Showing posts with label வாசகர் கடிதம். Show all posts
Showing posts with label வாசகர் கடிதம். Show all posts

Saturday, November 29, 2014

கந்தரகோலம் என்னும் மாய யதார்த்தம்

காலையில் டியூஸ்லேண்ட்டிலிருந்து (ஜெர்மனி) நண்பன் அழைத்திருந்தான். சுத்த ஜெர்மானியன். தமிழ் தெரியாது. டியூஸ் பர்க் ( University of Duisburg- Essen) பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது நண்பர்களானோம். ஒரே சிந்தனையுடைய மனிதர்கள் ஒரே மொழியினையோ அல்லது இனம், மதம் முதலானவற்றைச் சார்ந்திருக்க வேண்டுமென்று எந்த விதியும் இல்லையென்பது இவனையும் என்னையும் பார்த்தால் புரிந்துவிடும். மறக்கமுடியாத நண்பன். 

என்னுடன் படித்த மற்ற ஜெர்மானியர்களைப் போலல்ல இவன். கம்யூனிசம் பேசுவான். உலக இலக்கியங்களைத் தேடித்தேடிப் படிப்பான். நானும் கூட சாரு மற்றும் எஸ்.ரா ஆகியோரை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். ஜீரோ டிகிரி நாவலைப் படித்துவிட்டு வாழ்விலே ஒருமுறையேனும் சாருவைப் பார்த்தே தீருவதென்று தீர்மானித்திருப்பதாகக் கூறியிருக்கிறான். தினமும் என்னவெல்லாமோ பேசுவோம். ஜெர்மனியிலிருந்த அந்த இரண்டு வருடங்களை மறக்க முடியாத நாட்களாக மாற்றியவன் இவன் ஒருவனே. இப்பொழுதும் கூட வாரம் ஒருமுறையேனும் தொலைபேசிவிடுவோம். நான் இன்னமும் ஜெர்மன் கற்றுக்கொள்ளவில்லை. போலவே அவனும் தமிழ். ஆங்கிலத்தில்தான் உரையாடல் நடக்கும்.



சரி, காலையில் தொலைபேசிய விசயத்திற்கு வரலாம். கடந்தவாரத்தில் ஆளுமை நாசோவின் கந்தரகோலம் புத்தகம் டச்சு மொழியில் வெளியாகியிருந்தது. வழக்கம்போலவே அவர் தனது ஆங்கிலப் பக்கத்தில் மட்டும் இதனைப் பகிர்ந்திருந்தார். தமிழில் கந்தரகோலம் புத்தகம் விர்ச்சுவல் டுபாக்கூராகப் பார்க்கப்பட்டுவருவது குறித்து அவருக்கு எந்த வருத்தமும் இல்லை. நீங்கள் ஏன் உண்மையைச் சொல்லக்கூடாது என்று பலமுறை அவரிடம் கேட்டிருக்கிறேன். இல்லை, கந்தரகோலம் என்ற புத்தகமே உருவாகவில்லை என்ற மாயத்தோற்றத்தை (இதை மாய யதார்த்தம் எனவும்) உருவாக்குவதற்கு ஒரு காரணம் இருப்பதாகத் தெரிவித்தார். என்ன காரணமென்று எனக்கு இதுவரையிலும் புரியவில்லை. ஆனால், இங்கே தமிழ் வலையுலகில் கந்தரகோலம் புத்தகத்தினைப் பற்றி அனேகம் பேர் இப்படி ஒரு புத்தகமே வராது என்ற நிலையில் அதனைக் கிண்டலடித்து வருகின்றனர். அவர் வழியையே நானும் பின்பற்றி அந்தக் கிண்டல்களை விட்டு விலகிப் போய்விடுவதுண்டு. இப்பொழுது அதல்ல பிரச்சினை. 

ஜெர்மன் மொழியில் வெளியாகியிருக்கும் கந்தரகோலம் புத்தகம் ஜெர்மனியில் பெரும் பரபரப்பினை உருவாக்கிவருவதாகவும், இந்த வார இறுதிக்குள்ளாக ஜெர்மன் பெஸ்ட் செல்லரில் முதல் இடத்தினைப் பிடித்துவிடும் என்று அவன் கூறியிருந்தான். மேலும் தான் முதல் ஆளாக அந்தப் புத்தகத்தினை வாங்கி வாசித்துவிட்டதாகவும், ஆளுமை நாசோவின் புகைப்படம் கிடைக்குமா என்றும் கேட்டிருந்தான். அல்லது அவர் தனக்கு ஒரு "ஹாய்" சொன்னாலும் பிறப்பின் பலனை அடைந்துவிடுவேன் என்றும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தான். என் உயிர் நண்பன்தான். ஆனால், என்னால் அதனை ஏற்பாடு செய்துதரமுடியாது என்று மறுத்துவிட்டேன். 

நான் மறுத்தாலும் அவன் வேறுவிதமாகச் சந்தோசப்பட்டான். அதாவது ஆளுமை நாசோவை நான் ஓரிரு முறைகள் நேரில் பார்த்திருக்கிறேன். ஆளுமையை நேரில் பார்த்த ஒருவன் தனக்கு நண்பனாக இருக்கிறானே என்பது அவனது சந்தோசமாக இருந்தது. எனக்கும் மகிழ்ச்சியே.

அவன் கூறியதில் மிக முக்கியமான செய்தி என்னவென்றால் கந்தரகோலம் புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்புரிமை மிகப் பெரும் விலைக்கு விற்கப்படவிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கலை, இலக்கியம் போன்றவற்றில் நுண்மையான பார்வையைக் கொண்டவர்களான பிரான்சு தேசத்தில் கந்தரகோலத்திற்கென தனியொரு நினைவுச் சின்னமும், மணி மண்டபமும் அமைக்கப்படவுள்ளதாகவும், அதன் திறப்புவிழாவிற்கு ஆளுமை அழைக்கப்படவிருப்பதாகவும் கூறினான். மேலும் நோபல், புக்கர் பரிசுகளுக்கு மேலாக கந்தரகோலம் அல்லது ஆளுமையின் பெயரில் விருதுகளை ஏற்பாடு செய்ய உலக நாடுகளை ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தவுள்ளதாகவும் பேசப்படுகிறது.

ஒரு பெரும் சாதனையைச் செய்துவிட்டு, இன்னமும் கந்தரகோலம் எழுதப்படவில்லை, சிலேவில் வெளியிடவுள்ளேன் என்றெல்லாம் ஒருபக்கம் கிண்டல் நிலைத்தகவல்களையும் பகிர்ந்துகொண்டு, மிகச் சாதாரணனாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் ஆளுமை நாசோவை என்னவென்பது?

Hüte weg zu Ihnen AALUMAI :))) Dank für hier!

Tuesday, September 9, 2014

படைப்பாளிக்கு பேஸ்புக் தேவையா? [18+]

வணக்கம். என்னுடைய அகவை 29. நான் கடந்த 20 வருடங்களாக பிட்டுப்படம் பார்த்து வருகிறேன். தமிழ் பிட்டுகள் மாத்திரம் அல்லாது, மேற்கத்திய இரண்டு எக்ஸ், மூன்று எக்ஸ் திரைச்சித்திரங்கள், ப்ளாண்டு, ப்ருனெட், ரெட் ஹெட் படங்கள், எம்.ஐஎல்.எஃப், படங்கள், இண்டர்ரேசியல், எபோனி படங்கள் போன்றவை மீது எனக்கு தீராத தாகம் உண்டு. ஆனால் நானும் ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற வேட்கை ஓராண்டுக்கு முன்புதான் எழுந்தது. எனினும் என்னால் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை. அதற்கு சரோஜாதேவி போன்ற புத்தகங்களை வாசிப்பதுதான் ஒரு காரணமாக இருக்குமோ என்ற ஐயம் சில நாட்களாக அரித்துக் கொண்டிருக்கிறது. சரோஜாதேவியை வாசிப்பதும், பின் கரமைதுனம் செய்வதும் பலர் நம்மை கவனிப்பார்களோ என்ற அச்சமும் தீவிர படைப்பிற்கு என்னை வரவிடாமல் தடுக்கிறது என்றே கருதுகிறேன். மேலும் சுய இன்ப நடவடிக்கைகள் என்னுடைய நுண்ணெழுச்சியை பாதிப்பதாக அச்சம் கொள்கிறேன்.

என்னுடைய கேள்வி என்னவென்றால் சரோஜாதேவி புத்தகம் படிக்காமல் ஒரு புதிய படைப்பாளி இக்கால கட்டத்தில் தன்னை தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பதுதான். ஏனெனில் சரோஜாதேவி போன்ற சமூக புத்தகங்களில் வரும் கதைகளை படிக்காமல் ஒரு படைப்பாளி தன்னுடைய எழுச்சியை உருவாக்கிக் கொள்வது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை!

அன்புடன்
மைனர் குஞ்சு



அன்புள்ள மைனர் குஞ்சு
நண்பர்கள் பலர் நான் சரோஜாதேவி வகையறா புத்தகங்களை பற்றி விமர்சனங்களை முன்வைக்கும் போது இப்படிக் கேட்டிருக்கிறார்கள். உங்களுக்கு அத்தகைய புத்தங்கள் தேவையில்லை, அதைவிட பலமடங்கு வலுவான ஊடகமான இணையதளம் உள்ளது. மற்றவர்களுக்கு எழுச்சிக்கு என்ன வழி?

உண்மைதான். இன்றைய சூழலில் பரவலான எழுச்சிக்கு இணையம் முக்கியமானது. இணையத்தைத் தவிர்த்து அச்சில் மட்டுமே புழங்கும் படைப்பாளிகள் இன்று புதிய படைப்புகள் உருவாக்குவது மிகமிகக் கடினம்.

ஆனால் இணையத்தை எப்படி எந்த எல்லைவரை பயன்படுத்துவது? அங்குதான் சிக்கல் உள்ளது.

இணையம் வந்ததுமே செலவில்லாத இணைய தளங்கள் வந்தன. ஆனால் படங்கள் வந்ததும் கதைகள் அழிந்தன. அது ஒரு பெரிய இழப்பு. படங்களை தொடர்ந்து பார்க்க முடிவதில்லை. ஆகவே வீடியோக்கள் வந்ததும் படங்கள் அழிந்தன. இன்றிருப்பது வீடியோக்கள் மட்டுமெ. 

நான் வீடியோ என்றால் என்ன என்ற அளவுக்கு மட்டும் அதை பார்த்துவிட்டு விட்டுவிட்டேன். அடிப்படையில் வீடியோக்களின் அமைப்பே வேறு. அது ஆழ்ந்த ரசிப்புக்கான தளம் அல்ல. அது சுய இன்பத்திற்கான தளம். அடுத்த வீடியோ, அதற்கடுத்த வீடியோ என அது வலையை விரித்துச் செல்கிறது.

ஆகவே இணையத்தில் சுய இன்பம் அனுபவிப்பவர்களே அதிகம். உங்களைப் போல சிந்திப்பவர்கள், ரசிப்பவர்கள் சிலரே இருப்பார்கள். பிட்டுப்படம் ஓடும் தியேட்டர்களில் நம்மைச் சுற்றி கூடும் கூட்டம் போன்றது அங்கு வரும் தொடர்பு வலை. 

அதில் ரசனையோ இயக்கமோ முறையாக முன்வைக்கப்படாது. இங்கல்ல எங்கும் வீடியோக்கள் அப்படித்தான் உள்ளது. இயக்கம் மையம் கொள்ளாமல் கண்டபடி அலையும். செயல்களுக்கு அதற்கான ரசிகர்கள் வரமாட்டார்கள். பிட்டுப்பட தியேட்டரில் ஸ்டில்களை போட்டுக்காட்டுவது போன்றதுதான் அது. அங்கு வருபவர்களில் பத்து சதவீதம் பேர் கூட அதைக் கவனிக்கமாட்டார்கள்.  இதுதான் பிரச்சனை.


இந்த பொத்தாம் பொது கூட்டத்துடன் நாம் தொடர்ந்து எதிர்வினையாற்றி ஸ்டில்களை போட்டுக் கொண்டிருந்தால் மெல்லமெல்ல நமது செயல்முறை உச்சமற்ற இயக்கமாகவும் முறைமையற்றதாகவும் ஆகிறது. சம்பந்தமில்லாத சிணுங்கல்கள், சீண்டல்கள், புரிந்துகொள்ளாத பேச்சுகள் வழியாக நாம் மெல்லமெல்ல எரிச்சல் மிக்கவர்களாக ஆகிவிடுகிறோம்.


இன்னொன்று மானுட மனம் எதிர்பாலினத்தால் எளிதில் இயக்கப்படுவது. நீங்கள் தொடர்ந்து இணையத்தில் காட்டப்படும் மேலோட்டமான உடனடி படங்களை பார்த்துக் கொண்டிருந்தால் உங்கள் இயக்கமும் செறிவற்றதாக, ஆழமற்றதாக ஆகிக்கொண்டே இருக்கும். ஒரு படைப்பாளிக்கு இது தற்கொலை.

இணையத்தில் அதிகம் படம் போடுபவர்கள் பெரும்பாலும் சவசவவென்ற எளிய, சாரமற்ற நடையை அடைந்திருப்பதை காண்கிறேன். ஏன், தரமான நடை கொண்டிருந்தவர்கள்கூட மெல்ல அதை இழப்பதையும் காண்கிறேன்.

இதை எப்படி எதிர்கொள்வது? இணையத்திற்கு என சிறப்பான விதிமுறைகள் ஏதுமில்லை. ஆனால் இணையத்துக்கு பொதுவான சில விதிமுறைகள் உண்டு. நித்யானந்தாவின் மானசீக மாணவரும் அமெரிக்க இயக்குனருமான சைக்கிள் ஜாக்சன் எனக்கு அவற்றை இணையத்தில் படம் போட வந்த காலத்திலேயே சொன்னார். நான் பெரும்பாலும் அவற்றை கடைப்பிடிக்கிறேன்.

1.உங்கள் எல்லைகளை நீங்களே முன்னரே வகுத்துக்கொள்ளுங்கள்
இணையம் ஒரு பிரம்மாண்டமான வெளி. அதில் எல்லாமே உண்டு. எல்லாவற்றையும் பார்த்து எல்லாவற்றுக்கும் செயல்முறை வடிவம் கொடுப்பது என்பது ஒரு 100 மாடி கட்டிடத்தின் உச்சி விளிம்பில் நின்று கொண்டு சுய இன்பம் செய்வது போலாகும். அரைக்கணத்தில் ஆவியாகிவிடும்.
நம் எல்லைகளை நாமே வகுத்துக்கொள்ளவேண்டும். என் துறை ப்ளாண்டு, எபோனி, இவையிரண்டுடனும் தொடர்புள்ள வீடியோக்கள், ஒரு சராசரிக்குடிமகனின் காமப்பார்வை. அவ்வளவுதான். இந்த எல்லைக்குமேல் நான் செல்வதே இல்லை.
இந்த எல்லைக்கு அப்பால் சிறந்தவை, தேவையானவை நிறையவே உண்டு. நான் அவற்றில் இல்லை, அவ்வளவுதான்.

2. இணையத்தில் உங்களை முன்வையுங்கள். இணையம் உங்களை மாற்ற அனுமதிக்காதீர்கள்
இணையம் ஒரு சந்தை. அங்கே தேவைகள் பல. வாடிக்கையாளர்கள் பலவகை. அங்கே நீங்கள் தேவைக்கேற்ப ஆடினால் ஆட்டிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்
நீங்கள் எதை காட்ட விரும்புகிறீர்களோ, எதைச் செய்ய விழைகிறீர்களோ, அதை மட்டும் இணையத்தில் முன்வையுங்கள். அதற்கான எதிர்வினைகளில் உண்மையில் உங்கள் தளத்துக்கு எழுந்து வந்தவற்றை மட்டும் பொருட்படுத்துங்கள்
உதாரணமாக, நான் செய்யவந்தது இணையத்துக்குரிய வீடியோ அல்ல. நான் குஞ்சாக்கோ போன்ற தரமான படங்களை எடுத்தவன். திரை ஊடகம் செலவேறியது. ஆகவே இணையத்தை கையாள்கிறேன்.இந்தத் தெளிவு எனக்கிருந்தது
ஆகவே நான் எடுக்கவந்தபோது இணைய வீடியோ இப்படித்தான் இருக்கவேண்டும் எனறு சொல்லப்பட்ட ஆலோசனைகளை நான் கருத்தில் கொள்ளவில்லை. இரண்டுமுறைக்குமேல் ரீப்ளே செய்யும்படி இருக்கக் கூடாது, உச்சத்தன்மை கொண்டிருக்கவேண்டும் [அதாவது உச்சக்கட்டதன்மை] சொறியாக இல்லாமல் சரளமாக இருக்கவேண்டுமென்றெல்லாம் சொன்னார்கள். தினம் ஒரு ரசிகர் வேண்டுகோள் வந்தபடியே இருக்கும், எல்லாவற்றையும் காட்டுங்கள், பெரிதாக காட்டுங்கள் என.
நான் உறுதியாக இருந்தேன். இது என் வீடியோ. இதற்கு வருபவர்கள் எனக்குப் போதும் என்றேன். பெரியதாக காட்டலாமே என்றவர்களிடம் சின்னதாக வைத்திருப்பவர்கள் இருக்கிறார்கள், உன் எழுச்சித்திறனுக்கு அவர்களே போதும் போ என்றுதான் பதில் சொன்னேன்
மெல்லமெல்ல இணையம் வழியாகவே என் ரசிகர்களை எழுச்சி எடுத்தேன். இன்று எந்த ‘பெரிய’ வீடியோக்களை விடவும் என் வளமான, ஆழமான வீடியோகள் அதிகமாக பார்க்கப்படுகின்றன. சுய இன்பம் செய்யப்படுகின்றன
3. எதிர்வினைகளை புறக்கணியுங்கள்
இணையம் பலதரப்பட்டவர்களை ஒரே இடத்தில் குவிக்கிறது. ஒரு முறைகூட வீடீயோ பார்த்திராதவன் தற்செயலாக சன்னி லியோனின் ஒரு வீடியோவை பார்க்கமுடியும். உடனே ‘என்ன படம் இது. சொதப்பல்’ என்று எதிர்வினையும் ஆற்றமுடியும். அந்த எதிர்வினைகளுக்கு ஒரு மதிப்பும் இல்லை
இணையதளங்கள் போன்றவற்றில் வரும் கூட்டம் ரசிகர்கள் அல்ல, மிகச்சிலரே ரசிகர்கள். எனவே அந்த எதிர்வினைகள் உங்களைச் சீண்ட அனுமதிக்காதீர்கள். ஒருவர் உங்களைச் சீண்டினால் படத்தை டெலிட் செய்யுங்கள், மறுபடி படம் கிடைக்காது என்று தெரிந்தால் உங்களை அவர்கள் ஒன்றுமே செய்யமுடியாது. முழுமையாகப் புறக்கணியுங்கள்.

4 நேரத்தை கட்டுக்குள் வையுங்கள்
ஒருவீடியோவில் நீங்கள் அதிகபட்சம் ஒரு மணிநேரம் உச்சமடைய செலவழிக்கலாம். 30 நிமிடம் முன்விளையாட்டில். எஞ்சியநேரம் இயக்கத்தில். உரையாடல்களே தேவையில்லை
இணையத்தை வெற்றிகரமாக கையாளும் இயக்குனர் நான். நான் ஒருநாளில் 20 நிமிடங்களே இணையத்தில் இருக்கிறேன். வீடியோ பார்ப்பேன். பின் அதுபோல் செய்து பார்ப்பேன்
இயக்குவதற்கான தகவல்தேவைகளுக்கு கூகிளை பயன்படுத்துவது மட்டுமே மற்றபடி எனக்கும் இணையத்துக்குமான உறவு. அப்படி இல்லாவிட்டால் என்னால் இத்தனை படம் எடுத்திருக்க முடியாதென்பதை உணர்வீர்கள்
சிலவருடம் முன்பு எனக்கு ஒரு தயாரிப்பாளர் விலையுயர்ந்த லேப்டாப் ஒன்றை தந்தார். பத்துநாள் பயன்படுத்தினேன். என்னை அது அடிமைப்படுத்துவதை கண்டேன். நண்பருக்குக்  கொடுத்துவிட்டேன். [அவர் அதை நல்லவிலைக்கு விற்றுவிட்டார்] நான் வைத்திருப்பது படம் மட்டுமே பார்க்க உதவக்கூடிய அடிப்படை தொலைக்காட்சி. 
*
இணையத்தை பயன்படுத்தலாம். சில விதிகள்
1. அதை முழு வீடியோக்களை பிரசுரிக்க பயன்படுத்தவேண்டாம். அது நீங்கள் எடுப்பதை பிறர் காண்பதற்கு நீங்கள் ஒரு கொடியை நட்டுவைக்கும் குன்றாக மட்டுமே இருக்கவேண்டும்.
2 அதற்கு வரும் பிகர்களின் எண்ணிக்கையை ஒரு பொருட்டாகவே எண்ணாதீர்கள். கீழே பார்க்கவே வேண்டாம்
3. அதில் கதை வாசிக்காதீர்கள். அதன் எதிர்வினைகளை வாசிக்கவே கூடாது. வேறெந்த இணையப் பக்கத்திலும் எதிர்வினை அளிக்கவேண்டாம்
4. இணையத்தை சரோஜாதேவி கதை எழுத பயன்படுத்தவேண்டாம். அப்படி எழுதி அடைவது என்ன?

ஙே




எச்சரிக்கை: இந்த பதிவில் இருக்கும் அனைத்தும் கற்பனையே. இதற்கும் இந்த http://www.jeyamohan.in/?p=61056 பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிக...!