Showing posts with label எஸ். கே. Show all posts
Showing posts with label எஸ். கே. Show all posts

Wednesday, June 22, 2011

சின்னஞ்சிறு செல்வா.....!

நாம இன்னைக்கு செல்வாவோட சின்ன வயசு அனுபவங்களை பார்க்கப்போறோம்! ரெடியா?


செல்வா அவங்கப்பாவோட வாட்சை உடைச்சிட்டாரு ஆனா உண்மையை ஒத்துக்கவே இல்ல. அதனால செல்வாவுக்கு புரிய வைக்கனும்னு கதை சொன்னாரு, “செல்வா, ஜார்ஜ் வாஷிங்டன் அவர் அப்பாவோட மரத்தை வெட்டிட்டாரு, ஆனா அந்த உண்மையை ஒத்துகிட்டாரு. அவங்கப்பாவும் அவரை தண்டிக்கலை.. ஏன் தெரியுதா?”
“ஆங்…அவர் கையில இன்னுமும் கோடாலி இருக்குல்ல!!”

செல்வா அவங்க வீட்டு சுவத்துல படம் வரைஞ்சுகிட்டு இருந்தார். அவங்கம்மா கோபமா ”டேய் என்னடா சுவத்துலயா வரைவாய்?”னு கோபமா கேட்டாங்க.
அதுக்கு செல்வா கேட்டார், “அம்மா நீதானே இது டிராயிங் ரூமுன்னு சொன்னேன்”

டீச்சர்: செல்வா உன் உடம்பில எத்தனை எலும்புங்க இருக்கு?
செல்வா: 208
டீச்சர்: தப்பு, 207தான்.
செல்வா: ஆமா டீச்சர், ஆனா நான் மத்தியானம் லஞ்ச்ல ஒரு கோழிக் காலை முழுங்கிட்டேன்.

அப்பா எனக்கு ஐஸ்கிரீம் வேணும்
செல்வா குளிர்காலத்துல அடிக்கடி ஐஸ்கிரீம் சாப்பிடக் கூடாதுப்பா
அப்படின்னா நான் அதை சூடு பண்ணி சாப்பிடறேன்

செல்வா என்ன ஹோம்வொர்க் உங்கப்பா கையெழுத்துல இருக்கு?
நான் எங்கப்பா பேனா யூஸ் பண்ணேன் மிஸ்

”டேய் விஜய் சனிக்கிழமை எங்க வீட்ல பார்ட்டி இருக்கு அதுக்கு வருவியா?”
”வரேண்டா செல்வா உங்க வீட்டு அட்ரஸ் சொல்லு”
”நம்பர் 5 காமராஜர் வீதி- அங்க வந்து கதவை தலையால தட்டு”
”ஏண்டா என் கையில தட்டுனா என்ன?”
”டேய் நீ என்ன வெறுங்கையோடவா வரபோற?”
”!!!”

"ஏண்டா நேத்து ஸ்கூலுக்கு வரலை"
"கை உடைஞ்சிடுச்சு சார்"
"எப்படிடா கை உடைஞ்சது"
"டாக்டர் பிரிஸ்கிரிஸ்ப்சனை ஃபாலோ பண்ண சொன்னார் அதை செஞ்சேன் சார்"
"அப்புறம் ஏண்டா கை உடைஞ்சது"
"பிரிஸ்கிரிஸ்ப்சனை ஜன்னல் வழியா பறந்துச்சு அதை ஃபாலோ பண்ணேன்."

டீச்சர்: அக்பர் எவ்வளவு காலம் ஆட்சி செய்தார்?
செல்வா: 14ஆம் பக்கத்தில இருந்து 25ஆம் பக்கம் வரைக்கும் சார்!

“டேய் செல்வா அது என்ன நாய்டா?”
”அது போலீஸ் நாய்”
“பார்த்தா அப்படி தெரியலியே”
”அது ரகசிய போலீஸ்”

”டேய் நான் நேத்து அஞ்சு ஈயை சாவடிச்சேன் அதுல 3 ஆம்பள ஈ, 2 பொம்பள ஈ”
”எப்படி ஆம்பள ஈ பொம்பள ஈன்னு கண்டுபுடிச்சே?”
“அது ரொம்ப ஈஸி. 3 ஈ சேவிங் மிஷின் மேல உட்கார்ந்து இருந்தது, 2 லிப்ஸ்டிக் மேல உட்கார்ந்து இருந்தது”

கணக்கு கிளாஸ்ல செல்வா பாடத்தை கவனிக்காம இருந்தார். உடனே டீச்சர் கோபமாகி, “செல்வா! 4, 9, 16, 25 –ன்னா என்ன?
செல்வா உடனே வேகமா பதில் சொன்னார், “டிஸ்கவரி, சன்மியூசிக், போகோ அப்புறம் டென்ஸ்போர்ட்ஸ்!”

”டேய் எங்கடா போறே?”
”டீவி பார்க்க போறேம்மா”
”சரி ரொம்ப பக்கத்துல போய் பார்க்காதே”
அப்போ செல்வா அண்ணன் வெளியே போனான்.
”டேய் அண்ணா எங்கடா போறே?”
”சந்திர கிரகணம் பார்க்க போறேன்”
”சரி ரொம்ப பக்கத்துல போய் பார்க்காதே”

செல்வா வீட்டிற்கு வெளியே நாய் கூட விளையாடிக் கொண்டிருந்தார். அப்போ தபால்காரர் வந்தார். அங்க நாய் இருப்பதை பார்த்துட்டு கேட்டார்
”தம்பி உன் நாய் கடிக்குமா?”
“இல்லை கடிக்காது”
ஆனால் தபால்காரர் காம்பவுண்டிற்குள் வந்தபோது நாய் கடித்து விட்டது
“ஏம்பா உன் நாய் கடிக்காதுன்னு சொன்னியே?”
“ஆமா என் நாய் கடிக்காதுதான், ஆனா இது என் நாய் இல்லையே”

Wednesday, June 8, 2011

ஒரு உண்மை காதல் கதையும், ஒரு சேல்ஸ்மேனும்

ஒரு உண்மை காதல் கதை

இக்கதை உங்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கலாம்

ஒரு அழகான கிராமம். அந்த கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்..அவளைப் போல் ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள்.

இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது.இதனால் வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் காணாமலும் போய்விட்டனர். உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.

அதன் பிறகு அவர்கள் அந்த்க் காதலை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.அதைப் பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப் பட்ட ஊர் மக்கள் அந்தக் காதல் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு லாரி மோதி அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே உயிர் துறந்தான்.

உடனே அந்தப் பெண்னும் மனநிலை பாதிக்கப்பட்டாள். ரொம்ப நாட்களுக்குப் பிறகு நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன் வசித்து வந்தாள்.

திடீரென்று ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள். அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும் இரத்த்க் கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது, இல்லா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது. அவள் தாய் கனவை மதிக்கவில்லை.

அடுத்த நாள் அதே தேவதை அந்தப் பெண்னின் தந்தையிடமும் கனவில் எச்சரித்தது.ஆனால் அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை அடுத்த நாள் அப்பெண்ணின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது.அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள். உடனே அந்தப் பெண்னும் அதைத் துவைத்தாள்.

இருந்தும் தேவதை அடுத்த நாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை இதனால் வேறுவிதமான விளைவுகள் ஏற்படும் என்று
கடைசி முறையாக எச்சரித்தது. மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள். இருந்தும் கறை போகவில்லை.

அடுத்த நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப்பெண் கதவைத் திறந்தாள். அப்போது கனவில் வரும் அதே தேவதை நின்று கொண்டிருந்தாள். அவள் முகம் கனவில் வருவதைப் போல் கனிவாக இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது. உடனே இவள் பயத்தினால் அலறி மயங்கி விட்டாள்.

அவளை எழுப்பி கையில் ஒரு பொருளை கொடுத்தது. என்ன இது கேட்டதற்கு...

அந்தத் தேவதை கூறியது,"கறை கெட்டது! இந்தா பவர் சோப் போட்டு தோய்ச்சா எல்லா கறையும் போயிடும்" என்றது.





---------------------------------------------------------------------------

ஒரு பேரார்வமிக்க சேல்ஸ்மேன்

ஒரு புது வாக்வம் கிளீனர் சேல்ஸ்மேன் முத தடவையா வியாபரத்துக்கு போறதுன்னால ரொம்ப ஆர்வமா இருந்தார். அவர் ஒரு தெருவுல இருந்த முதல் வீட்டு கதவை தட்டுனார். ஒரு பெண்மணி கதவை திறந்தாங்க.

அவங்க ஒரு வார்த்தை பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே இந்த சேல்ஸ்மேன் ரொம்ப ஆர்வமா (அவர் கையில வச்சிருந்த ஒரு பிளாஸ்டிக் பையிலிருந்த) சாணியெல்லாத்தையும் அவங்க வீட்டு வராண்டாவில கொட்டிட்டு ரொம்ப பரவசத்தோட சொன்னாரு...,

“மேடம், நான் மட்டும் இதையெல்லாம் இந்த புது பவர்ஃபுல் வாக்வம் கிளீனரலாம் சுத்தம் செய்யலைன்னா, நானே இந்த சாணியெல்லாத்தையும் தின்னுடுவேன்”

அந்த பெண்மணி கேட்டாங்க, “உங்களுக்கு இதுக்கு தொட்டுக்க ஊறுகாய் வேணுமா இல்ல சாஸ் வேணுமா?”

குழப்பமான சேல்ஸ்மேன் கேட்டார் “ஏன் மேடம் அப்படி கேட்கறீங்க?”

“வீட்லதான் கரண்டு இல்லையே!”

Tuesday, March 1, 2011

ஜோக்ஸ் அபார்ட்

இளைஞன்: சார், டைம் என்னாச்சு?

வயதானவர்: சொல்ல முடியாது.

இளைஞன்: ஏன் சார்? டைம் சொல்றதுனால உங்களுக்கு என்ன நஷ்டமாகப் போகுது?

வயதானவர்: ஆமா, உனக்கு டைம் சொன்னா எனக்கு நஷ்டம்தான் ஆகும்!

இளைஞன்: அது எப்படி நஷ்டமாகும் சொல்லுங்க?

வயதானவர் : இதப்பாரு, நான் உனக்கு டைம் சொன்னா நீ எனக்கு நன்றி சொல்லுவ. ஒருவேளை நாளைக்கும் நீ என் கிட்ட டைம் கேட்கலாம்!

இளைஞன்: வாய்ப்பிருக்கு!.

வயதானவர்: இரண்டு மூணு தடவையோ அதுக்கு மேலேயோ நாம சந்திக்கலாம். நீங்க என் பேரு அட்ரஸ் கேட்கலாம்!

இளைஞன்: ஆமா அதுக்கும் வாய்ப்பிருக்கு.

வயதானவர்: ஒரு நாள் நீ என் வீட்டு வரலாம். சும்மா இந்த பக்கம் வந்தேன் அப்படியே பார்த்துட்டு போலாம்னு நினைச்சேன்னு சொல்லலாம். நான் உன்னை உபசரிக்க காபி தரலாம். என்னோட உபசரிப்ப பார்த்துட்டு நீ மறுபடியும் வர முயற்சி பண்ணலாம். இந்த தடவை நான் காபியை பாராட்டி யார் இதை போட்டதுனு நீ கேட்பே!

இளைஞன்: ஆமா செய்யலாம்!

வயதானவர்: அப்புறம் நான் அது என் பொண்ணு போட்டதுன்னு சொல்வேன். நான் என் அழகான பொண்ணை உனக்கு அறிமுகப்படுத்துவேன். நீ உடனே ஜொள்ளு விடுவே.

இளைஞன்: (புன்னகைக்கிறார்)

வயதானவர்: அப்ப இருந்து நீ என் பொண்ணை அடிக்கடி பார்க்க முயற்சிப்ப. நீ அவளை படத்துக்கு கூட்டிட்டு போவேன் வெளியே வேற எங்கயாவது கூட்டிட்டு போவே.

இளைஞன்: (புன்னகைக்கிறார்)

வயதானவர்: என் பொண்ணு உன்னை விரும்ப ஆரம்பிக்கலாம். உனக்காக காத்திருக்க தொடங்கலாம். தொடர்ந்து சந்திச்ச பிறகு நீ அவளை லவ் பண்ணி காதலை அவகிட்ட சொல்லுவே. இரண்டு பேரும் லவ் பண்ணுவீங்க.

இளைஞன்: (மீண்டும் புன்னகைக்கிறார்)

வயதானவர்: ஒரு நாள் நீயும் அவளும் என் கிட்ட வந்து உங்க காதலை பத்தி சொல்லி கல்யாணம் பண்ண சம்மதம் கேப்பீங்க!

இளைஞன்: ஆமா சார்! ஆனா இதுக்கும் டைம் கேட்டதுக்கு என்ன சம்பந்தம்?

வயதானவர்: (கோபமாக) கொய்யாலே! ஒரு வாட்ச் கூட சொந்தமா இல்லாதவனுக்கெல்லாம் என் பொண்ணை கல்யாணம் பண்ணி குடுக்க முடியாதுடா..

************************************************************
  ஒரு பணக்காரர் தன்னோட பெரிய கார்ல போய்கிட்டு இருந்தார். வழியில் ரோட்டோரமா ஏழ்மையான இரண்டு பேர் உட்கார்ந்து புல்லை தின்னுகிட்டு இருந்ததை பார்த்தார். உடனே அவர் ஆச்சரியமாகி காரை நிறுத்தி இறங்கி அவங்ககிட்ட போனார்.

அவர் ஒருத்தர்கிட்ட கேட்டார் “ஏம்பா நீங்க புல்லை தின்னுறீங்க?”

ஒருத்தர் சொன்னாரு, “ஐயா, எங்க கிட்ட சாப்பாடு வாங்க காசில்ல அதான் புல்லை தின்னுறோம்”

அந்த பணக்காரர் சொன்னார் “அப்படியா, சரி என் வீட்டுக்கு வாங்க நான் சாப்பாடு தரேன்”

ஒருத்தர் சொன்னார், “ஐயா எனக்கு மனைவியும் 2 குழந்தைகளும் வேற இருக்காங்க அவங்க அந்த மரத்தடியில் இருக்காங்க”

”சரி அவங்களையும் கூட்டிட்டு வாங்க!” சொல்லிவிட்டு பக்கத்திலிருந்தவரிடமும் “நீங்களும் வாங்க” என்று சொன்னார் அந்த பணக்காரர்.

“ஐயா எனக்கு மனைவியும் ஆறு குழந்தைகளும் இருக்காங்க!”

“பரவாயில்லை, எல்லோரையும் கூட்டிட்டு வாங்க”

கார்ல எல்லோரையும் கஷ்டப்பட்டு ஏத்திக்கிட்டு அவர் வீட்டுக்கு கூட்டிட்டு போனார் அந்த பணக்காரர். போற வழியில் ஒரு ஏழை சொன்னார் “ஐயா உங்களுக்கு பெரிய மனசு. எங்க எல்லோரையும் உங்க கூட கூட்டிட்டு போறீங்களே. ரொம்ப நன்றி”

பணக்காரர் சொன்னார், “பரவாயில்லை உங்களை கூட்டிட்டு போறது எனக்கும் சந்தோசம்தான். என் வீடு உங்களுக்கு ரொம்ப புடிக்கும். அங்க ஒரு அடிக்கு புல்லுங்க வளர்ந்திருக்கு!”

************************************************************

ஒரு துணிக்கடை. ஒரு அழகான பொண்ணு கடைக்குள்ள போய் கல்லாவில் இருந்த ஆள்கிட்ட கேட்டாள், “நான் ஒரு ரா மெடிரீயல் வாங்கலாம்னு இருக்கேன், எவ்வளவு செலவாகும்?” அங்க இருந்த கேஷியர் ஜொள்ளுப் பார்டி. ”ஒரு அடி துணிக்கு ஒரு முத்தம் கொடுங்க” அப்படின்னான். அந்தப் பொண்ணு “அப்படியா நல்லது. நான் ஒரு பத்தடி நீளம் எடுப்பேன்” அப்படின்னு சொல்லிட்டு துணி எடுக்க போனாள். துணியெல்லாம் எடுத்துட்டு கேஷியர்கிட்ட போய் சொன்னா ”என் தாத்தா பில் கட்டுவார்”

************************************************************
ஒரு கோகோகோலா சேல்ஸ்மேன் சவுதி அரபியேல இருந்து சோகமாக வந்தார். அவர் நண்பர் கேட்டார், ”ஏங்க அரபியர்கிட்ட உங்க வியாபாரம் நல்லா இல்லையான்னு” கேட்டார்.
”நான் அங்க போனப்ப அங்க நல்லா வியாபாரம் பண்ணலாம்னு நம்பிக்கையோடத்தான் இருந்தேன். ஆனா எனக்கு அரபி பேசத் தெரியாது. அதனால விசயத்தை 3 போஸ்டர் மூலமா சொல்லலாம்னு நினைச்சேன்.
முதல் போஸ்டர்ல ஒரு ஆள் கடும் பாலைவனத்தில், ரொம்ப தாகத்தோட மயங்கி இருப்பான்.
இரண்டாவது போஸ்டர்ல, அவன் கோகோகோலா குடிப்பான்.
மூன்றாவது போஸ்டர்ல அந்த ஆள் புத்துணர்ச்சியோட இருப்பான்.

நான் இந்த மூணு போஸ்டர்களையும் லைனா எல்லா இடத்திலும் ஒட்டினேன்.”

“அட! நல்ல ஐடியா தானே, அப்புறம் ஏன் வேலைக்கு ஆவாம போச்சு?”

“அதுவந்து….. எனக்கு அரபி பேச தெரியாதது மட்டுமில்ல, அரபிக்காரங்க எல்லாத்தையும் வலது பக்கமிருந்து இடதுபக்கமா படிப்பாங்கறதும் தெரியாது”






************************************************************

ஒருத்தர் புதுசா மேனேஜரா பதவியேற்றார். அப்ப பழைய மேனேஜர்  அவர் கிட்ட 3 கவர் குடுத்தார். ரொம்ப பிரச்சினை, அவங்கிறப்ப இதை வரிசையா எடுத்துப்பாருன்னு சொல்லிட்டு போய்ட்டாரு.

அந்த மேனேஜர் அதுக்கப்புறம் கவரை மறந்துட்டாரு. ஆறுமாசம் கழிச்சு கம்பெனியில ஸ்ட்ரைக். கிட்டதட்ட மூடுற நிலைமை வந்துடுச்சு பணம் நஷ்டம். இவரை கேள்வி மேல கேள்வி கேட்குறாங்க. என்ன பண்ணுறதுன்னே தெரியலை. அப்பதான் கவர் ஞாபகம் வந்துச்சு. முதல் கவரை திறந்தா, “பழியை தூக்கி பழைய மேனேஜர் மேல போடு”ன்னு எழுதியிருந்தது.

அதே மாதிரி செஞ்சார். பிரச்சினை சரியாயிடுச்சு. இன்னும் கொஞ்சம் மாசம் கழிச்சு மறுபடியும் அதேமாதிரி பிரச்சினை வந்துச்சு. மறுபடியும் இரண்டாவது கவரை திறந்தார். “பழியை தூக்கி கவர்மெண்ட் மேல போடு”ன்னு எழுதியிருந்தது.

அதே மாதிரி செஞ்சார். பிரச்சினை சரியாயிடுச்சு. இன்னும் கொஞ்சம் மாசம் கழிச்சு மறுபடியும் அதேமாதிரி பிரச்சினை வந்துச்சு. இப்ப மூன்றாவது கவரை திறந்தார். “நீயும் மூணு கவரை ரெடி பண்ணு”ன்னு எழுதியிருந்தது.




************************************************************

ஒரு ட்ரெய்ன்ல ஜார்ஜ் புஷ், ஒபாமா, ஐஸ்வர்யா ராய், எலிசபெத் மகாராணி நாலு பேரும் போய்கிட்டு இருந்தாங்க. ட்ரெய்ன் ஒரு tunnel-ல போறப்ப பயங்கர இருட்டு அப்ப யாரோ முத்தம் குடுக்கிற சவுண்டும், அறை வாங்கிற சவுண்டும் கேட்டது.

tunnel-ஐ விட்டு வெளியே வந்தப்பட்ட ஜார்ஜ் புஷ் கன்னம் சிவந்து இருந்தது அவர் கன்னதில் கை வச்சிகிட்டு இருந்தார்.

எலிசபெத் மகாராணி நினைச்சாங்க ‘இந்த அமெரிக்கருங்க மோசம் போல ஜார்ஜ் புஷ் ஐஸ்வர்யாவுக்கு முத்தம் தந்திருப்பார் அவங்க அடிச்சிருப்பாங்கன்னு நினைச்சாங்க.’

ஐஸ்வர்யா நினைச்சாங்க ‘இந்த ஜார்ஜ் புஷ் நான்னு நினைச்சு எலிசபெத் மகாராணிக்கு முத்தம் தந்திருப்பார் அவங்க அடிச்சிருப்பாங்கன்னு நினைச்சாங்க.’

ஜார்ஜ் புஷ் நினைச்சாரு ‘இந்த ஒபாமா ஐஸ்வர்யாவுக்கு முத்தம் தந்திருப்பார் அவங்க இருட்டுல தெரியாம அவருன்னு நினைச்சி என்னை அடிச்சிருப்பாங்கன்னு நினைச்சாங்க.’

ஒபாமா நினைச்சாரு ‘அடுத்த tunnel வந்தவுடனே மறுபடியும் முத்தம் தர மாதிரி சவுண்ட் கொடுத்துட்டு ஜார்ஜ் புஷ்ஷை மறுபடியும் அடிக்கணும்!’


டெரர் கும்மிக்காக
எஸ். கே

Wednesday, February 9, 2011

செல்வா கதைகள்

முன் குறிப்பு: நீங்க கோமாளி ப்ளாக்ல செல்வா கதைகள் படிச்சிருப்பீங்க. அதுல செல்வா அவனோட கற்பனைல செல்வா கதைகள் எழுதி இருப்பான். கற்பனைன்னு தான் சொல்லச்சொன்னான். நீங்க அதெல்லாம் உண்மையா நடந்துதுன்னு நினைச்சுக்காதீங்க. அதே மாதிரி நானும் சில ஜோக்ஸ் செல்வா கதைகள் மாதிரி முயற்சி பண்ணிருக்கேன்.!
மரியாதையா செல்வாவோட மொக்கையை படி!

செல்வா தன் நண்பரிடம் கூறினார் “என்னை எல்லோரும் கடவுளா நினைக்கிறாங்க”

“அப்படியா?”

“ஆமாம் நான் எப்ப போனாலும், அடக்கடவுளே நீ மறுபடியும் வந்துட்டியான்னு சொல்வாங்க!”

----------------------------------------------------------------

செல்வாவும் அவர் நண்பரும் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது காக்கை அவர் மேல் எச்சமிட்டு விட்டது. “சே இந்த காக்காங்களே இப்படித்தான்..” என திட்டினார். அப்போது செல்வா பயங்கரமாக சிரிக்கத் தொடங்கினார். ”ஏண்டா லூசு மாதிரி சிரிக்கிற?”

“இல்ல மாடுங்களுக்கு பறக்கற சக்தி இருந்தா என்ன ஆகும்னு நினைச்சு பார்த்தேன்.”

----------------------------------------------------------------

 செல்வா ரோட்டில் ஒரு சுவற்றில் ஏதோ எழுதியிருந்ததை படித்தார். அதில் “இதை படிப்பவன் ஒரு கழுதை” என எழுதியிருந்தது. உடனே செல்வா கோபமாக அங்கே எழுதியிருந்ததை கஷ்டப்பட்டு அழித்துவிட்டு எழுதினார்.

“இதை எழுதியவன்தான் கழுதை”

----------------------------------------------------------------


செல்வா ஒரு படத்துக்கு போகத் தீர்மானித்தார். அதற்காக பிடிவாதமாக கஷ்டப்பட்டு அவர் நண்பர்கள் பதினெட்டு பேரை ஒன்று சேர்ந்து அழைத்து போனார். அவர் நண்பர் கேட்டார்.

”ஏண்டா பத்தொன்பது சேர்ந்து போய்தான் அந்த படத்துக்கு போகணும்னு அடம்புடிக்கிற?”

”ஏன்னா அது 18+ படம்”

----------------------------------------------------------------

 செல்வா இறந்து சொர்க்கத்துக்கு சென்றார். அங்கே சொர்க்க வாசலில் தேவதை நின்று கொண்டிருந்தது. “செல்வா நீங்க சொர்க்கத்து போகணும்னா ஏதாவது நல்லது செஞ்சிருக்கனும். இதுவரைக்கும் ஏதாவது நல்லது செஞ்சிருக்கீங்களா” என்றது தேவதை.

உடனே செல்வா சொன்னார், “ஆம் எனக்கு ஞாபகமிருக்கும். ஒரு ஆளில்லாத ரோடு வழியாக நான் பைக்ல போய்கிட்டு இருந்தப்ப தூரத்தில் ஒரு கும்பல் ஒரு பொண்ணை மிரட்டிகிட்டு இருக்கிறதை பார்த்தேன். உடனே அவங்கிட்ட போய் அவளை விடுமாறு சைகை பண்ணேன். ஆனா அவங்க கேட்கலை. நான் அவங்க பக்கத்தில் போய் அவங்க பைக்கை எட்டி உதைச்சிட்டு சொன்னேன்.”
 “அவளை விட்ருங்க. இல்லன்னா எனக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.”

தேவதை சுவாரசியமாக கேட்டது, “இது எப்ப நடந்தது?”

“இப்பத்தான் இரண்டு நிமிஷம் முன்னாடி.”

நீதி: நீதியா.. நீதி வேணும்னா நீதிமன்றத்துக்கு போங்க!சிரிம்மா கண்ணு..சிரி..சிரி!

பின் குறிப்பு: இதெல்லாம் உண்மைன்னு நம்பிடாதீங்க. செல்வா இதவிட அறிவாளி .. ஹி ஹி

இப்பட்டிய்லில் நீங்களும் இடம்பெற உடனே விரைந்தோடி செல்வா மொக்கையை படியுங்கள்!

Tuesday, January 18, 2011

விர்சுவல் பொங்கல் கொண்டாட்டம்... !

,
எங்களது கும்மி குழுவில் இருக்கும் நண்பர்கள் வெவ்வேறு ஊர்களில் தங்களின் உற்றாருடன் பொங்கல் கொண்டாடினாலும், இதுவரை செய்யாத முறையில் எங்களது கும்மி ஃபோரம் மூலம் ஒன்று சேர்ந்து கொண்டாடிய பொங்கல் - ஓர் விர்ச்சுவல் பொங்கல். அது பற்றி..

நாள், 15-01-2011 , தைத்திங்கள் 1 ,    மதியம் மூன்று மணிபோல் (ஐ.எஸ்.டி) எங்கள் 'கும்மி ஃபோரத்தில்' நண்பர் டெரர் பாண்டியன்தான் ஆரம்பித்தார்.

டெரர் பாண்டியன் : எஸ்.கே & சௌந்தர் & பாண்டியான் & பெ.சொ., மாதவன், ஜெய்... யாரு எல்லாருக்கும் நெட் இருக்கு வாங்க.. :))
எஸ்.கே : வந்தாச்சு !
டெரர் பாண்டியன் : நாம ஏன் இங்க, ஃபோரத்துல பொங்கல் கொண்டாடக் கூடாது.
( இல்லியா பின்ன, சொந்த பந்த்களை விட்டு வெளி நாட்டுல இருக்குற நண்பர்களுக்கு தனிமை மறந்து ஒரு இனிய பொங்கலா இருக்கட்டுமே ! )....

டெரர் பாண்டியன் : போய் ஸ்டவ், பானை , அரிசி, தண்ணி.. எல்லா பிக்சர் எடுத்து வாங்க. நாம போரம்ல பொங்கல் வைக்கலாம்... :)))
மாதவன் : நா கூட தேவையான பொருள் தரேன்..
டெரர் பாண்டியன் : சரி... நீங்க திரட்சை, முந்திரி எல்லாம் எடுத்து வாங்க....
(எலேய் எஸ்.கே.. இருக்கியா இல்லையா... டைம் ஆகுது..)

மாதவன் : முதல்ல, இடத்த சுத்தம் பண்ணி, கோலம் போடுறேன்..
டெரர் பாண்டியன் : இருங்க தல நான் கழுவி விடறேன்.. அப்புறம் நீங்க கோலம் போடுங்க.. :)
மாதவன் : இப்ப கோலம் ரெடி..

எஸ்.கே : இதோ, அரிசி.. ஓகேவா ?
ப. ராம்சாமி : இது புழுங்கலரிசி எஸ்கே, பொங்கலுக்கு பச்சரிசிதான் வேணும்.......
எஸ்.கே : அவசரத்துல மிஸ்டேக்காயிடிச்சி, சாரி. அரிசி நீங்களே ஏற்பாடு பண்ண முடியுமா 

டெரர் பாண்டியன் : பன்னி, உனக்கு பல விஷயம் தெரியுது மச்சி.. நீ உண்மையா விஞ்ஞானி, தான்.. :)). சரி. சரி.. போயி பச்சரிசிய சுத்தம் செய்திட்டு எடுத்து வா.
டெரர் பாண்டியன் : மாப்பு (தேவா) கரும்பு வாங்க மறந்துடேன்.. கொஞ்சம் கீழ இருக்க கடைல வாங்கி வா ப்ளீஸ்... :
தேவா : கரும்பு வாங்கியாந்துட்டேன்.... அடப்பாவிகளா மஞ்சக்கொத்து.... இருங்க இருங்க இப்ப வாங்கியாரேன்...........!


டெரர் பாண்டியன் @தேவா : அட! கரும்ப வெட்டியே வாங்கி வந்துட்டியா.. இங்க எங்க முழு கரும்பு கிடைக்குது... :)) மாப்ஸ் நீ பூஜை வேலை கவனி... :))
தேவா : சரி பூஜைய நான் பாக்குறேன்....மஞ்சள் கெழங்கு வாங்கியாந்து பானைல கட்டுங்க...!
மாதவன் : அலங்கரிக்கப் பட்ட பானை ரெடி. வாழைபழமும், கரும்பு துண்டும் கட்டிட்டேன்..

டெரர் பாண்டியன் : ஒ.கே ஸ்டவ் ரெடி, கோலம் போட்டாச்சி... பானை ரெடி...
பருப்பு, வாழைப்பழம் இதெல்லாம் இன்னும் வரலையா ? இதோ மஞ்சள்... வினோ, இத கொஞ்சம் பானைல கட்டுங்க... :)
வினோ : டன் ! மஞ்சள் கட்டியாச்சு...
பி.எஸ்.வி : கரும்புத் துண்டை பானையில கட்டுங்க
வினோ : ஏற்கனவே கட்டியாசுங்க
மாதவன் : வாழைத்தாரு இல்லாமா பொங்கலா ? ரெண்டும் ஏற்கனவே வந்திடிச்சே.. இதோ பாருங்க..

டெரர் பாண்டியன் : பன்னிகுட்டி இருக்கியா அரிசி கழுவிட்டியா?? :))
ப. ராம்ஸ் : யோவ் பச்சரிசி இப்போதான் கெடச்சிருக்கு, இரு கழுவுறேன்!

எஸ்.கே : வெல்லம் ரெடி.. ! சுத்தமான நெய்யும் ரெடி !!



டெரர் பாண்டியன் : அட பொங்கல் வேலை கலைகட்டுது... ஹா..ஹா..
ஜெயந்த் : எனக்கென்ன வேலை, நான் என்ன பண்ணனும் ?
எஸ்.கே : சாப்பிட ஆள் கூட்டிட்டு வாங்க ஜெயந்த் !
ஜெயந்த் : அதுக்கு தான் நானிருக்கனே.,..
டெரர் பாண்டியன் : ஜெயந்த், ராம்ஸ் அரிசி கழுவ போனான் கழுவிட்டானா பார்த்துட்டு ஓடிவா.. :))... டேய் டேய் அப்படியே அந்த பருப்ப கொஞ்சம் கழுவி எடுத்துவா...
ஜெயந்த் : இதோ இப்பவே பாக்குறேன்... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க...
தேவா : பூஜை வேலையா நா கவனிக்கறேன். தேங்காய் பழம் எல்லாம் எடுத்து வைக்கிறேன். தேங்காய்.. எங்க ?
எஸ்.கே : பழத்தை மாதவன், அப்பவே வெச்சிட்டாரே.. கவனிக்கலியா? இதோ தேங்காய், தேவா.


தேவா : பொங்கல் ரெடியா? பூசை ஆரம்பிக்கலாமா?
டெரர் பாண்டியன் : இரு மாப்பு அரிசி எடுத்துகிட்டு பன்னிகுட்டி ஓடி போய்டான்.... :)) ஜெய் பாக்க போய் இருக்கான்... :))
ஜெயந்த் : அரிசி ரெடி ஆரம்பிக்கலாமா..?
ஷமீர் அஹமது : சீக்கிரம்.. எவ்ளோ நேரம் வெயிட் பண்ணுறது..?
ராம்ஸ் : வாங்க, ஷமீர்.. நீங்களும் கலந்துகிட்டதுல ரொம்ப மகிழ்ச்சி.. (பாண்டியைப் பார்த்து ) அரிசிய குடுத்து விட்டேனே ஜெய்கிட்ட?
ஜெயந்த் : அரிசி ரெடி .. பருப்பு என்னாச்சுன்னு பாக்குறேன்..
மாதவன் : பால் ரெடி. சுத்தமான தண்ணி பைப்புல வரும்..



டெரர் பாண்டியன் : ராம்ஸ்.. ராம்ஸ்.. என்ன பண்ணுற அங்க.. ?
ப. ராம்ஸ் : சர்க்கரைப் பொங்கல்' ரெசிபி பண்ணுறேன் .
எஸ்.கே : வாழையிலை.. இதோ...

பி.எஸ்.வி. : இன்னும் பாலே பொங்கலை, அதுக்குள்ளே, இலையோட  வந்துட்டீங்களா, எஸ்கே? இதோ, "பொங்கலோ பொங்கல்" சொல்ல அடிக்க ட்ரம் செட் ரெடி.
எஸ் .கே : எல்லாம் ஒரு முன்னேற்பாடுதான்.
ஜெயந்த் : பொங்கல் கூட வடை இருக்கா ?

மாதவன் : வடைக்குலாம் தனியா நேரத்த வேஸ்டு பண்ண முடியாது..
அதனால.. ரெடிமேட் வடை.. வாங்கியாதிட்டேன்.

வினோத்: நன்றிங்க மாதவன்.. அதை நான் சூடு பண்ணிடுறேன்.
டெரர் பாண்டியன் : அட வடை வந்துடுச்சா பலே பலே.. :)
ஜெயந்த் : இந்தப்பா முந்திரி பருப்பு.. இதையும் சேத்துக்குங்க.....

பி.எஸ்.வி  : ஓகே, பத்த வைக்கவா, (அடுப்பத் தான்) தீக்குச்சி எடுத்தாச்சு.. இதோ பத்தவேச்சாச்சு..  விறகு அடுப்பும் ரெடி
பி.எஸ்.வி : விறகு அடுப்புல பொங்கல்-பானைய வெச்சாச்சு.. பானையில பால வெச்சிருக்கேன். அரிசி பருப்பு வெல்லம் எல்லாம் ரெடியா இருக்கா...
டெரர் பாண்டியன் : யாராவது வெல்லத்த கொஞ்சம் காய்ச்சுங்கபா... :)
மாதவன் : மொதல்ல வெல்லத்த தூள் பண்ணனும்..
வினோத் : ஏற்கனேவே காய்ச்சிட்டேனே, நான்.
டெரர் பாண்டியன் : நான் முன்னாடியே தூள் பண்ணி வெச்சிட்டேன். வினோத் காய்ச்சிட்டாராம்.. வெரி குட். :-)
ஜெயந்த் : பார்த்து பக்குவமா பண்ணுங்க... வீட்டில சமைக்கிற கனவானுங்க முன்னாடி வந்து அடுப்பை கவனிங்க..
தேவா : ஏய்.....புகை அதிகமா இருக்கு சுள்ளிய வை.......கண்ணு எல்லாம் எரியுது வீடு புல்லா புகை...!

டெரர் பாண்டியன் : இதுக்கு தான் நான் சுள்ளி பொறுக்கு வரேன் சொன்னேன்.. சௌந்தர் தான் ஈர சுள்ளி பொறுக்கி வந்துடான்... இரு நான் ஊதாங்கோல் வச்சி ஊதரேன்... அப்பா இப்போ நல்லா எரியுது.,... :)
தேவா : யாருக்குப்பா குலவை சத்தம் போடத்தெரியும் அவுங்க பால் பொங்கும் போது போடுங்க!
பி.எஸ்.வி. : ரெடியா? பால் பொங்கி வருது
வினோத் & மாதவன் : பால் பொங்குதா.. ? 'பொங்கலோ பொங்கல்' ! 'பொங்கலோ பொங்கல்' !!
டெரர் பாண்டியன்: 'ட்ரம்ஸ' எடுப்பா.. மறந்திட்டிங்களா ? :)

(எல்லோரும் ட்ரெம்ஸ் அடிச்சி, சத்தமாக சொல்லுறாங்க )

" பொங்கலோ பொங்கல்......!! "
(கொஞ்ச நேரம் கழித்து..)
மாதவன் : என்ன நடக்குது..பேச்சக் காணும்..?//
டெரர் பாண்டியன் : எல்லாம் பசி கடுப்புல இருக்காங்க... :))
எஸ்.கே : வெண்பொங்கலும் மெது-மசால் வடையும் ரெடி..
டெரர் பாண்டியன் :சரி சரி பொங்கல் ரெடி, வடை ரெடி... தேவா எங்க போனாரு.... படையல் போடணும்..... :) 
தேவா : பூஜை எல்லாம் ரெடி பண்ணிட்டேன் மாப்ஸ்... எல்லாம் கொண்டாங்க... பூஜை ஆரம்பிக்கிறேன்.....
டெரர் பாண்டியன் : இந்தா மாப்ஸ்!! பொங்கல், வடை, இலை, தேங்காய், கரும்பு, கற்பூறம்.. வேற ஏதாவது தேவையா... ?




பி.எஸ்.வி : எல்லா கடவுளும் இங்க ரெடி மணியும் ரெடி. - 
தேவா: தீபம் ஏத்திட்டேன்.
ப.ராம்ஸ் : ஒகே ஸ்டார்ட்........
ஜெயந்த் : எல்லாரும் வாங்கப்பா... சாமி கும்பிடலாம்....
தேவா:
(பூஜை போடுகிறார்) :
  பொங்கலோ பொங்கல்
சங்கரன் பொங்கல்
பட்டிப் பழுக பழுக
பால் பானை பொங்கப் பொங்க
மூதேவி முறிஞ்சோட...
சீதேவி நின்றுலங்க...

பொங்கலோ பொங்கல்...! பொங்கலோ பொங்கல்...! பொங்கலோ பொங்கல்...! பொங்கலோ பொங்கல்...!

ஒளி பரப்பி எல்லா உயிர்களுக்கும் உணர்வை கொடுக்கும் சூரியனே.. உன்னை நினைத்து எங்கள் நன்றிகளை தெரிவிக்கிறோம். டெரர் கும்மியில் இருக்கும் நாங்கள் எல்லோரும் இரத்த பந்தங்கள். எங்கள் குடும்பம்த்தில் இருக்கும் எல்லோருக்கும் எங்களுக்கும் நீண்ட ஆயுளும் நல்ல செல்வமும் எப்போதும் நிலைக்கட்டும்...

ஒத்துமையாய் எங்களை எப்போதும் செழிக்கவை...! மாம, அண்ணன், மாப்ஸ், சித்தப்பா.. என்று என்று எங்கள் எல்லா உறவுகளும் எப்போதும் தொடரட்டும்.. எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து நாங்கள் எப்போதும் ஒத்துமையாய் வாழ வேண்டும்.

யாருப்பா அது வெறும்பய அந்த மணி அடி.. நான் தீபம் காட்றேன்...! சத்தமா சொல்லுங்க மக்கா.. பொங்கலோ.............பொங்கல்.......

(எல்லோரும் சத்தமாக.. )

பொங்கலோ.............பொங்கல்.......
பொங்கலோ.............பொங்கல்.......
பொங்கலோ.............பொங்கல்.......
பொங்கலோ.............பொங்கல்.......
பொங்கலோ.............பொங்கல்....... ! பொங்கலோ.............பொங்கல்....... ! பொங்கலோ.............பொங்கல்.......!
-------------  இவ்வாறாக (விர்சுவல்) பொங்கல் இனிதே கொண்டாடப் பட்டது..! 

மாதவன் 

Saturday, January 8, 2011

நகைகள் விற்பனைக்கு....!

நான் இணையத்தில் படித்த சில நல்ல ஜோக்குகளை மொழிபெயர்த்து இங்கே அவ்வப்போது அளிக்க விரும்புகிறேன்! ரசித்து மகிழுங்கள்! நன்றி!
 
அமெரிக்காவிலுள்ள சிறிய ஊர் ஒன்றின் நீதிமன்றத்தில் ஒரு வழக்குக்கு சாட்சியம் அளிக்க வந்திருந்த மிகவும் வயதான பெண்மணியிடம் வக்கீல் கேட்டார்:

"திருமதி ஜோன்ஸ், என்னை உங்களுக்குத் தெரியுமா?" அதற்கு அந்தப் பெண்மணி,

"ஏன், கண்டிப்பாக எனக்கு உங்களைத் தெரியும் திரு. வில்லியம்ஸ். உங்களை  எனக்கு சின்னக் குழந்தையிலிருந்து தெரியும், உண்மையைச் சொன்னால் நீங்கள் எனக்கு ஒரு பெரிய ஏமாற்றம். பொய் சொன்னீர்கள், உங்களுடைய மனைவிக்கு துரோகம் செய்தீர்கள், நம் மக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்ததோடில்லாமல் அவர்களுக்கு பின்புறம் போய் அவதூறு பேசினீர்கள். நீங்கள் ஏதோ பெரிய வக்கீல் என்று இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் ஆனால் நீங்கள் வெறும் பேப்பர் தள்ளும் இயந்திரத்தின் பெறுமானமே இருப்பீர்கள் என்பதை உங்களுடைய மூளையால் இன்னமும் உணர முடியவில்லை. ஆமாம், எனக்கு உங்களைத் தெரியும்."

இதைக் கேட்ட வக்கீல் திக்கித்து நின்றுவிட்டார். என்ன செய்வது என்று
தெரியாமல் எதிரே அமர்ந்திருந்த எதிர்கட்சி வக்கீலை காண்பித்து கேட்டார்,

"திருமதி ஜோன்ஸ், எதிர்கட்சி வக்கீலை உங்களுக்குத் தெரியுமா?"

அவள் மறுபடியும், "ஏன், கண்டிப்பாகத் தெரியும். திரு. பிராட்லியை எனக்கு
அவருடைய இளமைக் காலத்திலிருந்து தெரியும். அவர் ஒரு சோம்பேறி,
கண்மூடித்தனமாக எதையும் நம்புபவர், அது மட்டுமின்றி அவருக்கு குடியில்
பிரச்சினை இருக்கிறது. எவருடனும் ஒருங்கான உறவை அவரால் உருவாக்க முடிவதில்லை, அவருடைய சட்டப் படிப்பு இந்த மாநிலத்திலேயே மோசமானது. அது மட்டுமின்றி அவருடைய மனைவிக்கு துரோகம் செய்து மூன்று பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கின்றார். அதில் ஒரு பெண் உங்களுடைய மனைவி என்பதும் எனக்குத் தெரியும். ஆமாம், எனக்கு அவரைத் தெரியும்."

எதிர்கட்சி வக்கீல் கிட்டத்தட்ட மயக்கம் போடாத குறை.

நீதிபதி இரண்டு வக்கீலையும் தனது மேஜைக்கு அழைத்து மிகவும் மெல்லிய குரலில் கூறினார், "கொய்யாலே! உங்க ரெண்டு பேர்ல எவனாச்சும் அவகிட்ட என்னைத் தெரியுமான்னு கேட்டீங்க, உங்க ரெண்டு பேரை எலக்ட்ரிக் சேருக்கு அனுப்பிடுவேன்!"

**************************

ஒரு ஆள் ஒரு குதிரை வாங்கினாரு. அந்த குதிரையை விற்றவன் விக்கிறப்ப சொன்னான். “சார் இது அதிசய குதிரை. அப்பாடின்னு சொன்னா ஓட ஆரம்பிக்கும். அய்யயோன்னு சொன்னா நின்னுடும்”


அந்த ஆள் ஆச்சரியப்பட்டு குதிரை வாங்கிட்டாரு. குதிரையில ஏறி “அப்பாடி”ன்னாரு. குதிரை ஓட ஆரம்பிச்சிச்சு. பயங்கர வேகம். அங்க மலை சரிவு வேற. அது ஒரு பள்ளம் ஓரத்துக்கு வந்துச்சு. அந்த ஆள் பயந்து “அய்யய்யோ”ன்னு கத்தினாரு.
 

குதிரை உடனே நின்னுடுச்சு.
 

அவர் “அப்பாடி”ன்னு சொல்லிகிட்டே பெருமூச்சு விட்டாரு. குதிரை உடனே...

**************************

ஒரு ஆரம்ப பள்ளிக்கூடம். அங்க ஒரு கிளாசுக்கு டீச்சர் ஒரு கேமரா கூடவே சில பசங்களோட ஃபோட்டோக்களோட வந்தாங்க. ஒரு பையன் கேட்டான். 

“டீச்சர் ஏன் நீங்க கேமராவை எடுத்துட்டு வந்தீங்க” 

டீச்சர் ஆச்சரியமாகி “குரூப்பா சில போட்டோ எடுத்துக்கிட்டீங்கன்னா. நீங்கெல்லாம் பெரிசா ஆனதுக்கப்புறம், உங்க நண்பர்கள், சொந்தகாரங்க கிட்ட அந்த போட்டோக்களை காமிச்சு பெருமையா சொல்லலாம், இவ ரமேஷ் போலீசாயிட்டான், இவன் ராம் தொழிலதிபராயிட்டாம், இவன் சங்கர் வக்கீலாயிட்டான், இவன் பாபு டாக்டராயிட்டா.....  ”
 

அப்ப பின்னால இருந்து ஒரு குரல் வந்துச்சுச்சு ”இது எங்க கிளாஸ் டீச்சர் இப்ப உயிரோட இல்ல.”

**************************

ஃபிளாஷ் நியூஸ்: இரண்டு பேர் உட்காரும் வசதியுள்ள ஒரு பிளேன் ஒரு கல்லறைத் தோட்டத்தில் விழுந்து நொறுங்கியது. அப்பகுதி சர்தார் போலீஸ்கள் 500 உடல்களை தோண்டியெடுத்தனர். மேலும் உடல்கள் தோண்டப்பட்டு வருகின்றன......

**************************
பார்க்க முரட்டுத் தனமா இருந்த ஒரு ஆள் தன்னோட பைக்கில ஒரு பாருக்கு போனான். வண்டியை பாருக்கு முன்னாடி நிறுத்திட்டு உள்ளே போய் சாப்ட்டு வெளியே வந்தான். அங்கே அவன் பைக்கை காணோம்!
 

“அப்படியா!”ன்னுட்டு பாருக்குள்ளே போய், ”நான் இன்னும் ஒரு கிளாஸ் சாப்பிடப் போறேன். நான் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள என் பைக் வரலை, எங்க ஊர்ல நான் என்ன பண்ணேனோ அது இங்கயும் நடக்கும்!” அப்படின்னு கோபமா கத்தினாரு. 
 

உடனே பார் மேனேஜேரு அங்க இருந்த ஆளுங்க எல்லாம் எப்படியோ தேடி அவர் வண்டியை கண்டு பிடிச்சு பா முன்னாடி நிறுத்திட்டாங்க. பைக்கரானும் கிளம்பினான். கிளம்புறப்ப ஒருத்தர் கேட்டாரு...
 

“சார் உங்க ஊர்ல என்ன நீங்க பண்ணீங்க?”
 

அவன் பதில் சொன்னான் “வீட்டுக்கு நடந்தே போனேன்!”

**************************

இரண்டு சர்தார்ஜிகள் எகிப்தில் உள்ள பிரமிடுகளை சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்கள். பிரமிடில் மம்மிக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சடலம் மற்ற எல்லா சடலங்களையும் விட மிகவும் நசுங்கி இருந்தது.

அதைக் காட்டி ஒரு சர்தார்ஜி சொன்னார், “இந்த உடல் நசுங்கி இருப்பதைப் பார்த்தால், அநேகமாக இவன் ஒரு லாரியில் அடிபட்டு இறந்தவனாக இருக்க வேண்டும்”. மற்றொரு சர்தார்ஜி சொன்னாராம் “நீங்கள் சொல்வது உண்மைதான். அவனுக்கு அருகில் பாருங்கள் B.C.2500 என்று லாரியின் நம்பர் பிளேட்டைக் கூட எழுதி வைத்திருக்கிறார்கள்” என்று!

**************************
ஸ்காட்லாண்ட் யார்ட் போலீஸ், நியூயார்க் போலீஸ், சர்தார் போலீஸ் மூணு பேருக்கும் சிறந்த போலீஸ் அவார்டுக்காக போட்டி வச்சாங்க. போட்டி என்னன்னா ஒரு காட்டுக்குள்ள போய் ஒரு பெரிய சிங்கத்தை முடிஞ்சவரை சீக்கிரமா புடிச்சிட்டு வரனும். யார் சீக்கிரம் புடிச்சிட்டு வராங்களோ அவங்க ஜெயிச்சாங்க!
 

முதல்ல ஸ்காட்லாந்துயார்டு போலீஸ் போனாரு. 15 நிமிசத்தில ஒரு பெரிய சிங்கத்தை புடிச்சிட்டு வந்துட்டாரு. அடுத்து நியூயார்க் போலீஸ் போனாரு. அவரும் ஒரு சிங்கத்தை 15 நிமிசத்தில புடிச்சிட்டு வந்துட்டாரு. கடைசியா சர்தார் போலீஸ் போனாரு. 15 நிமிசம் ஆச்சு வரலை. அரை மணி நேரம், இரு மணி நேரம் ஆச்சு. ஆனா அவர் வரவே இல்லை. அவரை தேடிக்கிட்டு நடுவர்களும் மற்ற போலீஸ்களும் போனாங்க. நடுக்காட்டுல அந்த சர்தார் போலீஸ் ஒரு கரடியை ஒரு மரத்தில கட்டி வச்சு அடிச்சிகிட்டு இருந்தாரு.
 

”மரியாதையா ஒத்துக்கோ நீ ஒரு சிங்கம்னு!”




டெரர் கும்மிக்காக 

எஸ்.கே