said...

மின் நிலையம் ,மின்சாரம் இப்படி எல்லாம் புது வார்த்தையா சொல்லுறீங்களே இது தமிழ்நாட்டுல எந்த எடத்துல விக்கிறாங்க ..நல்ல ருசியா இருக்குமா ? அல்லது இது ஒரு வகை பெரிய பொருளோ ..?//

இது ஒருவகையான முன் ஜென்மத்தில் மூதாதையர் யூஸ் பண்ணின சாப்பாட்டு ஐட்டம்

வைகை said...

இதன் வேர்கள் ஆழமாக சென்று நீரை உறிஞ்சி விடுவதால் நீராதாரம் பாதிக்கப்பட்டு தென்தமிழகத்தின் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் நிலவும் வறட்சிக்கு இவைகளே முக்கிய காரணம்.//

இதை ஏற்றுக்கொள்ள முடியாது.. அப்பிடி பார்த்தால் சிவகங்கை,புதுக்கோட்டை மாவட்டம்கூட வறட்சியானதுதான்... பொதுவாக ஆற்றுப்பாசனம் இல்லாமல் வானம் பார்த்த பூமி எல்லாவற்றுக்குமே இதுதான் நிலைமை. வறட்சியை போக்க நதி நீர் இணைப்பை முன்னேடுதாலே போதும்.. கருவேல மரங்களை ஒழிப்பதால் மட்டுமே சாத்தியம் என்றால்.... படிக்க நல்லாயிருக்கு :-))

வைகை said...

இந்த மரத்தின் எந்த ஒரு பொருளும் பயன்பாட்டுக்கு உதவாது, முக்கியமாக இலை,காய் (நெத்து), பூ என எல்லாமே விஷத்தன்மையுள்ளது. ஆகையால் கால்நடைகள் தெரியாமல் உண்டுவிட்டால் உயிரிழப்பு ஏற்படும்.//

மிகைப்படுத்தப்பட்ட தகவல்.. பொதுவாக ஆடு மாடுகள் இதன் இலை பூக்களை தின்பதில்லை, ஆனால் இதன் காய்ந்த கைகள் ஆடு மாடுகளுக்கு நல்ல உணவு. மற்றபடி இதில் பயப்படும்படி ஒன்றும் இல்லை :-)

இம்சைஅரசன் பாபு.. said...
This comment has been removed by the author.
இம்சைஅரசன் பாபு.. said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அப்துல்லா அண்ணா பஞ்சாயத்துன்னு சொல்லாதீக. இங்க சொம்பு திருடுரவணுக ரொம்ப பேர் இருக்கானுக//

இதை கல்யாண வீட்டுல சொம்பு திருடுனவன் சொல்ல கூடாது

அருண் பிரசாத் said...

//மிகைப்படுத்தப்பட்ட தகவல்.. பொதுவாக ஆடு மாடுகள் இதன் இலை பூக்களை தின்பதில்லை, ஆனால் இதன் காய்ந்த கைகள் ஆடு மாடுகளுக்கு நல்ல உணவு. மற்றபடி இதில் பயப்படும்படி ஒன்றும் இல்லை :-)//

அப்போ புலி கூட தான் புல்லை திங்காது? அப்படி திண்ண அது மலடு ஆகிடும் அதனால தான் சாப்புடுறது இல்லைனு சொல்லலாமா மச்சி?

வைகை said...

நிலத்தடி நீரை விஷமாக மாற்றுவதோடு இல்லாமல் மண்ணின் வளத்தை முற்றிலுமாக சீரழித்து விடும். இது வளர்ந்த இடத்தில் எதையுமே பயிரிடமுடியாது. விவசாய நிலங்களை ஆக்கிரமித்து விவசாயத்தை கெடுக்கிறது///


இதுவும் கொஞ்சம் அதீத கற்பனை... முதலில் தொடர்ச்சியாக விவசாயம் செய்யும் நிலங்களில் இது வராது. இது களை அல்ல. தரிசாக கிடக்கும் நிலங்களில் ஆடு மாடுகளின் கழிவில் இருந்து இது முளைக்கும். இது நீரை விசமாக மாற்றும் என்பதெல்லாம் வதந்திதான்.

அருண் பிரசாத் said...

//ஏன்னா எங்க ஊர் பக்கம் பல கண்மாய்களில் அந்த மரம்தான் அதிகமா நட்டுருக்காங்க... தண்ணீரை அதிகளவில் உறிஞ்சும்னா அரசாங்கம் ஏன் கண்மாயில் நடுவில் இந்த மரங்களை நடணும்? //

அப்படினா கடற்கரைல அந்த மரத்தை நட்டு எல்லா தண்ணியையும் உறிஞ்சி எடுத்துட்டு ஃப்ளாட் போட்டு வித்துடலாமா மச்சி ? :)

வைகை said...

அருண் பிரசாத் said...
//மிகைப்படுத்தப்பட்ட தகவல்.. பொதுவாக ஆடு மாடுகள் இதன் இலை பூக்களை தின்பதில்லை, ஆனால் இதன் காய்ந்த கைகள் ஆடு மாடுகளுக்கு நல்ல உணவு. மற்றபடி இதில் பயப்படும்படி ஒன்றும் இல்லை :-)//

அப்போ புலி கூட தான் புல்லை திங்காது? அப்படி திண்ண அது மலடு ஆகிடும் அதனால தான் சாப்புடுறது இல்லைனு சொல்லலாமா மச்சி?//


இதையே நீ பதிவா போடு மச்சி... தலைப்பு "புலி ஏன் புல் தின்பதில்லை?" :-)

வைகை said...

ஐயா விஞ்ஞானிகளே..இதோட இன்னொரு முக்கியமான பயன்பாட்டை சொல்லாம விட்டீங்களே?
கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வந்தால் ஆண்மைக்குறைவு நோய் சரியாகும் என்று ஆயுர்வேத மருத்துவத்தில் உள்ளது. :-)

அருண் பிரசாத் said...

//இதையே நீ பதிவா போடு மச்சி... தலைப்பு "புலி ஏன் புல் தின்பதில்லை?" :-)//

சே... சே... தலைப்பு அது இல்லை
தலைப்பு
"புல்லை வெட்டுங்கள்”

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//அப்படினா கடற்கரைல அந்த மரத்தை நட்டு எல்லா தண்ணியையும் உறிஞ்சி எடுத்துட்டு ஃப்ளாட் போட்டு வித்துடலாமா மச்சி ? :) //

ஹா.. ஹா.. சான்ஸே இல்லை மச்சி.. :))

வைகை said...

அருண் பிரசாத் said...
//ஏன்னா எங்க ஊர் பக்கம் பல கண்மாய்களில் அந்த மரம்தான் அதிகமா நட்டுருக்காங்க... தண்ணீரை அதிகளவில் உறிஞ்சும்னா அரசாங்கம் ஏன் கண்மாயில் நடுவில் இந்த மரங்களை நடணும்? //

அப்படினா கடற்கரைல அந்த மரத்தை நட்டு எல்லா தண்ணியையும் உறிஞ்சி எடுத்துட்டு ஃப்ளாட் போட்டு வித்துடலாமா மச்சி ? :)//


பப்ளிக்கா சத்தமா சொல்லாத மச்சி... தனியா போய் பேசுவோம் :-)

dsfs said...

சிறப்பான விழிப்புணர்வு ஊட்டும் பதிவு. எழுதியவர்களுக்கு நன்றி

இம்சைஅரசன் பாபு.. said...

//அப்படினா கடற்கரைல அந்த மரத்தை நட்டு எல்லா தண்ணியையும் உறிஞ்சி எடுத்துட்டு ஃப்ளாட் போட்டு வித்துடலாமா மச்சி ? :)//


இதுக்கும் பிறகு நான் பதிவு எழுதுவேன் கூடங்குளம் அனு மின் நிலையம் கடல் மண்ணில் கட்டியது .போல் இதுவும் கடல் மண்ணுல பிளாட் போட்டு விக்கிராங்கன்னு ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கருத்துரைகளை மாடரேசன் வைத்து வெளியிடாமல் தடுத்து விட்டால் உண்மைகளை மறைத்துவிடலாம் என்று கனவு காண்கிறார்கள் சிலர்.

மாலுமி said...

என்னடா இது..........ஒரே குழப்பமா இருக்குது.............
அப்போ அசோகர் ஊரு பூரா நட்டி வெச்சதுக்கு பேரு என்ன ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பொன்மலர் said...
சிறப்பான விழிப்புணர்வு ஊட்டும் பதிவு. எழுதியவர்களுக்கு நன்றி///

நன்றி!

Unknown said...

இங்க எதாவது சொன்னா என்னயும் கொத்துவாங்களோ..யம்மாடி!

Unknown said...

எதாவது கமன்ட் போடனும்னா ”தைரியம் இருந்தா இரத்தபூமில கால் வை..” - இத தாண்டி வரனுமே வரட்டுமா...வேணாமா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////விக்கியுலகம் said...
எதாவது கமன்ட் போடனும்னா ”தைரியம் இருந்தா இரத்தபூமில கால் வை..” - இத தாண்டி வரனுமே வரட்டுமா...வேணாமா!////

தாராளமா சொல்லுங்கப்பு...... அதுக்காகத்தானே குத்தவெச்சி உக்காந்திருக்கோம்.....

K said...

உள்ளே வரலாமா?

Unknown said...

எனக்கு தெரிஞ்சி கருவேல மரம் நெறய உதவியா இருக்கறதாதான் தோணுது..யாருப்பா அந்த விஞ்ஜானி!

TERROR-PANDIYAN(VAS) said...

கேள்வி : இந்த மரத்தை வெட்டினா காஞ்சி போன இடம் எல்லாம் பசுமையா மாறும் சொல்வது உண்மையா?

பதில் : என் வாயை கிண்டாத... :)

TERROR-PANDIYAN(VAS) said...

ஏம்பா! இந்த மாட்ரேஷன் எப்படி போடுவது? அப்போதான் எனக்கு சாதகாம நான் பதில் சொல்லிட்டு உங்க எதிர் கேள்வி எல்லாம் அப்படியே அமுக்கிட்டு நன்றி வணக்கம் சொல்லிட்டு ஊர்ல ஒரு கெத்த மெயிண்டேன் பண்ணலாம்.. :)

Unknown said...

யோவ் பன்னி நீ தான் அது..இதனால நான் நேத்து பட்ட பாடு இருக்கே..ஸ்ஸ் அபா முடியல!

STALLIN said...

Good Post.

Wishes to Terror Kummi Team.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

I LOVE கருவேல மரம். ஆமா கருவேல மரம்ன்னா இன்னாப்பா? புத்சாகீது

STALLIN said...

SEEMAI KARUVELA MARAM WHICH IS KNOW AS Prosopis Juliflora IS NOT POISONOUS AND NOT SPOIL ANY OTHER PLANTS OR SANDS.

THE RESEARCH SAYS THAT THIS TREES ARE "GUTS TREES "

REASON BEYOND THIS IS THESE TREES CAN SUSTAIN AND LIVE IN THE WATERLESS LANDS TOO AND SUPPORT THE POORS IN SEVARAL WAYS.

I CAN PULL OUT THE PROOF WHICH WERE GIVEN BY GOVT OFFICIALS AND SCIENTIST WHO APPOVED TO GROW THIS TREES IN EMPTY RAINLESS LANDS TO KEEP THE GREENITY.

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஹாய் மக்கள்ஸ் எனக்கொரு சந்தேகம் கேட்க்கலாமா

மாணவன் said...

//ஹாய் மக்கள்ஸ் எனக்கொரு சந்தேகம் கேட்க்கலாமா//

ஓ....தாராளமா கேட்கலாம் மக்ளே... :-)

ஜெய்லானி said...

ஒன்னுமில்லாத விஷயத்தை எல்லாம் ஊதி பெருசா விளம்பரம் தேடிக்கிற ஆட்களுக்கு சரியான நெத்தி அடி இந்த பதிவு :-))).


எதையுமே ஆராயாம ஆமாம் சாமி இனியாவது போடாம இருக்கனும் :-))

ஜெயந்த் கிருஷ்ணா said...

மக்ளே கருவேல மரம் கருவேலமரம் ன்னு
சொல்லூதியளே அப்படின்னா என்ன மரம மக்ளே? என்ன ஆள மரம மாதிரி இருக்குமா? எதெதுக்கோ படம் போட்டு பதிவு போடுதீய இந்த கருவேல மரத்தோட படம் ஒண்ணு போட்டு பதிவு போட்டிருக்கலாமே மக்ளே. இப்படி மொட்டையா பதிவு போட்டா என்னைய மாதிரி ஆளுங்க எப்படி தெரிஞ்சுக்கிறது மக்ளே

வவ்வால் said...

டெ.கு,

நல்லப்பதிவு தான் ஆனால் நீங்க ஏதோ ஒரு பதிவுக்கு எதிராப்போட்டு இருக்கிங்க அதனால சரியா புரியலை, இங்கே புரோசோபிஸ் பத்தி சொல்லி இருப்பதும் குழப்பமான ஒன்றே.

புரோசோபிஸ் ல நன்மையும் இருக்கு, தீமையும் இருக்கு, எது அதிகம் என்பது இடத்தைப்பொறுத்து மதிப்பிடப்படுகிறது.

உலக அளவில் இந்தியாவிலும் புரோசோபிஸ் ஜூலிபுலோரா ஒரு தீங்கு விளைவிக்கும் களையாக பட்டியல் இடப்பட்டுள்ளது.

ஆனால் வறண்ட இடங்களில் நடலாம் என்றும் சொல்வார்கள். விவசாயம் அதிகம் நடைப்பெறக்கூடிய இடங்களுக்கு அது ஒரு " noxious weed" இதன் வேரில் இருந்து வெளியேறும் அல்கலாய்ட் மற்ற தாவரங்களை முளைக்கவிடாது. அடியோடு வெட்டினாலும் கொஞ்சம் வேர் இருக்கும் ,கவனிக்காமல்ல் விட்டால் முளைத்து விடும்.

அதே நேரத்தில் பயிரிட முடியாத இடங்களில் விறகு, கரிக்காகவும் நடப்படுகிறது.மேலும் இம்மரம் ஒவ்வாமையை உருவாக்கவும் செய்யும்.

இந்தியாவில் காடுகளின் எண்ணிக்கை குறைவா இருக்குனு ஒரு காலத்தில் விமானத்தில் இருந்து விதைகளை தூவி பரப்பினாங்க, பின்னர் அதுவே களையா மாறிடுச்சு.

மருந்துக்கு பயன்ப்படுவது நாட்டுக்கருவேல மரம், இது சீமைக்கருவேலம் இத மருந்தா சித்த வைத்தியர்கள் பயன்படுத்துவதில்லை..ஆலும் வேலும் பல்லுக்குறுதினு சொன்ன வேல மரம் தான் இந்திய மரம்.

இந்தியா ,தமிழ்நாட்டைப்பொறுத்த வரையில் ஒரு களையாகவே பார்க்கப்படும் மரம். முள் இல்லாத புரோசோபிஸ் வகை ஒன்று இருக்கு அதன் விதைகளை அதிக அளவில் உற்பத்தி செய்து பரப்ப கோவை வேளாண் பல்கலையில் ஒரு திட்டம் கூட செயல்படுது.

மயில்வாகனம் said...

இந்த கருவேல மரங்கள் நீலத்தடி நீரை உறிஞ்சும் என்பது உண்மைதான்.. அதனால விவசாய நிலங்களில் இதை வளர விட மாட்டாங்க...

அதே சமயம் இதை வறண்ட பகுதிகளில் தாராளமா வளர்க்கலாம்...

முக்கியமா இதை விறகா பயன்படுத்தறது பல இடங்களில் நடக்குது...

எங்க வளர்க்கலாம் எங்க வளர்க்கக்கூடாதுன்னு புரிஞ்சுக்கிட்டா பிரச்சினை இல்லை...

கணேஷ் said...

இது சீமைக்கருவேலம் இத மருந்தா சித்த வைத்தியர்கள் பயன்படுத்துவதில்லை//

இங்கு சித்தர்களோ அல்லது இந்த மரம் மனிதர்களுக்கோ மருந்தாக பய்டன்படுவதாக சொல்லவில்லை என நினைக்கிறேன்

தயவு செய்து உங்கள் கருத்துகள் பயனுள்ளதாக இருப்பின் அதற்குண்டான ஆதாரங்களை கொடுத்தால் புரிந்து கொள்ள இன்னும் வசதியாக இருக்கும் ..

TERROR-PANDIYAN(VAS) said...

வாருங்கள் கணேஷ் உங்கள் வாழ்வில் இனி எல்லா நாளும் சிறப்பாக விடியட்டும். உங்கள் வாழ்க்கை ஒரு பசும் தோட்டமாக விளங்கட்டும்.. :)

கணேஷ் said...

ம்ம்கும் வாழ்க்கை பசும் தோட்டமாக இருந்தால் எப்படி அதில் வாழ்வது??

TERROR-PANDIYAN(VAS) said...

@கணேஷ்

//ம்ம்கும் வாழ்க்கை பசும் தோட்டமாக இருந்தால் எப்படி அதில் வாழ்வது??//

சை... பதில் சொல்லிட்டானே. இதுக்குதான் மாட்ரேஷன் வைக்கனும். நமக்கு இன்னும் அனுபவம் பற்றவில்லை.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வவ்வால் said...
டெ.கு,

நல்லப்பதிவு தான் ஆனால் நீங்க ஏதோ ஒரு பதிவுக்கு எதிராப்போட்டு இருக்கிங்க அதனால சரியா புரியலை, இங்கே புரோசோபிஸ் பத்தி சொல்லி இருப்பதும் குழப்பமான ஒன்றே./////

நன்றி வவ்வால், இப்படி ஒரு பதிவு போட வச்சதே தவறான தகவல்களுடன் போடப்பட்ட சில பதிவுகளே. ஆதாரங்களை அங்கே கொடுத்த போது சில பின்னூட்டங்கள் பிரசுரிக்கப்படவில்லை, எனவே தனிப்பதிவு போட்டு விளக்க வேண்டியதாக போச்சு. இங்கே எதில் குழப்பம் என்று சொன்னால் அதை தெளிவுபடுத்தலாம்.

கணேஷ் said...

சை... பதில் சொல்லிட்டானே. இதுக்குதான் மாட்ரேஷன் வைக்கனும். நமக்கு இன்னும் அனுபவம் பற்றவில்லை.//

உங்களுக்கு இன்னும் அனுபவம் வரலை ...அதுக்குன்னு தனியாக பயிற்சி வகுப்புகள் நடத்தும் வலைப்பூ இருக்கு முகவரி வேணுமா ??

அருண் பிரசாத் said...

@ வவ்வால்

நீங்க சொல்லுறது வாஸ்தவம்தான் அதுக்குதான் அந்த பதிவுல //இந்த மரத்தின் தீமைகளாக எடுத்து வைக்கப்படும் விசயங்கள்... //னு சொல்லு அவங்க் தந்து இருந்த 5 பாயிண்ட்சை கொடுத்து இருந்தோம்.....

அது எல்லாம் சரியானு சொல்லிட்டு போங்க,.... முடிஞ்சா ஆதாரம் இருக்குமானு பாருங்க....

அதுக்காக ஒரேடியா மரங்களை வெட்டுங்களுனு சொல்லுறது கொஞ்சம் ஓவரா இல்ல?

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//அதுக்காக ஒரேடியா மரங்களை வெட்டுங்களுனு சொல்லுறது கொஞ்சம் ஓவரா இல்ல?//

மச்சி! இதை வெட்ட சொன்னவங்க அதனால பயன் அடைந்து கொண்டு இருக்கும் மக்களுக்கு ஏதாவது மாற்று ஏற்பாடு செஞ்சி இருக்காங்களா? அக்தாவது மாற்று எரிபொருள் ஆலோசனை மாதிரி.. :)

கணேஷ் said...

மச்சி! இதை வெட்ட சொன்னவங்க அதனால பயன் அடைந்து கொண்டு இருக்கும் மக்களுக்கு ஏதாவது மாற்று ஏற்பாடு செஞ்சி இருக்காங்களா? அக்தாவது மாற்று எரிபொருள் ஆலோசனை மாதிரி.. :)//

அட நீங்க வேற இவ்வளவு தூரம் எதுக்கு யோசிக்கிரிங்க..உண்மையான அக்கறை இருந்தா நம்ம சொன்ன விசயத்துல எதாச்சும் ஒண்ணாவது அவங்க சொல்லி இருக்கனும்ல..பொத்தம் பொதுவா பொதுவா இதை வளர்த்தால் எல்லாமே அழிவுன்னு சொன்னதுல இருந்தே தெர்ல அவங்க உண்மையான நோக்கம் ))

TERROR-PANDIYAN(VAS) said...

@கணேஷ்

//அட நீங்க வேற இவ்வளவு தூரம் எதுக்கு யோசிக்கிரிங்க..உண்மையான அக்கறை இருந்தா நம்ம சொன்ன விசயத்துல எதாச்சும் ஒண்ணாவது அவங்க சொல்லி இருக்கனும்ல.//

உன் கருத்துக்கு நன்றி கணேஷ்! தொடர்ந்து இது பற்றி விவாதம் வேண்டாம் (ஏன்னா பதில் சொன்னா நீ என்னை மடக்கிடுவ)

NaSo said...

நான் இப்போ என்ன சொல்லணும்? வேல மரம் சாராயம் காய்ச்ச உதவும், அதை யாரும் இங்கே சொல்லவில்லை! :(

கணேஷ் said...

உன் கருத்துக்கு நன்றி கணேஷ்! தொடர்ந்து இது பற்றி விவாதம் வேண்டாம் (ஏன்னா பதில் சொன்னா நீ என்னை மடக்கிடுவ)//

நீங்கள் எழுதின பதிவில் இருந்த தவற்றை மூன்று நாள் முன் அழித்துவிட்டு நான் அதை நீக்கி விட்டேனே என்று அன்றே சொன்ன நேர்மை எனக்கு ரெம்ப பிடிச்சு இருக்கு இந்த ஒரு காரணத்துக்காக இங்கு விவாதம் வேண்டாம்.

ஏன்னா மத்தவங்க அப்படியில்லை முந்தாநாள் அளிச்சதை அப்படியே timemachine ஏத்தி ஒருவருஷம் பின்னாடி கொண்டுபோவாங்க ))

கணேஷ் said...

வேல மரம் சாராயம் காய்ச்ச உதவும், அதை யாரும் இங்கே சொல்லவில்லை! //

இந்தபதிவுக்கு part -2 ம் உண்டு அதுல இந்த விசயத்தை சேர்த்துருவோம் ))

TERROR-PANDIYAN(VAS) said...

நமக்கு தெரிந்த விழிப்புணர்வு தளங்களுக்கு இதை அனுப்புவோம். நடுனிலையான தளங்கள் கண்டிப்பாக இதை பகிரும் என்று நம்புவோம்.. :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தமிழ்விக்கிபீடியாவிற்கும் இதனை அனுப்புவோம், அங்கும் ஆதாரமற்ற தகவல்கள் நிறைந்திருக்கின்றன.

இம்சைஅரசன் பாபு.. said...

ரொம்ப முக்கியம்மா ..கிராமத்துல கக்கா போறதுக்கு கருவேல மரத்துக்கு பின்னாடி தான் ஒதுங்குவாங்க .. இப்படி ஒரு பயன் இருக்குங்கிறத எல்லோரும் மறந்துவிட்டீர்களே ..........

கணேஷ் said...

பெரும்பாலான தளங்களில் இந்த மாதிரியான தவறான தகவல்களை பகிர அவர்கள எழுதின விழிப்புணர்வு பதிவே காரணம் என்பதை நான் தேடும்போது அறிந்தேன்.

கணேஷ் said...

இம்சைஅரசன் பாபு.. //

சார் சார் ஏன் இப்படி..))

TERROR-PANDIYAN(VAS) said...

@இம்சைபாபு

//ரொம்ப முக்கியம்மா ..கிராமத்துல கக்கா போறதுக்கு கருவேல மரத்துக்கு பின்னாடி தான் ஒதுங்குவாங்க .. இப்படி ஒரு பயன் இருக்குங்கிறத எல்லோரும் மறந்துவிட்டீர்களே ........//

வாருங்கள் பாபு! மரத்தை வெட்டுங்கள் எங்கள் செலவில் வெஸ்டர்ன் டாய்லட் அமைத்து தருகிறோம். கருத்துக்கு நன்றி.

இம்சைஅரசன் பாபு.. said...

@கணேஷ்
நல்ல இருக்கியாப்பா ... உண்மைதானே அது எங்க ஊர்ல எல்லாம் அப்படி தான்ப்ப ...

கணேஷ் said...

கருத்துக்கு நன்றி//

நீங்க எதாலோ அதிகமா பாதிக்க பட்டு இருக்கிங்கனு தெரியுது..ஆனா அது என்னன்னு தெர்ல..

எங்கேயோ போய் கமென்ட் போட்டிங்கள என்ன ??))

கணேஷ் said...

நல்ல இருக்கியாப்பா ... உண்மைதானே அது எங்க ஊர்ல எல்லாம் அப்படி தான்ப்ப ..//

நல்ல இருக்கேன் சார்..ஊரு மானம் போகுதேன்னு சொன்னேன் ))

TERROR-PANDIYAN(VAS) said...

கட்டுரை ஆசிரியருக்கு : இந்த சீம கருவேல மரம் சீமையில் இருந்து வரும்பொழுது கொண்டு வந்த பாஸ்போர்ட், விசா நகல் கேட்டால் தர மறுக்கிரது. இதை காரணமாக வைத்து காவல்துறையிடம் ஒரு மனு கொடுத்தால் வாங்க மறுக்கின்ரனர். அதனால் இதை வெட்ட வேண்டும் என்று நான் கூறுகிறேன்... :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இம்சைஅரசன் பாபு.. said...
ரொம்ப முக்கியம்மா ..கிராமத்துல கக்கா போறதுக்கு கருவேல மரத்துக்கு பின்னாடி தான் ஒதுங்குவாங்க .. இப்படி ஒரு பயன் இருக்குங்கிறத எல்லோரும் மறந்துவிட்டீர்களே ..........//


kanna pinnaa repeat

இம்சைஅரசன் பாபு.. said...

// எங்கள் செலவில் வெஸ்டர்ன் டாய்லட் அமைத்து தருகிறோம். கருத்துக்கு நன்றி. //
கொய்யால யாருக்கு வேணும் உங்க டாய்லட் காற்றோட்டம இருக்கிற சுகம் ..இயற்கையா வர காற்று எல்லாம் சுவாசித்து இருக்கிற சுகமே தனி .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இம்சைஅரசன் பாபு.. said...
ரொம்ப முக்கியம்மா ..கிராமத்துல கக்கா போறதுக்கு கருவேல மரத்துக்கு பின்னாடி தான் ஒதுங்குவாங்க .. இப்படி ஒரு பயன் இருக்குங்கிறத எல்லோரும் மறந்துவிட்டீர்களே ........../////

அப்போ முள்ளு குத்திடாதா.....?

இம்சைஅரசன் பாபு.. said...

// ////இம்சைஅரசன் பாபு.. said...
ரொம்ப முக்கியம்மா ..கிராமத்துல கக்கா போறதுக்கு கருவேல மரத்துக்கு பின்னாடி தான் ஒதுங்குவாங்க .. இப்படி ஒரு பயன் இருக்குங்கிறத எல்லோரும் மறந்துவிட்டீர்களே ........../////

அப்போ முள்ளு குத்திடாதா.....?
///
மக்கா அதுக்கு வசதியா அங்க அங்க கல்லு போட்டு வச்சிருப்போம் ஒரே ஜம்ப் கல்லு மேல எரிருவோம்ல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இம்சைஅரசன் பாபு.. said...
// ////இம்சைஅரசன் பாபு.. said...
ரொம்ப முக்கியம்மா ..கிராமத்துல கக்கா போறதுக்கு கருவேல மரத்துக்கு பின்னாடி தான் ஒதுங்குவாங்க .. இப்படி ஒரு பயன் இருக்குங்கிறத எல்லோரும் மறந்துவிட்டீர்களே ........../////

அப்போ முள்ளு குத்திடாதா.....?
///
மக்கா அதுக்கு வசதியா அங்க அங்க கல்லு போட்டு வச்சிருப்போம் ஒரே ஜம்ப் கல்லு மேல எரிருவோம்ல////////

கல்லுன்னு நெனச்சி அதையே மிதிச்சிட போறீங்க....

இம்சைஅரசன் பாபு.. said...

////இம்சைஅரசன் பாபு.. said...
// ////இம்சைஅரசன் பாபு.. said...
ரொம்ப முக்கியம்மா ..கிராமத்துல கக்கா போறதுக்கு கருவேல மரத்துக்கு பின்னாடி தான் ஒதுங்குவாங்க .. இப்படி ஒரு பயன் இருக்குங்கிறத எல்லோரும் மறந்துவிட்டீர்களே ........../////

அப்போ முள்ளு குத்திடாதா.....?
///
மக்கா அதுக்கு வசதியா அங்க அங்க கல்லு போட்டு வச்சிருப்போம் ஒரே ஜம்ப் கல்லு மேல எரிருவோம்ல////////

கல்லுன்னு நெனச்சி அதையே மிதிச்சிட போறீங்க.... //

முள்ளை விட இந்த விடயத்தில் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும் ..காலை வச்சு வழுக்கி விழுந்த ..படாத இடத்தில அடி படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன் ..

இப்படி ஒரு பாதகம் இருக்கிறது என்பதையும் அடுத்த பகுதியில் தெரிவிக்கவும்

கணேஷ் said...

அப்போ முள்ளு குத்திடாதா.....? //

அச்சச்சோ அப்ப உயிருக்கு ஒன்னும் ஆபத்து இல்லையே ..))

வவ்வால் said...

ப.ரா,

எந்தப்பதிவு என்ன சொல்லி இருக்குனு தெரியாமையால் ஒரு சின்ன குழப்பம், ஆனால் அவர்கள் சொல்லி இருப்பத்உ மிகையான ஒன்றே, சில தகவல்களை வைத்து டெவெலப்ப் செய்து விட்டார்கள் என தோன்றுகிறது.

அரசு, வேளாண் துறைகளின் பார்வையில் களை எனப்பட்டியல் இடப்பட்டுள்ளது. விளை நிலங்களுக்கு பரவாமல் இருக்க திட்டங்கள் கூட போடுவார்கள். அதே சமயத்தில் வறண்ட இடங்களில் வளர்க்க தடை இல்லை. இது ஒரு பெரணியல் வீட் வகை என்பதால் ஒரு முறை இடத்தில் பரவிவிட்டால் என்ன செய்தாலும் மீண்டும் ,மீண்டும் வரும் என்பதால் அரசு இதனை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க நினைக்கிறது.

வனத்துறைக்கும் இது பிரச்சினையாக சில இடங்களில் இருக்கிறது, அதாவது நல்ல மதிப்புள்ள மரங்களை நட்டு புதியக்காடுகளை உருவாக்க முயலும் போது சீமைக்கருவேலை வேகமாக அவ்விடத்தில் வளர்ந்து அம்மரக்கன்றுகள் வளரவிடாமல் செய்துவிடுகிறது. இயற்கையாகவே வேறு வகை மரங்கள் வளர்வதை தடுக்கிறது.

அரசு வன வளர்ப்பு திட்டத்தில் கணக்கு காட்ட இம்மரங்கள் உதவாது என்பதாலேயே இது ஒரு பிரச்சினையாக இருக்கு.உ.ம்: கோடியக்கரை வன விலங்கு/பறவைகள் சரணாலயத்தில் புதிய மரங்களை நட முயன்று சீமைக்கருவேலை மரங்களால் தோல்வி அடைந்தது. இப்போது போனாலும் பார்க்கலாம் அங்கு முழுவதும் முள்க்காடாகவே இருக்கும். ஒரு காலத்தில் நல்ல மரங்கள் நிறைய இருந்தன மக்கள் வெட்டிக்கடத்திய பின் வெறும் முள் மரங்களே பரவியதால் பறவைகளும் , மான்களும் இனப்பெருக்க செய்ய ,வாழ சூழல் இல்லாமல் போய்விட்டது.

எனவே தான் இம்மரங்கள் எங்கு வளர்கிறது என்பதை வைத்து களையா, இல்லை வருமான மரமா(பயிரா) என்று சொல்ல வேண்டும்.

இப்பவும் பெரும்பாலான கல்லூரிகளில் என்.எஸ்.எஸ் மாணவர்களுக்கு களப்பணி புல் வெட்டுவது, பொது இடம், சாலை ஓர சீமைக்கருவேல் வெட்டுவது தான்.இதுக்காகவே அருகாமைக்கிராமங்களுக்கு அழைத்து போவார்கள்.

நீங்கள் குறிப்பிடும் பதிவாளர் ஏதேனும் வெளிநாட்டு தளங்களைப்பார்த்து மிகைப்படுத்தி எழுதி இருக்க வேண்டும்,ஆஸ்திரேலியா,அமெரிக்காவில் எல்லாம் இம்மரங்களை வெட்டி அழிக்க தனி திட்டங்கள் இருக்கு.

ஆஸ்திரேலியாவில் முயல், கங்காரு, சிட்டுக்குருவி, வெட்டுக்கிளி எல்லாமே மிகப்பெரிய விவசாய எதிரிகள்(பெஸ்ட்) எனப்பட்டியலிடப்பட்டு அழிக்க /கட்டுக்குள் வைக்க செலவு செய்கிறார்கள்.

ஆனால் நம்ம ஊரில் முயல் வளர்ப்புக்கு வங்கி கடன் கொடுக்கும்.

எனவே அவர் இப்படி எங்கோ படித்துவிட்டு மரம் வெட்டி அழிப்போம்னு கத்திய தூக்குகிறார் போல.
****
அருண்,

மேலே ப.ரா வுக்கு சொன்னதில் நீங்கள் கேட்டதற்கும் சேர்த்தே சொல்லி இருக்கிறேன். எந்த இடம் என்பதைப்பொறுத்தும் தேவையைப்பொறுத்தும் நன்மை,தீமை அமைகிறது.
------

கணேஷ் ,

பின்னூட்டங்களில் இருக்கு மருந்து, சாராயம் காய்ச்ச என்றும் சொல்லி இருக்கார் இப்போ ஒருத்தர் அதெல்லாம் எனக்கு தெரிந்து நாட்டுக்கருவேலமே.

வேலங்குச்சியால் பல் விலக்கலாம் என்று சொல்வார்கள் அப்போ எல்லாம் சீமை வேலங்குச்சியில் பல் விளக்குவார்களா? வேப்பங்குச்சியிலும் பல் விளக்கலாம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

@வவ்வால்

///எனவே தான் இம்மரங்கள் எங்கு வளர்கிறது என்பதை வைத்து களையா, இல்லை வருமான மரமா(பயிரா) என்று சொல்ல வேண்டும்.///

மிகவும் சரி, இதே கருத்தைத்தான் நாங்களும் வலியுறுத்துகிறோம். புரிதலுக்கு நன்றி!

வவ்வால் said...

ப.ரா,

எந்தப்பதிவு என்ன சொல்லி இருக்குனு தெரியாமையால் ஒரு சின்ன குழப்பம், ஆனால் அவர்கள் சொல்லி இருப்பத்உ மிகையான ஒன்றே, சில தகவல்களை வைத்து டெவெலப்ப் செய்து விட்டார்கள் என தோன்றுகிறது.

அரசு, வேளாண் துறைகளின் பார்வையில் களை எனப்பட்டியல் இடப்பட்டுள்ளது. விளை நிலங்களுக்கு பரவாமல் இருக்க திட்டங்கள் கூட போடுவார்கள். அதே சமயத்தில் வறண்ட இடங்களில் வளர்க்க தடை இல்லை. இது ஒரு பெரணியல் வீட் வகை என்பதால் ஒரு முறை இடத்தில் பரவிவிட்டால் என்ன செய்தாலும் மீண்டும் ,மீண்டும் வரும் என்பதால் அரசு இதனை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க நினைக்கிறது.

வனத்துறைக்கும் இது பிரச்சினையாக சில இடங்களில் இருக்கிறது, அதாவது நல்ல மதிப்புள்ள மரங்களை நட்டு புதியக்காடுகளை உருவாக்க முயலும் போது சீமைக்கருவேலை வேகமாக அவ்விடத்தில் வளர்ந்து அம்மரக்கன்றுகள் வளரவிடாமல் செய்துவிடுகிறது. இயற்கையாகவே வேறு வகை மரங்கள் வளர்வதை தடுக்கிறது.

அரசு வன வளர்ப்பு திட்டத்தில் கணக்கு காட்ட இம்மரங்கள் உதவாது என்பதாலேயே இது ஒரு பிரச்சினையாக இருக்கு.உ.ம்: கோடியக்கரை வன விலங்கு/பறவைகள் சரணாலயத்தில் புதிய மரங்களை நட முயன்று சீமைக்கருவேலை மரங்களால் தோல்வி அடைந்தது. இப்போது போனாலும் பார்க்கலாம் அங்கு முழுவதும் முள்க்காடாகவே இருக்கும். ஒரு காலத்தில் நல்ல மரங்கள் நிறைய இருந்தன மக்கள் வெட்டிக்கடத்திய பின் வெறும் முள் மரங்களே பரவியதால் பறவைகளும் , மான்களும் இனப்பெருக்க செய்ய ,வாழ சூழல் இல்லாமல் போய்விட்டது.

எனவே தான் இம்மரங்கள் எங்கு வளர்கிறது என்பதை வைத்து களையா, இல்லை வருமான மரமா(பயிரா) என்று சொல்ல வேண்டும்.

இப்பவும் பெரும்பாலான கல்லூரிகளில் என்.எஸ்.எஸ் மாணவர்களுக்கு களப்பணி புல் வெட்டுவது, பொது இடம், சாலை ஓர சீமைக்கருவேல் வெட்டுவது தான்.இதுக்காகவே அருகாமைக்கிராமங்களுக்கு அழைத்து போவார்கள்.

நீங்கள் குறிப்பிடும் பதிவாளர் ஏதேனும் வெளிநாட்டு தளங்களைப்பார்த்து மிகைப்படுத்தி எழுதி இருக்க வேண்டும்,ஆஸ்திரேலியா,அமெரிக்காவில் எல்லாம் இம்மரங்களை வெட்டி அழிக்க தனி திட்டங்கள் இருக்கு.

ஆஸ்திரேலியாவில் முயல், கங்காரு, சிட்டுக்குருவி, வெட்டுக்கிளி எல்லாமே மிகப்பெரிய விவசாய எதிரிகள்(பெஸ்ட்) எனப்பட்டியலிடப்பட்டு அழிக்க /கட்டுக்குள் வைக்க செலவு செய்கிறார்கள்.

ஆனால் நம்ம ஊரில் முயல் வளர்ப்புக்கு வங்கி கடன் கொடுக்கும்.

ஆசியைப்பார்த்து விட்டு சிட்டுக்குருவி, முயல் எல்லாம் அழிக்கனும் எனவும் பதிவுகள் வரலாம் :-))


எனவே அவர் இப்படி எங்கோ படித்துவிட்டு மரம் வெட்டி அழிப்போம்னு கத்திய தூக்குகிறார் போல.
****
அருண்,

மேலே ப.ரா வுக்கு சொன்னதில் நீங்கள் கேட்டதற்கும் சேர்த்தே சொல்லி இருக்கிறேன். எந்த இடம் என்பதைப்பொறுத்தும் தேவையைப்பொறுத்தும் நன்மை,தீமை அமைகிறது.
------

கணேஷ் ,

பின்னூட்டங்களில் இருக்கு மருந்து, சாராயம் காய்ச்ச என்றும் சொல்லி இருக்கார் இப்போ ஒருத்தர் அதெல்லாம் எனக்கு தெரிந்து நாட்டுக்கருவேலமே.

வேலங்குச்சியால் பல் விலக்கலாம் என்று சொல்வார்கள் அப்போ எல்லாம் சீமை வேலங்குச்சியில் பல் விளக்குவார்களா? வேப்பங்குச்சியிலும் பல் விளக்கலாம்.

TERROR-PANDIYAN(VAS) said...

//நீங்கள் குறிப்பிடும் பதிவாளர் ஏதேனும் வெளிநாட்டு தளங்களைப்பார்த்து மிகைப்படுத்தி எழுதி இருக்க வேண்டும்,ஆஸ்திரேலியா,அமெரிக்காவில் எல்லாம் இம்மரங்களை வெட்டி அழிக்க தனி திட்டங்கள் இருக்கு.

ஆஸ்திரேலியாவில் முயல், கங்காரு, சிட்டுக்குருவி, வெட்டுக்கிளி எல்லாமே மிகப்பெரிய விவசாய எதிரிகள்(பெஸ்ட்) எனப்பட்டியலிடப்பட்டு அழிக்க /கட்டுக்குள் வைக்க செலவு செய்கிறார்கள்.

ஆனால் நம்ம ஊரில் முயல் வளர்ப்புக்கு வங்கி கடன் கொடுக்கும்.

எனவே அவர் இப்படி எங்கோ படித்துவிட்டு மரம் வெட்டி அழிப்போம்னு கத்திய தூக்குகிறார் போல.//

வெளிநாட்டு பதிவு... அப்போ இது அன்நிய நாட்டு சதியா. கூடம்குளம் மாதிரி இங்கையும் வெளிநாடு காசு புரளுதா. பாக்கிஸ்தான் சதி? :)

(நல்ல பாய்ண்ட். நன்றி சார்)

Unknown said...

கருவேலமரங்களின் தன்மை பற்றிய பதிவு இது இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. தம்பிங்க ஏன் அனாவசியாமாக மற்றவர்களின் நோக்கங்களை புண்படுத்துகிறீர்கள்?.

ப.ரா. போன்றவர்களிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை.

பதிவுலகில் தொடர்ந்து முகம் தெரியாத மனிதர்களுடன் சண்டை போடுவது தொடர்கதை ஆகிறது.

காரனம் பதிவுலகில் நமது கருத்தை மட்டும் தெளிவாக வைத்தால் போதும். அனாவசிய சண்டைபோட நாம் ரத்த உறவுகள் இல்லை. இதை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நாம் செல்லவேண்டிய தூரம் நிறைய இருக்கையில் இதுபோன்ற விசயங்களால் தமிழர்கள் நண்டுகளாக மாறுகிறோம் என்பதுதான் மீண்டும் மீண்டும் பதிவுலகில் நான் பார்க்கும் கசப்பான உண்மை. இதுவும் ப.ரா மற்றும் இந்த தளம் நிர்வாகிக்கும் தம்பிகள் அனைவர் மீதும் நான் மிகுந்த மரியாதை வைத்திருப்பவன் என்கிற உரிமையில்தான் சொல்கிறேன்.

தம்பிகள் ப.ரா வும், கனேஷும் இதை இத்துடன் முடித்துக்கொள்ள வேண்டுகோள் வைக்கிறேன்.

அன்புடன்,
கே.ஆர்.பி.செந்தில்

கணேஷ் said...

@ கே.ஆர்.பி.செந்தில்///

தவறான கருத்துகள் வெளியிடுவது சரியா. இதனை பற்றி தனியாக அவர்களது தளத்தில் பகிர்ந்தோம். ஆனால் வெறும் ஏமாற்றமே மிஞ்சியது. நாங்கள் கேட்டது விளக்கமே.

அதனாலதான் அதனை பற்றிய எல்லா விசயங்களையும் இங்கே இந்த பதிவில் தொடர்ந்தோம்.

TERROR-PANDIYAN(VAS) said...

@கே.ஆர்.பி.செந்தில்

நாம் சொல்லி இருக்கும் விஷயம் தவறு என்று சொன்னால் அதை திருத்தி கொள்ள டெரர் கும்மி என்றும் தயாராக உள்ளது. தவறான தகவல்கள் பரவும் பொழுது அதை பற்றி சரியான விளக்கம் கொடுப்பது தவறா.. :)

STALLIN said...

Mr. Senthil,

You are supporting the wrong concept. If you have concerns about this post, please do say that.

You are trying Ruling out unnecessarily which is not right.

Oppose by your concept.

Thanks!

கோகுல் said...

அப்போ பேராண்மை படத்துலயும் கருவேல மரங்களை வெட்டும் காட்சியும் வசனங்களும் இந்த மரம் அந்நிய சக்திகளால் நமது மண்ணை மலடாக்க விதைக்கப்பட்டதுனு வருமே அதுவும் சும்மா உலுலுலு தானா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

@கே.ஆர்.பி.செந்தில்

அண்ணே தவறான தகவல்களை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினோம். ஆனா அதை அவங்க ஒரு பொருட்டாவே எடுத்துகல. அதுனால இங்க எங்களுக்கு கிடைத்த ஆதாரங்களை வைத்து விளக்கம் கொடுத்திருக்கோம். அவ்ளோதான், அதுக்கு மேல ஒண்ணும் இல்ல.

TERROR-PANDIYAN(VAS) said...

@கோகுல்

//அப்போ பேராண்மை படத்துலயும் கருவேல மரங்களை வெட்டும் காட்சியும் வசனங்களும் இந்த மரம் அந்நிய சக்திகளால் நமது மண்ணை மலடாக்க விதைக்கப்பட்டதுனு வருமே அதுவும் சும்மா உலுலுலு தானா?//

கடைசியில் அத்ததட்டி வில்லன் கூட சண்டை போடுவாரே. ஏவுகனையை ரீ-புரோகிராம் பண்ணுவாரே அது மாதிரி கொஞ்சம் மிகை படுத்திட்டாங்க.. :)

(பதிவில் சிகப்பு கலர்ல இருக்கு பாருங்க பாஸ். அதான் மைய கருத்து)

Unknown said...

தம்பிகள் இருவருக்கும் எனது நன்றி, நாம் ஒருவருக்கு மாற்றுக் கருத்து வைப்பது தவறில்லை. ஆனால் அதை வைக்கும் தொனியில்தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. இந்தப் பதிவு பற்றிய வவ்வாலின் கருத்துகளோடு நான் ஒத்துப்போகிறேன்.

மேலும் திரு.ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம். இது எனது தனிப்பட்ட வேண்டுகோள் மட்டுமே. நான் பதிவுலகில் அனைவரையும் ஒரே மாதிரி பார்ப்பவன் என்பதால்தான் அப்படி வேண்டுகோள் வைத்தேன்.

நன்றி...

Unknown said...

புரிதலுக்கு மிக்க நன்றி ப.ரா... நாம் எப்போதாவது சந்திக்கும்போது இதனைப்பற்றி விரிவாக பேசலாம்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நன்றிண்ணே, நிச்சயம் பேசுவோம்.

STALLIN said...

Mr. Senthil @

Thanks for your matured understanding.

As long as the concern person correct his/her mistake, that is appreciated.

Terrorkummi @ Keep Rocking :-)

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

சண்ட வருமா? ஐயாம் வெயிட்டிங்....

தனிமரம் said...

கருவேலம் மரம் பற்றிய எதிர்மறையான பிரச்சாரத்திற்கு தெளிவான விளக்கத்துடன் விழிப்பை ஊட்டிய பதிவை எழுதியவர்களுக்கு வாழ்த்துக்கள்.

தனிமரம் said...

நேரம்கிடைக்கும் போது தைரியமாக உள்ளே வருவோம் இந்த பூமியில் கால்வைக்க. ஹீ ஹீ

தனிமரம் said...

சண்ட வருமா? ஐயாம் வெயிட்டிங்....
//சிரிப்பு வரும் ஆனால் வராது !ஹீ ஹீ

Yoga.S. said...

நன்னாக் கிழிச்சிருக்கேள்!எப்புடில்லாம் பீதியக் கிளப்புறாங்க?நன்னாருங்க!!!!

K said...

இது என்ன மேட்டர்? யாருக்கான பதில் என்று நீண்ட நேரமாக எனக்குப் புரியவில்லை! பின்னர் சில நண்பர்களைத் தொடர்புகொண்டு கேட்ட போதுதான் உண்மை புரிந்தது!

கருவேலமரம் பற்றிய மிக அழகான விளக்கமான அலசல்! கட்டுரையாளர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்! அவசியம் இதனை முக்கிய தளங்களில் பகிர வேண்டும் குறிப்பாக தமிழ்விக்கிப் பீடியாவில்!

Madhavan Srinivasagopalan said...

I am not a Botonist..(botony scientist).. I need to read abt the scientific facts of 'karuvela maram'..

வவ்வால் said...

கோகுல்,

//அப்போ பேராண்மை படத்துலயும் கருவேல மரங்களை வெட்டும் காட்சியும் வசனங்களும் இந்த மரம் அந்நிய சக்திகளால் நமது மண்ணை மலடாக்க விதைக்கப்பட்டதுனு வருமே அதுவும் சும்மா உலுலுலு தானா?//

சீமைக்கருவேல மரம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின் புலத்தில் அரசியலும், அறியாமையும் சேர்ந்தே இருக்கிறது,ஆனால் உள்ளே வந்த பின் தீமையிலும் இருக்கும் நன்மையாய் சிலப்பயன்களும் கிடைத்தன, அதே சமயத்தில் அதன் தீய விளைவுகளும் நிலப்பயன்ப்பாட்டில் உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பேராண்மை படம் ஆதிவாசிகள்/மலைவாழ் மக்கள் ஆகியோரை பின்புலமாக கொண்டப்படம் எனப்பார்த்தால் அந்த வசனத்தில் கொஞ்சம் உண்மையும் இருக்கு, ஆனால் நிலத்தை மலடாக்க என்பதற்கு நேரிடையாக பொருள்க்கொள்ளக்கூடாது.

ப்ழங்குடியினருக்கு வனத்தில் அப்போது ஒரு உரிமை உண்டு(இப்போது மறுக்கப்பட்ட ஒன்று) அவர்கள் மரங்களை வெட்டலாம் ,அல்லது தீ வைத்து எரிக்கலாம் ,பின்னர் மரம் எரிந்த சாம்பல் கொண்ட நிலத்தில் அவர்களுக்கு தேவையானதை பயிரிட்டுக்கொள்ளலாம். உரம் எதுவும் இல்லாமலே பயிர் செய்வார்கள், ஏனெனில் மரமெரிந்த சாம்பலே நல்ல இயற்கை உரமாகும்.

நிலத்தில் ஊட்டச்சத்து குறைந்து விளைச்சல் குறைந்ததும் அவ்விடத்தில் மரக்கன்றுகளை நட்டுவிட்டு வேறு புதிய பகுதியில் மரங்களை வெட்டி/எரித்து விட்டு மீண்டும் பயிரிடச்செல்வார்கள். இம்முறைக்கு "ஷிப்டிங் கல்டிவேஷன்" /ஸ்லாஷ் அன்ட் பர்ன் கல்டிவேஷன்/டான்யா கல்டிவேஷன் " என்றுப்பெயர்.

இம்முறை தமிழ் நாட்டிலும்/வடகிழக்கு மாநிலங்களிலும் அக்காலத்தில் இருந்தது, பின்னர் வனங்களை காக்க தடை செய்யப்பட்டது.

சீமைக்கருவேலை மரங்கள் உள்ளே வந்த பிறகு ,விவசாயம் செய்து விட்டு போன இடங்களில் வளர்ந்து ஆக்ரமித்துக்கொண்டது,இதனால் மீண்டும் வளர வேண்டிய வன மரங்கள் வளராமல்ப்போய்விட்டது. இதனால் தான் தமிழ் நாட்டில் அடர்த்தியான காடுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.

சீமைக்கருவேல மரங்களை எரித்துவிட்டு விவசாயம் செய்யலாமே எனலாம் ,ஆனால் சில நாட்களிலேயே மீண்டும் வளர்ந்து விடும் அவை. பழங்குடியினர் களை எடுத்தல்,உரமிடுதல் எல்லாம் செய்யும் வழக்கமில்லாதவர்கள், நிலத்தினை நம்பி அப்படியே இயற்கை விவசாயமாக செய்பவர்கள், எனவே சீமைக்கருவேலம் களையாக ஒரு தொல்லையாக போய்விட்டது. மேலும் சீமைக்கருவேல மர வேர்களில் விதை முளைப்பு திறனைக்கட்டுப்படுத்தும் அல்கலாய்ட் உள்ளது என்று முன்னரே சொல்லி இருப்பதை கவனிக்கவில்லையா?

இதெல்லாம் எளிய விவசாயம் செய்யும் பழங்குடியினத்தவருக்கு ஒரு தொல்லை தானே. அதைக்குறிப்பிட்டே அப்படி வசனம் வைத்திருக்கலாம்.

சீமைக்கருவேல மரம் 6 மாதத்திலே பெரிதாக வளர்ந்து பரவி விடும் எனவே முக்கியமான பயிர்கள்/மரங்களுக்கு ஊட்ட சத்துக்கு கடும் போட்டியாகிவிடும். சரியாக வளராது. மேலும் எந்த மரத்தின் நிழலிலும் தாவரங்கள் வளராது.
உ.ம்: தேக்கு மரம் வைத்தால் ஆறு மாதத்தில் ஒரு அடி தான் வளர்ந்து இருக்கும் அதே இடத்தில் முளையும் சீமைக்கருவேலை பெரிதாக வளர்ந்து தேக்கை மூடி வளரவிடாமல் செய்து விடும்.

வளமான நிலங்களில் இது களை, வறண்ட நிலங்களில் ஒரு பயிர். ஆனால் வளமான நிலங்களுக்கும் பரவி தொல்லைக்கொடுப்பதால் வெட்டி அகற்ற செலவு ஆவது கூடுதல் சுமைத்தானே.

மேலும் வெள்ளைக்காரர்களுக்கு நம் மக்களை கட்டுப்படுத்த ஒரு உயிர் வேலியாக சீமைக்கருவேல மரங்கள் பயன்ப்பட்டது. ஜூ.வியில் எஸ்.ரா எழுதும் நமது இந்தியா தொடரில் கூட இதுப்பற்றி வருகிறது.

(கும்மி அடிக்க ஒரு பதிவு போட்டா அங்கேயும் வந்து ஏன் இந்த ஆத்து ஆத்துறான்னு சிலர் திட்டக்கூடும், எனவே மக்கள்ஸ் கண்டினியு யுவர் கும்மி, இதோட மி எஸ்கேப்பு :-)) )

vinu said...

கருவேல மரம் என்பதும் இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள மரமும் வேறு வேறு என்பது எனது கருத்து இதனை எங்கள் கிராமப் பகுதிகளில் டில்லிச் செடி என்று அழைப்பர்! இதன் காய்கள் ஆடு மாடுகளுக்கு உணவு என்பது மிகச் சரி அதே போல துணிகளை சலவை செய்பவர்கள் அதனை இஸ்திரி செய்ய இந்த மரக் கட்டைகளையே கரியாக்கி பயன் படுத்துவர் என்பதும் மிகச் சரி... நான் கோவை நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வினு, இந்த மரத்தின் பெயர் சீமைக்கருவேலம். இதே மாதிரி நம்ம ஊரில் இருக்கும் மரத்தின் பெயர் நாட்டுக்கருவேலம்.

டிராகன் said...

அதுக்கு தான் அப்பவே சொன்னேன் ..,விஜய்காந்துக்குக்கு ஒட்டு போடாதீங்கடா ..,போடாதீங்கன்னு ..,கேட்டீங்களா !!! இப்போ அனுபவிங்க :))

டிராகன் said...

வவ்வால் ..சார் ..,

இத நீங்க தலைகீழா நின்னு கண்ணுதெரியாம டாப்ளர் எப்பெக்ட்ள பார்க்குறீங்க ..,நினைக்கிறேன் :)

டிராகன் said...

தம்மு கட்டி ..,ஒரு கருத்த டைப் பண்ணேன் ..பட் போச்சு :))

டிராகன் said...

//////// ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...
இது என்ன மேட்டர்? யாருக்கான பதில் என்று நீண்ட நேரமாக எனக்குப் புரியவில்லை! பின்னர் சில நண்பர்களைத் தொடர்புகொண்டு கேட்ட போதுதான் உண்மை புரிந்தது! /////////

சார் ..உங்கள் கருத்து என்னை மெய்சிலிர்க்க வைத்து விட்டது ..,அப்படியே பின்னூட்ட பெட்டி காட்சிகளாய் கண் முன்னே விரிகின்றன நன்றி சார்

டிராகன் said...

ச்சே ..,நம்ம நாட்டுக்கு அவசியமான கருத்த ஒன்ன தம்மு கட்டி டைப் பண்ணேன் ..,அது விழிப்புணர்வு தான் ..,( என்னோ போடா ''' பன்னிகுட்டி'' !!ஆமா மச்சி இந்த டாஸ்மாக்ல கேட்ட சரக்கு கிடைக்க மாட்டேந்து ஏன் மச்சி இப்படி )

வைகை said...

@ @ வவ்வால்

///////////////// (கும்மி அடிக்க ஒரு பதிவு போட்டா அங்கேயும் வந்து ஏன் இந்த ஆத்து ஆத்துறான்னு சிலர் திட்டக்கூடும், எனவே மக்கள்ஸ் கண்டினியு யுவர் கும்மி, இதோட மி எஸ்கேப்பு :-)) )////////



சார் இது கண்டிப்பாக கும்மி அடிக்க போட்ட பதிவு இல்லை. உங்கள் கருத்துகளையும் கவனமாகவே நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். இன்னும் இதைப்பற்றி தகவல் தெரிந்தாலும் நீங்கள் இங்கே பகிரலாம். எங்கள் விவாதக்களம் எப்போதும் திறந்தே இருக்கும். மூடப்படுவதில்லை. புரிதலுக்கு நன்றி :-))

டிராகன் said...

சரியாக இருபத்தி ஆறு நிமிடங்களுக்கு முன் இப்பதிவை படித்த திரு .டிராகன் அவர்கள் பல முறை ,பலதளங்களில் விழிப்புணர்வு என்ற பெயரில் வாந்தி எடுத்த தளங்கள் ,வினவு ,அண்ட் சோ அண்ட் சோ போன்ற தளங்களை விமர்சித்து கம்மேன்ட்டிடு,பார்பன கைக்கூலி ,காவி காலி ,என்று பெயர் எடுத்து வெறுத்து போய் ஜாலியாக கும்மியடிக்காலம் என்று இந்த இதை பார்த்த போது துணுக்குற்றேன் .

வைகை said...

டிராகன் said...
சரியாக இருபத்தி ஆறு நிமிடங்களுக்கு முன் இப்பதிவை படித்த திரு .டிராகன் அவர்கள் பல முறை ,பலதளங்களில் விழிப்புணர்வு என்ற பெயரில் வாந்தி எடுத்த தளங்கள் ,வினவு ,அண்ட் சோ அண்ட் சோ போன்ற தளங்களை விமர்சித்து கம்மேன்ட்டிடு,பார்பன கைக்கூலி ,காவி காலி ,என்று பெயர் எடுத்து வெறுத்து போய் ஜாலியாக கும்மியடிக்காலம் என்று இந்த இதை பார்த்த போது துணுக்குற்றேன்///


துணுக்குட்றாள் போய் பாலிடால் குடிக்கவும் :-))

டிராகன் said...

மச்சி ..,

நான் அல்ரெடி செத்து புதைச்சி அந்த இடத்துல புல் முளைச்சிடுச்சி ..,இப்போ அந்த இடம் நில அபகரிப்பு கேசுல இருக்கு :))

கணேஷ் said...

(கும்மி அடிக்க ஒரு பதிவு போட்டா அங்கேயும் வந்து ஏன் இந்த ஆத்து ஆத்துறான்னு சிலர் திட்டக்கூடும், எனவே மக்கள்ஸ் கண்டினியு யுவர் கும்மி, இதோட மி எஸ்கேப்பு :-)) )//

என்ன சார் காமெடி பண்றீங்க..யாராச்சும் கும்மி அடிக்க இவ்வளவு ஆதாரங்களை படிச்சு குறிப்பு எடுத்து அதை பதிவா எழுதுவாங்களா என்ன??

சரி எதை வச்சி இது கும்மியடிக்க எழுதின பதிவுன்னு சொல்றிங்க? கொடுத்த இணைப்புகளை படிச்சு பார்த்திங்களா முதல்ல..அதில எதாச்சும் தவறு இருந்த நீங்கள் சொல்றது சரி..

முதல்ல இங்க என்ன சொல்லி இருக்கு அது எப்படி சொல்லி இருக்குன்னு புரியாம எதையும் சொல்ல வேண்டாம்.

அப்படி என்ன ஆத்தி இருக்கீங்க? இது எல்லாம் இவ்வளவு இணைப்பு தேடிய எங்களின் கண்ணுக்கு படாமல் போய் இருக்கும் என்று நினைத்தால் யாரு பொறுப்பு..

உங்களுக்கு யாராச்சும் எந்த ஆதாரமும் இல்லாமல் ஜல்லியடித்தால் அது விழிப்புணர்வு ஆனால் விளக்கி எழுதினால் அது கும்மி..அருமை ))

டிராகன் said...

/// கொடுத்த இணைப்புகளை படிச்சு பார்த்திங்களா முதல்ல..அதில எதாச்சும் தவறு இருந்த நீங்கள் சொல்றது சரி.. ////////

ஆஹா ஆஹா ..,கணேஷ் ..,உங்களுக்கு பதிவுலகத்த பத்தி தெரிலைய போங்க ஒய் !!! மொத்தத்தையும் படிக்காம லொட்டை மாதிரி கமெண்ட் போடுறதுதான் இங்க பேஷன் ,முற்போக்கு சிந்தனை ..,இன்ன பிற ...,டாஷ் டாஷ் போங்க :))

டிராகன் said...

/// உங்களுக்கு யாராச்சும் எந்த ஆதாரமும் இல்லாமல் ஜல்லியடித்தால் அது விழிப்புணர்வு ஆனால் விளக்கி எழுதினால் அது கும்மி..அருமை )) ///////

அட்ரா அட்ரா !!!தக்காளி மக்க இவனுங்கள எல்லாம் ஓட விடனும் ..,ஒய் .,

வவ்வால் said...

கணேஷ்,

//முதல்ல இங்க என்ன சொல்லி இருக்கு அது எப்படி சொல்லி இருக்குன்னு புரியாம எதையும் சொல்ல வேண்டாம்.//

முதலில் நீங்க புரிஞ்சுக்கிட்டிங்களா நான் என்ன பொருளில் சொல்லி இருக்கேன்னு, ஏன் இப்படி எகிறிக்குதிக்கிறிங்க சரியா புரிஞ்சுக்காம?

கக்கா போகும் போது முள்ளுக்குத்திடாதா என்றெல்லாம் ஜாலியா பேசிக்கிட்டு இருப்பவர்கள் வந்து அப்படி சொல்லிடக்கூடாதுனு தான் நானே ஒரு முன் ஜாமின் போட்டுக்கொண்டு சொன்னது.கும்மிப்பதிவு என நினைத்திருந்தால் ஏன் தொடர்ந்து பின்னூட்டம் போட்டுக்கொண்டிருக்க போகிறேன், அப்படி நினைக்காததால் தான் தொடர்ந்து கொண்டிருக்கிறேன் என்பது புரிய வேண்டாமா?

நீங்க தேடிப்பிடித்து பதிவு போட்டு இருக்கிங்க, அதில விடுப்பட்டதாக நான் நினைப்பதையே பகிர்ந்துக்கொண்டுள்ளேன், ஏன் நேரம் செலவிட்டு பத்தி பத்தியாக பின்னூட்டம் போடனும் வழமையான நல்ல பகிர்வுனு சொல்லிட்டு போக தெரியாத எனக்கு? டெரர் கும்மினு தளத்துக்கு பேர் வச்சு இருக்கிங்க அதைப்பார்த்துட்டே சிலர் கும்மி அடிப்பாங்களோனு கூட போய் இருப்பாங்க, நான் அப்படி எல்லாம் பெயரை வைத்து முடிவெடுப்பதில்லை எழுதி இருப்பது நன்றாக இருந்தால் கண்டிப்பாக எனது கருத்தினை பகிர்ந்துக்கொள்வேன்.

//அப்படி என்ன ஆத்தி இருக்கீங்க?//

உங்க அளவுக்கு எல்லாம் ஆரய்ச்சி செய்து எழுத எனக்கு வராதுங்க ஏதோ அல்ப சந்தோஷத்திற்கு ஆத்தினேன் அப்படி சொல்லிக்கிட்டேங்க.நீங்களும் ,பா.ராவும் சேர்ந்து எழுதி இருப்பதாக போட்டிருக்கு பார்த்தேன். நல்ல முயற்சி தொடருங்கள்.

உங்கள் கண்ணில் பட்ட பிறகும் சில தகவல்களை நீங்களே விட்டுட்டிங்க என்பதை முதலிலேயே சொல்லி இருந்தால் எனக்கும் நேரம் மிச்சம் ஆகி இருக்கும் :-))

*****
வைகை,

யாராவது படிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தானே பதிவு கூட எழுதுறேன். நான் சொன்னதன் பொருள் வேறு, யாராவது வந்து அப்படி சொல்லிட்டா என்ன செய்வது என ஒரு தற்காப்புக்கு முன் ஜாமினாக போட்டது.மற்றப்படி பதிவை நான் கும்மி என சொல்ல அல்ல!
(என்ன கொடுமை ,நான் சொன்னதற்கு நானே மொழிப்பெயர்ப்பு விளக்கம் கொடுக்க வேண்டியதாக இருக்கே,அவ்வளவு சிக்கலாகவா இருக்கு எனது மொழி அவ்வ்வ்!?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

@வவ்வால், கணேஷ் நீங்க சொன்னதை தவறா புரிஞ்சிக்கிட்டார் போல, ஒருவேள எங்க கமெண்ட்டுகளை பார்க்கலைன்னு நினைக்கிறேன்.

வெளங்காதவன்™ said...

ஆலோ கும்மி கைஸ்.... இன்னிக்கு தேதி அஞ்சு என்பதை அன்போடு தெரிவித்துக் கொ(ல்)ள்கிறேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெளங்காதவன் said...
ஆலோ கும்மி கைஸ்.... இன்னிக்கு தேதி அஞ்சு என்பதை அன்போடு தெரிவித்துக் கொ(ல்)ள்கிறேன்../////

ஆமா நேத்து 4-ம் தேதின்னா இன்னிக்கு 5 தானே? அப்போ நாளைக்கு 6 கரெக்டா?

சாமக்கோடங்கி said...

இதுல கொஞ்சம் வித்தியாசமா சொல்றாங்க.. எனக்கும் கருவேலம் கீழே உள்ள பதிவில் சொல்லப்பட்டிருக்கும் அளவுக்குப் பிரச்சினை செய்யாது என்றே தோன்றுகிறது.

http://mahizhaithiru.wordpress.com/2010/09/24/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/

TERROR-PANDIYAN(VAS) said...

@சாமகோடாங்கி

//இதுல கொஞ்சம் வித்தியாசமா சொல்றாங்க.. எனக்கும் கருவேலம் கீழே உள்ள பதிவில் சொல்லப்பட்டிருக்கும் அளவுக்குப் பிரச்சினை செய்யாது என்றே தோன்றுகிறது. //

மச்சி!! ரொம்ப பிஸியா இருக்க போல. 1980ல போட்ட பதிவுக்கு எல்லாம் இப்போ கமெண்ட் போடர... :))

Unknown said...

பஞ்ச பூதங்களை பதம் பார்க்கும் கருவேல மரங்கள் : விவசாயத்தை சீரழிக்கும் கொடூர "கிருமி'
ராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் தவறாமல் தெரியும் காட்சியில், கருவேல மரங்களுக்கு முதலிடம் உண்டு. கல்லூரிகள், பஸ்ஸ்டாண்ட், அரசு மருத்துமவனைகள், கலெக்டர் அலுவலகம், கண்மாய் நீர் நிலைகள், புறம்போக்கு மற்றும் பட்டா நிலங்களில் பாகுபாடின்றி படர்ந்து வளரும் உரிமை கருவேல மரங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

read more: http://www.dinamalar.com/news_detail.asp?id=658956

Unknown said...

பஞ்ச பூதங்களை பதம் பார்க்கும் கருவேல மரங்கள் : விவசாயத்தை சீரழிக்கும் கொடூர "கிருமி'
ராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் தவறாமல் தெரியும் காட்சியில், கருவேல மரங்களுக்கு முதலிடம் உண்டு. கல்லூரிகள், பஸ்ஸ்டாண்ட், அரசு மருத்துமவனைகள், கலெக்டர் அலுவலகம், கண்மாய் நீர் நிலைகள், புறம்போக்கு மற்றும் பட்டா நிலங்களில் பாகுபாடின்றி படர்ந்து வளரும் உரிமை கருவேல மரங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டம் வறட்சி மாவட்டமாக முத்திரை குத்தப்பட்ட நாளிலிருந்து, அதற்கான முக்கிய பங்காக கருவேல மரங்களே இருந்து வருகின்றன. பயனற்ற தாவரமாக கருதப்பட்ட இவற்றை, தற்போது பணம் கொழிக்கும் பொருளாக பாவித்து வளர்க்கத்தொடங்கிவிட்டனர். அந்த அளவுக்கு இங்கு கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு வந்தாகிவிட்டது. இருந்தும் இந்த கருவேல மரங்களால் ஏற்படும் பாதிப்பை ஒருசிலரை தவிர பலரும் உணரவில்லை. இன்று நாம் சிந்தும் ஒவ்வொரு வியர்வைக்கும் மூல காரணமாக இருப்பவை இந்த கருவேல மரங்கள் தான். புவிவெப்பமயமாகி வருவதற்கு பேருதவியாக இருப்பவை இந்த கருவேல மரங்களே. அதன் பிடியில் சிக்கி தவித்து வரும் இம்மாவட்டம், எப்படி மீண்டு வரப்போகிறது என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Read more: http://www.dinamalar.com/news_detail.asp?id=658956

பன்னிக்குட்டி ராம்சாமி said...

திரு sugarsenthil அவர்களே, தினமலரில் இருந்து காப்பி பேஸ்ட் செய்வதற்கு பதிலாக, இங்கே இருக்கும் கட்டுரையை படித்து அது பற்றிய உங்கள் கருத்து என்ன என்று பதிவு செய்யலாமே?

kaleel rahman said...

எனது தாயர் கூறினார்கள். தனுஸ்கோடி அழியும் போது வந்த பொரும் வெல்லத்தில்தான் இது நம்ம ஊருக்கு வந்தது என்று!!!!!!!!!!.18/8/2013 ஜூவிய.13/10/2013/அன்றுதான் படிச்சேன் நான் பழய போப்பர் வாசகன்?. இந்த மரம் கருங்காலி மரம்னு படிச்சிட்டு துடிச்சிட்டேன்?. அதுக்குப் பின்னாடி தான் இங்கு வந்தேன் மனம் ஆருதல் அடைந்தது!!!!!!!!.

நாய் நக்ஸ் said...

https://www.facebook.com/photo.php?fbid=803493579682491&set=a.339744086057445.83578.100000655707297&type=1&comment_id=803669036331612&offset=0&total_comments=14&ref=notif&notif_t=photo_reply


இப்ப இங்க இது ஆரம்பம்.....

by....நாய் நக்ஸ்....

நாய் நக்ஸ் said...

பாலோ அப்

GMK said...

சீமைக்கருவேல மரம் !!! எங்கள் ஊர் கிருஷ்னகிரியில் முள்ளுமரம் என்று செல்லமாக அளிக்கப்படும் மரம் !!! இதனை எங்கும் காணலாம் !!!! இதனால் யாரும் பெரிதாக பாதிக்கப்படவில்லை !!! விவசாய நிலத்தில் வளராமல் அந்த விவசாயி பார்த்து கொள்வார்!!! இது கடந்த ஐம்பது கால வரலாறு !!! இப்போது திடீரென்று இந்த சீமைக்கருவேல மரங்கள் பின் லேடன் அளவிற்கு தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டுள்ளது !!! எமக்குள்ள சிறிய உந்துதல் காரணமாக இதன் பின்னணியினை பார்க்க தூண்டியது !!!! மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நமது தமிழின காவலர் திரு வை கோ அவர்கள் தொடுத்த வழக்கு இதற்கு காரணம் என்று தெரிந்தது !!!! சோழியன் குடுமி சும்மா ஆடாதே ???? நமது வை கோ ஆதாயம் பார்க்காமல் காலை விடமாட்டார் என்ற நம்பிக்கியில் கூகிளில் வலையை வீசினேன் !!! கிடைத்தது நமது டெரெர் கும்மியின் பதிவு !!!! பார்க்க மட்டுமே டெரெர் என்று தெரிந்து விட்டது மற்ற எல்லாமே வீக் !!!! பாவம் எவ்வளவு அடித்தாலும் தாங்குறாரு !!!! ரொம்ப நல்லவரு !!!! என்னுடைய கேள்வி !!!! இதில் திரு வை கோ அவர்களுக்கு என்ன லாபம் ?????????? சமூக அக்கறை என்கின்ற கப்ஸா எல்லாம் வேண்டாம் !!! அதெல்லாம் அக்மார்க் ITC சரக்கு என்று தெரியும் !!!
!இதில் திரு வை கோ அவர்களுக்கு என்ன லாபம் ??????????
இந்த கேள்விக்கு மட்டும் பதில் தேவை