Wednesday, March 13, 2013

குட்டிச் சுட்டீசும் குட்டிச் சாத்தான்களும்

குட்டிச் சுட்டீசில் நம்ம டெரர் கும்மி பக்கிகள் கலந்துக்கிட்டா எப்படி இருக்கும் என ஒரு கற்பனை...

அண்ணாச்சி: எலெய் நீ எத்தன படிக்கிற?

மாலுமி: நான் இன்னிக்கு குடிக்கவே இல்லை அங்கிள்

அண்ணாச்சி: எலேய் குடிகார பயலே. நீ குடிச்சியான்னு கேட்கலை என்ன படிக்கிறன்னு கேட்டேன்.

மாலுமி: 2 குவாட்டர்.

அண்ணாச்சி: என்னது 2 குவாட்டரா? அது என்னாலே படிப்பு?

மாலுமி: ரெண்டாங்கிளாஸ் படிக்கிறேன். கால் பரிச்சை முடிஞ்சிருக்கு. அதான் ரெண்டு குவாட்டர் ன்னு சொன்னேன்.

அண்ணாச்சி: அட நீ வருங்காலத்துல கவர்மெண்ட்டுக்கு பெரிய பிசினஸ் கொடுப்ப போல. சரி உங்களுக்கு பிடிச்ச உணவு எதும்மா?

மாலுமி: ஊறுகாய் அங்கிள்

அண்ணாச்சி: விளங்கும்லே!!. சரி பெரியாள் ஆனா நீ என்ன வேலைக்கு போவ?

மாலுமி: டாஸ்மாக்ல மேனேஜர். அப்பத்தான் சரக்கு ப்ரீயா கிடைக்கும்.
=================================
அடுத்து டெரர் பாண்டியன் வரார்.


அண்ணாச்சி: வா தம்பி. ஏன் அழுகுர?

டெரர் : உங்க ஸ்டுடியோல எல்லோருக்கும் பால் கொடுத்தாங்க. எனக்கு மட்டும் கொடுக்கலை.

அண்ணாச்சி: என்னாலே சொல்ற? உனக்கு மட்டும் கொடுக்கலையா? ஏன் தரலை?

டெரர் : நான் ஒட்டகப்பால் கேட்டேன் அங்கிள்

அண்ணாச்சி: எலெய் நாங்கெல்லாம் ஒட்டகத்த புத்தகத்துல பார்த்ததோட சரிதம்லே. உனக்கு ஒட்டக பால் கேக்குதா?
===============================
                                 
அடுத்து ரமேஷ் வரார்...

அண்ணாச்சி: உனக்கு ஸ்கூல்லையே பிடிச்ச மிஸ் யாரு?

ரமேஷ்: சத்துணவு மிஸ். அவங்கதான் எனக்கு ரெண்டு முட்டை எடுத்து தருவாங்க

அண்ணாச்சி:விளங்கும். சரி வேற மாதிரி கேக்குறேன். ஸ்கூல்லையே உனக்கு பிடிச்ச பீரியட்  சொல்லு பாப்போம்

ரமேஷ்: லஞ்ச் பீரியட். அந்த பீரியட்லதான் சாப்பிட முடியும்.

அண்ணாச்சி: எலெய் எவம்லே இவனை கூட்டிட்டு வந்தது. சரியான தின்னி பண்டாரமா இருப்பம் போல.

ரமேஷ்: பணியாரமா? எங்க அங்கிள்? எங்க எங்க?

அண்ணாச்சி: அவ். சரி உனக்கு அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமா?

ரமேஷ்: வேலைக்கார ஆண்டிதான் பிடிக்கும்...

அண்ணாச்சி: (ஷாக்காகி) என்னாலே சொல்ற.

ரமேஷ்: இல்ல அங்கிள். அம்மா அப்பா வேலைக்கு போயிடுவாங்கள்ள. வேலைக்கார ஆண்டிதான் எனக்கு காலைல பூஸ்ட்,பிஸ்கட், மதியம் பப்பு பூவா அப்புறம் ஜூஸ் இப்படி ஏதாச்சும் கொடுத்துக்கிட்டே இருப்பாங்க.

அண்ணாச்சி: உங்களை எல்லாம் வச்சி ப்ரோக்ராம் பண்றதுக்கு நான் சந்நியாசம் போயிடுவேன் போங்கலே நீங்களும் உங்க ப்ரோக்ராமும்.

Tuesday, March 5, 2013

போலி(ஸ்) இண்டர்வியூவில் பவர்ஸ்டாரும் பின்னே நடிகர்களும்

சரத்குமார்,விஜயகாந்த்,அர்ஜுன் இவங்கெல்லாம் இப்போ ரிடயர்டு ஆகிட்டதால  அவங்க வருசக்கணக்கா பண்ணிக்கிட்டு இருந்த நாட்டாமை,போலீஸ், நாட்டை காப்பாத்துற கேரக்டருக்கு இப்போ உள்ள ஹீரோஸ்  கிட்ட இண்டர்வியூ வச்சி செலெக்ட் பண்ண போறாங்க.


முதல்ல போலீஸ் கேரக்டருக்கு சிம்பு வரார். விஜயகாந்த் இண்டர்வியூ பண்றார். 

வி: ஹலோ சிம்பு. போலீஸ் கேரடர் பண்ண வந்திருக்கீங்க. ஏதாச்சும் முன் அனுபவம் உண்டா? 

சி: அதான் ஒஸ்தி ன்னு ஒரு படம் பண்ணினனே. நீங்க பார்க்கலியா?

வி: டேய் அதுல நீ போலீசா? நான் கூட கூர்க்கான்னு  நினைச்சேன். சரி அடுத்த படத்துல நீ  சென்னைக்குள்ள புகுந்த தீவிரவாதியை பிடிக்க போற. 

சி: என்ன கேப்டன் பாகிஸ்தான் தீவிரவாதிக்கு பொண்ணு இருக்கிற மாதிரி கதைய மாத்துங்க. அந்த பொண்ணை நான் லவ் பண்றேன். அவ உதட்ட கடிச்சு இழுக்கிற மாதிரி ஒரு போஸ்டர் அடிச்சு பாகிஸ்தான் புல்லா ஓட்டுறேன். அதனால அந்த தீவிரவாதி டென்ஷன் ஆகி என்னை தேடி வரான். அப்புறம் ஒரு அரைமணி நேரம் பஞ்ச் டயலாக் பேசுறேன். அப்புறம் என் மூக்குல இருந்து ரத்தம் வருது.

வி: டேய் இப்போ என் காதுல ரத்தம் வருது. பைட் சீன்ல லெப்ட் லெக்கை சுவத்துல வச்சு ரைட் லெக்கை வச்சு எதிரிகளை பந்தாடனும். 

சி: இந்த சீனை ஹீரோயின் கூட மாத்துங்க பாஸ். லெப்ட் லேக்கை எடுத்து....

வி: டேய் டேய் இதுக்கு மேல சொல்லாதடா. சென்சார்ல கட் பண்ணிட போறாங்க. இன்னும் நீ மன்மதன் படத்தை விட்டு வரலியா வெளங்கிடும். 

=======================================
 
ச: வாங்க தம்பி சவுக்கியமா? 

ஆர்யா: வணக்கம் பாஸ். சவுக்கியமா? வரலச்சுமி சவுக்கியமா பாஸ்?

ச: (அட பன்னாடை எந்த ஹீரோயினையும் விட்டு வைக்க மாட்டானே). ம்ம். அடுத்த படத்துல நீதான் நாட்டாமையா நடிக்கிற.
ஆ: ஓகே பாஸ். நான் நாட்டாமை. என்கிட்டே பிராது கொடுக்க வர்ற ஆம்பளை பசங்களுக்கு என் சிஷ்யன் சந்தானம் தீர்ப்பு சொல்லுவான். பொம்பளை பிள்ளைங்க பிராது கொடுத்தா நானே அவங்களுக்கு ஆறுதல் சொல்லி அவங்க பிரச்சினையை தீர்த்து வைக்கிறேன். அப்புறம் நான் நாட்டாமையானா 18 பட்டி கிராமத்துலையும் உள்ள பிகர்களுக்கு தினமும் மல்லிப்பூ,அல்வா இலவசம் ன்னு அறிக்கை விடுறேன்.

ச: டேய் கதைய நான் சொல்றேன். உங்க அத்தை பையன் ஒரு பொண்ணை ரேப் பண்ணிடுறான். அதுக்கு நீ தீர்ப்பு சொல்லணும்.

ஆ: என்ன பாஸ். விவரமில்லாத பையனா இருக்கான். ரேப் பண்றது யாருக்கும் தெரியாம பண்ண வேண்டாமா? கதைய மாத்துங்க பாஸ். நாட்டாமை படிப்பறிவில்லாம இருக்கிறதால ஊர்ல உள்ளவங்கலாவது படிக்கட்டுமேன்னு ஒரு டுட்டோரியல் காலேஜ் ஆரமிக்கிறார். அதுல பாடம் எடுக்க வர்ற டீச்சர நான் லவ் பண்றேன்.

ச: அப்புறம் எவனாவது நாட்டமை தம்பிதான் டீச்சர வச்சிருக்கான்னு பார்த்தா, நாட்டாமையே டீச்சர வச்சிருக்காரான்னு சொல்றதுக்கா? போடாங்...

=========================================

பவர்ஸ்டார்: சார் உள்ள வரலாமா?

கேப்டன்: யோவ் யாருய்யா நீய்யீ? டேய் கொரியர் கொடுக்க வந்தவனைலாம் ஏண்டா உள்ள விடுறீங்க...... ?

பவர்: என்னது பவர தெரியாதா உங்களுக்கு? இது தவறு சார்....... சார் நானும் உங்க இண்டர்வியூவுக்குத்தான் வந்திருக்கேன்....

கேப்டன்: என்னது நீங்களும் இண்டர்வியூவுக்கு வந்திருக்கீங்களா? மூஞ்சில போலீஸ் களையே இல்லியே?

பவர்: இது போதுமா சார்...........


கேப்டன்: அய்யய்யோ அய்யய்யோ........... யோவ் நாங்க திகில் படம் எடுக்க வரலைய்யா....... இது போலீஸ் படம்......... வெரப்பா நிக்கனும்.......

பவர்: எனக்கு வெரப்பாவுலாம் நிக்க வராது சார், நான் எப்பவுமே சிரிச்சிட்டுதான் இருப்பேன்...... வேணா என்னைய சிரிப்பு போலீசா வெச்சுக்குங்க சார்.......

கேப்டன்: அந்த மாதிரி கேனத்தனமான சிரிப்பு போலீசு கேரக்டருக்குலாம் ப்ரமனண்டா ஒரு ஆள் இருக்காரு..... நீ வேணா அவருக்கு அஜிஸ்டண்ட்டா இருக்கப்பாரு.
====================================================
அடுத்து சந்தானம்:

கேப்டன்: உள்ள வாய்யா... போலீஸ் கேரக்டர் இண்டர்வியூவுக்குத்தானே வந்திருக்கே?

சந்தானம்: இல்ல புளி ஒரு கிலோ வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்...... பின்ன என்ன சார்...... காலைல இருந்து எல்லாரும் இதுக்குத்தானே வெயிட் பண்ணிட்டு இருக்கோம்.......?

கேப்டன்: (ஆரம்பத்துலயே லொல்லு பேசுறானே?) இதுக்கு முன்னாடி போலீஸ் கேரக்டர் ஏதாவது பண்ணி இருக்கீங்களா?

சந்தானம்: ஏற்கனவே பண்ணி இருந்தா உங்ககிட்ட எதுக்கு வர்ரேன்......

கேப்டன்: அப்போ இதுவரைக்கும் போலீஸ் கேரக்டரே பண்ணதில்ல?

சந்தானம்: உங்களுக்கு காது கேட்காதா? இப்ப நான் என்ன கொத்தவரங்கா சாப்புட்டா உடம்புக்கு நல்லதுன்னா சொன்னேன்?

கேப்டன்: என்ன ரொம்ப தெனாவெட்டா பேசுறே....... சான்ஸ் வேணுமா இல்லியா?

சந்தானம்: சாரி சார், இப்படி பேசுனாத்தான் சான்ஸ் கொடுப்பீங்கன்னு வெளில கூர்க்கா சொன்னான் சார்

கேப்டன்:எங்க ஆபீஸ்ல கூர்க்காவே கிடையாதே?

சந்தானம்: உங்க ஆபீஸ் கூர்க்கான்னு நான் சொன்னேனா? 

கேப்டன்: எந்திரிச்சி வெளில போடா ராஸ்கல்......

சந்தானம்: யோவ், எந்திரிச்சா தான் வெளில போக முடியும்........ டேய் பவர் நீ வா ராஜா நாம ஒரு படம் எடுப்போம், உன்னைய அதுல சிரிப்பு போலீசாக்குறேன்
======================================================
 

அர்ஜுன்: தம்பி இது தேசபக்தி படம். அம்மாவை விட நாடுதான் முக்கியம்ன்னு சொல்ற கேரக்டர்.

ஜெயம் ரவி: அட போங்க பாஸ். அம்மாதான் முக்கியம்ன்னு அப்பாவையே திட்டினவன் நான். நீங்க எம்.குமரன் படம் பார்க்கலியா?

அர்ஜுன்: அப்படியெல்லாம் பேசகூடாது. இந்த படத்துல நம்ம நாட்டு பிரதமர குண்டு வச்சு கொல்றதுக்கு ஒருத்தன் வரான்.
ஜெயம் ரவி: இந்தக் வில்லன் கேரக்டருக்கு விஷால் இல்லைன்னா ஜீவாவை போடுங்க பாஸ். நான் ஒரு காலேஜ்ல கிளாஸ் எடுக்கிறேன். அப்போ அஞ்சு பொண்ணுகளோட காட்டுக்கு போறேன். அங்க பிரதமர கொல்ல வர்ற ஜீவா & விஷாலை நாங்க எல்லாரும் சேர்ந்து போட்டு தள்றோம்.

அர்ஜுன்: டேய் பிரதமர கொல்றவன் ஏண்டா காட்டுக்கு போறான்.
======================================================

யாருமே செட் ஆகாததால்  விஜயகாந்த் விருத்தகிரி-2, அர்ஜுன் ஜெய்ஹிந்த்-2, சரத்குமார் நாட்டாமை-2 படம் எடுக்க கிளம்புகின்றனர்

#அது நம்மளை நோக்கித்தான் வருது ஒடுங்க ஒடுங்க