உள்ளே வந்த ரமேஷ்...அந்த பெண் மயக்கமாகி கிடப்பதைக்கண்டு அதிர்ச்சியானான்... அவனுக்கு ஒன்றும் புரியவில்லை...அவர்கள் ஏன் ஓடினார்கள்...இந்த பெண் ஏன் இங்கு வந்தது? எப்படி மயக்கமானது? அந்த விளக்கு என்ன ஆச்சு? இப்படி பல கேள்விகள் ஓடியது ரமேசின் மனதில்...கொஞ்ச நேரம் கேள்விகளை ஒத்திவைத்து விட்டு அந்த பெண் முகத்தில் தண்ணீர் தெளிப்பதற்காக தண்ணீர் எடுக்க உள்ளே போனான்...
அவன் தண்ணீர் எடுத்து வருவதற்குள் பாண்டியன் ஏன் ஓடினான் என்று பாண்டியனிடம் கேட்டுவிடுவோம்......
வீட்டை விட்டு வெகுதூரம் வந்ததும் பாண்டியன் பின்னால் வெட்ட போகும் ஆடு போலவே வந்த செல்வா கேட்டான்
“சாமி..என்னாச்சு? இப்பவாது சொல்லுங்களே”
“அத ஏன்டா கேக்குற?” என்று கூறி விட்டு விளக்கை தேய்த்ததையும்..ராம்ஸ் வந்ததையும் சொல்லி முடித்தார் பாண்டியன்.
“அது சரி சாமி...அப்பிடி என்ன வரம் கேட்டீங்க? அந்த பூதம் அதான் அந்த ராம்ஸ் ஏன் துரத்திச்சு?” என்றான் செல்வா. பாண்டியனும் சொல்ல ஆரம்பித்தார்.
“ராம்ஸ் எனக்கு ஒரு வரம் வேணும்”
“அடங்கொன்னியா...உனக்குமாடா? நான் என்ன வரம் இஸ்யூ பண்ற பேங்கா நடத்துறேன்.. சரி.. சீக்கிரம் கேள்றா” என்றது ராம்ஸ்.
“அது ஒன்னும் பெருசா இல்லை ராம்ஸ்! இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடி கேரளா பத்மநாபா கோவில்ல தங்கமா எடுத்தாங்கல்ல!” என்றார் பாண்டியன்.
“ஆமாடா... அதுக்கு என்ன இப்ப? அந்த தங்கமெல்லாம் லவட்டிகிட்டு வர சொல்றியா”
“அது இல்லை ராம்ஸ்... அந்த தங்கமெல்லாம் மொத்தம் எத்தனை பவனோ...அதவிட ஒரு பவன் தங்கம் எனக்கு கூட வேணும்” என்றார் பாண்டியன்!
“டேய்ய்...உனக்கெல்லாம் இது நியாயமாடா? அடுக்குமாடா? அட நாயே..அத எண்ணி முடிக்கிறதுக்குள்ள உன் ஆயுசு முடிஞ்சிருமேடா? அதையெல்லாம் பஸ்பமாக்கி சாப்டவே உனக்கு இன்னொரு ஆயுசு வேணும்டா.. இன்னும் அஞ்சு நிமிஷம் இங்க நின்ன...கொரவளைய கடிச்சு துப்பிபுடுவேன் ராஸ்கோல்...ஓடிப்போயிரு... தங்கமாம்..தகரமாம்.... ஏதோ உன் ரேஞ்சுக்கு கடலை உருண்டை கேளு. ரெண்டு கம்மர்கட் கேளு...படுவா கிலோ கணக்குல தங்கம் கேக்குற? டேய்ய்..இன்னும் ஓடலியா நீ” என்று பயங்கரமாக கத்தியது ராம்ஸ்.
இந்த ஃபிளாஷ்பேக்கை பாண்டியன் சொல்லி முடித்ததும், செல்வா “அட போங்க சாமி..இதுக்கு ஏன் பூதத்துகிட்ட கேக்கணும் என்கிட்டே ஒரு ஐடியா இருக்கே” என்றான்.
பாண்டியனும் ஆர்வமாக “அட.. உன்னைய என்னமோ நினைச்சேன்டா..சொல்றா” என்றதும் செல்வா சொன்னான் “நான் வேணா அந்த கோவிலுக்கு போய் பழைய சிலைகளுக்கு பேரீச்சம் பழம்னு கூவுறேன்.. அவங்களும் ஆசைப்பட்டு அந்த தங்க சிலையெல்லாம் நம்மகிட்ட கொடுத்துருவாங்கல்ல” என்றான்!
“டேய்ய்... ஏன்டா இப்படி படுத்துற? வாய மூடிகிட்டு வர்றதுனா வா..இல்லை நான் கொலைகேசுல உள்ள போகணும்” என்று கூறிக்கொண்டே அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார் பாண்டியன்!
இந்தபக்கம் வீட்டில்.....
மயக்கமாக இருக்கும் அந்த பெண் முகத்தில் ரமேஷ் தண்ணீர் தெளித்ததும்... மயக்கம் தெளிந்த அந்த பெண் ரமேஷை பார்த்து குழம்பினாள்.
“நீங்க....? என் எதிர்வீடுதானே? நீங்க எப்பிடி இங்க? அவன் எங்க?” என்றாள்.
இதைக்கேட்ட ரமேஷ் “அவங்க எதனாலயோ ஓடிட்டாங்க. நீ தனியாக நடந்து வருவதை பார்த்ததும் உன்னை ஃபாலோ பண்ணி வந்தேன்” என்றான்.
“நீங்க ஏன் என்னை ஃபாலோ பண்ணனும்” என்றாள் அவள்.
இதைக்கேட்ட ரமேஷ் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு... “இதப்பாரு இதுவரை உன் பேர் கூட எனக்கு தெரியாது.. ஆனா நான் உன்னை விரும்புறேன்..அத சொல்லத்தான் வந்தேன்” என்றான்.
இதைக்கேட்டதும் அதிர்ச்சியான அந்தப்பெண், “என்னை மன்னிச்சிருங்க.. அந்த நோட்டை எடுத்து பாருங்க உங்களுக்கே புரியும்” என்று தூரத்தில் கிடந்த அவள் நோட்டை காட்டினாள்.
நோட்டை எடுத்து புரட்டிய முதல் பக்கத்திலேயே.....
அன்பான ஜோதிக்கு ஜெயந்தின் காதல் அஞ்சலிகள்.....என்று இருந்தது!
அடுத்தடுத்த பக்கங்களை புரட்டிய ரமேஷ் காதல் கவிதைகளை பார்த்து வெறுத்துப்போன ரமேஷ்... அந்த பெண்ணிடம் ஒன்றும் சொல்லாமல் நோட்டை கொடுத்துவிட்டு ராம்சை திட்டுவதற்கு விளக்கை தேடினான். கடைசியில் மாடியில் இருப்பதை பார்த்ததும்.. அதை எடுத்து தேய்க்க ஆரம்பித்தான்.
உடனே வெளியே வந்த ராம்ஸ் “ஐயோ ஐயோ...இவனுக தொல்ல தாங்கமுடியலடா சாமி.. இப்ப என்னடா?” என்றது.
“போ ராம்ஸ் என்ன ஏமாத்திட்ட... அந்த பொண்ணு யாரோ ஜெயந்தாம் அவன் லவ் பண்ணுதாம்” என்றான்...
“படுவா தெரியுண்டா... அதுக்கு ஒரு வழி பண்ணிட்டேன்..கொஞ்சம் பொறு” என்றது ராம்ஸ்... இப்படி சொல்லிக்கொண்டிருக்கும்போதே....
வாசலில் கட முடா என சத்தம்.... பார்த்தால்.... முகம் முழுவதும் தாடி, அழுக்கு சட்டை, குளித்தே பல மாதங்கள் ஆனது போன்ற ஒரு தோற்றம், டாஸ்மாக்கில் இருந்து தள்ளாடி வெளியே வருபவனை போன்ற ஒரு நடையுடன் ஒரு பெரிய உருவம் கேட்டை அபூர்வ ராகங்கள் ரஜினி ஸ்டைலில் திறந்து உள்ள நுழைந்தது
ஆனால்..அந்த உருவத்தை வைத்துக்கொண்டு அந்த சின்ன வழியாக வரமுடியாமல்.. மிகவும் சிரமப்பட்டு காம்பவுண்ட் சுவரை ஏறிக்குதித்து வந்தான்..
அவனைப்பார்த்ததும்...ஓடிச்சென்ற ஜோதி “ஜெயந்த் என்ன கோலம் இது? என்னாச்சு உங்களுக்கு?” என்றாள்.
“ஜோதி... என்ன மன்னிச்சிரும்மா... உனக்கான ஜோடி நான் இல்லை... அந்த பையன் உன்கிட்ட புரபோஸ் பண்ணும்போது மறைஞ்சிருந்து கேட்டேன்... அவன்தாம்மா உனக்கு ஏத்த ஜோடி.. நான் இல்லைமா” என்றான் ஜெயந்த்!
“ஏன்..ஏன்..ஜெயந்த் இப்பிடி பேசுறீங்க” என்றாள் ஜோதி.
“ஏன்னா... எனக்கு மீல்சாலே ஹோல்சா போச்சோங்ர புது வியாதி இருக்கு. இன்னும் கொஞ்ச நாள்தான் உயிரோட இருப்பேன்” என்று கூறிக்கொண்டே அருகில் வந்த ரமேஷின் கைகளை ஜோதியோடு சேர்த்துவிட்டு.. ஜோதியின் பதிலை எதிர்பாராமல் வெளியே சென்றான்..மன்னிக்கவும்... ஏறிக்குதித்து சென்றான் ஜெயந்த்.
ரமேஷும் ஜோதியும் அதிர்ச்சியோடு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருக்க... ராம்ஸ் அவர்களை சந்தோசமாக பார்த்தது!
வெளியே வந்த ஜெயந்த், வேகமாக ஒரு ஓய்வறை சென்று ஓட்டு தாடியை எடுத்துவிட்டு ஆடைகளை மாற்றி.. புதிய தோற்றத்துடன் வெளியே வந்தான்...
“அப்பாடி...ஒரு வழியா ஜோதிய கழட்டி விட்டாச்சு! அதுக்கும் ஒரு இளிச்சவாயன் தோதா கெடச்சான்.. இத்தன நாள் சாட்ல பேசுன ஜெயஸ்ரீய இன்னிக்கு பார்க்கபோறேன்...பணக்காரி.. ஒருவழியா நம்ம லைப் செட்டில்” என்று நினைத்துக்கொண்டே ஜெயஸ்ரீய பார்க்கும் ஆர்வத்தில் சென்றான் ஜெயந்த்!
ஜோதியின் கைகளில் இருந்து கையை எடுத்த ரமேஷ்..கொஞ்சம் இரு என்று கூறிவிட்டு மேலே ராம்சை பார்க்க சென்றான்.. அங்கு அமைதியாக நின்ற ராம்சிடம்.. “எப்பிடி ராம்ஸ் இது?” என்றான்.
“படுவா..எல்லாம் உனக்காக நான் செய்த வேளை.. அந்த ஜெயந்த் மொன்ன நாயி.. ஒரு கழுதை வந்து கவிதான்னு பேர் போட்டு சாட்ல வந்தாகூட பல்லு இளிக்குது அதான் இப்பிடி ஒரு செட்டப்பு... அந்த நாயி ஜெயஸ்ரீய தேடிப்போகுது...அங்க ஜெயஸ்ரீயும் இருக்காது செத்தஸ்ரீயும் இருக்காது.. என்ஜாய்ய்ய்” என்று கூறிக்கொண்டே விளக்கினுள் சென்று மறைந்தது!
விளக்கை கையில் எடுத்துக்கொண்ட ரமேஷ்... ஜோதியையும் அழைத்துக்கொண்டு வெளியில் வந்தான்... வெளியேறும் முன் மூலையில் ஒரு கிணறை பார்த்தவன்...ஒரு முடிவு செய்தவாறு அங்கு சென்று அந்த விளக்கை கிணற்றுக்குள் போட்டான்! இதை புரியாமல் பார்த்த ஜோதியை சிரித்துக்கொண்டே ஆதரவாக அணைத்துக்கொண்டே...நடக்க ஆரம்பித்தான் ரமேஷ்!
கிணற்றுக்குள் மூழ்கிய விளக்கினில் இருந்து ராம்ஸ் நினைத்தது...
“அடங்கொன்னியா... இவ்ளோ உதவி செஞ்சோம்? பொசுக்குன்னு உள்ள தூக்கி போட்டு போயிட்டானே? அதுசரி.... ஃபிகர பார்த்ததும் ஃபிரண்ட கட் பண்ற கேவலமான பயலுகதானே இந்த மனுசப்பயலுக...முன்னூறு வருசமா குளிக்காம இருந்த என்னை இப்ப குளிக்க வச்சு ஒரு கட்டிங் அடிக்க யோசிக்க வச்சிட்டானே” என்று நினைத்தவாறே தண்ணீருக்குள் தன் தூக்கத்தை தொடர்ந்தது ராம்ஸ்!
(முற்றும்)







