நண்பர்களே, நாம அனைவரும் பனங்காட்டு நரியுடன் நட்பு வைத்து ஒன்னரை ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. முழுக்க முழுக்க தமிழில், இலவசமாக ஒரு நாதாரியை திட்டவும்,காறி துப்பவும் இவருடன் நட்பு வைக்கப்பட்டது.
இவருடன் நட்பு வைக்க துவங்கிய சில வாரங்களிலேயே லட்சக்கணக்கில் வாசகர்கள் குவிந்தனர் . பல பங்களிப்பாளர்கள் சாட்டில் திட்டியது போக அவரை திட்டி ஈமெயில் கூட அனுப்ப ஆரம்பித்தனர் . இன்றும் அவரை திட்டி
சராசரியாக நூற்றைம்பது ஈமெயில்கள் அனுப்பப்படுகிறது .
ஆனால் இவர் போதையில் இருக்கும்போது மட்டுமே நம்மால் நிம்மதியாக இருக்க முடிகிறது. இவர் தெளிந்துவிட்டால் நம் கதி அதோகதிதான்.
திடீரென்று ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் பாத்திருக்கியா மச்சி என்று ஆரம்பிப்பார், உடனே தெளிய ஆரம்பித்து விட்டது என்று தப்பிவிடுவது உத்தமம். புரியாமல் சரி சொல்லுன்னு சொல்லிட்டீங்கன்னா அவ்வளவுதான்... இனி ராயபுரம் ரவுடிகளுடன் கஞ்சா அடித்தது முதல் அரசியல்வாதிகளுடன் கொள்ளையடித்தது வரை பேச தொடங்குவார்.
கவிதைன்னா ...,ரெண்டு வரிக்குள ஒரு பிரம்மாண்டம் இருக்கணும், வாழ்க்கையோட இயலாமையும் ,சந்தோஷத்தையும்,துக்கத்தையும், படிக்கிறவங்களுக்கு கொண்டு வரணும்,அதுக்கு பேர் தான் கவிதை. இப்படி யாருக்குமே புரியாத பாஷையில் கவிதைக்கு விளக்கம் கொடுப்பார்.
இடைஇடையே ’பழம் பெரும்’சினிமா நடிகைகளின் புள்ளிவிபரங்கள் வேறு. அப்படியே முழுதும் தெளிந்து விட்டால் உடனே ஆரண்ய காண்டம் பார்த்தீங்களா? கோஹினூர் காண்டம் பாத்தீங்களா என்று பஸ்விட்டு எல்லாரையும் அலறி ஓட வைப்பார், இல்லையென்றால் பின்நவீனத்துவத்தைப் பற்றி முன்நவீனத்துவ முறையில் விளக்கி பதிவெழுதி அனைவரையும் கதற வைப்பார்.
இதிலிருந்து பதிவர்கள், பொதுமக்கள் அனைவரையும் காப்பாற்றும் பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்திருக்கிறார்கள், (யார்? யாரோ!)
அதனால்தான் இவருக்கு ஊத்திக்கொடுத்து ஊத்திக்கொடுத்து இவரது ப்ளாக் User name-யை மறக்க வைத்தோம். அப்பாடின்னு கொஞ்சநாள் நிம்மதியாக இருந்தோம். அப்போது நரி வல்லாரை கீரை சாப்பிட்டால் ஞாபகசக்தி அதிகமாகும்னு அதை சாப்பிட்டு வல்லாரை கீரைக்கு கெட்ட பேர் உண்டு பண்ணினது தான் மிச்சம்.ஆனால் ஒருநாள் அவரது போதை தெளிந்து தில்லுமுல்லு என்ற புதிய ப்ளாக் ஆரமித்துவிட்டார். அதனால் நம் தமிழ் மக்களின் நலன் கருதி இவரை தெளிய விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதனால் இவர் தெளியாமல் இருக்க வைக்க சரக்கு வாங்கி கொடுத்து, ஊறுகாய் வாங்கி கொடுத்து நமக்கு நஷ்டம் தான் ஏற்பட்டுடுள்ளது . எவ்வளவோ , விளம்பரங்கள் போட்டும் , இந்த நட்டத்தை ஈடு செய்ய இயலவில்லை .
நரியின் குடி அதிகமாகி உள்ளதால் அவர் போதைக்கு மாதாமாதம் கிட்டத்தட்ட ஆயிரம் டாலர் செலவு செய்ய வேண்டி உள்ளது. இதனால வாசகர்களிடம் பிச்சை எடுப்பதை தவிர வேறு வழி இல்லை. உங்களால் முடிந்த பிச்சையை சத்யம் தியேட்டர் வாசலில் பிச்சை எடுக்கும் மங்குனி தட்டிலோ, பரங்கிமலை ஜோதி வாசலில் பிச்சை எடுக்கும் வெறும்பையன் தட்டிலோ போடும்படி கேட்டு கொள்கிறோம். ஒரு வேளை ஓசி சோறு போட்டால் உங்கள் வீடு தேடி வந்து ரமேஷ் பிச்சை எடுக்கும் வசதியும் செய்து உள்ளோம். மேலும் 24 மணி நேரத்திற்கும் ஊத்திக் கொடுக்க கேப்டனிடம் பயிற்சி பெற்ற ஒருவரை நியமிக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம்!ஜூலை 31 க்குள் ஆயிரம் டாலர் திரட்ட முடியவில்லை என்றால், ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் நரிக்கு சரக்கு வாங்கி தருவதை நிறுத்த முடிவு செய்துள்ளோம்.
இது போல ஒவ்வொரு மாதமும் ஆயிரம் டாலர் நிதி உதவி கிடைத்தால் மட்டுமே நம்மால் நரிக்கு சரக்கு வாங்கி கொடுத்து அவருக்கு போதை தெளியாமல் வைக்க முடியும். எவ்வளவோ உதவிகள் அளித்த வாசகர்கள், இந்த நிதி உதவியிலும் பங்களிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். அது ஒரு டாலரோ, நூறு டாலரோ, எவ்வளவாக இருந்தாலும் தயவு செய்து பிச்சையாகவோ மேலே குறிப்பிட்ட தளங்களில் உள்ள பேபால் லிங்கிலோ அனுப்பவும். உங்கள் வங்கி அல்லது பேபால் கணக்கில் “நரி வளர்ச்சி நிதி” என்று தான் பெயர் வருமே தவிர வேறு எந்த தகவலும் வராது (இது உங்கள் நன்மைக்காக).
ஆண்டவா நாட்டு மக்களை நீ காப்பாற்று. நரியிடமிருந்து பதிவுலகை நாங்கள் காப்பாற்றுகிறோம்.தயவு செய்து பங்களியுங்கள், நரிக்கு போதை தெளியாமல் இந்த நாட்டை காப்பாற்ற உதவுங்கள்..


