Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Wednesday, February 3, 2016

சமகால திரைவிமர்சனப் படைப்பிலக்கியங்கள - ஒரு பார்வை!

அன்பின் ப.ரா,

இரண்டு நாட்களுக்கும் முன்பாக நானும் என் அறைத் தோழனும் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஒன்றினைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது அந்தப் படத்தைப் பற்றி நமது இணைய சமூகம் என்ன நினைக்கிறது என்றறிவதற்காக இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அந்தப் படத்தினைப் பற்றிய இலக்கியத் தரத்திலான விமர்சனக் கட்டுரை ஒன்றினைக் காண நேர்ந்தது. அதில் இருந்தவை நிச்சயமாகத் தமிழ் எழுத்துக்கள்தான். ஆனால், சேர்த்துப் படிக்கையில் அது வேறொரு மொழியாகத் தெரிந்தது. என் நண்பனிடம் கொடுத்து அதனைப் படிக்கச் சொன்னேன். நீண்ட நேரம் அதைப் படித்தான். தமிழ் வழிக் கல்வி கற்றவன்தான்.

முதலில் அவன் நேராகவும், செல்ஃபோனை நேராகவும் பிடித்துப் படித்தான். பின்னர் செல்ஃபோனைத் தலைகீழாகப் பிடித்துக் கொண்டு கொஞ்ச நேரம் படித்தான். அதன் பின்னர் செல்ஃபோனை என் கையில் கொடுத்துவிட்டு, அங்கிருந்த இருக்கையில் அப்படியே தலைகீழாக நின்று கொண்டு படித்தான். மறுபடி செல்ஃபோனைத் தலைகீழாகப் பிடிக்கும்படிக் கூறிக்கொண்டு மறுபடியும் படித்தான். கடைசியில் அந்தப் படம் முடிந்துவிட்டது. இவன் இன்னமும் விமர்சனத்தைப் படித்து முடிக்கவில்லை. 

இப்பொழுதெல்லாம் நள்ளிரவில் திடீரென எழுந்து விழுமியங்கள், எச்சங்கள், கோட்பாடுகள், நுண் கருத்துத் திணிப்புக்கள், அல்லலுறும் மனது, மனப்பகிர்த் துளிகளின் பிம்பங்கள் என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிடுகிறான். திரைப்படங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை விடவும் அதைக் குறித்த இலக்கிய விமர்சனங்கள் இந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துமா என்று பிரமிப்பாக இருக்கிறது.

தமிழின் மிக முக்கியமான ஆளுமையான தாங்கள், திரைப்படம் குறித்த இலக்கிய விமர்சனங்களின் தாக்கம் குறித்து என்ன நினைக்கிறீர்கள். சுய உணர்வு நிலையில்லாத தமிழ்ச் சமூகத்தில் இது போன்ற உன்னதமான விமர்சனங்கள் உள்ளிழுத்துக் கொள்ளப்படும் என்று கருதுகிறீர்களா?  
இப்படிக்கு
Selvakumar Palanisamy


அன்பின் செல்வா,

படத்தை பார்த்துவிட்டு விமர்சனத்தை படிக்க முயற்சி செய்திருக்கிறீர்கள். விமர்சனத்தை படிக்கும் முன் படத்தை பார்ப்பது என்பது கக்கா போகும் முன் கழுவுவதை போன்றது. தவறேதும் இல்லையென்றாலும் சரி என்று சொல்ல முடியாது அல்லவா? அது இருக்கட்டும், விமர்சனத்திற்கு வருவோம். இலக்கியத் தரத்திலான விமர்சனம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது இலக்கியத்தரம் என்று முன்பே தாங்கள் அறிந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. ஆனால் தமிழில் இலக்கியம் என்று வந்துவிட்டால் அதை வாசிப்பதற்கு முன்னர்  சில விஷயங்களை உள்வாங்கி விளங்கிக் கொள்ள வேண்டும். 


தற்கால தமிழ் இலக்கிய சூழலில் பல்வேறு ஞானமரபுகள் தோன்றி வளர்த்தெடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொன்றும் தமக்கென தனித்தன்மையான எச்சங்களை விரவி வைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் கோட்பாடுகள் பெரும்பாலும் தொன்மையான விழுமியங்களில் இருந்து கடனாக பெறப்பட்டவையே. அங்கே காணப்படும் நுண்ணரசியல், பல நேரங்களில் ஞானமரபுகளை உடைத்தெறிவதாக இருந்த போதும், ஆழமான படிமங்கள் ஊடான கருத்து திணிப்புகள் ஏற்படுத்தி வரும் பிம்பங்கள் இந்த கட்டமைப்புகளைத் தக்க வைக்கும் வேலையை இடையறாது செய்து வருகின்றன. இவற்றை அறிந்திருந்தால் மட்டுமே தமிழ் இலக்கிய கட்டுரைகளை வாசிக்க முடியும். தெரியாமல் வாசித்து விட்டீர்கள் என்றால் அது இலக்கிய கட்டுரையே அல்ல என்று அறிக. ஆகவே நீங்கள் உடனடியாக ஏதாவது ஒரு இலக்கிய ஞானமரபை தெரிவு செய்து, ஆசான் ஒருவரை பிம்பமாக ஏற்றுக்கொள்ள முயல வேண்டும்.  

நிற்க. இப்போது உங்கள் நண்பரின் பிரச்சனைக்கு வருவோம். செல்போனை தலைகீழாக வைத்தும், தானே தலைகீழாக நின்றும் படிக்க முயற்சித்ததாக கூறி இருக்கிறீர்கள். அதுதான் நீங்கள் இருவரும் செய்த இமாலய தவறு. இலக்கியம் வளர்ப்பதற்கென்றே அரசு ஆங்காங்கே கடைகள் கட்டி சில நீர்மங்களை வினியோகம் செய்து வருவதை அறியாமல் நீங்கள் தமிழராக இருக்கவே வாய்ப்பில்லை. இலக்கிய விமர்சனம் படிக்க வேண்டும் என்று முடிவு செய்த மறுகணமே நீங்கள் அந்த கடைகளுக்கு விஜயம் செய்திருக்க வேண்டும். அங்கே அதைவிட இலக்கியத்தரம் மிக்க விமர்சனங்கள் வாயால் எழுதப்படுவதை செவிகுளிர பார்த்திருக்கலாம். தலைகீழாக, ஒருக்களித்தவாறு, கோணலாக, நேராக என்று அனைத்து தளங்களிலும் ஒரே நேரத்தில் இலக்கியம் வாசித்த அனுபவம் உடனடியாகக் கிடைத்திருக்கும். 

இது எதையும் செய்யாமல் நேரடியாக ஒரு இலக்கிய விமர்சனத்தை படிக்க வைத்து உங்கள் நண்பரை சுய மனமுரண்டு நிலையை அடைய வைத்திருக்கிறீர்கள். அவரை சரி செய்ய இப்போது ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. நள்ளிரவில் எழுந்து அவர் கூச்சலிடும் போது, ’தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி’ என்று சத்தமாக அவர் காதில் கத்தவும். ஆரம்பநிலை என்றால் உடனே சரியாகி விடுவார். அப்படியும் அடங்கவில்லை என்றால் ’சாட்டையடி பதிவு தோழர்’ என்று கத்தவும். இதற்கும் அடங்காத முற்றிய நிலை என்றால் அதற்கு இன்னொரு வழி இருக்கிறது.  ’சார் பத்மபூசன் வேணுமா’ என்று காதில் மிக மெதுவாக ரகசியம் பேசுவது போன்ற தொனியில் கேக்கவும்.... அடங்கியே தீருவார்!

திரைப்படங்களுக்கு எழுதப்படும் இலக்கியத்தரமான விமர்சனங்கள் குறித்து எமக்கு எப்பொழுதும் ஆழ்ந்த கவலை உண்டு. தமிழ்ப்படங்களே இலக்கியத்தின் உச்சகட்டம் எனும்போது அதை இலக்கியத் தரமாக விமர்சிக்கிறேன் என்பதே மிகப்பெரும் முரண்நகையாகும். இத்தகைய விமர்சனங்களில் காணப்படும் மிகைப்புகழ்ச்சிகள், குதர்க்க வாதங்கள், அதீத சொல்லாடல்கள், எள்ளல்கள் அனைத்தும் நம் விஜய் அண்ணாவின் ஓப்பனிங் சாங்கில் அவர் பார்க்கும் ஒரே ஒரு ஓரப் பார்வைக்கு அருகில் கூட வர இயலாது என்பதே எம் தெளிவு...!


இப்படிக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி

Tuesday, June 12, 2012

பிரபல டிவிட்டர்கள் பய(ங்கர)டேட்டா!





பெயர்                                             -அப்பாட்டக்கர்கள்

புனைப்பெயர்                            -பிரபல டிவிட்டர்கள்


தொழில்                                       -டிவிட்டுவது


உபதொழில்                               -அதை யாரு RT பண்றாங்க என்று பார்த்துக் கொண்டிருப்பது!

உப உப தொழில்                  -சண்டை போடுவது


தலைவர்                                    -அதுக்குத்தான் சண்டையே


துணை தலைவர்                  -சட்டை கிழிந்தவுடன் தெரியும்


பொழுதுபோக்கு                     -மாறி மாறி எச்சி துப்பிக்குவது


துணை பொழுதுபோக்கு -துப்பு வாங்கியதை துடைதுக்கொள்ளுதல்


மேலும் பொழுதுபோக்கு -லாங்கர் டிவிட்டில் விளக்கம் சொல்வது




பலம்                                                 -கேணயனாய் மாட்டும் ஆபிஸ் மேனஜர்கள்

பலவீனம்                                       -நாலு ட்விட் போட்டா நானும் ரவுடிதான்


சமீபத்திய சாதனை                -இணையப் போராளியாய் மா(ற்)றிக் கொண்டது


நீண்ட கால சாதனை           -சோத்துக்கு இல்லைனாலும் ஸ்டேட்டஸ் போட மறக்காதது


சமீபத்திய எரிச்சல்                -வெளிக்குத்து பதிவுகள்


நீண்ட கால எரிச்சல்           -புதிது புதிதாய் போட்டிக்கு ஆள் வருவது


பிடித்தவர்கள்                            -பாலோயராய் சேருபவர்கள்


நண்பர்கள்                                   -ரீ-ட்வீட் பண்ணுபவர்கள்


அல்லக்கைகள்                        -ஆல் நியூ ட்வீட்டர்ஸ்

எதிரிகள்                                       -கடலை போடுவதை கண்டுபிடிப்பவர்கள்

ஆசை                                            -ட்வீட்டுகளை வைத்து சமூகப் போராளி ஆவது

நிராசை                                       -இன்னும் பெரிதாக யாரும் கண்டு கொள்ளாதது

நம்பிக்கை                                 -ட்விட்டர் போட்டே சே.குவாரா ஆகிவிடலாம் என்று

பயம்                                            -சைபர் கிரைம்



லட்சியம்                                       -அதிக ரீ-ட்விட்கள் வாங்கி அண்ணா நகரில் ப்ளாட் வாங்குவது

இதுவரை மறந்தது                 -ட்வீட்டர் ஆகமுன்பு என்ன செய்து கொண்டிருந்தோம் என்பதை

இனி மறக்க வேண்டியது -தினம் நாலு ட்வீட் செய்துட்டால் தானும் அப்பாட்டக்கர் என்ற நினைப்பை

மறக்க முடியாதது                 -அவ்வப்போது வாங்கும் செருப்படிகளை

விரும்புவது                                -பெண் ட்வீட்டர்களிடம் தனி சாட்

விரும்பாதது                               -பதிவுகளில் டவுசர் கிழிவது


டிஸ்கி: இது கற்பனைன்னு சொன்னா நம்பவா போறீங்க? இருந்தாலும் அனைத்தும் கற்பனையே

Tuesday, February 21, 2012

அவசரம்! காணாமல் போன பதிவர்கள்!

 
இதுலயாவது மிக்சிங் கரெக்ட்டா இருக்குமா?

பெயர் மாலுமி. எப்போதும் மப்புடனே இருப்பார். சைக்கிளை குரங்கு பெடல் போட்டதாலேயே மாலுமி என்று அவரே பெயர் வைத்துக்கொண்டார். காணாமல் போன அன்று கையில் குவாட்டரும் வாயில் வாந்தியும் வைத்திருந்தார் என்று பார்த்தவர்கள் சொனார்கள். பக்கத்துவீட்டு பருவதத்தின் நினைவாக ( என்ன? யாரு பருவதமா? அட நாய்ங்க...) அதற்கு யாரோ போர்த்திய பழைய சட்டையை காணாமல் போன அன்று இவர் திருடி அணிந்திருந்தாராம்.இவர் கடைசியாக பேசிய வார்த்தை குஷ்பூவை பார்க்க சென்னை போகணும் என்பதுதானாம். ஆனால் அப்படியே இவர் மோனிகாவையும் பார்க்க போயிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இவரைப்பற்றிய தகவல் அறிந்தால் தொடர்புகொள்ளவேண்டிய முகவரி. தமிழ் நாட்டின் எந்த டாஸ்மாக்கை வேணாலும் தொடர்புகொள்ளலாம்.


நம்மளவிட அன்சைசா இருக்குதுங்களே? ஷ்ஷ்ஷ்ஷ்.....

பெயர் வெறும்பய ஜெயந்த். பெயர்தான் வெறும்பய.. ஆனால் ஆள் பார்க்க பெறும்பயலா இருப்பாரு. காணாமல் போன அன்று ஓசி புத்தகத்தில் இருந்து கிழித்த கவிதையும் சுடுகாட்டு பிணத்தின் மாலையில் இருந்து திருடிய ரோஜாவும் வைத்திருந்தாராம். காணாமல் போன அன்று அவர் அளவுக்கு துணி கிடைக்காததால் கோஆப்டெக்சில் தள்ளுபடியில் வாங்கிய போர்வையை உடம்பில் சுற்றியிருந்தார் என்று பார்த்தவர்கள் சொன்னார்கள். இவர் பல பெண்களை ”மேற்படிப்பு” படிக்க வைப்பதற்காகவும்  தலைமறைவாயிருக்கலாம் என்று மக்கள் சந்தேகிக்கின்றனர். இவர் கடைசியாக சொன்ன வார்த்தை ஜோதி பார்க்க போகணும் என்பதுதானாம். ஐயப்பன் கோவில் மகர ஜோதியை என்று நீங்கள் நினைத்தால் அதற்கு வெறும்பய பொறுப்பல்ல. இவரைப்பற்றிய தகவல் தெரிந்தால் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி எல்லா அழகான பொண்ண பெத்தவன் வீட்டுக்கும் தகவல் கொடுத்துருங்க.. இவன அடிக்கத்தான் தேடிகிட்டு இருக்காங்க.

உனது வெற்றியை நாளை தரித்திரம்..ச்சே..சரித்திரம் சொல்லும்!

 பெயர் சிரிப்பு போலிஸ் ரமேஷ். இவர் பதிவெழுதி மக்களை சிரிக்க வைத்ததை விட தன் புகைப்படத்தை போட்டே மக்களை துன்பத்தை  மறந்து அதிகம் சிரிக்க வைத்ததால் சிரிப்பு போலிஸ் என்ற பெயர் ஒட்டிக்கொண்டது. அது எப்படி சாத்தியம் என்று கேட்டால்... இவர் புகைப்படத்தை பார்த்ததும் இந்த கொடுமையே தாங்கிட்டமே? நமக்கு வந்த துன்பமெல்லாம் எம்மாத்திரம் என்று சிரித்துவிடுவார்கள். இவர் காணாமல் போன அன்று குஷ்பூ இட்லியில் ஏன் குஷ்பூ இல்லை என்று சரவணபவன் சர்வருடன் சண்டை போட்டதாக தகவல். இவர் கடைசியாக பேசிய வார்த்தை.. இவர் அலுவலக சர்வர் USA யில் இருப்பதாக கேள்விப்பட்டதும்.. சர்வர் அங்க இருந்தா எனக்கு எப்பிடி சாப்பாடு கொண்டுவரமுடியும்? உடனே அந்த சர்வர இங்க டிரான்ஸ்பர் பண்ணிட்டு வர்றேன் என்று கோபமாக போனாராம். போகும் போதும் சும்மா போகாமல்  சின்ன தம்பி மார்த்தாண்டன் கணக்காக..ஐ..எனக்கு கண்ணாலம்...ஐ..எனக்கு கண்ணாலம் என்று கூவிக்கொண்டே சென்றாராம். இவரைப்பற்றி தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி..சென்னையின் எந்த ஹோட்டல்ல வேணாலும் சொல்லுங்க... ஒரு இடத்துல கூட சாப்பிட்டதுக்கு பில் கொடுக்காததால எல்லோருமே கொலை வெறியா தேடிகிட்டு இருக்காங்க.

இவனுங்களுக்கு வணக்கம் சொல்லியே கை வலிக்குதுப்பா!

 பெயர் பன்னிக்குட்டி ராமசாமி. ராமசாமி என்னமோ இவர் சொந்த பெயராக இருந்தாலும் இந்த பன்னிகுட்டி என்ற அடைமொழி இவரிடம் ஒட்டிக்கொண்ட கதை வித்தியாசமானது. இவர் எந்த பிளாக்கில் கமெண்ட் போட்டாலும் ஒரு கமேன்ட்டோடு நிறுத்துவதில்லை. பன்னி குட்டி போட்டது போல் வத வதவென்று கமெண்ட்களாக  போட்டுத்தள்ளுவதால் இவருக்கு இந்த பெயர் ஒட்டிக்கொண்டது. இவர் காணமல் போன அன்று சில பிளாக்குகளுக்கு கமெண்ட் போட்டு வருவதாக சென்றாராம். ஆனால் பிளாக்கர் ஆரம்பித்த புதிதில் வந்த ப்ளாக்குகளுக்கு எல்லாம் இவர் இன்னும் கமெண்ட் போட்டுக்கொண்டிருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் பெயரில்லாத பிளாக்குக்கு எல்லாம் பயங்கர டேட்டா போடபோவதாக சொல்லிகொண்டிருந்தாராம். அண்ணனை காணாமல் இவரின் அடிவிழுதுகள் தற்கொலை முயற்சிக்கும் தயங்க மாட்டார்கள் என்பதால் இவரை பற்றிய தகவல் தெரிந்தால் உடனே தெரிவிக்க வேண்டிய முகவரி அகில உலக பன்னிக்குட்டி பாசறை, அபுதாபி குறுக்குசந்து, சில்பகுமார் எண்ணெய் கிணறு அருகில், துபாய்.


வாங்க..வாங்க.... அம்மா வந்தா இன்னும் குமிஞ்சு கும்பிடுவேன்!

பெயர் இம்சை அரசன் பாபு. மங்களகரமான பெயர்...ஆனால் இவர் வாழ்விலோ மங்களம் இல்லை. யாரும் தப்பா நினைக்க வேணாம்... இந்த கரண்ட் கட் பிரச்சனையால மங்களம் இல்லைன்னு சொல்லவந்தேன். காணாமல் போன அன்று நடந்து கொண்டே போனில் பேசிக்கொண்டிருந்தாராம்..  திமுக ஆட்சியின் குறைகளை போனில்  கூறிக்கொண்டிருந்தவர் ஆட்சி மாறிய பின்னும் ஆளை காணவில்லை என்று  அச்சப்படுகின்றனர். அவர் தன்னை மறந்து குறைகளை கூறியபடி காசி வரை பேசியபடி நடந்தே  சென்றிருக்கலாம் என்று போலீசார் அஞ்சுகின்றனர். காணாமல் போன அன்று தனது தொப்பையை உள்ளே அடக்க முயற்சி செய்த சட்டையும் இடுப்பை இறுக்கி பிடிக்க முயற்சி செய்து தோற்ற பேண்ட்டும் அணிந்திருந்தார். பேன்ட் பாக்கெட்டில் எப்போதும்போல் பேர்நெஸ் க்ரீமில் ஐந்து பாக்கெட் வைத்திருந்தாராம். இவர் காணாமல் போகும்முன் கடைசியாக பேசிய வார்த்தை..மக்கா..திமுக கண்டிப்பா தோற்கும்... அம்மா ஆட்சி வந்ததும் கரண்ட் கட்டே இருக்காது என்பதுதானாம். இவரை பற்றிய தகவல் தெரிந்தால் தொடர்புகொள்ளவேண்டிய முகவரி.. அகில இந்திய அம்மா பாசறை, கோவில்பட்டி கிளை.



Tuesday, February 14, 2012

கவுண்டமணியும் காதலர் தினமும்! ( லவ்வர்ஸ் டே ஸ்பெசல் )

 
காந்த கண்ணழகிகளையே காணுமே?
 
 
காதலர் தினம்... காலை.

சுவாமி கவுண்டானந்தாவின் ஆசிரமம்... காலையில் பூஜை முடித்து வெளியில்வரும்போதே அவரது சிஷ்யர் செந்தில் சோகமாக பாடல் கேட்டுக்கொண்டிருக்கிறார்....

"காதல் என் காதல் அது கண்ணீருல...
போச்சு அது போச்சு வெந்நீரில...
அடிடா அவள..உதைடா அவள..

"அடிசெருப்பால.. வர்ற போறவங்ககிட்ட அஞ்சு பத்து வாங்குற மொன்ன நாய்க்கு என்னடா காதல் வேண்டி கிடக்கு? அடடடா... இந்த லவ் பண்றவைங்க தொல்ல தாங்க முடியலடா சாமி... வெந்தது..வேகாதது..பிஞ்சது... பெருத்தது எல்லாம் லவ் பண்ணிக்கிட்டு திரியுதுங்க... ஒவ்வொருததனையா புடிச்சு மூஞ்சிய அடுப்புல வச்சு கருக்கனும்..படுவா... ஓடிப்போயிரு சொல்லிப்புட்டேன்"  கடுப்பாகிறார் கவுண்டானந்தா.

செந்தில் அவசரமாக எழுந்து வணங்குகிறார்... " சுவாமி..சுவாமி... அது ஒரு  பெரிய கதை....."

"சரிட்ரா நாயே...இவரு பெரிய பாரதிராஜா... அப்பிடியே பிளாஸ்பேக்க ஓப்பன் பண்றாரு.. அடச்சீ நாயே.. போ....போய்... ஆசிர்வாதம்  வாங்க வந்தவங்கள வரிசையா உள்ள அனுப்பு.. டேய் தகர வாயா.... அவங்ககிட்ட ஏதாவது தனியா  கமிஷன் வாங்குன... படுவா..மண்டைல தேங்காய வச்சு தேச்சுப்புடுவேன்.. ராஸ்கோல்... போ.. போய் வரச்சொல்லு"

வெளியே போன செந்தில் திரும்ப வருகிறார்.. " சுவாமி..சுவாமி.. ஏதோ இன்னிக்கு லவ்வர்ஸ் டேயாம்.. வெளில ஒரே லவ்வர்சா வந்துருக்காங்க..உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கனுமாம்.... "

"அடங்கொன்னியா... வழக்கமா பார்க்கு..பீச்சுன்னுதானே போவானுங்க..இப்ப என்ன ஆசிரமம் எல்லாம் வர ஆரம்பிச்சிட்டானுங்க? அதவிட இங்க ஜாலியா இருக்கும்னு எவனோ பொரலிய கெளப்பி விட்டாண்டோ...சரிடா..போய் ஒவ்வொரு ஜோடியா உள்ள அனுப்பு.."

முதலில் ஒரு ஜோடி உள்ளே வருகிறது...

" சுவாமி வணக்கம்.. எங்கள ஆசிர்வாதம் பண்ணனும்..எங்க காதல நீங்கதான் சேர்த்து வைக்கணும்... வீட்ல ஒரே பிரச்சனையா இருக்கு.. உங்களைத்தான்  நம்பியிருக்கோம்"

" சரி..சரி.. காதல்னா பிரச்சனைதான்... நீங்க எப்பிடி காதலிச்சிங்க? என்ன பிரச்னை? தெளிவா சொல்லுங்க...

" சாமி.. என் பேரு டேவிட்.. இவ பேரு மல்லிகா...

" அடடடா...... மத நல்லிணக்கம்?  அட்ராசக்க..அட்ராசக்க... மேல சொல்லு..மேல சொல்லு....

"ஒரு வாரம் முன்னாடிதான் இவள ரெஜிஸ்டர் ஆபிஸ்ல கல்யாணத்துக்காக போயிருக்கும்போது பார்த்தேன்.. இவளோட கண்ண(??) பார்த்ததுமே இவ எனக்குத்தான்னு  முடிவு பண்ணிட்டேன்.... அவளுக்கும் அப்பிடிதான்... அவங்க வீட்லயும் எங்க வீட்லயும் கூல்ட்ரிங்க்ஸ் சாப்ட வெளில போன நேரம் பார்த்து தனியா அவள பார்த்து  என் காதல அவகிட்ட சொன்னேன்.. அவளும் உடனே ஓக்கே சொல்லிட்டா... கொஞ்சம் கூட லேட் பண்ணாம அப்பிடியே பின்வாசல் வழியா ஊர விட்டு ஓடி வந்துட்டோம்... ஆனா நாங்க எங்க போனாலும் எங்க ரெண்டு பேர் வீட்ல இருந்து எங்கள துரத்திகிட்டே இருக்காங்க.. நீங்கதான் சாமி எங்கள காப்பாத்தணும்" என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தனர்.

" அடங்கொன்னியா... இளஞ்ஜோடிகள பிரிக்கிறதே இந்த தகப்பன்களுக்கு வேலையா போச்சு.. சரி.. டேவிட்..நீ சொல்லு..உன் வீட்ல என்ன பிரச்னை? யார் பிரச்னை பண்றா?"

" சாமி.. எங்க வீட்லகூட அவ்வளவா பிரச்னை இல்லை சாமி.. தண்ணி தொளிச்சு விட்டுட்டாங்க....

" அட நாயே.. அப்புறம் யார்தான் உன்னை தொறத்துனா?

" அதான் சாமி.. எங்க வீட்ல கூட விட்டுட்டாங்க.. ஆனா என் பொண்டாட்டி வீட்லதான் சாமி ஆள் வச்சு துரத்துறாங்க...

" டேய்ய்.. என்னடா சொல்ற? பொண்டாட்டி வீட்லையா? அடங்கொன்னியா... ஏம்மா..இந்தாம்ம்மா பொண்ணு.. இந்த நாய்க்கு கல்யாணம் ஆயிருச்சுன்னு உனக்கு தெரியுமாம்மா? தெரிஞ்சுமா லவ் பண்ணுன?

" தெரியும் சாமி..  ஏன்னா..எனக்கு கல்யாணம் ஆனத அவரு பெருந்தன்மையா ஏத்துக்கலையா? அதுமாதிரிதான் நானும் ஏத்துக்கிட்டேன்...."

" டேய்ய்..தல சுத்துதுடா... ங்கப்பா... பன்னாட பரதேசிங்களா... உங்க ரெண்டு பேருக்கும்தான்  கல்யாணம் ஆயிருச்சேடா.. எந்த கல்யாணத்துலடா பார்த்து இந்த கருமாந்திரம் புடிச்ச காதல பண்ணி தொலைச்சிங்க?

" சாமி.. எங்க காதல் தெய்வீக காதல்... தப்பா பேசாதிங்க... நான் என் கல்யாணத்த ரெஜிஸ்டர் பண்ண என் பொண்டாட்டியோட அங்க  போயிருந்தேன்.. இவ கல்யாணத்த ரெஜிஸ்டர் பண்ண இவ புருசனோட வந்துருந்தா.. நாங்க பார்த்ததுமே எங்க காதல் அப்பிடியே உள்ள இருந்து ஊத்து மாதிரி கிளம்பி வந்துருச்சு.. அதான் உடனே ஓடி வந்துட்டோம்... இப்ப ஹெல்ப் பண்ண முடியுமா முடியாதா?

" அடங்கொன்னியா... கல்யாணத்த ரெஜிஸ்டர் பண்ண போனீங்களா? அப்ப உங்களுக்கு எப்ப கல்யாணம் ஆனுச்சு?

" ரெஜிஸ்டர் பண்ண போன ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் சாமி... அது ஒரு கெட்ட கனவா நினச்சு மறந்துட்டேன் சாமி... இப்ப ஆசிர்வாதம் பண்ணுங்க.."

" அட..கருமாந்திரம் புடிச்சவனுங்களா... மரத்த பார்த்தா கால தூக்குற நாய் மாதிரி பார்க்குற பொண்ண பூரா நீ லவ் பண்ணுவ? உனக்கு நான் ஆசிர்வாதம் பண்ணனுமா? இந்தா வாங்கிக்க..க்க்க்ரர்ர்..த்தூ.. இந்தாம்ம்மா பொண்ணு மல்லிகா.. (பேர பாரு? மானம் கெட்ட நாய்க்கு மல்லிகா?) இன்னும் ஒரு நிமிஷம் உங்கள இங்க பார்த்தேன்..சுடுபெட்டிய மூஞ்சில வச்சு தேச்சுபோடுவேன்.. ஓடி போயிருங்க சொல்லிபுட்டேன்...  டேய்ய் சிஷ்யா.. 
 
 


செந்தில் வேகமாக உள்ளே ஓடிவருகிறார்.. " சுவாமி..சுவாமி... அடுத்த ஜோடிய உள்ள வர சொல்லவா?

" டேய்ய் மங்குஸ் மண்டையா..இனி காதல் கீதல்னு எவனையாது உள்ள அனுப்புன... படுவா படுக்க வச்சு லாரிய விட்டு ஏத்திபுடுவேன் சொல்லிபுட்டேன்... அய்யயையையோ.. அட ஆண்டவா...காலங்காத்தால..கண்ட கழிசடைங்களை  எல்லாம் பார்க்க வைக்கிறியே? டோர் லாக்.. ஆசிரமம் க்ளோஸ்...

சாமியிடம் காதலர்தின ஆசிர்வாதம் வாங்க நினைப்பவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளவும்.

சிரிப்பு போலிஸ்
சிப்பு போலிஸ் ப்ளாக்.
பாலிடால்புரம்.
மொக்கையூர்.
 
 
 

Thursday, October 27, 2011

வேலாயுதம் ஒரு கவிதை!





உன் படத்தை நான் பார்த்த ஒவ்வொரு மணித்துளியும்

மரணப்படுக்கையிலும் மறக்காத கன்றாவியே!

மூன்று மணி நேரங்கள் படம் பார்த்த காலம்தான்

இரண்டு நாட்க்களாய் இதயத்தில் வலிக்குதடா..

பார்க்காமல் சிலநிமிடம்... பயத்தோடு சில நிமிடம்.

கதறி அழுதபடி கண்ணீரில் சிலநிமிடம்...

இரக்கமே இல்லாமல்..

எல்லா சீன்களிலும் டயலாக் பேசியே டரியல் ஆக்கிய சிலநிமிடம்!

உன் படத்தை நான் பார்த்த ஒவ்வொரு மணித்துளியும்

மரணப்படுக்கையிலும் மறக்காத கன்றாவியே!

எது நியாயம் எது பாவம்

உனக்குகூட தெரியவில்லை!

அது படமா இல்ல எனக்கு வச்ச பாம்மா அதுபற்றி அறியவில்லை!

யார் முதலில் யார் முடிவில் ஒருவருக்கும் தெரியவில்லை!

படம் பார்த்த அனைவருக்குமே சங்குதானே?..

ஒருத்தனுக்கும் தோன்றவில்லை..

அச்சம் கலைந்தேன்..ங்கொய்யால..

அடுத்த படமும் நடிப்பேன் என்றாய்..

தூக்கம் கலைந்தேன்..

துயரங்கள் தொடரும் என்றாய்!

படம் பார்த்த காலத்தை கனவாக நினைத்தாலும்..

உன் படம் பார்த்து கடைசியாக அழுத கண்ணீர் கைகளிலே ஒட்டுதடா...

உன் படத்தை நான் பார்த்த ஒவ்வொரு மணித்துளியும்

மரணப்படுக்கையிலும் மறக்காத கன்றாவியே!
 
ஹி..ஹி....வேலாயுதம்  படத்தை பார்த்ததின்  விளைவு இது!
நன்றி - வைரமுத்து (இருவர் பட கவிதை)
 
**********************************************************************************
ஒவ்வொரு விடியலிலும்

உன்னை நோக்கியே என் பிராத்தனை..

என் ஒவ்வொரு பாதச்சுவடும்..

உன்னை நோக்கியே அணிவகுக்கும்..

இரவுவரை உனைப்பார்த்து

உறவாடி வந்தாலும்..

விடிந்ததுமே என் மனது

உன்னை நோக்கி திரும்புவதை...

காதல் என்று சொன்னால் கயவர்கள்

நம்பமாட்டார்கள்!

என் ஆலயத்தின் மூலஸ்தானம்

திறப்பதற்கு காத்திருந்து..உன்

தரிசனத்தை நான் காண- இன்னும்

எத்தனை மணித்துளிகள் காத்திருக்க வைப்பாயோ?

# என்னங்கடா அநியாயம்...10 மணி ஆகப்போகுது...இன்னும் டாஸ்மாக் தொறக்கலை?

**********************************************************************************
ஒவ்வொரு இரவிலும்

உன்னுடைய தாலாட்டு..

ஒவ்வொரு விடியலிலும்

உன்னுடைய உற்சாகம்...

பல இரவுகளின் பொழுதை

உன்னோடு கழித்ததும்..

பல பயணங்களில்

என் மனதில் நீ தவழ்ந்ததும்...

என் தனிமையை பங்கிட்டு

தாரமாய் நின்றதும்..

பல நேரம் ஆனந்தம் 

சில நேரம் அதிர்ச்சி - இப்படி

கலவையான உணர்சிகளை

கண்மூடி ரசித்ததும்...

எப்படி தொலைத்தேன் உன்னை?

இன்றுவரை புரியவில்லை....

இப்போது யாரிடம் நீ?

என் நண்பனைகூட நம்பவில்லை...

இருந்தாலும் இருக்கலாம்!

# என் பாக்கெட் ரேடியோ தொலைஞ்சி போச்சி.. பார்த்தவங்க சொல்லுங்களே?

**********************************************************************************

Wednesday, October 12, 2011

7 - ம் அறிவு படத்தின் கதை.. முதல் முறையாக உங்களுக்காக!




படத்தின் நாயகன் சூர்யா(நடிகர் சிவகுமாரின் மகன், நடிகை ஜோதிகாவின் கணவன், கார்த்தியின் அண்ணன்) ஒரு சர்கஸ் கம்பனியில் சர்கஸ் கலைஞனாக வேலை பார்க்கிறார். ஒருநாள் விஞ்ஞானி  ஆன சுருதி, நாயகன் சூர்யாவை சந்திக்கிறார்! இருவருக்கும் வேதியியல் மாற்றம் உருவாகி காதல் மலர்கிறது!. பின்னணியில் ஹரிஸ் ஜெயராஜ் வழக்கம் போல ஒரு  ஆங்கில  பாடலை சுட்டு ஒரு பாடல் போடுகிறார்! பாடல் முடிவதற்குள்... அந்த பாடலுக்கு சொந்தக்காரன் சண்டைக்கு வருகிறானோ இல்லையோ...  ஒரு பிரபல அரசியல்வாதி சண்டைக்கு வருகிறார்...

ஏன் சண்டைக்கு வருகிறார்? சூர்யாவுக்கும் அந்த குழப்பம்தான்.. ஆனால்  யாருக்கும்  எந்த  சிரமமும்   இல்லாமல் அந்த அரசியல்வாதியே  காரணத்தை சொல்லுகிறார்... சர்கஸ் என்பது  அவரது கட்சிக்கு  உரிமையான   ஒன்றாம்...  இவர்கள் தாவி தாவி சர்கஸ் பண்ணுவது  அவர்கள் கட்சியை கிண்டல் அடிப்பது போல் உள்ளது என்று சண்டைக்கு வருகிறாராம்... ஒரு வழியாக அவர்களை அடித்து போட்டு  விட்டு  அவர்களை பார்த்து வசனம் பேச ஆரம்பிக்கிறார் சூர்யா!

 அதை கேட்ட அந்த அரசியல்வாதி... சூர்யா காலில் விழுந்து கெஞ்சுகிறார்... " தம்பி.. என்னைய உன் கையாலே கொன்னுவிடு.. இப்பிடி வசனம் பேசியே என்ன சித்திரவதை செய்யாத.. என்று கதறுகிறார்... அதைக்கேட்ட சூர்யாவும்... சரி.. கடைசியா நான் கஷ்டப்பட்டு மனப்பாடம் செஞ்ச நூறு பூக்களின் பேர வரிசையா சொல்றேன்.. அத மட்டும் கேட்டுட்டு போங்கன்னு சொல்றார்... ஆனா அதைகேட்ட மறுவினாடியே.. அந்த அரசியல்வாதியின் உயிர் அநியாயமாக பிரிகிறது!

இதை பார்த்துகொண்டிருந்த ஸ்ருதி அஞ்சு நிமிஷம் பேசியே ஒருத்தன சாகடிக்கிறியே? ஆயுசு முழுக்க உன்கிட்ட நான் எப்பிடி பேச முடியும் என்று கேட்கிறார்... பின்னணியில் ஹரிஸ் ஜெயராஜ்... இந்த சீனுக்கு எந்த ஆல்பத்தில் இருந்து சுடலாம் என்று யோசிக்கும்போதே சூர்யா ஸ்ருதி   இருவருக்கும்  இடையில் கருத்து மோதல் வந்துவிடுகிறது!  அபோது ஸ்ருதி  சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்கிறார்!!

அபோது கோவமான சூர்யா ஸ்ருதியிடம்...   சட்டையை கலட்டி தனது சிக்ஸ் பேக் உடம்பை காண்பிக்கிறார்... ஒன்றும் புரியாமல் ஸ்ருதி சூர்யாவை பார்க்க.. சூர்யா சொல்லுகிறார்... " என்ன பார்க்கிற? ஏன் இப்ப சிக்ஸ் பேக் உடம்ப காண்பிக்கிரேன்னா?.. அந்த கருமம்தான் எனக்கும் தெரியல... ஏதோ.. டைரெக்டர்  சொன்னாரு காண்பிக்கறேன்" என்று சொல்கிறார்! இதுக்கும் நீ மயங்கலைனா.. இன்னைக்கு நைட்டே பவர் ஸ்டாரோட ஆனந்த தொல்லை படத்த பார்த்திட்டு தற்கொலை பண்ணிக்குவேன்னு மிரட்டுகிறார்! மேலும் லத்திகா பட டிவிடியை உனக்கு அனுப்புவேன் என்றும் மிரட்டுகிறார்!

 இதைக்கேட்டு அதிர்ச்சியான ஸ்ருதி... உயிர் பயத்தில் சூர்யாவிடம் மன்னிப்பு கேட்கிறார்!! ஆனால் சூர்யா மன்னிக்க மறுக்கிறார்!! அபோதுதான் திரைக்கதையில் சூடு பிடிக்கிறது. பார்க்கிற நமக்கும் பேதி பிடிக்கிறது... பிறகு சூர்யாவின் இந்த தற்கொலை முயற்சிக்கு தான்தான்  காரணம் என்று நினைக்கும் ஸ்ருதி.. சூர்யாவின் இந்த பிரச்சினைக்கு காலச்சக்கரம் மூலம் முற்றுப்புள்ளி வைக்க முயல்கிறார் விஞ்ஞானியான ஸ்ருதி.  காலச்சக்கரம் மூலம் சூர்யாவை 30 வருடங்கள் பின்னோக்கி பயணம் செய்ய வைக்கிறார்.

அபோது சூர்யா 6 வயது சிறுவனாக நடித்திருக்கிறார். 36 வயதில் நான் உயரம் குறைவாக இருப்பதற்கு 6 வயதில் சரியாக Complan குடிக்காததுதான் காரணம் என கண்டறிகிறார் சூர்யா! மேலும் அப்போது சைனாவில் இருந்ததால்தான் அதை குடிக்கமுடியவில்லை என்று கண்டறிகிறார்! இப்போது திரைக்கதை  சைனாவுக்கு  செல்கிறது... இந்த இடத்தில ஹரிஸ் ஜெயராஜ்.. கவுண்ட மணி  ஏற்க்கனவே பாடி  வைத்த ஒரு சைனீஸ்  பாடலை யாருக்கும்  தெரியாமல்  ரீமிக்ஸ்  பண்ணி போடுகிறார்.. சூர்யாவுக்கு சைனாவில் ஏன் காம்ப்ளான் கிடைக்கவில்லை? திரும்பவும் அதை குடித்து  வளர்கிறாரா?  ஸ்ருதியை கை பிடிக்கிறாரா இல்லையா? என்பதுதான் மீதி கதை! அதை தைரியமிருந்தால் வெண்திரையில் காண்க!

குறிப்பு - இது  பேஸ் புக்கில் இருந்து எடுத்து அதை கொஞ்சம் டெவலப் செய்து இங்கு அளித்திருக்கிறோம்!


Monday, October 10, 2011

தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...






பெயர்                            : தமிழ்மணம்



புனைப்பெயர்                     : பதிவுலக கடவுள்


தொழில்                          : திரட்டுதல், பதிவுகளை



உபதொழில்                       : ரேங் போடுதல் 




உப உபதொழில்                  : கான்ஸ்டபிள் (ட்ராபிக்)


தலைவர்                         : யாருக்கும் தெரியாது


துணைத்தலைவர்                               : பிரபல பதிவர்கள் அல்ல 


பொழுதுபோக்கு                   : பதிவுகளை இணைத்தல்


துணைப்பொழுதுபோக்கு          : பதிவுகளை நீக்குதல்


மேலும் பொழுதுபோக்கு           : எச்சரிக்கை அனுப்புதல்


வயது                            : வயதாகிக் கொண்டிருக்கிறது


பலம்                             :பதிவர்கள்


பலவீனம்                         : அதுவும் அவர்களேதான்


நம்பிக்கை                        : மொக்கைப் பதிவர்களும் 

இலக்கியவியாதிகளாகி விடுவார்கள்


பயம்                             : இன்னும் கொஞ்ச நாளில் 

தமிழ்மணம் முழுதும் மொக்கையாகி விடுமோ?


லட்சியம்                         : நெ.1 திரட்டி


நீண்டகால சாதனை               : காப்பி-பேஸ்ட்டை 

கண்டுகொள்ளாமல் இருந்தது


சமீபத்திய சாதனை                               :காப்பி-பேஸ்ட்டை அதிரடியாக 

தூக்கியது


இதுவரை மறந்தது                :  ஆபாச பதிவுகளை


இனி மறக்க வேண்டியது           :மொக்கை பதிவர்கள் 

திருந்துவார்கள் என்று நம்புவதை 


பாடாய் படுத்துவது                : நட்சத்திரங்கள்


இதுவரை புரியாதது                             : விருதுகள்



விரும்புவது                      : இனி சர்வர் பிரச்சனை 

வரக்கூடாது என்று

விரும்பாதது                     கட்டண சேவை பற்றி கேள்வி 
கேட்பதை




எச்சரிக்கை: பதிவு முற்றிலும் நகைச்சுவைக்காக மட்டுமே. 

Monday, June 27, 2011

பதிவுலகில் சிரிப்பு போலீஸ்... ஒரு பய(ங்கர)டேட்டா!




அப்பாடா, நம்மளைப்பத்தியும் நல்லாத்தான் எழுதி இருக்காய்ங்க போல...!



பெயர்:                                                             : சிரிப்பு போலீஸ்


புனைப்பெயர்:                                            : ரமேஷ்


தொழில்:                                                       : ப்ளாக் ஓனர்


உபதொழில்:                                               : டேமேஜர் என்று சொல்லி தூங்குவது 


தலைவர்:                                                     : டாகுடரு கேப்டன்


துணைத்தலைவர்:                                 : டாகுடர் விஜய், டீஆர், பவர்ஸ்டார் சீனி 


பொழுதுபோக்கு:                                     : சாப்பிடுதல் (ஓசியில்)


துணைப்பொழுதுபோக்கு:                 : சாப்புடுறதுக்கு ரிவர்சு


மேலும் பொழுதுபோக்கு:                  : துணிதுவைத்தல்


வயது:                                                           : கல்யாணத்திற்குத்தயார் (10 வருசமாய்)


பலம்:                                                            : ப்ளாகில் கமெண்ட்ஸ் போடுவது


பலவீனம்:                                                   : பதிவும் எழுதுவது


எலேய் நானும் பதிவர்தான்னு சொன்னா நம்பனும்.....




சமீபத்திய சாதனை:                              : பதிவு எழுதுவதை தற்காலிகமாக நிறுத்தி இருப்பது


நீண்டகால சாதனை:                            : ராஜ் வீடியோவிஷன் வைத்துள்ள 
அத்தனை படங்களையும் பார்த்து முடித்தது


சமீபத்திய எரிச்சல்:                               : டெரருக்காக காலைல இருந்தே சாப்பிடாம வெயிட் பண்ணியும் ஓசிச்சாப்பாட்டை மிஸ் பண்ணியது


நீண்டகால எரிச்சல்:                             : கேப்டனுக்கு இன்னும் ஆஸ்கார் விருது 
கிடைக்காதது


நண்பர்கள்:                                                  : சாப்பாடு வாங்கிக் கொடுப்பவர்கள்


எதிரிகள்:                                                      : சமீபத்தில் திருமணம் ஆனவர்கள்


ஆசை:                                                            : என்றும் 16


நிராசை:                                                        : பிரபல பதிவர் ஆகுதல் 

இன்னுமாடா என்னைய நம்புறீங்க?



நம்பிக்கை:                                                  : என்னைக்காவது எப்படியாவது 
கல்யாணம் நடந்துடும்!


பயம்:                                                              : என்றும் தனிக்கட்டை? ( என்னைக்கு நடக்கும்?)


லட்சியம்:                                                     : அழகான பொண்ணை திருமணம் செய்வது 


இதுவரை மறந்தது:                                : கண்ணாடியில் தன்னை பார்க்க 


இனி மறக்க வேண்டியது:                   : கல்யாணம் ஆகும் என்று நம்புவதை 


விரும்புவது:                                               : பதிவுலக கனவுக்கண்ணனாக 


விரும்பாதது:                                              : இன்னுமா கல்யாணம் ஆகலேன்னு கேட்பதை



மீ... டோட்டல் டேமேஜ்..................