Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Wednesday, February 3, 2016

சமகால திரைவிமர்சனப் படைப்பிலக்கியங்கள - ஒரு பார்வை!

அன்பின் ப.ரா,

இரண்டு நாட்களுக்கும் முன்பாக நானும் என் அறைத் தோழனும் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஒன்றினைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது அந்தப் படத்தைப் பற்றி நமது இணைய சமூகம் என்ன நினைக்கிறது என்றறிவதற்காக இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அந்தப் படத்தினைப் பற்றிய இலக்கியத் தரத்திலான விமர்சனக் கட்டுரை ஒன்றினைக் காண நேர்ந்தது. அதில் இருந்தவை நிச்சயமாகத் தமிழ் எழுத்துக்கள்தான். ஆனால், சேர்த்துப் படிக்கையில் அது வேறொரு மொழியாகத் தெரிந்தது. என் நண்பனிடம் கொடுத்து அதனைப் படிக்கச் சொன்னேன். நீண்ட நேரம் அதைப் படித்தான். தமிழ் வழிக் கல்வி கற்றவன்தான்.

முதலில் அவன் நேராகவும், செல்ஃபோனை நேராகவும் பிடித்துப் படித்தான். பின்னர் செல்ஃபோனைத் தலைகீழாகப் பிடித்துக் கொண்டு கொஞ்ச நேரம் படித்தான். அதன் பின்னர் செல்ஃபோனை என் கையில் கொடுத்துவிட்டு, அங்கிருந்த இருக்கையில் அப்படியே தலைகீழாக நின்று கொண்டு படித்தான். மறுபடி செல்ஃபோனைத் தலைகீழாகப் பிடிக்கும்படிக் கூறிக்கொண்டு மறுபடியும் படித்தான். கடைசியில் அந்தப் படம் முடிந்துவிட்டது. இவன் இன்னமும் விமர்சனத்தைப் படித்து முடிக்கவில்லை. 

இப்பொழுதெல்லாம் நள்ளிரவில் திடீரென எழுந்து விழுமியங்கள், எச்சங்கள், கோட்பாடுகள், நுண் கருத்துத் திணிப்புக்கள், அல்லலுறும் மனது, மனப்பகிர்த் துளிகளின் பிம்பங்கள் என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிடுகிறான். திரைப்படங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை விடவும் அதைக் குறித்த இலக்கிய விமர்சனங்கள் இந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துமா என்று பிரமிப்பாக இருக்கிறது.

தமிழின் மிக முக்கியமான ஆளுமையான தாங்கள், திரைப்படம் குறித்த இலக்கிய விமர்சனங்களின் தாக்கம் குறித்து என்ன நினைக்கிறீர்கள். சுய உணர்வு நிலையில்லாத தமிழ்ச் சமூகத்தில் இது போன்ற உன்னதமான விமர்சனங்கள் உள்ளிழுத்துக் கொள்ளப்படும் என்று கருதுகிறீர்களா?  
இப்படிக்கு
Selvakumar Palanisamy


அன்பின் செல்வா,

படத்தை பார்த்துவிட்டு விமர்சனத்தை படிக்க முயற்சி செய்திருக்கிறீர்கள். விமர்சனத்தை படிக்கும் முன் படத்தை பார்ப்பது என்பது கக்கா போகும் முன் கழுவுவதை போன்றது. தவறேதும் இல்லையென்றாலும் சரி என்று சொல்ல முடியாது அல்லவா? அது இருக்கட்டும், விமர்சனத்திற்கு வருவோம். இலக்கியத் தரத்திலான விமர்சனம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது இலக்கியத்தரம் என்று முன்பே தாங்கள் அறிந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. ஆனால் தமிழில் இலக்கியம் என்று வந்துவிட்டால் அதை வாசிப்பதற்கு முன்னர்  சில விஷயங்களை உள்வாங்கி விளங்கிக் கொள்ள வேண்டும். 


தற்கால தமிழ் இலக்கிய சூழலில் பல்வேறு ஞானமரபுகள் தோன்றி வளர்த்தெடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொன்றும் தமக்கென தனித்தன்மையான எச்சங்களை விரவி வைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் கோட்பாடுகள் பெரும்பாலும் தொன்மையான விழுமியங்களில் இருந்து கடனாக பெறப்பட்டவையே. அங்கே காணப்படும் நுண்ணரசியல், பல நேரங்களில் ஞானமரபுகளை உடைத்தெறிவதாக இருந்த போதும், ஆழமான படிமங்கள் ஊடான கருத்து திணிப்புகள் ஏற்படுத்தி வரும் பிம்பங்கள் இந்த கட்டமைப்புகளைத் தக்க வைக்கும் வேலையை இடையறாது செய்து வருகின்றன. இவற்றை அறிந்திருந்தால் மட்டுமே தமிழ் இலக்கிய கட்டுரைகளை வாசிக்க முடியும். தெரியாமல் வாசித்து விட்டீர்கள் என்றால் அது இலக்கிய கட்டுரையே அல்ல என்று அறிக. ஆகவே நீங்கள் உடனடியாக ஏதாவது ஒரு இலக்கிய ஞானமரபை தெரிவு செய்து, ஆசான் ஒருவரை பிம்பமாக ஏற்றுக்கொள்ள முயல வேண்டும்.  

நிற்க. இப்போது உங்கள் நண்பரின் பிரச்சனைக்கு வருவோம். செல்போனை தலைகீழாக வைத்தும், தானே தலைகீழாக நின்றும் படிக்க முயற்சித்ததாக கூறி இருக்கிறீர்கள். அதுதான் நீங்கள் இருவரும் செய்த இமாலய தவறு. இலக்கியம் வளர்ப்பதற்கென்றே அரசு ஆங்காங்கே கடைகள் கட்டி சில நீர்மங்களை வினியோகம் செய்து வருவதை அறியாமல் நீங்கள் தமிழராக இருக்கவே வாய்ப்பில்லை. இலக்கிய விமர்சனம் படிக்க வேண்டும் என்று முடிவு செய்த மறுகணமே நீங்கள் அந்த கடைகளுக்கு விஜயம் செய்திருக்க வேண்டும். அங்கே அதைவிட இலக்கியத்தரம் மிக்க விமர்சனங்கள் வாயால் எழுதப்படுவதை செவிகுளிர பார்த்திருக்கலாம். தலைகீழாக, ஒருக்களித்தவாறு, கோணலாக, நேராக என்று அனைத்து தளங்களிலும் ஒரே நேரத்தில் இலக்கியம் வாசித்த அனுபவம் உடனடியாகக் கிடைத்திருக்கும். 

இது எதையும் செய்யாமல் நேரடியாக ஒரு இலக்கிய விமர்சனத்தை படிக்க வைத்து உங்கள் நண்பரை சுய மனமுரண்டு நிலையை அடைய வைத்திருக்கிறீர்கள். அவரை சரி செய்ய இப்போது ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. நள்ளிரவில் எழுந்து அவர் கூச்சலிடும் போது, ’தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி’ என்று சத்தமாக அவர் காதில் கத்தவும். ஆரம்பநிலை என்றால் உடனே சரியாகி விடுவார். அப்படியும் அடங்கவில்லை என்றால் ’சாட்டையடி பதிவு தோழர்’ என்று கத்தவும். இதற்கும் அடங்காத முற்றிய நிலை என்றால் அதற்கு இன்னொரு வழி இருக்கிறது.  ’சார் பத்மபூசன் வேணுமா’ என்று காதில் மிக மெதுவாக ரகசியம் பேசுவது போன்ற தொனியில் கேக்கவும்.... அடங்கியே தீருவார்!

திரைப்படங்களுக்கு எழுதப்படும் இலக்கியத்தரமான விமர்சனங்கள் குறித்து எமக்கு எப்பொழுதும் ஆழ்ந்த கவலை உண்டு. தமிழ்ப்படங்களே இலக்கியத்தின் உச்சகட்டம் எனும்போது அதை இலக்கியத் தரமாக விமர்சிக்கிறேன் என்பதே மிகப்பெரும் முரண்நகையாகும். இத்தகைய விமர்சனங்களில் காணப்படும் மிகைப்புகழ்ச்சிகள், குதர்க்க வாதங்கள், அதீத சொல்லாடல்கள், எள்ளல்கள் அனைத்தும் நம் விஜய் அண்ணாவின் ஓப்பனிங் சாங்கில் அவர் பார்க்கும் ஒரே ஒரு ஓரப் பார்வைக்கு அருகில் கூட வர இயலாது என்பதே எம் தெளிவு...!


இப்படிக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி

Tuesday, September 9, 2014

படைப்பாளிக்கு பேஸ்புக் தேவையா? [18+]

வணக்கம். என்னுடைய அகவை 29. நான் கடந்த 20 வருடங்களாக பிட்டுப்படம் பார்த்து வருகிறேன். தமிழ் பிட்டுகள் மாத்திரம் அல்லாது, மேற்கத்திய இரண்டு எக்ஸ், மூன்று எக்ஸ் திரைச்சித்திரங்கள், ப்ளாண்டு, ப்ருனெட், ரெட் ஹெட் படங்கள், எம்.ஐஎல்.எஃப், படங்கள், இண்டர்ரேசியல், எபோனி படங்கள் போன்றவை மீது எனக்கு தீராத தாகம் உண்டு. ஆனால் நானும் ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற வேட்கை ஓராண்டுக்கு முன்புதான் எழுந்தது. எனினும் என்னால் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை. அதற்கு சரோஜாதேவி போன்ற புத்தகங்களை வாசிப்பதுதான் ஒரு காரணமாக இருக்குமோ என்ற ஐயம் சில நாட்களாக அரித்துக் கொண்டிருக்கிறது. சரோஜாதேவியை வாசிப்பதும், பின் கரமைதுனம் செய்வதும் பலர் நம்மை கவனிப்பார்களோ என்ற அச்சமும் தீவிர படைப்பிற்கு என்னை வரவிடாமல் தடுக்கிறது என்றே கருதுகிறேன். மேலும் சுய இன்ப நடவடிக்கைகள் என்னுடைய நுண்ணெழுச்சியை பாதிப்பதாக அச்சம் கொள்கிறேன்.

என்னுடைய கேள்வி என்னவென்றால் சரோஜாதேவி புத்தகம் படிக்காமல் ஒரு புதிய படைப்பாளி இக்கால கட்டத்தில் தன்னை தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பதுதான். ஏனெனில் சரோஜாதேவி போன்ற சமூக புத்தகங்களில் வரும் கதைகளை படிக்காமல் ஒரு படைப்பாளி தன்னுடைய எழுச்சியை உருவாக்கிக் கொள்வது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை!

அன்புடன்
மைனர் குஞ்சு



அன்புள்ள மைனர் குஞ்சு
நண்பர்கள் பலர் நான் சரோஜாதேவி வகையறா புத்தகங்களை பற்றி விமர்சனங்களை முன்வைக்கும் போது இப்படிக் கேட்டிருக்கிறார்கள். உங்களுக்கு அத்தகைய புத்தங்கள் தேவையில்லை, அதைவிட பலமடங்கு வலுவான ஊடகமான இணையதளம் உள்ளது. மற்றவர்களுக்கு எழுச்சிக்கு என்ன வழி?

உண்மைதான். இன்றைய சூழலில் பரவலான எழுச்சிக்கு இணையம் முக்கியமானது. இணையத்தைத் தவிர்த்து அச்சில் மட்டுமே புழங்கும் படைப்பாளிகள் இன்று புதிய படைப்புகள் உருவாக்குவது மிகமிகக் கடினம்.

ஆனால் இணையத்தை எப்படி எந்த எல்லைவரை பயன்படுத்துவது? அங்குதான் சிக்கல் உள்ளது.

இணையம் வந்ததுமே செலவில்லாத இணைய தளங்கள் வந்தன. ஆனால் படங்கள் வந்ததும் கதைகள் அழிந்தன. அது ஒரு பெரிய இழப்பு. படங்களை தொடர்ந்து பார்க்க முடிவதில்லை. ஆகவே வீடியோக்கள் வந்ததும் படங்கள் அழிந்தன. இன்றிருப்பது வீடியோக்கள் மட்டுமெ. 

நான் வீடியோ என்றால் என்ன என்ற அளவுக்கு மட்டும் அதை பார்த்துவிட்டு விட்டுவிட்டேன். அடிப்படையில் வீடியோக்களின் அமைப்பே வேறு. அது ஆழ்ந்த ரசிப்புக்கான தளம் அல்ல. அது சுய இன்பத்திற்கான தளம். அடுத்த வீடியோ, அதற்கடுத்த வீடியோ என அது வலையை விரித்துச் செல்கிறது.

ஆகவே இணையத்தில் சுய இன்பம் அனுபவிப்பவர்களே அதிகம். உங்களைப் போல சிந்திப்பவர்கள், ரசிப்பவர்கள் சிலரே இருப்பார்கள். பிட்டுப்படம் ஓடும் தியேட்டர்களில் நம்மைச் சுற்றி கூடும் கூட்டம் போன்றது அங்கு வரும் தொடர்பு வலை. 

அதில் ரசனையோ இயக்கமோ முறையாக முன்வைக்கப்படாது. இங்கல்ல எங்கும் வீடியோக்கள் அப்படித்தான் உள்ளது. இயக்கம் மையம் கொள்ளாமல் கண்டபடி அலையும். செயல்களுக்கு அதற்கான ரசிகர்கள் வரமாட்டார்கள். பிட்டுப்பட தியேட்டரில் ஸ்டில்களை போட்டுக்காட்டுவது போன்றதுதான் அது. அங்கு வருபவர்களில் பத்து சதவீதம் பேர் கூட அதைக் கவனிக்கமாட்டார்கள்.  இதுதான் பிரச்சனை.


இந்த பொத்தாம் பொது கூட்டத்துடன் நாம் தொடர்ந்து எதிர்வினையாற்றி ஸ்டில்களை போட்டுக் கொண்டிருந்தால் மெல்லமெல்ல நமது செயல்முறை உச்சமற்ற இயக்கமாகவும் முறைமையற்றதாகவும் ஆகிறது. சம்பந்தமில்லாத சிணுங்கல்கள், சீண்டல்கள், புரிந்துகொள்ளாத பேச்சுகள் வழியாக நாம் மெல்லமெல்ல எரிச்சல் மிக்கவர்களாக ஆகிவிடுகிறோம்.


இன்னொன்று மானுட மனம் எதிர்பாலினத்தால் எளிதில் இயக்கப்படுவது. நீங்கள் தொடர்ந்து இணையத்தில் காட்டப்படும் மேலோட்டமான உடனடி படங்களை பார்த்துக் கொண்டிருந்தால் உங்கள் இயக்கமும் செறிவற்றதாக, ஆழமற்றதாக ஆகிக்கொண்டே இருக்கும். ஒரு படைப்பாளிக்கு இது தற்கொலை.

இணையத்தில் அதிகம் படம் போடுபவர்கள் பெரும்பாலும் சவசவவென்ற எளிய, சாரமற்ற நடையை அடைந்திருப்பதை காண்கிறேன். ஏன், தரமான நடை கொண்டிருந்தவர்கள்கூட மெல்ல அதை இழப்பதையும் காண்கிறேன்.

இதை எப்படி எதிர்கொள்வது? இணையத்திற்கு என சிறப்பான விதிமுறைகள் ஏதுமில்லை. ஆனால் இணையத்துக்கு பொதுவான சில விதிமுறைகள் உண்டு. நித்யானந்தாவின் மானசீக மாணவரும் அமெரிக்க இயக்குனருமான சைக்கிள் ஜாக்சன் எனக்கு அவற்றை இணையத்தில் படம் போட வந்த காலத்திலேயே சொன்னார். நான் பெரும்பாலும் அவற்றை கடைப்பிடிக்கிறேன்.

1.உங்கள் எல்லைகளை நீங்களே முன்னரே வகுத்துக்கொள்ளுங்கள்
இணையம் ஒரு பிரம்மாண்டமான வெளி. அதில் எல்லாமே உண்டு. எல்லாவற்றையும் பார்த்து எல்லாவற்றுக்கும் செயல்முறை வடிவம் கொடுப்பது என்பது ஒரு 100 மாடி கட்டிடத்தின் உச்சி விளிம்பில் நின்று கொண்டு சுய இன்பம் செய்வது போலாகும். அரைக்கணத்தில் ஆவியாகிவிடும்.
நம் எல்லைகளை நாமே வகுத்துக்கொள்ளவேண்டும். என் துறை ப்ளாண்டு, எபோனி, இவையிரண்டுடனும் தொடர்புள்ள வீடியோக்கள், ஒரு சராசரிக்குடிமகனின் காமப்பார்வை. அவ்வளவுதான். இந்த எல்லைக்குமேல் நான் செல்வதே இல்லை.
இந்த எல்லைக்கு அப்பால் சிறந்தவை, தேவையானவை நிறையவே உண்டு. நான் அவற்றில் இல்லை, அவ்வளவுதான்.

2. இணையத்தில் உங்களை முன்வையுங்கள். இணையம் உங்களை மாற்ற அனுமதிக்காதீர்கள்
இணையம் ஒரு சந்தை. அங்கே தேவைகள் பல. வாடிக்கையாளர்கள் பலவகை. அங்கே நீங்கள் தேவைக்கேற்ப ஆடினால் ஆட்டிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்
நீங்கள் எதை காட்ட விரும்புகிறீர்களோ, எதைச் செய்ய விழைகிறீர்களோ, அதை மட்டும் இணையத்தில் முன்வையுங்கள். அதற்கான எதிர்வினைகளில் உண்மையில் உங்கள் தளத்துக்கு எழுந்து வந்தவற்றை மட்டும் பொருட்படுத்துங்கள்
உதாரணமாக, நான் செய்யவந்தது இணையத்துக்குரிய வீடியோ அல்ல. நான் குஞ்சாக்கோ போன்ற தரமான படங்களை எடுத்தவன். திரை ஊடகம் செலவேறியது. ஆகவே இணையத்தை கையாள்கிறேன்.இந்தத் தெளிவு எனக்கிருந்தது
ஆகவே நான் எடுக்கவந்தபோது இணைய வீடியோ இப்படித்தான் இருக்கவேண்டும் எனறு சொல்லப்பட்ட ஆலோசனைகளை நான் கருத்தில் கொள்ளவில்லை. இரண்டுமுறைக்குமேல் ரீப்ளே செய்யும்படி இருக்கக் கூடாது, உச்சத்தன்மை கொண்டிருக்கவேண்டும் [அதாவது உச்சக்கட்டதன்மை] சொறியாக இல்லாமல் சரளமாக இருக்கவேண்டுமென்றெல்லாம் சொன்னார்கள். தினம் ஒரு ரசிகர் வேண்டுகோள் வந்தபடியே இருக்கும், எல்லாவற்றையும் காட்டுங்கள், பெரிதாக காட்டுங்கள் என.
நான் உறுதியாக இருந்தேன். இது என் வீடியோ. இதற்கு வருபவர்கள் எனக்குப் போதும் என்றேன். பெரியதாக காட்டலாமே என்றவர்களிடம் சின்னதாக வைத்திருப்பவர்கள் இருக்கிறார்கள், உன் எழுச்சித்திறனுக்கு அவர்களே போதும் போ என்றுதான் பதில் சொன்னேன்
மெல்லமெல்ல இணையம் வழியாகவே என் ரசிகர்களை எழுச்சி எடுத்தேன். இன்று எந்த ‘பெரிய’ வீடியோக்களை விடவும் என் வளமான, ஆழமான வீடியோகள் அதிகமாக பார்க்கப்படுகின்றன. சுய இன்பம் செய்யப்படுகின்றன
3. எதிர்வினைகளை புறக்கணியுங்கள்
இணையம் பலதரப்பட்டவர்களை ஒரே இடத்தில் குவிக்கிறது. ஒரு முறைகூட வீடீயோ பார்த்திராதவன் தற்செயலாக சன்னி லியோனின் ஒரு வீடியோவை பார்க்கமுடியும். உடனே ‘என்ன படம் இது. சொதப்பல்’ என்று எதிர்வினையும் ஆற்றமுடியும். அந்த எதிர்வினைகளுக்கு ஒரு மதிப்பும் இல்லை
இணையதளங்கள் போன்றவற்றில் வரும் கூட்டம் ரசிகர்கள் அல்ல, மிகச்சிலரே ரசிகர்கள். எனவே அந்த எதிர்வினைகள் உங்களைச் சீண்ட அனுமதிக்காதீர்கள். ஒருவர் உங்களைச் சீண்டினால் படத்தை டெலிட் செய்யுங்கள், மறுபடி படம் கிடைக்காது என்று தெரிந்தால் உங்களை அவர்கள் ஒன்றுமே செய்யமுடியாது. முழுமையாகப் புறக்கணியுங்கள்.

4 நேரத்தை கட்டுக்குள் வையுங்கள்
ஒருவீடியோவில் நீங்கள் அதிகபட்சம் ஒரு மணிநேரம் உச்சமடைய செலவழிக்கலாம். 30 நிமிடம் முன்விளையாட்டில். எஞ்சியநேரம் இயக்கத்தில். உரையாடல்களே தேவையில்லை
இணையத்தை வெற்றிகரமாக கையாளும் இயக்குனர் நான். நான் ஒருநாளில் 20 நிமிடங்களே இணையத்தில் இருக்கிறேன். வீடியோ பார்ப்பேன். பின் அதுபோல் செய்து பார்ப்பேன்
இயக்குவதற்கான தகவல்தேவைகளுக்கு கூகிளை பயன்படுத்துவது மட்டுமே மற்றபடி எனக்கும் இணையத்துக்குமான உறவு. அப்படி இல்லாவிட்டால் என்னால் இத்தனை படம் எடுத்திருக்க முடியாதென்பதை உணர்வீர்கள்
சிலவருடம் முன்பு எனக்கு ஒரு தயாரிப்பாளர் விலையுயர்ந்த லேப்டாப் ஒன்றை தந்தார். பத்துநாள் பயன்படுத்தினேன். என்னை அது அடிமைப்படுத்துவதை கண்டேன். நண்பருக்குக்  கொடுத்துவிட்டேன். [அவர் அதை நல்லவிலைக்கு விற்றுவிட்டார்] நான் வைத்திருப்பது படம் மட்டுமே பார்க்க உதவக்கூடிய அடிப்படை தொலைக்காட்சி. 
*
இணையத்தை பயன்படுத்தலாம். சில விதிகள்
1. அதை முழு வீடியோக்களை பிரசுரிக்க பயன்படுத்தவேண்டாம். அது நீங்கள் எடுப்பதை பிறர் காண்பதற்கு நீங்கள் ஒரு கொடியை நட்டுவைக்கும் குன்றாக மட்டுமே இருக்கவேண்டும்.
2 அதற்கு வரும் பிகர்களின் எண்ணிக்கையை ஒரு பொருட்டாகவே எண்ணாதீர்கள். கீழே பார்க்கவே வேண்டாம்
3. அதில் கதை வாசிக்காதீர்கள். அதன் எதிர்வினைகளை வாசிக்கவே கூடாது. வேறெந்த இணையப் பக்கத்திலும் எதிர்வினை அளிக்கவேண்டாம்
4. இணையத்தை சரோஜாதேவி கதை எழுத பயன்படுத்தவேண்டாம். அப்படி எழுதி அடைவது என்ன?

ஙே




எச்சரிக்கை: இந்த பதிவில் இருக்கும் அனைத்தும் கற்பனையே. இதற்கும் இந்த http://www.jeyamohan.in/?p=61056 பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிக...!

Thursday, February 13, 2014

கவுண்டரின் ஆசிரமத்தில் காதலர் தினம்!




காதலர் தினம்... காலை.

சுவாமி கவுண்டானந்தாவின் ஆசிரமம்... காலையில் பூஜை முடித்து வெளியில்வரும்போதே அவரது சிஷ்யர் செந்தில் சோகமாக பாடல் கேட்டுக்கொண்டிருக்கிறார்....

"காதல் என் காதல் அது கண்ணீருல...
போச்சு அது போச்சு வெந்நீரில...
அடிடா அவள..உதைடா அவள..

"அடிசெருப்பால.. வர்ற போறவங்ககிட்ட அஞ்சு பத்து வாங்குற மொன்ன நாய்க்கு என்னடா காதல் வேண்டி கிடக்கு? அடடடா... இந்த லவ் பண்றவைங்க தொல்ல தாங்க முடியலடா சாமி... வெந்தது..வேகாதது..பிஞ்சது... பெருத்தது எல்லாம் லவ் பண்ணிக்கிட்டு திரியுதுங்க... ஒவ்வொருததனையா புடிச்சு மூஞ்சிய அடுப்புல வச்சு கருக்கனும்..படுவா... ஓடிப்போயிரு சொல்லிப்புட்டேன்"  கடுப்பாகிறார் கவுண்டானந்தா.

செந்தில் அவசரமாக எழுந்து வணங்குகிறார்... " சுவாமி..சுவாமி... அது ஒரு  பெரிய கதை....."

"சரிட்ரா நாயே...இவரு பெரிய பாரதிராஜா... அப்பிடியே பிளாஸ்பேக்க ஓப்பன் பண்றாரு.. அடச்சீ நாயே.. போ....போய்... ஆசிர்வாதம்  வாங்க வந்தவங்கள வரிசையா உள்ள அனுப்பு.. டேய் தகர வாயா.... அவங்ககிட்ட ஏதாவது தனியா  கமிஷன் வாங்குன... படுவா..மண்டைல தேங்காய வச்சு தேச்சுப்புடுவேன்.. ராஸ்கோல்... போ.. போய் வரச்சொல்லு"

வெளியே போன செந்தில் திரும்ப வருகிறார்.. " சுவாமி..சுவாமி.. ஏதோ இன்னிக்கு லவ்வர்ஸ் டேயாம்.. வெளில ஒரே லவ்வர்சா வந்துருக்காங்க..உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கனுமாம்.... "

"அடங்கொன்னியா... வழக்கமா பார்க்கு..பீச்சுன்னுதானே போவானுங்க..இப்ப என்ன ஆசிரமம் எல்லாம் வர ஆரம்பிச்சிட்டானுங்க? அதவிட இங்க ஜாலியா இருக்கும்னு எவனோ பொரலிய கெளப்பி விட்டாண்டோ...சரிடா..போய் ஒவ்வொரு ஜோடியா உள்ள அனுப்பு.."

முதலில் ஒரு ஜோடி உள்ளே வருகிறது...

" சுவாமி வணக்கம்.. எங்கள ஆசிர்வாதம் பண்ணனும்..எங்க காதல நீங்கதான் சேர்த்து வைக்கணும்... வீட்ல ஒரே பிரச்சனையா இருக்கு.. உங்களைத்தான்  நம்பியிருக்கோம்"

" சரி..சரி.. காதல்னா பிரச்சனைதான்... நீங்க எப்பிடி காதலிச்சிங்க? என்ன பிரச்னை? தெளிவா சொல்லுங்க...

" சாமி.. என் பேரு டேவிட்.. இவ பேரு மல்லிகா...

" அடடடா...... மத நல்லிணக்கம்?  அட்ராசக்க..அட்ராசக்க... மேல சொல்லு..மேல சொல்லு....

"ஒரு வாரம் முன்னாடிதான் இவள ரெஜிஸ்டர் ஆபிஸ்ல கல்யாணத்துக்காக போயிருக்கும்போது பார்த்தேன்.. இவளோட கண்ண(??) பார்த்ததுமே இவ எனக்குத்தான்னு  முடிவு பண்ணிட்டேன்.... அவளுக்கும் அப்பிடிதான்... அவங்க வீட்லயும் எங்க வீட்லயும் கூல்ட்ரிங்க்ஸ் சாப்ட வெளில போன நேரம் பார்த்து தனியா அவள பார்த்து  என் காதல அவகிட்ட சொன்னேன்.. அவளும் உடனே ஓக்கே சொல்லிட்டா... கொஞ்சம் கூட லேட் பண்ணாம அப்பிடியே பின்வாசல் வழியா ஊர விட்டு ஓடி வந்துட்டோம்... ஆனா நாங்க எங்க போனாலும் எங்க ரெண்டு பேர் வீட்ல இருந்து எங்கள துரத்திகிட்டே இருக்காங்க.. நீங்கதான் சாமி எங்கள காப்பாத்தணும்" என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தனர்.

" அடங்கொன்னியா... இளஞ்ஜோடிகள பிரிக்கிறதே இந்த தகப்பன்களுக்கு வேலையா போச்சு.. சரி.. டேவிட்..நீ சொல்லு..உன் வீட்ல என்ன பிரச்னை? யார் பிரச்னை பண்றா?"

" சாமி.. எங்க வீட்லகூட அவ்வளவா பிரச்னை இல்லை சாமி.. தண்ணி தொளிச்சு விட்டுட்டாங்க....

" அட நாயே.. அப்புறம் யார்தான் உன்னை தொறத்துனா?

" அதான் சாமி.. எங்க வீட்ல கூட விட்டுட்டாங்க.. ஆனா என் பொண்டாட்டி வீட்லதான் சாமி ஆள் வச்சு துரத்துறாங்க...

" டேய்ய்.. என்னடா சொல்ற? பொண்டாட்டி வீட்லையா? அடங்கொன்னியா... ஏம்மா..இந்தாம்ம்மா பொண்ணு.. இந்த நாய்க்கு கல்யாணம் ஆயிருச்சுன்னு உனக்கு தெரியுமாம்மா? தெரிஞ்சுமா லவ் பண்ணுன?

" தெரியும் சாமி..  ஏன்னா..எனக்கு கல்யாணம் ஆனத அவரு பெருந்தன்மையா ஏத்துக்கலையா? அதுமாதிரிதான் நானும் ஏத்துக்கிட்டேன்...."

" டேய்ய்..தல சுத்துதுடா... ங்கப்பா... பன்னாட பரதேசிங்களா... உங்க ரெண்டு பேருக்கும்தான்  கல்யாணம் ஆயிருச்சேடா.. எந்த கல்யாணத்துலடா பார்த்து இந்த கருமாந்திரம் புடிச்ச காதல பண்ணி தொலைச்சிங்க?

" சாமி.. எங்க காதல் தெய்வீக காதல்... தப்பா பேசாதிங்க... நான் என் கல்யாணத்த ரெஜிஸ்டர் பண்ண என் பொண்டாட்டியோட அங்க  போயிருந்தேன்.. இவ கல்யாணத்த ரெஜிஸ்டர் பண்ண இவ புருசனோட வந்துருந்தா.. நாங்க பார்த்ததுமே எங்க காதல் அப்பிடியே உள்ள இருந்து ஊத்து மாதிரி கிளம்பி வந்துருச்சு.. அதான் உடனே ஓடி வந்துட்டோம்... இப்ப ஹெல்ப் பண்ண முடியுமா முடியாதா?

" அடங்கொன்னியா... கல்யாணத்த ரெஜிஸ்டர் பண்ண போனீங்களா? அப்ப உங்களுக்கு எப்ப கல்யாணம் ஆனுச்சு?

" ரெஜிஸ்டர் பண்ண போன ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் சாமி... அது ஒரு கெட்ட கனவா நினச்சு மறந்துட்டேன் சாமி... இப்ப ஆசிர்வாதம் பண்ணுங்க.."

" அட..கருமாந்திரம் புடிச்சவனுங்களா... மரத்த பார்த்தா கால தூக்குற நாய் மாதிரி பார்க்குற பொண்ண பூரா நீ லவ் பண்ணுவ? உனக்கு நான் ஆசிர்வாதம் பண்ணனுமா? இந்தா வாங்கிக்க..க்க்க்ரர்ர்..த்தூ.. இந்தாம்ம்மா பொண்ணு மல்லிகா.. (பேர பாரு? மானம் கெட்ட நாய்க்கு மல்லிகா?) இன்னும் ஒரு நிமிஷம் உங்கள இங்க பார்த்தேன்..சுடுபெட்டிய மூஞ்சில வச்சு தேச்சுபோடுவேன்.. ஓடி போயிருங்க சொல்லிபுட்டேன்...  டேய்ய் சிஷ்யா.. 
 
 


செந்தில் வேகமாக உள்ளே ஓடிவருகிறார்.. " சுவாமி..சுவாமி... அடுத்த ஜோடிய உள்ள வர சொல்லவா?

" டேய்ய் மங்குஸ் மண்டையா..இனி காதல் கீதல்னு எவனையாது உள்ள அனுப்புன... படுவா படுக்க வச்சு லாரிய விட்டு ஏத்திபுடுவேன் சொல்லிபுட்டேன்... அய்யயையையோ.. அட ஆண்டவா...காலங்காத்தால..கண்ட கழிசடைங்களை  எல்லாம் பார்க்க வைக்கிறியே? டோர் லாக்.. ஆசிரமம் க்ளோஸ்...

சாமியிடம் காதலர்தின ஆசிர்வாதம் வாங்க நினைப்பவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளவும்.

சிரிப்பு போலிஸ்
சிப்பு போலிஸ் ப்ளாக்.
பாலிடால்புரம்.
மொக்கையூர்.

குறிப்பு - இது ஒரு மீள் பதிவு! 




Thursday, September 19, 2013

தங்கலிஷ் சிறுகதைகள் - 01

ஆண்ட்ராய்ட் இல்லேன்னா நோக்கியா மாதிரி யூசர் பிரண்ட்லி மொபைல் இருந்தாத்தான் பரவால்லைங்க. இல்லைன்னா கஷ்டம் தான்.

ஏன் என்னாச்சிங்க?

தங்கலிஷ் பிரச்சினைங்க. ட்விட்டர், பேஸ்புக்ல எல்லாம் லேப்டாப்ல போய் தமிழ்ல ஸ்டேட்டஸ் போட்டிடுவேன். ஆனா இந்த எஸ்எம்எஸ் மட்டும் மொபைல்ல இருந்து தான் அனுப்ப வேண்டியிருக்கு.

அது வாஸ்தவம் தாங்க.

தங்கலிஷ்ல மெசேஜ் அனுப்புனா சில நேரம் நாம என்ன சொல்ல வர்றோம்ங்கிறது அந்தப் பக்கம் இருக்கிறவங்களுக்கு புரிய மாட்டேங்குது. கொஞ்ச நாளைக்கு முன்னே தூங்கப்போறேன், தொங்கப்போறேன்னு தங்கலிஷ் ஸ்டேட்டஸ் ஒண்ணு நெட்ல சுத்திட்டு இருந்தது ஞாபகம் இருக்கா? அதுல பார்த்தீங்கன்னா ஒரே ஒரு 'O' தான் பிராப்ளம்.

...

அலுவலக நண்பர் அவர். அதி தீவிர பெண்ணியவாதி. காத்திரமான (?) முதலாளித்துவ மனப்பான்மை கொண்ட அவர் எப்படி பெண்ணியவாதியாக மாறினார் என்பது எங்களுக்கெல்லாம் ரொம்ப ஆச்சரியமான விஷயம். ஆன்சைட் யூஎஸ் போனவுடன் ஐபோன் வாங்கி காலைக்கடன்கள் தவிர்த்த அனைத்தையும் போட்டோ புடிச்சி பேஸ்புக்லையும் ஆபீஸ் ஷேர் டிரைவ்லையும் போட்டு எங்களையெல்லாம் மிரண்டோட செய்தவர். என்னதான் நடந்திச்சி இந்த இடைப்பட்ட காலத்துல என ஒரு மழை நாள் இரவில் பாரில் அமரவைச்சி கேட்ட போதுதான் மேற்சொன்னபடி ஆரம்பிச்சார்.

நான் முன்ன வொர்க் பண்ணிய டீம்ல எனக்கு ஒரு தோழி இருந்தாங்க. அவங்களோட ரொம்ப க்ளோஸ் இல்லைன்னாலும் அப்பப்போ எஸ்எம்எஸ் அனுப்புற அளவுக்கு பழக்கம்..

ம்..

அப்போத்தான் ஆன்சைட்ல இருந்து வந்திருந்தேன். வேலைவெட்டி எதுவும் இல்லைங்கிறதால அடிக்கடி பிரேக் எடுத்திட்டு சுத்திட்டு இருந்தேன். அப்படி ஒருமுறை பிரேக்ல இருந்து பிளேஸ்க்கு வரும்போது என்னோட தோழி அழுத முகத்தோட எங்கியோ கிளம்பிட்டு இருந்தாங்க..

என்ன இருந்தாலும் தோழி இல்லையா, அதான் மனசு கேட்காமல் "ஏன் மூஞ்சி வீங்கியிருக்கு"ன்னு தங்கலிஷ் மெசேஜ் அனுப்பினேன்.

ஹா...ஹா...

Tuesday, June 12, 2012

பிரபல டிவிட்டர்கள் பய(ங்கர)டேட்டா!





பெயர்                                             -அப்பாட்டக்கர்கள்

புனைப்பெயர்                            -பிரபல டிவிட்டர்கள்


தொழில்                                       -டிவிட்டுவது


உபதொழில்                               -அதை யாரு RT பண்றாங்க என்று பார்த்துக் கொண்டிருப்பது!

உப உப தொழில்                  -சண்டை போடுவது


தலைவர்                                    -அதுக்குத்தான் சண்டையே


துணை தலைவர்                  -சட்டை கிழிந்தவுடன் தெரியும்


பொழுதுபோக்கு                     -மாறி மாறி எச்சி துப்பிக்குவது


துணை பொழுதுபோக்கு -துப்பு வாங்கியதை துடைதுக்கொள்ளுதல்


மேலும் பொழுதுபோக்கு -லாங்கர் டிவிட்டில் விளக்கம் சொல்வது




பலம்                                                 -கேணயனாய் மாட்டும் ஆபிஸ் மேனஜர்கள்

பலவீனம்                                       -நாலு ட்விட் போட்டா நானும் ரவுடிதான்


சமீபத்திய சாதனை                -இணையப் போராளியாய் மா(ற்)றிக் கொண்டது


நீண்ட கால சாதனை           -சோத்துக்கு இல்லைனாலும் ஸ்டேட்டஸ் போட மறக்காதது


சமீபத்திய எரிச்சல்                -வெளிக்குத்து பதிவுகள்


நீண்ட கால எரிச்சல்           -புதிது புதிதாய் போட்டிக்கு ஆள் வருவது


பிடித்தவர்கள்                            -பாலோயராய் சேருபவர்கள்


நண்பர்கள்                                   -ரீ-ட்வீட் பண்ணுபவர்கள்


அல்லக்கைகள்                        -ஆல் நியூ ட்வீட்டர்ஸ்

எதிரிகள்                                       -கடலை போடுவதை கண்டுபிடிப்பவர்கள்

ஆசை                                            -ட்வீட்டுகளை வைத்து சமூகப் போராளி ஆவது

நிராசை                                       -இன்னும் பெரிதாக யாரும் கண்டு கொள்ளாதது

நம்பிக்கை                                 -ட்விட்டர் போட்டே சே.குவாரா ஆகிவிடலாம் என்று

பயம்                                            -சைபர் கிரைம்



லட்சியம்                                       -அதிக ரீ-ட்விட்கள் வாங்கி அண்ணா நகரில் ப்ளாட் வாங்குவது

இதுவரை மறந்தது                 -ட்வீட்டர் ஆகமுன்பு என்ன செய்து கொண்டிருந்தோம் என்பதை

இனி மறக்க வேண்டியது -தினம் நாலு ட்வீட் செய்துட்டால் தானும் அப்பாட்டக்கர் என்ற நினைப்பை

மறக்க முடியாதது                 -அவ்வப்போது வாங்கும் செருப்படிகளை

விரும்புவது                                -பெண் ட்வீட்டர்களிடம் தனி சாட்

விரும்பாதது                               -பதிவுகளில் டவுசர் கிழிவது


டிஸ்கி: இது கற்பனைன்னு சொன்னா நம்பவா போறீங்க? இருந்தாலும் அனைத்தும் கற்பனையே

Tuesday, February 21, 2012

அவசரம்! காணாமல் போன பதிவர்கள்!

 
இதுலயாவது மிக்சிங் கரெக்ட்டா இருக்குமா?

பெயர் மாலுமி. எப்போதும் மப்புடனே இருப்பார். சைக்கிளை குரங்கு பெடல் போட்டதாலேயே மாலுமி என்று அவரே பெயர் வைத்துக்கொண்டார். காணாமல் போன அன்று கையில் குவாட்டரும் வாயில் வாந்தியும் வைத்திருந்தார் என்று பார்த்தவர்கள் சொனார்கள். பக்கத்துவீட்டு பருவதத்தின் நினைவாக ( என்ன? யாரு பருவதமா? அட நாய்ங்க...) அதற்கு யாரோ போர்த்திய பழைய சட்டையை காணாமல் போன அன்று இவர் திருடி அணிந்திருந்தாராம்.இவர் கடைசியாக பேசிய வார்த்தை குஷ்பூவை பார்க்க சென்னை போகணும் என்பதுதானாம். ஆனால் அப்படியே இவர் மோனிகாவையும் பார்க்க போயிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இவரைப்பற்றிய தகவல் அறிந்தால் தொடர்புகொள்ளவேண்டிய முகவரி. தமிழ் நாட்டின் எந்த டாஸ்மாக்கை வேணாலும் தொடர்புகொள்ளலாம்.


நம்மளவிட அன்சைசா இருக்குதுங்களே? ஷ்ஷ்ஷ்ஷ்.....

பெயர் வெறும்பய ஜெயந்த். பெயர்தான் வெறும்பய.. ஆனால் ஆள் பார்க்க பெறும்பயலா இருப்பாரு. காணாமல் போன அன்று ஓசி புத்தகத்தில் இருந்து கிழித்த கவிதையும் சுடுகாட்டு பிணத்தின் மாலையில் இருந்து திருடிய ரோஜாவும் வைத்திருந்தாராம். காணாமல் போன அன்று அவர் அளவுக்கு துணி கிடைக்காததால் கோஆப்டெக்சில் தள்ளுபடியில் வாங்கிய போர்வையை உடம்பில் சுற்றியிருந்தார் என்று பார்த்தவர்கள் சொன்னார்கள். இவர் பல பெண்களை ”மேற்படிப்பு” படிக்க வைப்பதற்காகவும்  தலைமறைவாயிருக்கலாம் என்று மக்கள் சந்தேகிக்கின்றனர். இவர் கடைசியாக சொன்ன வார்த்தை ஜோதி பார்க்க போகணும் என்பதுதானாம். ஐயப்பன் கோவில் மகர ஜோதியை என்று நீங்கள் நினைத்தால் அதற்கு வெறும்பய பொறுப்பல்ல. இவரைப்பற்றிய தகவல் தெரிந்தால் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி எல்லா அழகான பொண்ண பெத்தவன் வீட்டுக்கும் தகவல் கொடுத்துருங்க.. இவன அடிக்கத்தான் தேடிகிட்டு இருக்காங்க.

உனது வெற்றியை நாளை தரித்திரம்..ச்சே..சரித்திரம் சொல்லும்!

 பெயர் சிரிப்பு போலிஸ் ரமேஷ். இவர் பதிவெழுதி மக்களை சிரிக்க வைத்ததை விட தன் புகைப்படத்தை போட்டே மக்களை துன்பத்தை  மறந்து அதிகம் சிரிக்க வைத்ததால் சிரிப்பு போலிஸ் என்ற பெயர் ஒட்டிக்கொண்டது. அது எப்படி சாத்தியம் என்று கேட்டால்... இவர் புகைப்படத்தை பார்த்ததும் இந்த கொடுமையே தாங்கிட்டமே? நமக்கு வந்த துன்பமெல்லாம் எம்மாத்திரம் என்று சிரித்துவிடுவார்கள். இவர் காணாமல் போன அன்று குஷ்பூ இட்லியில் ஏன் குஷ்பூ இல்லை என்று சரவணபவன் சர்வருடன் சண்டை போட்டதாக தகவல். இவர் கடைசியாக பேசிய வார்த்தை.. இவர் அலுவலக சர்வர் USA யில் இருப்பதாக கேள்விப்பட்டதும்.. சர்வர் அங்க இருந்தா எனக்கு எப்பிடி சாப்பாடு கொண்டுவரமுடியும்? உடனே அந்த சர்வர இங்க டிரான்ஸ்பர் பண்ணிட்டு வர்றேன் என்று கோபமாக போனாராம். போகும் போதும் சும்மா போகாமல்  சின்ன தம்பி மார்த்தாண்டன் கணக்காக..ஐ..எனக்கு கண்ணாலம்...ஐ..எனக்கு கண்ணாலம் என்று கூவிக்கொண்டே சென்றாராம். இவரைப்பற்றி தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி..சென்னையின் எந்த ஹோட்டல்ல வேணாலும் சொல்லுங்க... ஒரு இடத்துல கூட சாப்பிட்டதுக்கு பில் கொடுக்காததால எல்லோருமே கொலை வெறியா தேடிகிட்டு இருக்காங்க.

இவனுங்களுக்கு வணக்கம் சொல்லியே கை வலிக்குதுப்பா!

 பெயர் பன்னிக்குட்டி ராமசாமி. ராமசாமி என்னமோ இவர் சொந்த பெயராக இருந்தாலும் இந்த பன்னிகுட்டி என்ற அடைமொழி இவரிடம் ஒட்டிக்கொண்ட கதை வித்தியாசமானது. இவர் எந்த பிளாக்கில் கமெண்ட் போட்டாலும் ஒரு கமேன்ட்டோடு நிறுத்துவதில்லை. பன்னி குட்டி போட்டது போல் வத வதவென்று கமெண்ட்களாக  போட்டுத்தள்ளுவதால் இவருக்கு இந்த பெயர் ஒட்டிக்கொண்டது. இவர் காணமல் போன அன்று சில பிளாக்குகளுக்கு கமெண்ட் போட்டு வருவதாக சென்றாராம். ஆனால் பிளாக்கர் ஆரம்பித்த புதிதில் வந்த ப்ளாக்குகளுக்கு எல்லாம் இவர் இன்னும் கமெண்ட் போட்டுக்கொண்டிருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் பெயரில்லாத பிளாக்குக்கு எல்லாம் பயங்கர டேட்டா போடபோவதாக சொல்லிகொண்டிருந்தாராம். அண்ணனை காணாமல் இவரின் அடிவிழுதுகள் தற்கொலை முயற்சிக்கும் தயங்க மாட்டார்கள் என்பதால் இவரை பற்றிய தகவல் தெரிந்தால் உடனே தெரிவிக்க வேண்டிய முகவரி அகில உலக பன்னிக்குட்டி பாசறை, அபுதாபி குறுக்குசந்து, சில்பகுமார் எண்ணெய் கிணறு அருகில், துபாய்.


வாங்க..வாங்க.... அம்மா வந்தா இன்னும் குமிஞ்சு கும்பிடுவேன்!

பெயர் இம்சை அரசன் பாபு. மங்களகரமான பெயர்...ஆனால் இவர் வாழ்விலோ மங்களம் இல்லை. யாரும் தப்பா நினைக்க வேணாம்... இந்த கரண்ட் கட் பிரச்சனையால மங்களம் இல்லைன்னு சொல்லவந்தேன். காணாமல் போன அன்று நடந்து கொண்டே போனில் பேசிக்கொண்டிருந்தாராம்..  திமுக ஆட்சியின் குறைகளை போனில்  கூறிக்கொண்டிருந்தவர் ஆட்சி மாறிய பின்னும் ஆளை காணவில்லை என்று  அச்சப்படுகின்றனர். அவர் தன்னை மறந்து குறைகளை கூறியபடி காசி வரை பேசியபடி நடந்தே  சென்றிருக்கலாம் என்று போலீசார் அஞ்சுகின்றனர். காணாமல் போன அன்று தனது தொப்பையை உள்ளே அடக்க முயற்சி செய்த சட்டையும் இடுப்பை இறுக்கி பிடிக்க முயற்சி செய்து தோற்ற பேண்ட்டும் அணிந்திருந்தார். பேன்ட் பாக்கெட்டில் எப்போதும்போல் பேர்நெஸ் க்ரீமில் ஐந்து பாக்கெட் வைத்திருந்தாராம். இவர் காணாமல் போகும்முன் கடைசியாக பேசிய வார்த்தை..மக்கா..திமுக கண்டிப்பா தோற்கும்... அம்மா ஆட்சி வந்ததும் கரண்ட் கட்டே இருக்காது என்பதுதானாம். இவரை பற்றிய தகவல் தெரிந்தால் தொடர்புகொள்ளவேண்டிய முகவரி.. அகில இந்திய அம்மா பாசறை, கோவில்பட்டி கிளை.



Tuesday, February 14, 2012

கவுண்டமணியும் காதலர் தினமும்! ( லவ்வர்ஸ் டே ஸ்பெசல் )

 
காந்த கண்ணழகிகளையே காணுமே?
 
 
காதலர் தினம்... காலை.

சுவாமி கவுண்டானந்தாவின் ஆசிரமம்... காலையில் பூஜை முடித்து வெளியில்வரும்போதே அவரது சிஷ்யர் செந்தில் சோகமாக பாடல் கேட்டுக்கொண்டிருக்கிறார்....

"காதல் என் காதல் அது கண்ணீருல...
போச்சு அது போச்சு வெந்நீரில...
அடிடா அவள..உதைடா அவள..

"அடிசெருப்பால.. வர்ற போறவங்ககிட்ட அஞ்சு பத்து வாங்குற மொன்ன நாய்க்கு என்னடா காதல் வேண்டி கிடக்கு? அடடடா... இந்த லவ் பண்றவைங்க தொல்ல தாங்க முடியலடா சாமி... வெந்தது..வேகாதது..பிஞ்சது... பெருத்தது எல்லாம் லவ் பண்ணிக்கிட்டு திரியுதுங்க... ஒவ்வொருததனையா புடிச்சு மூஞ்சிய அடுப்புல வச்சு கருக்கனும்..படுவா... ஓடிப்போயிரு சொல்லிப்புட்டேன்"  கடுப்பாகிறார் கவுண்டானந்தா.

செந்தில் அவசரமாக எழுந்து வணங்குகிறார்... " சுவாமி..சுவாமி... அது ஒரு  பெரிய கதை....."

"சரிட்ரா நாயே...இவரு பெரிய பாரதிராஜா... அப்பிடியே பிளாஸ்பேக்க ஓப்பன் பண்றாரு.. அடச்சீ நாயே.. போ....போய்... ஆசிர்வாதம்  வாங்க வந்தவங்கள வரிசையா உள்ள அனுப்பு.. டேய் தகர வாயா.... அவங்ககிட்ட ஏதாவது தனியா  கமிஷன் வாங்குன... படுவா..மண்டைல தேங்காய வச்சு தேச்சுப்புடுவேன்.. ராஸ்கோல்... போ.. போய் வரச்சொல்லு"

வெளியே போன செந்தில் திரும்ப வருகிறார்.. " சுவாமி..சுவாமி.. ஏதோ இன்னிக்கு லவ்வர்ஸ் டேயாம்.. வெளில ஒரே லவ்வர்சா வந்துருக்காங்க..உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கனுமாம்.... "

"அடங்கொன்னியா... வழக்கமா பார்க்கு..பீச்சுன்னுதானே போவானுங்க..இப்ப என்ன ஆசிரமம் எல்லாம் வர ஆரம்பிச்சிட்டானுங்க? அதவிட இங்க ஜாலியா இருக்கும்னு எவனோ பொரலிய கெளப்பி விட்டாண்டோ...சரிடா..போய் ஒவ்வொரு ஜோடியா உள்ள அனுப்பு.."

முதலில் ஒரு ஜோடி உள்ளே வருகிறது...

" சுவாமி வணக்கம்.. எங்கள ஆசிர்வாதம் பண்ணனும்..எங்க காதல நீங்கதான் சேர்த்து வைக்கணும்... வீட்ல ஒரே பிரச்சனையா இருக்கு.. உங்களைத்தான்  நம்பியிருக்கோம்"

" சரி..சரி.. காதல்னா பிரச்சனைதான்... நீங்க எப்பிடி காதலிச்சிங்க? என்ன பிரச்னை? தெளிவா சொல்லுங்க...

" சாமி.. என் பேரு டேவிட்.. இவ பேரு மல்லிகா...

" அடடடா...... மத நல்லிணக்கம்?  அட்ராசக்க..அட்ராசக்க... மேல சொல்லு..மேல சொல்லு....

"ஒரு வாரம் முன்னாடிதான் இவள ரெஜிஸ்டர் ஆபிஸ்ல கல்யாணத்துக்காக போயிருக்கும்போது பார்த்தேன்.. இவளோட கண்ண(??) பார்த்ததுமே இவ எனக்குத்தான்னு  முடிவு பண்ணிட்டேன்.... அவளுக்கும் அப்பிடிதான்... அவங்க வீட்லயும் எங்க வீட்லயும் கூல்ட்ரிங்க்ஸ் சாப்ட வெளில போன நேரம் பார்த்து தனியா அவள பார்த்து  என் காதல அவகிட்ட சொன்னேன்.. அவளும் உடனே ஓக்கே சொல்லிட்டா... கொஞ்சம் கூட லேட் பண்ணாம அப்பிடியே பின்வாசல் வழியா ஊர விட்டு ஓடி வந்துட்டோம்... ஆனா நாங்க எங்க போனாலும் எங்க ரெண்டு பேர் வீட்ல இருந்து எங்கள துரத்திகிட்டே இருக்காங்க.. நீங்கதான் சாமி எங்கள காப்பாத்தணும்" என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தனர்.

" அடங்கொன்னியா... இளஞ்ஜோடிகள பிரிக்கிறதே இந்த தகப்பன்களுக்கு வேலையா போச்சு.. சரி.. டேவிட்..நீ சொல்லு..உன் வீட்ல என்ன பிரச்னை? யார் பிரச்னை பண்றா?"

" சாமி.. எங்க வீட்லகூட அவ்வளவா பிரச்னை இல்லை சாமி.. தண்ணி தொளிச்சு விட்டுட்டாங்க....

" அட நாயே.. அப்புறம் யார்தான் உன்னை தொறத்துனா?

" அதான் சாமி.. எங்க வீட்ல கூட விட்டுட்டாங்க.. ஆனா என் பொண்டாட்டி வீட்லதான் சாமி ஆள் வச்சு துரத்துறாங்க...

" டேய்ய்.. என்னடா சொல்ற? பொண்டாட்டி வீட்லையா? அடங்கொன்னியா... ஏம்மா..இந்தாம்ம்மா பொண்ணு.. இந்த நாய்க்கு கல்யாணம் ஆயிருச்சுன்னு உனக்கு தெரியுமாம்மா? தெரிஞ்சுமா லவ் பண்ணுன?

" தெரியும் சாமி..  ஏன்னா..எனக்கு கல்யாணம் ஆனத அவரு பெருந்தன்மையா ஏத்துக்கலையா? அதுமாதிரிதான் நானும் ஏத்துக்கிட்டேன்...."

" டேய்ய்..தல சுத்துதுடா... ங்கப்பா... பன்னாட பரதேசிங்களா... உங்க ரெண்டு பேருக்கும்தான்  கல்யாணம் ஆயிருச்சேடா.. எந்த கல்யாணத்துலடா பார்த்து இந்த கருமாந்திரம் புடிச்ச காதல பண்ணி தொலைச்சிங்க?

" சாமி.. எங்க காதல் தெய்வீக காதல்... தப்பா பேசாதிங்க... நான் என் கல்யாணத்த ரெஜிஸ்டர் பண்ண என் பொண்டாட்டியோட அங்க  போயிருந்தேன்.. இவ கல்யாணத்த ரெஜிஸ்டர் பண்ண இவ புருசனோட வந்துருந்தா.. நாங்க பார்த்ததுமே எங்க காதல் அப்பிடியே உள்ள இருந்து ஊத்து மாதிரி கிளம்பி வந்துருச்சு.. அதான் உடனே ஓடி வந்துட்டோம்... இப்ப ஹெல்ப் பண்ண முடியுமா முடியாதா?

" அடங்கொன்னியா... கல்யாணத்த ரெஜிஸ்டர் பண்ண போனீங்களா? அப்ப உங்களுக்கு எப்ப கல்யாணம் ஆனுச்சு?

" ரெஜிஸ்டர் பண்ண போன ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் சாமி... அது ஒரு கெட்ட கனவா நினச்சு மறந்துட்டேன் சாமி... இப்ப ஆசிர்வாதம் பண்ணுங்க.."

" அட..கருமாந்திரம் புடிச்சவனுங்களா... மரத்த பார்த்தா கால தூக்குற நாய் மாதிரி பார்க்குற பொண்ண பூரா நீ லவ் பண்ணுவ? உனக்கு நான் ஆசிர்வாதம் பண்ணனுமா? இந்தா வாங்கிக்க..க்க்க்ரர்ர்..த்தூ.. இந்தாம்ம்மா பொண்ணு மல்லிகா.. (பேர பாரு? மானம் கெட்ட நாய்க்கு மல்லிகா?) இன்னும் ஒரு நிமிஷம் உங்கள இங்க பார்த்தேன்..சுடுபெட்டிய மூஞ்சில வச்சு தேச்சுபோடுவேன்.. ஓடி போயிருங்க சொல்லிபுட்டேன்...  டேய்ய் சிஷ்யா.. 
 
 


செந்தில் வேகமாக உள்ளே ஓடிவருகிறார்.. " சுவாமி..சுவாமி... அடுத்த ஜோடிய உள்ள வர சொல்லவா?

" டேய்ய் மங்குஸ் மண்டையா..இனி காதல் கீதல்னு எவனையாது உள்ள அனுப்புன... படுவா படுக்க வச்சு லாரிய விட்டு ஏத்திபுடுவேன் சொல்லிபுட்டேன்... அய்யயையையோ.. அட ஆண்டவா...காலங்காத்தால..கண்ட கழிசடைங்களை  எல்லாம் பார்க்க வைக்கிறியே? டோர் லாக்.. ஆசிரமம் க்ளோஸ்...

சாமியிடம் காதலர்தின ஆசிர்வாதம் வாங்க நினைப்பவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளவும்.

சிரிப்பு போலிஸ்
சிப்பு போலிஸ் ப்ளாக்.
பாலிடால்புரம்.
மொக்கையூர்.
 
 
 

Monday, October 10, 2011

தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...






பெயர்                            : தமிழ்மணம்



புனைப்பெயர்                     : பதிவுலக கடவுள்


தொழில்                          : திரட்டுதல், பதிவுகளை



உபதொழில்                       : ரேங் போடுதல் 




உப உபதொழில்                  : கான்ஸ்டபிள் (ட்ராபிக்)


தலைவர்                         : யாருக்கும் தெரியாது


துணைத்தலைவர்                               : பிரபல பதிவர்கள் அல்ல 


பொழுதுபோக்கு                   : பதிவுகளை இணைத்தல்


துணைப்பொழுதுபோக்கு          : பதிவுகளை நீக்குதல்


மேலும் பொழுதுபோக்கு           : எச்சரிக்கை அனுப்புதல்


வயது                            : வயதாகிக் கொண்டிருக்கிறது


பலம்                             :பதிவர்கள்


பலவீனம்                         : அதுவும் அவர்களேதான்


நம்பிக்கை                        : மொக்கைப் பதிவர்களும் 

இலக்கியவியாதிகளாகி விடுவார்கள்


பயம்                             : இன்னும் கொஞ்ச நாளில் 

தமிழ்மணம் முழுதும் மொக்கையாகி விடுமோ?


லட்சியம்                         : நெ.1 திரட்டி


நீண்டகால சாதனை               : காப்பி-பேஸ்ட்டை 

கண்டுகொள்ளாமல் இருந்தது


சமீபத்திய சாதனை                               :காப்பி-பேஸ்ட்டை அதிரடியாக 

தூக்கியது


இதுவரை மறந்தது                :  ஆபாச பதிவுகளை


இனி மறக்க வேண்டியது           :மொக்கை பதிவர்கள் 

திருந்துவார்கள் என்று நம்புவதை 


பாடாய் படுத்துவது                : நட்சத்திரங்கள்


இதுவரை புரியாதது                             : விருதுகள்



விரும்புவது                      : இனி சர்வர் பிரச்சனை 

வரக்கூடாது என்று

விரும்பாதது                     கட்டண சேவை பற்றி கேள்வி 
கேட்பதை




எச்சரிக்கை: பதிவு முற்றிலும் நகைச்சுவைக்காக மட்டுமே. 

Thursday, September 8, 2011

நண்பேன்டா...!! ( ஹி., ஹி., ஹி..!! )

இவரு யாருன்னு தெரியுதா..?
நல்லா உத்து பாருங்க..

லார்டு லபக்தாஸ் மாதிரி
ஒரு லுக்கு...,
கையில இருக்கிற அந்த
திருட்டு Watch.,
Friend-கிட்ட ஆட்டைய
போட்ட Belt..
ஓசி T.Shirt.,

இப்ப தெரியுதா..?

உலகத்துல இவ்ளோ கேவலமா
வேற யார் இருக்க முடியும்.??!

ஆங்.., கரெக்ட்டு... இவர் தான்
நம்ம திருட்டு போலீஸ் ( Sorry.., )
லூஸ் போலீஸ்., ( மறுபடியும் Sorry.. )
சிரிப்பு போலீஸ்.,

அதாங்க
ரமேஷ் - ரொம்ப நல்லவன் ( சத்தியமா )
இப்படி பொய் சத்தியம் பண்ணுவாரே..
அவரே தான்.. இவரு..

இவருக்கு இன்னிக்கு Birthday..

அதனால இன்னிக்கு இவருக்கு
எதாவது பண்ணனும்..
இல்ல
இவரையாச்சும் எதாவது
பண்ணனும்..

என்ன பண்ணலாம்..?!!
( Thinking.............. )

ஐடியா No.1:
ஒரு Birthday Cake பார்சல் அனுப்பலாமா..?

( என்னாத்துக்கு..?? சிங்கப்பூர்ல இருந்து
வரும் போது நமக்கு 10 பைசா மிட்டாய்
வாங்கிட்டு வந்தாரா..? இல்லையே...
அப்புறம் என்னாத்துக்கு Birthday Cake..? )

ஐடியா Dropped..


( " சிரிப்பு போலீசை " நாடு கடத்துவதாக
அறிவித்த சிங்கப்பூர் அரசுக்கு சந்தோஷத்துடன்
நன்றி தெரிவிக்கும் மக்கள்..! )

ஐடியா No. 2 :
புகழ்ந்து ஒரு கவிதை எழுதலாமா..?

( கவிதை எழுதறதே கஷ்டம்..,
அதுல இவரை புகழ்ந்து வேற..
என்ன கொடுமை இது..?? )

அண்ணனுக்கு தம்பி நீ.,
தம்பிக்கு அண்ணன் நீ.,

அண்ணன் தம்பி இருவருக்கும்
ஆங்கிலத்தில் பிரதர் நீ.,

( வாவ்.. வாவ்.. வாவ் )

சினி க்விஸ் மன்னன் நீ..,
அழகு பெண்களின் சித்தாப்பு நீ.,

பதிவுலக சாத்தான் நீ..!
( ஹி.,ஹி., ஹி.., அவசரத்துல
உண்மைய உளறிட்டேன்..
இதோ Correct பண்ணிடறேன்.. )

பதிவுலக சுல்தான் நீ..!

ஐய்யோ.. கண்ணு இருட்டு கட்டுதே..,
மயக்கம் மயக்கமா வருதே..

( எனக்கு எப்பவும் ஓவரா பொய்
சொன்னா இப்படி தான் ஆகும்.. )

ஐடியா Dropped..

ஐடியா No. 3 :
கதை மாதிரி எதாவது எழுதிடலாமா..??!!

வேணாம்..!! வேணாம்..!!
பூச்சாண்டி கதைன்னு
குழந்தைங்க எல்லாம் பயந்துக்கும்..
( குழந்தைங்க மட்டுமா..??!! )

ஐடியா Dropped..

ஐடியா No.4 :
ஒரு Call or SMS பண்ணி
வாழ்த்து சொல்லிடலாமா..?

Call பண்ணினா - 1 ரூபா.,
SMS பண்ணினா - 50 பைசா.,

இவ்ளோ செலவு பண்ணி
இவருக்கு வாழ்த்து சொல்லணுமா..??

ஐடியா Dropped..

ஐடியா No.5 :
சரி ஒரு பதிவு போடலாம்..
அதான் செலவில்லாத வழி..!!

" Happy Birthday to RAMESH "

எல்லோரும் இப்படியே சும்மா
வேடிக்கை பார்த்திட்டு இருந்தா எப்படி..??

ம்ம்.. Start பண்ணுங்க..,

வந்து வாய்க்கு வந்த மாதிரி
ரமேஷை வாழ்த்த ஆரம்பிங்க...

டிஸ்கி : நேற்றைய பதிவு
" இது கதையல்ல... இன்னுமொரு போட்டி! "
விடைகள் தெரிந்து கொள்ள Click Here..