Friday, July 29, 2011

கள்ள நோட்டா..? - கவலையை விடுங்க..!


இன்னிக்கு கள்ள நோட்டு அடிக்கறது..
சே.. கள்ள நோட்டை கண்டுபிடிக்கறது
எப்படின்னு சொல்லி தர போறோம்..

கள்ள நோட்டை கண்டுபிடிக்க
பல வழிகள் இருக்கு..,

ஆனா., இப்ப நாங்க சொல்லபோற
வழிதான் ரொம்ப Easy -யான வழி.
Machine அது., இதெல்லாம் எதுவும்
வேணாம்..

வெளிநாட்டு நண்பர்கள் மன்னிக்க..
இந்த Technique இந்திய ரூபாய்க்கு
மட்டும் தான் Workout -ஆகும்.

சரி வாங்க Trainning -க்கு போகலாம்.,

* 5 ரூபாயோ ., 1000 ரூபாயோ
ஏதோ
ஒன்னு எடுத்துக்குங்க..

* அதை நாலா மடிச்சிக்குங்க..,

* கீழே வெச்சி நோட்டு மேல
ரெண்டு
குத்து குத்துங்க..,

* திருப்பி வெச்சி அதே மாதிரி
அந்த பக்கமும்
ரெண்டு குத்து குத்துங்க..,

* போதும்., இப்ப நோட்டை எடுத்து
பிரிச்சி பாருங்க..,


* காந்தி தாத்தா கண்ணாடி உடைஞ்சி
இருக்கா..? - அப்ப அது கள்ள நோட்டு..

* உடையலையா..? - சந்தோஷம்.,
அது நல்ல நோட்டு தான்.

டிஸ்கி : இதே மாதிரி " கறுப்பு பணத்தை "
கண்டுபிடிக்கவும் ஒரு Simple Technique
இருக்கு.. அதை இன்னொரு பதிவுல
சொல்லி தர்றோம்...!

( நாங்கல்லாம் ஊருக்குள்ள பல பேருக்கு
Idea சொல்லுறவங்க...! )
.
.

Wednesday, July 27, 2011

அஞ்சு பத்துக்கு அலையும் ரமேசும் அற்புத விளக்கும்! - 7

 முந்தைய பாகங்கள்: பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6

உள்ளே வந்த ரமேஷ்...அந்த பெண் மயக்கமாகி கிடப்பதைக்கண்டு அதிர்ச்சியானான்... அவனுக்கு ஒன்றும் புரியவில்லை...அவர்கள் ஏன் ஓடினார்கள்...இந்த பெண் ஏன் இங்கு வந்தது? எப்படி மயக்கமானது? அந்த விளக்கு என்ன ஆச்சு? இப்படி பல கேள்விகள் ஓடியது ரமேசின் மனதில்...கொஞ்ச நேரம் கேள்விகளை ஒத்திவைத்து விட்டு அந்த பெண் முகத்தில் தண்ணீர் தெளிப்பதற்காக தண்ணீர் எடுக்க உள்ளே போனான்...

அவன் தண்ணீர் எடுத்து வருவதற்குள் பாண்டியன் ஏன் ஓடினான் என்று பாண்டியனிடம் கேட்டுவிடுவோம்......

வீட்டை விட்டு வெகுதூரம் வந்ததும் பாண்டியன் பின்னால் வெட்ட போகும் ஆடு போலவே வந்த செல்வா கேட்டான்
“சாமி..என்னாச்சு? இப்பவாது சொல்லுங்களே”

“அத ஏன்டா கேக்குற?” என்று கூறி விட்டு விளக்கை தேய்த்ததையும்..ராம்ஸ் வந்ததையும் சொல்லி முடித்தார் பாண்டியன்.

“அது சரி சாமி...அப்பிடி என்ன வரம் கேட்டீங்க? அந்த பூதம் அதான் அந்த ராம்ஸ் ஏன் துரத்திச்சு?” என்றான் செல்வா. பாண்டியனும் சொல்ல ஆரம்பித்தார்.

“ராம்ஸ் எனக்கு ஒரு வரம் வேணும்”

“அடங்கொன்னியா...உனக்குமாடா? நான் என்ன வரம் இஸ்யூ பண்ற பேங்கா நடத்துறேன்.. சரி.. சீக்கிரம் கேள்றா” என்றது ராம்ஸ்.

“அது ஒன்னும் பெருசா இல்லை ராம்ஸ்! இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடி கேரளா பத்மநாபா கோவில்ல தங்கமா எடுத்தாங்கல்ல!” என்றார் பாண்டியன்.

“ஆமாடா... அதுக்கு என்ன இப்ப? அந்த தங்கமெல்லாம் லவட்டிகிட்டு வர சொல்றியா”

“அது இல்லை ராம்ஸ்... அந்த தங்கமெல்லாம் மொத்தம் எத்தனை பவனோ...அதவிட ஒரு பவன் தங்கம் எனக்கு கூட வேணும்” என்றார் பாண்டியன்! 

“டேய்ய்...உனக்கெல்லாம் இது நியாயமாடா? அடுக்குமாடா? அட நாயே..அத எண்ணி முடிக்கிறதுக்குள்ள உன் ஆயுசு முடிஞ்சிருமேடா? அதையெல்லாம் பஸ்பமாக்கி சாப்டவே உனக்கு இன்னொரு ஆயுசு வேணும்டா.. இன்னும் அஞ்சு  நிமிஷம் இங்க நின்ன...கொரவளைய கடிச்சு துப்பிபுடுவேன் ராஸ்கோல்...ஓடிப்போயிரு...  தங்கமாம்..தகரமாம்.... ஏதோ உன் ரேஞ்சுக்கு கடலை உருண்டை கேளு. ரெண்டு கம்மர்கட் கேளு...படுவா கிலோ கணக்குல தங்கம் கேக்குற? டேய்ய்..இன்னும் ஓடலியா நீ” என்று பயங்கரமாக கத்தியது ராம்ஸ்.

இந்த ஃபிளாஷ்பேக்கை பாண்டியன் சொல்லி முடித்ததும், செல்வா “அட போங்க சாமி..இதுக்கு ஏன் பூதத்துகிட்ட கேக்கணும் என்கிட்டே ஒரு ஐடியா இருக்கே” என்றான்.

பாண்டியனும் ஆர்வமாக “அட.. உன்னைய என்னமோ நினைச்சேன்டா..சொல்றா” என்றதும் செல்வா சொன்னான் “நான் வேணா அந்த கோவிலுக்கு போய் பழைய சிலைகளுக்கு பேரீச்சம் பழம்னு கூவுறேன்.. அவங்களும் ஆசைப்பட்டு அந்த தங்க சிலையெல்லாம் நம்மகிட்ட கொடுத்துருவாங்கல்ல” என்றான்!

“டேய்ய்... ஏன்டா இப்படி படுத்துற? வாய மூடிகிட்டு வர்றதுனா வா..இல்லை நான் கொலைகேசுல உள்ள போகணும்” என்று கூறிக்கொண்டே அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார் பாண்டியன்!

இந்தபக்கம் வீட்டில்.....

மயக்கமாக இருக்கும் அந்த பெண் முகத்தில் ரமேஷ்  தண்ணீர் தெளித்ததும்... மயக்கம் தெளிந்த அந்த பெண் ரமேஷை பார்த்து குழம்பினாள். 

“நீங்க....? என் எதிர்வீடுதானே? நீங்க எப்பிடி இங்க? அவன் எங்க?” என்றாள்.

இதைக்கேட்ட ரமேஷ் “அவங்க எதனாலயோ ஓடிட்டாங்க. நீ தனியாக நடந்து வருவதை பார்த்ததும் உன்னை ஃபாலோ பண்ணி வந்தேன்” என்றான்.

“நீங்க ஏன் என்னை ஃபாலோ பண்ணனும்” என்றாள் அவள்.

இதைக்கேட்ட ரமேஷ் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு... “இதப்பாரு இதுவரை உன் பேர் கூட எனக்கு தெரியாது.. ஆனா நான் உன்னை விரும்புறேன்..அத சொல்லத்தான் வந்தேன்” என்றான்.

இதைக்கேட்டதும் அதிர்ச்சியான அந்தப்பெண், “என்னை மன்னிச்சிருங்க.. அந்த நோட்டை எடுத்து பாருங்க உங்களுக்கே புரியும்” என்று தூரத்தில் கிடந்த அவள் நோட்டை காட்டினாள்.

நோட்டை எடுத்து புரட்டிய முதல் பக்கத்திலேயே.....

அன்பான ஜோதிக்கு ஜெயந்தின் காதல் அஞ்சலிகள்.....என்று இருந்தது!

அடுத்தடுத்த பக்கங்களை புரட்டிய ரமேஷ் காதல் கவிதைகளை பார்த்து வெறுத்துப்போன ரமேஷ்... அந்த பெண்ணிடம் ஒன்றும் சொல்லாமல் நோட்டை கொடுத்துவிட்டு ராம்சை திட்டுவதற்கு விளக்கை தேடினான். கடைசியில் மாடியில் இருப்பதை பார்த்ததும்.. அதை எடுத்து தேய்க்க ஆரம்பித்தான்.

உடனே வெளியே வந்த ராம்ஸ் “ஐயோ ஐயோ...இவனுக தொல்ல தாங்கமுடியலடா சாமி.. இப்ப என்னடா?” என்றது.

“போ ராம்ஸ் என்ன ஏமாத்திட்ட... அந்த பொண்ணு யாரோ ஜெயந்தாம் அவன் லவ் பண்ணுதாம்” என்றான்...

“படுவா தெரியுண்டா... அதுக்கு ஒரு வழி பண்ணிட்டேன்..கொஞ்சம் பொறு” என்றது ராம்ஸ்... இப்படி சொல்லிக்கொண்டிருக்கும்போதே....

வாசலில் கட முடா என சத்தம்.... பார்த்தால்.... முகம் முழுவதும் தாடி, அழுக்கு சட்டை, குளித்தே பல மாதங்கள் ஆனது போன்ற ஒரு தோற்றம், டாஸ்மாக்கில் இருந்து தள்ளாடி வெளியே வருபவனை போன்ற ஒரு நடையுடன் ஒரு பெரிய உருவம் கேட்டை அபூர்வ ராகங்கள் ரஜினி ஸ்டைலில் திறந்து உள்ள நுழைந்தது

ஆனால்..அந்த உருவத்தை வைத்துக்கொண்டு அந்த சின்ன வழியாக வரமுடியாமல்.. மிகவும் சிரமப்பட்டு காம்பவுண்ட் சுவரை ஏறிக்குதித்து வந்தான்..

அவனைப்பார்த்ததும்...ஓடிச்சென்ற ஜோதி “ஜெயந்த் என்ன கோலம் இது? என்னாச்சு உங்களுக்கு?” என்றாள்.

“ஜோதி... என்ன மன்னிச்சிரும்மா... உனக்கான ஜோடி நான் இல்லை... அந்த பையன் உன்கிட்ட புரபோஸ் பண்ணும்போது மறைஞ்சிருந்து கேட்டேன்... அவன்தாம்மா உனக்கு ஏத்த ஜோடி.. நான் இல்லைமா” என்றான் ஜெயந்த்!

“ஏன்..ஏன்..ஜெயந்த் இப்பிடி பேசுறீங்க” என்றாள் ஜோதி.

“ஏன்னா... எனக்கு மீல்சாலே ஹோல்சா போச்சோங்ர புது வியாதி இருக்கு. இன்னும் கொஞ்ச நாள்தான் உயிரோட இருப்பேன்” என்று கூறிக்கொண்டே அருகில்  வந்த  ரமேஷின் கைகளை ஜோதியோடு சேர்த்துவிட்டு.. ஜோதியின் பதிலை எதிர்பாராமல் வெளியே சென்றான்..மன்னிக்கவும்... ஏறிக்குதித்து சென்றான் ஜெயந்த்.

ரமேஷும் ஜோதியும் அதிர்ச்சியோடு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருக்க... ராம்ஸ் அவர்களை சந்தோசமாக பார்த்தது!

வெளியே வந்த ஜெயந்த், வேகமாக ஒரு ஓய்வறை சென்று ஓட்டு தாடியை எடுத்துவிட்டு ஆடைகளை மாற்றி.. புதிய தோற்றத்துடன் வெளியே வந்தான்...

“அப்பாடி...ஒரு வழியா ஜோதிய கழட்டி விட்டாச்சு! அதுக்கும் ஒரு இளிச்சவாயன் தோதா கெடச்சான்.. இத்தன நாள் சாட்ல பேசுன ஜெயஸ்ரீய இன்னிக்கு பார்க்கபோறேன்...பணக்காரி.. ஒருவழியா நம்ம லைப் செட்டில்” என்று நினைத்துக்கொண்டே ஜெயஸ்ரீய பார்க்கும் ஆர்வத்தில் சென்றான் ஜெயந்த்!

ஜோதியின் கைகளில் இருந்து கையை எடுத்த ரமேஷ்..கொஞ்சம் இரு என்று கூறிவிட்டு மேலே ராம்சை பார்க்க சென்றான்.. அங்கு அமைதியாக  நின்ற  ராம்சிடம்.. “எப்பிடி ராம்ஸ் இது?” என்றான்.

“படுவா..எல்லாம் உனக்காக நான் செய்த வேளை.. அந்த ஜெயந்த் மொன்ன நாயி.. ஒரு கழுதை வந்து கவிதான்னு  பேர் போட்டு சாட்ல வந்தாகூட பல்லு இளிக்குது அதான் இப்பிடி ஒரு செட்டப்பு... அந்த நாயி ஜெயஸ்ரீய தேடிப்போகுது...அங்க ஜெயஸ்ரீயும் இருக்காது செத்தஸ்ரீயும் இருக்காது.. என்ஜாய்ய்ய்” என்று கூறிக்கொண்டே விளக்கினுள் சென்று மறைந்தது!

விளக்கை கையில் எடுத்துக்கொண்ட ரமேஷ்... ஜோதியையும் அழைத்துக்கொண்டு வெளியில் வந்தான்... வெளியேறும் முன் மூலையில் ஒரு கிணறை பார்த்தவன்...ஒரு முடிவு செய்தவாறு அங்கு சென்று அந்த விளக்கை கிணற்றுக்குள் போட்டான்! இதை புரியாமல் பார்த்த ஜோதியை  சிரித்துக்கொண்டே  ஆதரவாக அணைத்துக்கொண்டே...நடக்க ஆரம்பித்தான் ரமேஷ்!

கிணற்றுக்குள் மூழ்கிய விளக்கினில் இருந்து ராம்ஸ் நினைத்தது...

“அடங்கொன்னியா... இவ்ளோ உதவி செஞ்சோம்? பொசுக்குன்னு உள்ள தூக்கி போட்டு போயிட்டானே? அதுசரி.... ஃபிகர பார்த்ததும் ஃபிரண்ட கட் பண்ற கேவலமான பயலுகதானே இந்த மனுசப்பயலுக...முன்னூறு வருசமா குளிக்காம இருந்த என்னை இப்ப குளிக்க  வச்சு ஒரு கட்டிங் அடிக்க யோசிக்க வச்சிட்டானே” என்று  நினைத்தவாறே  தண்ணீருக்குள் தன் தூக்கத்தை தொடர்ந்தது ராம்ஸ்!
(முற்றும்)

Monday, July 25, 2011

அஞ்சு பத்துக்கு அலையும் ரமேசும் அற்புத விளக்கும்! - 6

”நான் வேணா மிஸ் மரியாதையா பேசட்டுமா?”
முந்தைய பாகங்கள்: பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5

அவள் நடப்பதை தூரத்தில் பார்த்துக்கொண்டே வந்த ரமேஷ் வேகமாக வீட்டுக்குள் சென்றான்.. அங்கு அருண் பேரீச்சம் பழம் தின்று கொண்டிருப்பதை பார்த்ததும்...”ஏன்டா நாயே? முன்னாடியே பேரீச்சம் பழம் இருக்குன்னு சொல்லிருந்தா நான் இவ்ளோ தூரம் போயிருக்கமாட்டேன்ல? இப்ப பாரு அந்த பொண்ணு எங்கயோ போய்கிட்டு இருக்கு” என்றான்...

இதைக்கேட்ட அருண் அதிர்ச்சியாகி..”டேய்ய்.. என்னடா சொல்ற? நீதான் என்கிட்டே கொடுக்க சொன்னேன்னு சொல்லி ஒருத்தன் கொடுத்துட்டு போறான்டா” என்றான்..

இதைக்கேட்ட ரமேஷ் மேலும் குழப்பமாகி.. ”டேய்ய்....நான் ஒண்ணுமே சொல்லடா யார்கிட்டயும்... அதுசரி...அவன் என்ன சும்மாவா கொடுத்துட்டு போறான்?” என்றான் ரமேஷ்.

“போடாங்... சும்மா கொடுக்க அவன் என்ன உன்னை மாதிரி லூசா? இங்க இருந்த பழைய விளக்க தூக்கி கொடுத்தேன்.. பத்து பேரீச்சம்பழம் கூடவே கொடுத்துட்டு போய்ட்டான்” என்று பெருமைப்பட்டான் அருண்!

இதைக்கேட்ட ரமேஷுக்கு தலையே வெடித்தது போல் இருந்தது.. ரெண்டு இட்லி கம்மியா இருந்தாகூட தாங்கிக்கொள்ளும் அவன் இதயம் இதைத்தாங்காமல்... ”போடாங்....நல்லா வருது வாயில.. திண்ண பரோட்டா வெளில வந்துருமேன்னு பேசாம போறேன்” என்று கூறிக்கொண்டே வீட்டை விட்டு வெளியேறினான்!

இதை ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த அருணும் பூட்டி சாவியை வைத்துவிட்டு அவன் வீடு நோக்கி நடந்தான்!

இதற்கிடையில்... போலிஸ் வாகனத்தை பார்த்து பயந்து போன பாண்டியனும் செல்வாவும்.. உடனே லாட்ஜை காலி செய்து ரமேஷ் வீட்டுக்கு அடுத்த தெருவிலே அவசரகதியில் ஒரு வீட்டை பார்த்து வந்திருந்தனர்... அங்குதான் இப்பொழுது பாண்டியன் செல்வாவுக்காக காத்துக்கொண்டிருந்தார்!

அந்த பெண் பின்தொடர்வதை அறிந்த செல்வா..கொஞ்சம் வேகமாக நடந்து அந்த பெண் பார்வையில் இருந்து மறைந்து..அவசரமாக அவர்கள் புதிதாக வந்த வீட்டை அடைந்தான்! செல்வாவை விளக்கோடு பார்த்த சந்தோஷத்தில் பாண்டியன் வழக்கம்போல புரியாத தமிழில் பேச ஆரம்பித்தார்! இதைப்பார்த்த செல்வா கொஞ்சம் அரண்டு போய்.. அந்த நோட்டை எடுத்துக்கொண்டு வராண்டாவில் உட்காந்தான்.. இதை எதிர்பார்த்த பாண்டியனும்..அந்த விளக்கோடு மாடியில் உள்ள ஓர் அறையை நோக்கி போனார்! நாம் தேய்த்தால் அந்த பூதம் வருமா என்ற சந்தேகத்தோடு அதை தேய்க்க ஆரம்பித்தார்.......

செல்வா போன திசையில் வந்த அந்த பெண்ணும்.. வழியில் உள்ளவர்களிடம் செல்வாவின் அடையாளத்தைக்கூறி கேட்டுக்கொண்டே அந்த வீட்டை அடைந்தாள் அந்த பெண்...

அதேசமயம்...அந்த பெண்ணின் அடையாளத்தைக்கூறி கேட்டுக்கொண்டே அந்த பெண்ணை தேடி வந்து கொண்டிருந்தான் ரமேஷ்.....

பாண்டியன் விளக்கை தேய்க்க ஆரம்பித்ததும் வெளியில் வந்த ராம்ஸ் பாண்டியனை பார்த்து அதிர்ச்சியாகி... ”அடங்கொன்னியா... படுவா நீ யார்ரா? ஏன்டா..நாயே..கண்டவனெல்லாம் கை வெக்கிரதுக்கு இது என்ன கார்ப்பரேசன் பம்பா? வெளக்குடா... வெளக்கு.. அது சரி... பருத்திக்கொட்டைக்கு பட்டு சட்டை போட்ட மாதிரி இருக்க உனக்கு எங்க தெரியப்போகுது?”

 ராம்சின் என்ட்ரியை பார்த்து  பயந்துபோன பாண்டியன் ஓரமாக பம்மினார்....  ”ஹேய்...இங்க வா..ஏன் பம்முற? இப்ப எதுக்கு நீ தேய்ச்சேன்னு சொல்லலைனா..படுவா..மூஞ்சிலே அப்பிப்புடுவேன்..சொல்றா ராஸ்கோல்” என்றது ராம்ஸ்!

“அது ஒன்னுமில்லைங்க ஐயா...” என்று வாயெடுத்த பாண்டியனை இடைமறித்த ராம்ஸ்..
”ஏய்..நிறுத்து...நிறுத்த்த்து.....ஆங்..இவருக்கு அப்பிடியே இளமை ஊஞ்சலாடுது..இவரு என்னைபார்த்து ஐயா.. சொய்யானுகிட்டு... படுவா.. ராம்சுன்னு சொல்றா”.என்றது! அது இல்லை ராம்ஸ்..

“எனக்கு ஒரு வரம் வேணும் ராம்ஸ்” என்றார் பாண்டியன்....

இந்தப்பக்கம்.....

வெளியே கேட்டை திறந்துகொண்டு வந்த அந்த பெண்ணைப்பார்த்து அதிர்ச்சியான செல்வா விரைவாக அந்த நோட்டை பின்பக்கமாக மறைத்தான்! இதைப்பார்த்துவிட்ட அந்த பெண்ணும்.. ”என்னங்க மறைக்கிரிங்க?” என்றாள்..

உடனே செல்வா.. ”நான் எங்க முறைக்கிறேன்? நீங்கதான் இப்ப என்னை பார்த்து முறைக்கிறீங்க” என்றான்!

இதைக்கேட்ட அந்த பெண்..”ஐயோ.. நீங்க பின்னாடி மறைச்சத சொன்னேன்” என்றாள்..

”என்னங்க நீங்க? உங்களுக்கு தெரிஞ்சேதான் மறைச்சிருக்கேன்.. அப்ப.. உங்களுக்கு முன்னாடி மறைச்சததானே அர்த்தம்? அப்புறம் ஏன் பின்னாடி மறைச்சேன்னு பொய் சொல்றீங்க”

இதைக்கேட்டு கடுப்பானாள் அந்த பெண்.. ”ஹலோ... மிஸ்டர் மரியாதையா பேசுங்க”

“சாரிங்க... எனக்கு மரியாதையா பேச தெரியும்..ஆனா நீங்க சொன்ன அந்த மிஸ்டர் மரியாதையா பேச தெரியாது... நான் வேணா உங்கள மிஸ்னு கூப்ட்டு மிஸ்  மரியாதையா பேசவா” என்றான் செல்வா!

அந்த பெண்ணுக்கு லேசாக தலைசுற்ற ஆரம்பித்தது...”சார்..ப்ளீஸ் சார்... நீங்க எடுத்துட்டு வந்த என் நோட்ட தாங்க நான் என் வீட்டுக்கு போகணும்” என்றாள்!

“என்னம்மா லூசா நீ? இப்பகூட நீ என் வீட்லதானே இருக்க”

இதைக்கேட்ட அந்த பெண்.. இருந்த கொஞ்சம் தெம்பும் போய் அந்த இடத்திலே மயங்கி விழுந்தது... இதைப்பார்த்த செல்வா அதிர்ச்சியாகி... ’இப்பிடி மயங்கிருச்சே?.. நம்ம அழகுல மயங்குனுச்சா...இல்லை அலும்புல மயங்குனுசான்னு தெரியலையே’ என்று நினைத்துக்கொண்டு.. அந்த பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்தான்......

அதே நேரம் மாடியிலிருந்து வேகமாக ஓடிவந்த பாண்டியன்... கையில் கிடைத்த துணிகளை பைகளில் அமுக்கிக்கொண்டு..”டேய்ய்... நாதாரி... சீக்கிரம் கிளம்புடா” என்றார்.. சொல்லிக்கொண்டிருக்கும்போதே அந்த பெண்ணை பார்த்தவர்.. ”இது யார்ரா?” என்றார்..

சொல்ல வாயெடுத்த செல்வாவை அடக்கி விட்டு..”சரி..அதெல்லாம் போறப்ப பேசலாம்...சீக்கிரம் கிளம்பு” என்று கூறிக்கொண்டே...கிட்டத்தட்ட செல்வாவை இழுத்துக்கொண்டு வெளியேறினார்..

“என்னாச்சு சாமி?” என்றான் செல்வா..

”நாம உயிரோடு இருக்கனுமா வேண்டாமா?” என்றார் பாண்டியன்..

இதைக்கேட்டு அதிர்ச்சியான செல்வா.. ”ஆமா சாமி” என்றான்..

“அப்ப நாம இங்க இருந்து கிளம்பனும்.. இன்னும் அஞ்சு நிமிடம் இருந்தோம்.. அந்த பூதம் நம்மள கொன்னுரும்.” என்று கூறிக்கொண்டே..அந்த பெண்ணை அப்படியே விட்டு விட்டு வீட்டை விட்டு அவசரமாக வெளியேறினர்!

இதை தூரத்தில் பார்த்துக்கொண்டே வந்த ரமேஷ்.. அந்த வீட்டினுள் நுழைந்து அந்த பெண் மயங்கி கிடபதைப்பார்த்தான்.......

Friday, July 22, 2011

அஞ்சு பத்துக்கு அலையும் ரமேசும் அற்புத விளக்கும்! - 5


முந்தைய பாகங்கள்: பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4

"அடங்கொன்னியா?....இது அந்த பொண்ணுக்கு தெரியுமாடா" என்றது ராம்ஸ்!

"தெரியாது ராம்ஸ்" என்றான் ரமேஷ்!

”அதானே பார்த்தேன்..தெரிஞ்சிருந்தா இன்னுமா அந்த பொண்ணு உயிரோட இருக்கும்?"

இதைக் கேட்ட ரமேஷ்..”ராம்ஸ் நீ என் அண்ணன் மாதிரி.....” என்றான் கையை பிடித்துக்கொண்டே!

“சரி..சரி....செண்டிமெண்டல் லாக்.. அந்த பொண்ணு உனக்குத்தான்” என்றது ராம்ஸ்!

“ஆனா ராம்ஸ் அந்த பொண்ணு அப்பன்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்..எப்ப பார்த்தாலும் அருவாளோட திரியுறான்”

“ஆங்..ஆ..அப்பிடியே அவரு சீவிட்டாலும்... மொதல்ல அவன தலைய சீவ சொல்லுடா..தேங்கா மூஞ்சி தலையன்”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே வெளியில் கேட் திறக்கும் சத்தம் கேட்டது...யாரென்று ஜன்னல் வழியாக எட்டி பார்த்த ரமேஷ்..அதிர்ச்சியானான்! அங்கு அருண்பிரசாத் நின்று கொண்டிருந்தான்!

அருணைப்பார்த்த ரமேஷ் அதிர்ச்சியாகி...இந்த நேரத்துல இவன் ஏன் இங்க வர்றான் என்று நினைத்துக்கொண்டே..வேகமாக ராம்ஸிடம் வந்து, “ராம்ஸ்..ராம்ஸ்....என் பிரெண்ட் வரான்..நீ வேகமா ஒளிஞ்சிக்க...இல்லைனா அவன் ஏகப்பட்ட கேள்விகள் கேட்பான்” என்றான் ரமேஷ்.

இதைக்கேட்ட ராம்ஸும்....வேகமாக விளக்கினுள் சென்று மறைந்தது! இதைப்பார்த்த ரமேஷ் ரிலாக்ஸ் ஆகி.. கதவை திறந்து விட்டு, “வா மச்சி... என்ன வேலை விட்டு நேர இங்க வந்துட்டியா? எதுவும் முக்கியமான விசயமா?” என்றான்.

“காலைல அந்த பொண்ணை சரியா கூட பார்க்காம போயிட்டேன்.. அதான் இப்ப பார்த்து உனக்காக பேசலாம்னு வந்தேன்” என்றான் அருண்

“சரி மச்சி.. நல்ல நேரத்துல வந்த... வா மச்சி சாப்டவே இல்ல மச்சி..ஏதாவது வாங்கி தா”

இதைக்கேட்ட அருண் கடுப்பாகி, “இதே பொழப்பா போச்சுடா உனக்கு? வேணா ஒன்னு பண்ணு..காசு தரேன் போய் சாப்டு எனக்கும் ஏதாவது வாங்கிட்டு வா..எனக்கும் பசிக்குது..ஆனா நடக்கவெல்லாம் முடியாது.. டயர்டா இருக்கு” என்றான்.

இதைக்கேட்ட ரமேஷ் காதுகளில் சற்குனராஜ் திரும்பவும் வாசிக்க ஆரம்பித்தார்.. குதித்துக்கொண்டு வெளியே சென்றான்!

ரமேஷ் அந்த பக்கம் சென்றதும்..எதிர்வீட்டு பெண் யாருடனோ போனில் பேசிக்கொண்டே வந்தது.... வீடு வந்ததும் உள்ளே செல்லாமல் கையில் உள்ள நோட்டை காம்பவுண்டில் வைத்து விட்டு காம்பவுண்ட் மறைவில் நின்று பேசிக்கொண்டிருந்தது!

இந்த பக்கம்.போன ரமேஷை ஆளை காணாமல் கடுப்பான அருண் என்ன செய்வதென்று தெரியாமல் ஓரமாக வைத்திருந்த அந்த விளக்கை எடுத்து வைத்து பார்த்துக்கொண்டிருந்தான்!

இதே வேளையில் விளக்கை கைப்பற்ற திட்டம் தீட்டிய பாண்டியனும் செல்வாவும்...ரமேஷ் ஒரு தீனி பைத்தியம் என்பதை தெரிந்துகொண்டு பழைய பொருட்களுக்கு பேரீச்சம்பழம் தருபவன் போல செல்வாவை மாற்றி அனுப்பி வைத்தார் பாண்டியன்! இதோ செல்வாவும் ரமேஷின் வீட்டை அடைந்து விட்டான்

போன் பேசிக்கொண்டிருந்த அந்த பெண்ணை ஓரப்பார்வையில் பார்த்தபடியே அழைப்பு மணியில் கைவைத்தான் செல்வா! கதவை திறந்த அருண் செல்வாவை புரியாமல் பார்க்க..செல்வாவும் அருணை புதிதாக பார்த்தான்...

செல்வா சமாளித்தவாறே, “வீட்ல யாரும் இல்லையா சார் என்றான்” உடனே அருண்.

“ஏன் என்னை பார்த்தா உனக்கு மனுசனா தெரியலையா” என்றான்!

செல்வாவும் விடாமல் “பார்த்தா தெரியுது சார்..ஆனா நான் உங்கள பார்க்கலைன்னு சொன்னா என்ன பண்ணுவிங்க?” என்றான்.

ஏற்கனவே பசியில் இருந்த அருண் கடுப்பாகி “உனக்கு இப்ப என்ன வேணும் சொல்லு” என்றான்!

உடனே செல்வாவும் “உனக்கு என்ன வேணும்” என்று சொல்லிவிட்டு “சொல்லிட்டேன் சார்” என்றான்!

கடுப்பான அருண் “டேய்ய்.... உனக்கு என்னதாண்டா வேணும்?”

“வேற என்ன சார் கேக்கபோறேன்? அழகான வீடு.. அன்பா மனைவி.. அறிவான புள்ளைகள் இதுதான் சார் எனக்கு வேணும்”

“அவ்வ்வ்வ்.. சாவடிக்கிறானே?.. டேய்ய்..அது இல்லைடா இங்க யார பார்க்க வந்தன்னு கேட்டேன்?” என்றான் அருண்.

“ஓ..அதுவா சார்.. நான் உங்கள பார்க்க வரல.. ஆனா இப்ப உங்களை பார்த்திட்டேனே? அப்ப யார பார்க்க வந்தன்னு சொல்லுங்க பார்ப்போம்” என்றான் செல்வா.

இதைக்கேட்டு மேலும் கடுப்பான அருண் “டேய்..என்ன கொலைகாரனா மாத்தாத.. ஒழுங்...” இப்படி அருண் சொல்லும்போதே இடைமறித்த செல்வா “கோவிச்சுக்காதிங்க சார்....ரமேஷ் சார வழில பார்த்தேன்... வீட்ல ஒரு பழைய விளக்கு இருக்காம்..அதை எடுத்துகிட்டு கொஞ்சம் பேரீச்சம் பழத்த உங்கள்ட்ட கொடுத்துட்டு போக சொன்னார்” என்றான்.

உடனே அருணும் மகிழ்ச்சியாகி ‘பரவாயில்லையே நண்பன் நமக்காக யோசிச்சிருக்கானே’ என்று நினைத்துக்கொண்டு அவ்வளவு நேரம் கையில் வைத்திருந்த விளக்கை அவனிடம் எடுத்து கொடுத்துவிட்டு பேரீச்சம் பழங்களை வாங்கி வைத்து திங்க ஆரம்பித்தான்!

கைகளில் விளக்கை வாங்கிய செல்வா சந்தோசமாக வெளியே வந்த வேளையில்.. அதுவரை அங்கு நின்று பேசிகொண்டிருந்த அந்த எதிர் வீட்டு பெண் அங்கு இல்லை..ஆனால் அவள் சுவற்றின் மீது வைத்த நோட்டு மட்டும் அப்படியே இருந்தது.. அதைப்பார்த்த செல்வாவுக்கு கைகள் அரித்து..அந்த நோட்டையும் எடுத்துக்கொண்டு நடந்தான்... கொஞ்ச நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த அந்த பெண் நோட்டை காணாமல் திகைக்க.. தூரத்தில் செல்வா நோட்டுடன் நடப்பது தெரிந்து அவனை பின்தொடர்ந்தாள்!

தூரத்தில் வந்து கொண்டிருந்த ரமேஷ் இதைப் பார்த்து அதிர்ச்சியாகி.........

Wednesday, July 20, 2011

அஞ்சு பத்துக்கு அலையும் ரமேசும் அற்புத விளக்கும்! - 4


முந்தைய பாகங்கள்: பாகம் 1, பாகம் 2 , பாகம் 3
 
போலிஸ் வாகனத்தை பார்த்து பயந்துபோன பாண்டியனும் செல்வாவும் அந்த இடத்தை விட்டு மெதுவாக நழுவினர்..கொஞ்ச தூரம் சென்றதும் பாண்டியனிடம் செல்வா கேட்டான்..

”ஏன் சாமி..இவ்ளோ கஷ்டப்பட்டு விளக்க அவருகிட்ட விட்டு வந்துட்டோமே?”

“அட விட்ரா...அந்த நாதாரிக்கு அத வச்சு என்ன பண்ணனும்னே தெரியாது.. அந்த டாக் நேர வீட்டுக்குத்தான் போகும்.நாம வேற பிளான் பண்ணி அந்த விளக்க அவன்கிட இருந்து பறிச்சிருவோம்” என்று கூறிக்கொண்டே ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறி லாட்ஜை நோக்கி சென்றனர்!

------------------------------------------------

போலீஸ் வாகனத்தை பார்த்து பயந்துபோன ரமேஷ் பேஸ்மென்ட் வீக்கான வடிவேலு மாதிரி நின்றுகொண்டிருந்தான்..ஆனால் ஜீப்பில் இருந்து இறங்கிய காவலர்கள் இரண்டுபேரும் பக்கத்துக்கு பெட்டிகடையில் இரண்டு சிகரெட் வாங்கி பற்றவைத்துக்கொண்டு புகையை இவன் மூஞ்சியில் ஊதிவிட்டு சென்றனர்! ரமேஷ் தன் விதியை நொந்துகொண்டு சாப்பாடும் இல்லாமல் சாப்பாட்டுக்கு காசும் இல்லாமல் போற வர்ற வண்டியில் எல்லாம் லிப்ட் கேட்டு வீடு வந்து சேர்ந்தான்!

எப்படியோ வீடு வந்து சேர்ந்த ரமேஷ் கையில் விளக்கை வைத்துக்கொண்டு புலம்ப ஆரம்பித்தான்..அவன் அண்ணன் மாதவனும் அப்பாவும் வேலையில் இருந்து இன்னும் வரவில்லை..அண்ணி பிரசவத்திற்காக அவள் அம்மா வீடு சென்றிருந்தாள்..அம்மா அவன் அக்கா வீட்டுக்கு சென்று ஒரு வாரம் ஆகி விட்டது! தனியாக வயிற்றில் பசியோடும் மனதில் எதிர் வீட்டு பெண்ணை பற்றிய ஆசையோடும் புலம்பி கொண்டிருந்தான்!

”ச்ச்சே... இங்க வீட்டுக்கு வந்ததுக்கு பேசாம மைலாப்பூர் போயிருந்தா கபாலீஸ்வரர் கோயில் அன்னதானத்துலயாவது சாப்ட்ருக்கலாம்....அருண் வேலை பார்க்கிற இடத்துக்கு போயிருந்தா திட்டிகிட்டே ரெண்டு டீயாவது வாங்கி கொடுத்திருப்பான்..”.

திடீரென்று ஞாபகம் வந்தவனாய் போனை எடுத்து வெங்கட்டுக்கு டயல் செய்தான்... மறுமுனையில் ரிங் சென்றது... ”ஹலோ...மச்சி நான் ரமேஷ் பேசுறேன்..”.

மறுமுனையில் ”சொல்றா எப்பிடி இருக்க?.. ”

”நான் நல்லயிருக்கனும்னா உன் ஹெல்ப் வேணும்.”

”அப்பிடியா? சொல்லு..என்ன வேணும்?”

”நாலு மணி நேரமா சாப்புடவே இல்ல மச்சி..வந்து சாப்பாடு வாங்கி கொடுத்துட்டு போடா... ”

மறுமுனையில் அமைதி நிலவியது...

”மச்சி கேக்குதா?..”

”ம்ம் ...ஓக்கே.... ” என்று வெங்கட் சொன்னதும் மனதுக்குள் இளையராஜா....ச்சீ..இல்ல...சற்குனராஜின் ஆல்பம் சத்தம் இல்லாமல் ஓடியது...

ஆனால்..மறுமுனையில் வெங்கட் “பட் ஒன் கண்டிசன்..” என்றான்!

“என்ன மச்சி?”

”நான் உனக்கு சாப்பாடு வாங்கி தரணும்னா...2015 கிரிக்கெட் வோர்ல்ட் கப்போட டைம் டேபிள் தர்றேன்... அதுல யார் யார் ஜெயிப்பாங்கன்னு எனக்கு வீட்டு அட்ரசோட எழுதி அனுப்பு... எல்லாம் சரியா இருந்தா வந்து சாப்பாடு வாங்கி தரேன்.. ஆனா மச்சி..ரெண்டு பேர் சரியா சொன்னா உனக்கு பாதி சாப்பாடுதான் இப்பவே சொல்லிட்டேன்” என்றான் வெங்கட்!

இதை கேட்டதும் கடுப்பான ரமேஷ்.. ”போன வைடா அயோக்கிய ராஸ்கல்... நீ ஆணியே புடுங்க வேண்டாம்” என்று மீண்டும் தனியாக புலம்ப ஆரம்பித்தான்.... இப்படி புலம்பிகொண்டிருக்கும்போதே அவனை அறியாமல் அந்த விளக்கை அழுத்தி தேய்த்துவிட்டான்!

விளக்கை தேய்த்த கொஞ்ச வினாடியில்..அதிலிருந்து புகையாய் வந்தது! பயந்துபோன ரமேஷ் விளக்கை தூர வைத்துவிட்டுஅதையே பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று அதில் இருந்து கிளம்பிய ஓர் உருவம்..அந்த கால விட்டாலாச்சார்யா படங்களில் பார்ப்பது போலவே இருந்தது!

வந்ததுமே ரமேஷை பார்த்து “அடங்கொன்னியா...ஏன்டா தவள வாயா...? கைய வச்சுக்கிட்டு சும்மா இருந்த என்னடா? சும்மா இருந்த புண்ன சொறிஞ்சு விட்ட மாதிரி வெளக்க ஏன்டா தேச்சு என்னை கெளப்பி விட்ட?” என்று கேட்டது..

ரமேஷுக்கு பீதியில் பேதி மட்டும்தான் ஆகல....நின்ன இடத்திலே மூச்சா போய் விட்டான்...

இதைப்பார்த்த பூதம் கடுப்பாகி.. ”ஏன்டா நாசமாபோறவனே... உச்சா போற எடமாடா இது?” என்றது...

ரமேசுக்கு இன்னும் பயத்தில் பேச்சே வரவில்லை..பூதமும் விடாமல்.... ”படுவா..செய்யுறதையும் செஞ்சிபுட்டு உக்காந்துருக்கத பாரு?.. நமீதா மூஞ்சிய பக்கத்துல பார்த்த மாதிரி? இப்ப எதுக்குடா என்னை சொறிஞ்சு விட்ட..ச்சீ..எழுப்பி விட்ட?” என்றது..

பயந்துபோன ரமேஷ் பயத்துடனே..”ஐயோ எனக்கு ஒண்ணுமே தெரியாது..நான் வேணுமுன்னே இதை செய்யல” என்று கூறிக்கொண்டே கொஞ்சம் பயம் தெளிந்தவனாய்....”ஆமா நீ யாரு? உன் பேர் என்ன? நீ எப்பிடி இதுக்குள்ள வந்த?” என்று கேள்விகளை அடுக்கினான்!

"ஆங்..ஆ..இவரு பெரிய சி.பி.ஐ? அப்பிடியே கேள்வியா அடுக்குராறு? ஒரு வேளை ஓசி சோத்துக்கு சிங்கி அடிக்கிற மொன்ன நாயிக்கு பேச்சை பாரு? லொள்ள பாரு?" என்று பூதம் ரவுசு காட்டியது.
 
பிறகு அதுவே அமைதியாகி.."சர்தான் நாயே...உனக்கு ராமாயணம் தெரியுமாடா" என்றது! ரமேஷ் தெரியாது என்று சொல்லவும்..பூதம் நல்லவேளை என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு.."அது வந்துடா நாயே.. பாரதப்போர்ல(??!!) நான் ராமனுக்கு ஹெல்ப் செஞ்சு ரெம்ப டயர்ட் ஆயிட்டேண்டா..அதுக்காக ராமரு எம்மேல இரக்கப்பட்டு நான் ரெஸ்ட் எடுக்கனும்னு இந்த விளக்குல வச்சு அடசிட்டாறு..பூர்வ ஜென்மத்துல யாரு ராமனுக்கு உதவி செஞ்சாங்களோ..அவங்க இந்த வெளக்க தேச்சா நான் வெளில வரலாம்னு சொன்னாரு..அதான்.நீ தேக்கும்போது நான் வர வேண்டியதா போச்சுடா..ஃபிளட்டி இடியட் .. சரி..வந்தது வந்துட்டேன் உனக்கு ஏதும் ஹெல்ப் வேணும்னா கேள்றா நாயே.." என்றது!
 
இதைக்கேட்ட ரமேஷ் பூதத்திடம் உள்ள பயம் தெளிந்து... "முதல்ல உன் பேர மாத்தணும்..அது என்ன ராமன் அடிமை? இனிமே சுருக்கமா ராம்ஸ்..இதுதான் உன் பேர் சரியா?" என்றான்!

"சர்தான்டா நாயே..மேல சொல்லு என்றது ராம்ஸ் இன்னொரு கண்டிசனும் சொன்னது.. படுவா.. என்கிட்டே அது வேணும் இது வேணும்னு நொய்..நொய்
ங்ககூடாது... உனக்காக ஒன்னே ஒன்னு செஞ்சு தரேன்..கேளு" என்றது! 
 
ரமேஷ்க்கோ  சரியான பசி! சாப்பாடு வேணும்னு கேட்ப்பதற்கு வாயெடுத்தவன்.. எதிர் வீட்டு பெண்ணின் நினைவு வந்ததும்.. "ராம்ஸ்.. எதிர் வீட்ல  உள்ள பொண்ண நான் லவ் பண்றேன் எங்கள நீதான் சேர்த்து வைக்கணும்" என்றான்! 
 
"அடங்கொன்னியா? "  ராம்ஸ் பெரிய ஜெர்க் கொடுத்தது!

Monday, July 18, 2011

அஞ்சு பத்துக்கு அலையும் ரமேசும் அற்புத விளக்கும்! - 3


முந்தைய பாகங்கள்: பாகம் 1, பாகம் 2

வீட்டை விட்டு அருவாளோடு வெளியே வந்த பாபு..இவர்கள் இரண்டுபேரையும் பார்த்துவிட்டு அருகில் வந்தார்..
"தம்பிகளா நீங்க யாரு? இங்க ஏன் நிக்கிறீங்க" என்றார்..

ரமேஷ் முந்திக்கொண்டு "அங்கிள் நான் இந்த வீட்லதான் இருக்கேன். இவன் என் பிரண்ட் சும்மா என்னைய பார்க்க வந்தான்" என்றான்..

பாபு கொஞ்சம் சமாதானம் ஆனவராக காம்பவுண்டில் இருந்த காக்கைகளை விரட்டிக்கொண்டே வீட்டுக்குள் சென்றார்! மனதுக்குள்.."இன்னிக்குகூட இதுல எது ஆம்பள காக்கைன்னு கண்டுபிடிக்க முடியலையே"ன்னு புலம்பிக்கொண்டே போனார்... கொஞ்ச நேரத்தில் அருணும் கிளம்பிவிட ரமேஷ் மதியான சாப்பாட்டுக்கு யாரை பிடிக்கலாம் என்று யோசிக்க துவங்கினான்!

--------------------------------------------------

காலையில் இருந்து அலைந்து திரிந்து ஒருவழியாக ரமேஷ் வீட்டை கண்டுபிடித்த பாண்டியனும் செல்வாவும் ரமேஷ் வீட்டு அழைப்பு மணியை அழுத்த... கதவை திறந்த ரமேஷ் இவர்களை ஒரு கேள்வியோடு  பார்த்தான்!

"இங்க ரமேஷ்ங்கிறது யாரு?" பாண்டியன் கேட்டார்...

"நான்தான் ரமேஷ் என்ன வேணும்" என்றான் ரமேஷ்!

உடனே செல்வா.."போங்க சார்..இப்ப மட்டும் உடனே சொல்றீங்க?.. நேத்தே சொல்லியிருந்தா நாங்க தேவையில்லாம அலைஞ்சிருக்க மாட்டோம்ல.." என்றான்!

அவனை இரவு நேர இட்லியை பங்கு போட வந்த தெருநாயை பார்ப்பது போல பார்த்த ரமேஷ்.."உங்களுக்கு என்ன வேணும்?" என்று திரும்பக்கேட்டான்!

உடனே பாண்டியன் முந்திக்கொண்டு.. "உங்க உதவி எங்களுக்கு தேவைப்படுது" என்றார்..

"என்ன உதவி.. உதவி பண்ணினா சாப்பாடு வாங்கி தருவீங்களா?" என்றான் ரமேஷ்..

"சின்ன உதவிதான்..எங்களோட வந்து வெளக்கு..”  .பாண்டியன் சொல்லி முடிப்பதற்குள் ரமேஷ் முந்திக்கொண்டு...”யோவ்..அதுக்கெல்லாம் வேற ஆள பாருங்க...வெளக்காம்ல..வெளக்கு..” என்று கோவமாக கத்த ஆரம்பித்தான்!

ஒன்றும் புரியாமல் முழித்த பாண்டியன்..”ஏங்க கோவப்படறீங்க? எங்க கூட வந்து ஒரு கடைல உள்ள வெளக்க எடுத்து தரனும்.. அததான் சொல்லவந்தேன்” என்றார்!

”என்னது..? வெளக்க எடுத்து தரணுமா? நான்கூட தப்பா நெனச்சிட்டேன்” என்று அசடு வழிந்தான் ரமேஷ்! ”அது சரி....ஏன் அந்த வெளக்க நான் எடுக்கணும்? நீங்களே எடுக்க வேண்டியதுதானே?” என்று கேட்டான்...

என்ன சொல்வது என்று முழித்த பாண்டியனை முந்திக்கொண்டு செல்வா சொல்ல ஆரம்பித்தான்.. ”அந்த விளக்கு சாதாரண விளக்கு இல்ல...அது சக்தி வாய்ந்தது... அத எடுக்கணும்னா பத்து பேருக்கு அன்னதானம் போட்டு அந்த பத்து பேரும் சேர்ந்து எடுத்தாதான் எடுக்கமுடியும்.. நாங்க பத்து பேர எங்க தேடிப்பிடிக்கிறது? அதான் உங்ககிட்ட வந்தோம்..இந்த ஏரியாவுலே பத்து பேரு சாப்பாட்ட மொத்தமா சாப்டுற ஒத்த ஆளு நீங்கதான்னு சொன்னாங்க.. அதான் உங்கள வெச்சே எடுக்கலாம்னு முடிவு பண்ணினோம்” என்றான்!

நம்ம புகழ் அந்த அளவு பரவிருச்சா என்று ஆச்சர்யபட்ட ரமேஷ்..

“இதை நான் எடுத்து தந்தா எனக்கு என்ன லாபம்” என்றான்!

”நாமம்தான்...” என்றான் செல்வா...

”என்ன..என்ன..?”

பாண்டியன் இடைமறித்து.. ”இங்க பாரு.. எனக்கு வசியமெல்லாம் தெரியும்..எதிர்வீட்டு பொண்ண நீ டாவடிக்கிறது எனக்கு தெரியும்...இதை எடுத்து தந்தா அந்த பொண்ணையும் வசியம் பண்ணி உன்னையே லவ் பண்ண வைக்கிறேன் போதுமா?” என்றார்!

ஓரளவு சமாதானம் ஆன ரமேஷ் சரி வாங்க போகலாம்..பேச்சு மாறக்கூடாது என்று கூறிக்கொண்டே அந்த கடையை நோக்கி மூவரும் செல்ல ஆரம்பித்தார்கள்!

மூவரும் ஒருவழியாக மவுண்ட் ரோட்டில் உள்ள அந்த மங்குனி காயலாங்கடையை  அடைந்தார்கள்.. கடை கொஞ்சம் பெரிதாக இருந்தது.. அந்த நேரத்தில் கடையில் கல்லாவில் உள்ளவரை தவிர யாரும் இல்லை.. உள்ளே சென்றதும் பார்வையை ஓட விட்ட பாண்டியன் விளக்கை தேடினார்!

செல்வா கல்லாவில் உள்ளவரை நோக்கி சென்றான்.. ரமேஷ் தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாததுபோல் வெளியில் உள்ள பஜ்ஜி கடையை பார்த்துக்கொண்டிருந்தான்! பார்வையை துழாவவிட்ட பாண்டியன் அந்த விளக்கு கல்லாவுக்கு அருகில் இருப்பதை கண்டு கொண்டார்..அதை மெதுவாக செல்வாவிடம் உணர்த்தி ”நீ அவரிடம் பேச்சுக்கொடு” என்று கூறினார்!

உடனே செல்வாவும் அவரிடம் சென்று ”அண்ணே உங்க பேரே மங்குனிதானா” என்று கிண்டலாக சிரித்தான்..

அதற்கு மங்குனி லேசாக முறைத்ததும்...பேச்சை மாற்றி   ”இந்த விளக்கு எவ்வளவு?” என்றான்..

அதற்கு மங்குனி ..”இந்த விளக்கு விக்கிறது இல்லைங்க...இது எங்க பரம்பரை விளக்கு எங்க முன்னோர்கள் இதை துடைக்ககூட கூடாதுன்னு சொல்லியிருக்காங்க..அதனாலதான் இதை தூசியா இருந்தாகூட பரவாயில்லைன்னு பக்கத்துலே வச்சிருக்கேன்” என்றார்.

இதை எதிர்பார்த்த பாண்டியன்...செல்வாவிடம் மெதுவாக.. ”நீ அவரிடம் பேச்சுக்கொடுத்து அவரின் கவனத்தை திசைதிருப்பு..நான் போய் அந்த ரமேஷை அழைத்து வந்து அந்த விளக்கை எடுத்துவிடுகிறேன்” என்று கூறிக்கொண்டே வாசலை நோக்கி சென்றார்!

செல்வாவும் அதை புரிந்துகொண்டு  மங்குனியிடம்..”அண்ணே..எல்லாமே பழைய பொருட்களா வாங்கி விக்கிரீங்களே?..பழசுன்னா உங்களுக்கு ரெம்ப புடிக்குமோ?..உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சான்னே” என்றான்.

இதைக்கேட்டு கடுப்பான மங்குனி  அவனை முறைத்தார்! உடனே செல்வா சமாளித்துக்கொண்டு.. ”அண்ணே ஒரே ஒரு போன் பண்ணிக்கலாமா” என்றான்..

”உன் செல்போன்தான் இருக்கே அதுல பண்ணவேண்டியதுதானே” என்றார் மங்குனி!

”அண்ணே என் செல்போன்ல இன்கமிங் இல்ல..அவுட் கோயிங் மட்டும்தான்”

.மங்குனி கோபமாக “அதான் அவுட் கோயிங் இருக்குல்ல அப்புறம் என்ன? பண்ணவேண்டியதுதானே” என்றார்!

உடனே செல்வா ”லூசா அண்ணே நீங்க? நான் அவுட்கோயிங் பண்ணினாலும் என் ஃபிரண்டுக்கு இன் கமிங்க்தானே?” என்றான்.

இதைகேட்ட மங்குனிக்கு தலைசுத்தி...”ஐயோ தம்பி..கொஞ்சம் இருப்பா ஒரே ஒரு காஃபி வாங்கிட்டு வந்தடுறேன்”னு வெளியே சென்றார்..

இதற்காகவே காத்திருந்த பாண்டியன் ரமேஷிடம் சொல்லி அந்த விளக்கை எடுத்துக்கொண்டு கடையை விட்டு வேகமாக வெளியேறினார்கள்!

கடையை விட்டு கொஞ்ச தூரம் தள்ளி வந்ததும் பாண்டியன் ரமேஷிடம் விளக்கை தன்னிடம் கொடுக்குமாறு கேட்டார்..

அதற்கு ரமேஷ்  மறுப்பு  தெரிவித்து..”என்கிட்டே என்ன சொன்னீங்க? சாப்பாடு வாங்கி தர்றோம்னு சொன்னீங்க..தரல...அட..அந்த கடை வாசல்ல வித்த பஜ்ஜிகூட நீங்க வாங்கி தரல? சரி..என் ஆள வசியம் பண்றோம்னீங்க..அதுவும் பண்ணல? இதெல்லாம் முதல்ல செய்ங்க விளக்க தர்றேன்”னு அடம்பிடித்தான்..

இதைகேட்ட பாண்டியன் கோவமாகி...”டேய்ய்...வெண்ணை..இப்ப விளக்க தருவியா தரமாட்டியா?” என்று கேட்பதற்கும் ஒரு போலிஸ் வாகனம் ஒன்று அந்த இடத்தில வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது!

Friday, July 15, 2011

அஞ்சு பத்துக்கு அலையும் ரமேசும் அற்புத விளக்கும்! - 2


 பாகம் -1 -க்கு இங்கே கிளிக் செய்யவும்

ரமேஷ் ”அருண் என்னை காப்பாத்து....”என் கத்தி கொண்டே வேகமாக  ஓடி கொண்டு இருந்தான்.....

அவருக்கு பின்னால் 4 தடியர்கள் பட்டாகத்தியுடன் ஓடி வந்து நெருங்கினர்....

ஓடி வந்த தடியர்களில் ஒருவன் ரமேஷை தாண்டி ஓடிவிட.... உடனே ரமேஷ் “டேய் நான் இங்க இருக்கேண்டா....நீ எங்க ஓடுற” என கேட்க.....

அதற்கு அவன், “டேய்... லூசாடா நீ... நாங்களே சாமிக்கு பலி கொடுக்க வெச்சி இருந்த ஆடு ஓடிடுச்சேனு துரத்திகிட்டு இருக்கறோம்.... குறுக்கால வந்து கேள்வி கேட்டுகிட்டு... தள்ளிப்போ கத்தி மேல பட்டுற போகுது” என்றான்....

“ஆகா, இவ்வளோ நேரம் ஓடினது வேஸ்ட்டா போய்டுச்சே” என மனசுக்குள் நினைத்துக்கொண்டு.... அவனிடன் “அப்போ நீங்க என்னை வெட்ட ஓடிவரலையாண்ணே” என அப்பாவியாய் கேட்க....

“தம்பி நாங்க பென்சில் சீவுறதுக்கு எல்லாம் பட்டாகத்திய உபயோகிக்க மாட்டோம்.... டேய்... அங்க ஓடுது பிடிங்கடா” என கத்தி கொண்டு ஓடினான்....

அசிங்கப்பட்ட ரமேஷ் சுற்றி முற்றும் பார்த்துவிட்டு “அப்பாடி, யாரும் நம்மளை பார்க்கலை” என நினைத்துக் கொண்டு அருண் வீட்டை நோக்கி சென்றான்

மேஷ் இப்ப ஏன் நண்பன் அருண்பிரசாத்தை பார்க்கிறதுக்காக போய்கிட்டு இருந்தான்னா, டெய்லி அருணோட புண்ணியதுலதான் ஓசி டீயும் கொஞ்சம் இட்லியும் கிடைக்குது... இதுக்காக யாரும் இது ஒரு பொழப்பான்னு நினைக்காதிங்க! அவனுக்கு இது மட்டுமே பொழப்பு! இட்லி சாப்பிடும் போது அருணிடம் ரமேஷ் சொல்ல ஆரம்பித்தான்..

“மச்சி...எதிர் வீட்டுக்கு புதுசா ஒரு பொண்ணு வந்துருக்கு! ஒரு வாரம் ஆச்சு...எனக்கு அவளை ரொம்ப புடிச்சிருக்கு..நீதாண்டா என் லவ்வுக்கு ஹெல்ப் பண்ணனும்..பிளீஸ் மச்சி”

கேட்டுக்கொண்ட அருண், "சரி மச்சி..ஆனா எனக்கு ஆள மொதல்ல காமி! ஆளை பாத்துட்டு தான் நான் ஹெல்ப் பண்றதை பத்தி முடிவு பண்ணுவேன்.. "

"ஏன் மொக்க ஃபிகரா இருந்தா ஹெல்ப் பண்ண மாட்டியா.?"

"ம்ஹும்.. மொக்கை பிகரா இருந்தா மட்டும் தான் ஹெல்ப் பண்ணுவேன்.."

"ஒருவேளை அவ சூப்பர் பிகரா இருந்தா..?"

"இன்னைல இருந்து நாம ரெண்டு பேரும் Enemies..! உனக்கு போட்டியே நான் தான்.!"

இதை கேட்ட ரமேஷ் கோவத்தில் படக்கென்று எழுந்து...தட்டில் இட்லி மீதம் இருப்பதை பார்த்து விட்டு கோபத்தை ஒத்தி போட்டு விட்டு திரும்பவும் உட்கார்ந்து இட்லியை திங்க ஆரம்பித்தான்! இதை பார்த்த அருண் தலையில் அடித்துக்கொண்டான்!

“மச்சி கோவிச்சுக்காத...உன்னை இப்பவே நான் கூட்டி போய் காமிக்கிறேன்...அந்த பொண்ணு இன்னும் காலேஜ் கிளம்பியிருக்காது” என்று கூறிக்கொண்டே அருணையும் அழைத்துக்கொண்டே வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான்!

அருணும் ரமேஷும் அவன் வீட்டு வாசலில் காவல் இருக்க ஆரம்பித்தனர்..அந்த பொண்ணின் வரவுக்காக! இதைப்பார்த்த ரமேசின் அண்ணன் மாதவன்..”என்னடா இங்க நிக்கிறே” என்று கேட்டார் ஒரு கையில் வேட்டியை பிடித்தபடி!

“ஒண்ணுமில்லை அண்ணா...சும்மாதான்” என்றான் ரமேஷ்..

“ஒரு பொண்ணுக்காக இப்படி உழைக்கிறத விட பொன்னுக்காக கொஞ்சம் கஷ்டப்படலாம்ல” என்று தத்துவம் கூறி விட்டு சென்றார்!

இதைக்கேட்ட அருண் கடுப்பாகி ”ஏண்டா நாயே? எள்ளுதான் எண்ணெய்க்கு காயுதுன்னா எலிப்புழுக்க ஏண்டா காயனும்?” என்று கடுப்படித்தான்...அருண் இப்படி பேசும் போதே ரமேஷ் பரபரப்பானான்...

“மச்சி..மச்சி அந்த பொண்ணு வெளில வருதுடா... எங்கே என்று திரும்பி பார்த்த அருணும் அந்த பொண்ணை பார்த்துவிட்டு...

"மச்சி., உனக்கு கண்டீப்பா ஹெல்ப் பண்றேன்..!"

"அப்ப இந்த பிகர் மொக்கையா மச்சி..? நான் வேணா வேற பொண்ணை பார்க்கவா..?"

"வேணாம்.. வேணாம்.. இந்த பொண்ணையே பாரு.. !"

"ஏன் மச்சி..?"

"இதுக்கே உன்னை பிடிக்கலைனா.. வேற எந்த பொண்ணுக்குடா உன்னை பிடிக்க போவுது..?!" என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே.....அந்த பொண்ணின் வீட்டிலிருந்து குரல் வந்தது...

“அப்பா...அப்பா...நான் போயிட்டு வரேன் அப்பா..” என்று கூறிக்கொண்டே அந்த பெண் வீதியில் நடக்க ஆரம்பித்தது... வீட்டுக்குள் இருந்து இன்னொரு குரல் கேட்டது...

"பார்த்து பத்திரமா போயிட்டு வா மக்கா!” என்று கூறிக்கொண்டே இரண்டு கையால் வேட்டியை மடித்து கட்டியபடி வாயில் அருவாளை கவ்விக்கொண்டு வெளியில் வந்தார் அந்த பெண்ணின் அப்பா பாபு!

Wednesday, July 13, 2011

அஞ்சு பத்துக்கு அலையும் ரமேசும் அற்புத விளக்கும்! - 1

அன்பார்ந்த வாசகர்களே! ஒரு புது முயற்சியாய் இந்த நகைச்சுவை தொடர்கதை. இந்த கதை தனிப்பட்ட ஒருவரால் எழுதப்பட்டது அல்ல! இது ஒரு கூட்டு முயற்சி! உங்களின் கருத்துகளை நாங்கள் அவசியம் வேண்டுகிறோம். உங்கள் கருத்துக்களை கமெண்டிலோ அல்லது terror.blogger@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பவும். மிக்க நன்றி!



வானுயர்ந்த மரங்களைகொண்ட அடர்ந்த காடு! ஆள் அரவமே இல்லாத அந்த காட்டின் நடுவே நிலாவை நின்று தொடும் உயரத்தில் ஒரு  அரண்மனை! அன்று இரவு அது ஒரு சொர்க்கபூமியாக காட்சி தந்தது! காரணம் மன்னருக்கு அன்று பிறந்தநாள்! உற்சாக பானம் தந்த உற்சாகத்தில் மிதந்துகொண்டு அந்தப்புரத்தில் மஞ்சத்தில் மிதந்து கொண்டிருந்தார் மன்னர்! ஆனால் அந்த சந்தோசங்கள் கொஞ்ச நேரம் மட்டுமே! அவரது உற்சாகத்தை மொத்தமாக குலைக்கும் விதமாக ஒற்றன் ஒருவன் ஓலை கொண்டுவந்தான்! ஓலையை படித்த மன்னரின் தோள்கள் தினவெடுத்தன... கோபத்தில் ரத்தம் தலைக்கேறியது! 

”என்ன தைரியம் இருந்தால் பக்கத்து நாட்டு மன்னன் என் மீது படையெடுப்பான்?..தளபதியாரே!” என்று கூவிக்கொண்டே தன் இடுப்பு துணி நழுவதைகூட  கூட பொருட்படுத்தாமல் வேக நடை போட்டான்! 

அதை கண்ட அந்தப்புர பெண்ணொருத்தி நாணத்தில் சிவந்துபோய்...மன்னா..மன்னா..” என்று கூவிக்கொண்டே பின்னால் ஓடிச்சென்று அவனுடைய வேட்டியை அவனிடம் வழங்கினாள்.......
 
நாட்டின் மானத்தைவிட என் மானம் ஒன்றும் பெரிதல்ல” என்று கூறிக்கொண்டே இடுப்பு வேட்டியை வெடுக்கென்று பறித்தான் மன்னன்........

அப்போது “ஐயோ...” என்ற அலறல் கேட்டது!

திடுக்கென்று கண்விழித்த ரமேஷின் கைகளில் அவனுடைய அண்ணன் மாதவனின் வேட்டி இருந்தது! பக்கத்தில் படுத்திருந்த ரமேஷின் அண்ணன் பயந்துபோய் நடுங்கியவாரே மூலையில் அமர்ந்திருந்தார்!

இதைக் கண்ட அவனுடைய அப்பா...”ஏன்டா நாயே? விடிய விடிய கண்ட படமெல்லாம் பார்க்கவேண்டியது..பார்த்ததும் இல்லாம எங்க உயிரை ஏன்டா வாங்குற? தின்கிற சோத்துக்கு கூட சம்பாதிக்கிறது இல்லை.. இதுலவேற....கண்ட கருமாந்திர கனவுவேற? கைய கால அமுக்கிகிட்டு ஒழுங்கா படுடா...” என்று கத்தத் தொடங்கினார்!

அது ரமேஷுக்கு வழக்கமாகி போனதால் அதையே தாலாட்டாக எடுத்துக்கொண்டு தூங்கிபோனான்! ஆனால் மாதவன்தான் பாவம் வேட்டியை இறுக்கி பிடிப்பதிலே தூக்கம் பிடிபடவில்லை!

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிட்டான் ரமேஷ்! அவ்ளோ நல்லவன் இல்லைங்க...காரணம் ஒரு வாரம் முன்பு எதிர்வீட்டில் குடிவந்த பெண்தான் காரணம்! அவள் மொட்டை மாடியில் படிப்பதும்..அவளுக்காக இவன் அங்கு நின்று அதியசமாக பல் துலக்குவதும் கொஞ்ச நாளாக புதிதாக நடக்கும் விஷயங்கள்! ஆனால் அவள் பெயரைக்கூட ரமேஷால் தெரிந்துகொள்ள முடியவில்லை!

இப்படி பார்த்துக்கொண்டிருக்கும்போதே, ”ஏன்டா தண்டச்சோறு..” என்ற அவன் அப்பாவின் குரல் கேட்டு.... திடுக்கிட்டு ஓடினான்!

இதுதாங்க ரமேஷ்! சொல்லிக்கொள்ளும்படி படிப்பும் இல்லை வேலையும் இல்லை.. வேலையும் இல்லை.. ஆனால் வேளைக்கு சாப்பிடனும்.... அழகான பெண்ணை திருமணம் செய்யணும்...வேலையே செய்யக்கூடாது ஆனால் கையில் காசு வேண்டும்!

சரி...இவன் இப்படி வெட்டியாகவே இருக்கட்டும் வாங்க நாம இன்னொரு ஆளை பார்ப்போம்!
****************************

சென்னையின் ஒரு குறுகலான சந்து அது...ஒரு பழைய வீட்டை லாட்ஜாக மாற்றி  ஒருவர் காசு பார்த்துக்கொண்டிருந்தார்.. அது நமக்கு தேவை இல்லை...அந்த லாட்ஜின் இரண்டாவது மாடியில் மூன்றாவது அறையில் இருப்பவர்கள்தான் நமக்கு முக்கியம்!

மந்திரவாதி பாண்டியனும் அவனது அல்லக்கை செல்வாவும் மும்முரமாக ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்! அவர்கள் பேசியதை ஒட்டுக்கேட்டதில் கிடைத்து இதுதான்...

"டேய் கூமுட்டை செல்வா...இங்க வாடா...!"  செல்வா பம்மிக்கொண்டு வந்தான்....

" நாம் ஊரில் பிரசன்னம் பார்த்ததில் என்னடா தெரிந்தது.? "

"நாம எங்க சாமி ஊர்ல பிரசன்னாவ பார்த்தோம்? இப்பதானே சென்னை வந்துருக்கோம்... ஏதாவது ஷூட்டிங்கில இருப்பாரு நாளைக்கு போய் பார்ப்போம்! "

இதை கேட்ட பாண்டியன் முகம் சிவந்தது...மன்னிக்கவும் மேலும் கருத்தது!

”டேய்ய்ய்.... பிரசன்னம்னா சோழி போட்டு பாக்குறது...”

“ஓ..அதுவா சாமி? சாமி ஒரு சந்தேகம் கேக்கலாமா?..”

“கேளுடா வெண்ணை ...”

“அது ஏன் சாமி பிரசன்னம் பார்த்தா சோழிய கீழ போட்டுட்டு எண்ணுறாங்க?...கைல வச்சுகிட்டே எண்ணலாம்ல?”

“டேய்ய்ய் பரதேசி.... இதுக்கு மேல கேள்வி கேட்ட சுடுதண்ணிய மூஞ்சில ஊத்திருவேன் ஓடிபோயிரு சொல்லிட்டேன்” என்று கோவத்தில் கத்தினார் பாண்டியன்! 

”சாமி சுடுதண்ணிய மூஞ்சில ஊத்துறதுனா கொஞ்சம் ஆறவச்சு ஊத்துங்க.. எனக்கு சூடு ஆகாதுன்னு அம்மா சொல்லியிருக்காங்க” என்று செல்வா அப்பாவியாக சொல்லவும்... கடுப்பான பாண்டியன் சொல்ல ஆரம்பித்தார்...


”இங்க மவுண்ட் ரோட்ல உள்ள ஒரு காயலாங்கடைல ஒரு அதிசய விளக்கு இருக்கு! ஆனா அதை நாம எடுக்க முடியாது! அந்த விளக்கோட பூர்வ ஜென்ம பந்தம் உள்ள ரமேஷ்னு ஒருத்தன் இங்க வேளச்சேரில இருக்கான்.. அவன் மட்டுமே அதை எடுக்க முடியும்! நம்மோட முதல் வேலை அவன கண்டுபிடிக்கிறது... அதுக்கப்புறமா அவனை வச்சு அந்த விளக்கை எடுத்திட்டு...நாம நினைக்கிறத அடையலாம்டா வெண்ணை” என பாண்டியன் சொல்லி முடித்தார்!

“அப்பிடியா சாமி?..அப்ப வெளக்க எடுத்துட்டு மொதவேலையா கேப்டன் வாய கட்டனும்...ஓவரா கத்துறான்”

“டேய்ய்....என்னடா சொல்ற? அவரு வாய நீ ஏன்டா கட்ற?” பாண்டியன் கத்தினார்!

“சாமி...கேப்டன்னா அவரு இல்ல..எங்க தெருவுல உள்ள ஒரு நாய் பேரு சாமி..என்னை பார்த்தா ஓவரா கொலைக்குது அதான்...ஹி ..ஹி...” என்று சொல்லிக்கொண்டே வேகமாக நழுவினான்...

“டேய்ய் கேணை எங்கடா போற?”

“அதுவா...?..அது..அது..கீழ உள்ள கடைல வடை சுடறாங்க போல? வாசனை மூக்க துளைக்குது... கொஞ்ச நேரம் நீங்களா சண்டை போட்டுக்கங்க..நான் போய் வடையை வாங்கிட்டு வந்துறேன்” என்று சொல்லிவிட்டு ஓடி போய் விட்டான்!

அதே நேரம்.... ரமேஷ் "அருண் என்னை காப்பாத்து...." என கத்தி கொண்டே வேகமாக  ஓடி கொண்டு இருந்தான்..... 

அவருக்கு பின்னால் 4 தடியர்கள் பட்டாகத்தியுடன் ஓடி வந்து நெருங்கினர்....

(தொடரும்)

Monday, July 11, 2011

குள்ளநரி கூட்டம்..!இது விமர்சனமல்ல..



நண்பர்களே, நாம அனைவரும் பனங்காட்டு நரியுடன் நட்பு வைத்து ஒன்னரை ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. முழுக்க முழுக்க தமிழில், இலவசமாக ஒரு நாதாரியை திட்டவும்,காறி துப்பவும் இவருடன் நட்பு வைக்கப்பட்டது.


இவருடன் நட்பு வைக்க துவங்கிய சில வாரங்களிலேயே லட்சக்கணக்கில் வாசகர்கள் குவிந்தனர் . பல பங்களிப்பாளர்கள் சாட்டில் திட்டியது போக அவரை திட்டி ஈமெயில் கூட  அனுப்ப ஆரம்பித்தனர் . இன்றும் அவரை திட்டி
சராசரியாக நூற்றைம்பது ஈமெயில்கள் அனுப்பப்படுகிறது .



ஆனால் இவர் போதையில் இருக்கும்போது மட்டுமே நம்மால் நிம்மதியாக இருக்க முடிகிறது. இவர் தெளிந்துவிட்டால் நம் கதி அதோகதிதான்.


திடீரென்று ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் பாத்திருக்கியா மச்சி என்று ஆரம்பிப்பார், உடனே தெளிய ஆரம்பித்து விட்டது என்று தப்பிவிடுவது உத்தமம். புரியாமல் சரி சொல்லுன்னு சொல்லிட்டீங்கன்னா அவ்வளவுதான்...  இனி ராயபுரம் ரவுடிகளுடன் கஞ்சா அடித்தது முதல் அரசியல்வாதிகளுடன் கொள்ளையடித்தது வரை பேச தொடங்குவார். 


கவிதைன்னா ...,ரெண்டு வரிக்குள ஒரு பிரம்மாண்டம் இருக்கணும், வாழ்க்கையோட இயலாமையும் ,சந்தோஷத்தையும்,துக்கத்தையும், படிக்கிறவங்களுக்கு கொண்டு வரணும்,அதுக்கு பேர் தான் கவிதை. இப்படி யாருக்குமே புரியாத பாஷையில் கவிதைக்கு விளக்கம் கொடுப்பார்.



இடைஇடையே ’பழம் பெரும்’சினிமா நடிகைகளின் புள்ளிவிபரங்கள் வேறு. அப்படியே முழுதும் தெளிந்து விட்டால் உடனே ஆரண்ய காண்டம் பார்த்தீங்களா? கோஹினூர் காண்டம் பாத்தீங்களா என்று பஸ்விட்டு எல்லாரையும் அலறி ஓட வைப்பார், இல்லையென்றால் பின்நவீனத்துவத்தைப் பற்றி முன்நவீனத்துவ முறையில் விளக்கி பதிவெழுதி அனைவரையும் கதற வைப்பார்.


இதிலிருந்து பதிவர்கள், பொதுமக்கள் அனைவரையும் காப்பாற்றும் பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்திருக்கிறார்கள், (யார்? யாரோ!)
 
அதனால்தான் இவருக்கு ஊத்திக்கொடுத்து ஊத்திக்கொடுத்து இவரது ப்ளாக் User name-யை மறக்க வைத்தோம். அப்பாடின்னு கொஞ்சநாள் நிம்மதியாக இருந்தோம். அப்போது நரி வல்லாரை கீரை சாப்பிட்டால் ஞாபகசக்தி அதிகமாகும்னு அதை சாப்பிட்டு வல்லாரை கீரைக்கு கெட்ட பேர் உண்டு பண்ணினது தான் மிச்சம்.ஆனால் ஒருநாள் அவரது போதை தெளிந்து தில்லுமுல்லு என்ற புதிய ப்ளாக் ஆரமித்துவிட்டார். அதனால் நம் தமிழ் மக்களின் நலன் கருதி இவரை தெளிய விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.



அதனால் இவர் தெளியாமல் இருக்க வைக்க சரக்கு வாங்கி கொடுத்து, ஊறுகாய் வாங்கி கொடுத்து நமக்கு நஷ்டம் தான் ஏற்பட்டுடுள்ளது . எவ்வளவோ , விளம்பரங்கள் போட்டும் , இந்த நட்டத்தை ஈடு செய்ய இயலவில்லை .

நரியின் குடி அதிகமாகி உள்ளதால் அவர் போதைக்கு மாதாமாதம் கிட்டத்தட்ட ஆயிரம் டாலர் செலவு செய்ய வேண்டி உள்ளது. இதனால வாசகர்களிடம் பிச்சை எடுப்பதை தவிர வேறு வழி இல்லை. உங்களால் முடிந்த பிச்சையை சத்யம் தியேட்டர் வாசலில் பிச்சை எடுக்கும் மங்குனி தட்டிலோ, பரங்கிமலை ஜோதி வாசலில் பிச்சை எடுக்கும் வெறும்பையன் தட்டிலோ போடும்படி கேட்டு கொள்கிறோம். ஒரு வேளை ஓசி சோறு போட்டால் உங்கள் வீடு தேடி வந்து ரமேஷ் பிச்சை எடுக்கும் வசதியும் செய்து உள்ளோம். மேலும் 24 மணி நேரத்திற்கும் ஊத்திக் கொடுக்க கேப்டனிடம் பயிற்சி பெற்ற ஒருவரை நியமிக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம்!


ஜூலை 31 க்குள் ஆயிரம் டாலர் திரட்ட முடியவில்லை என்றால், ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் நரிக்கு சரக்கு வாங்கி தருவதை நிறுத்த  முடிவு செய்துள்ளோம்.


இது போல ஒவ்வொரு மாதமும் ஆயிரம் டாலர் நிதி உதவி கிடைத்தால் மட்டுமே நம்மால் நரிக்கு சரக்கு வாங்கி கொடுத்து அவருக்கு போதை தெளியாமல் வைக்க முடியும். எவ்வளவோ உதவிகள் அளித்த வாசகர்கள், இந்த நிதி உதவியிலும் பங்களிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். அது ஒரு டாலரோ, நூறு டாலரோ, எவ்வளவாக இருந்தாலும் தயவு செய்து பிச்சையாகவோ மேலே குறிப்பிட்ட தளங்களில் உள்ள பேபால் லிங்கிலோ அனுப்பவும். உங்கள் வங்கி அல்லது பேபால் கணக்கில் “நரி வளர்ச்சி நிதி” என்று தான் பெயர் வருமே தவிர வேறு எந்த தகவலும் வராது (இது உங்கள் நன்மைக்காக).


தயவு செய்து பங்களியுங்கள், நரிக்கு போதை தெளியாமல் இந்த நாட்டை காப்பாற்ற உதவுங்கள்..

ஆண்டவா நாட்டு மக்களை நீ காப்பாற்று. நரியிடமிருந்து பதிவுலகை நாங்கள் காப்பாற்றுகிறோம்.

Friday, July 8, 2011

இம்சை(யின்) அரசன் பாபுவின் பய(ங்கர)டேட்டா...





பெயர்                                                           : இம்சை அரசன் பாபு

நிஜப்பெயர்                                               : மேல உள்ளதையே வெச்சிருக்கலாம்
தொழில்                                                      : அருவாளுக்கு சாணி ச்சி.. சாணை பிடித்தல்
உபதொழில்                                              : வாய்ஸ் சாட்டிங் (எங்கேன்னு கேட்கப்படாது)
தலைவர்                                                    : திமுகவுல இல்லை
துணைத்தலைவர்                               : தேமுதிகவுல இல்லை
பொழுதுபோக்கு                                    : ரமேசுக்கு பெண் பார்த்தல் (பேன் அல்ல)
துணைப் பொழுது போக்கு               : அதைக் கெடுத்து விடுதல்
மேலும் பொழுது போக்கு                 : எல்லாரையும் திட்டுதல் 
வயது                                                           : சைட் அடிக்கும் வயதல்ல
பலம்                                                             : வயிற்றில் 
பலவீனம்                                                   : தமிழில் மட்டுமே எழுதுவது
சமீபத்திய சாதனை                              : சென்னைக்கு போய் நரியை பார்க்காமல் தப்பி வந்தது
நீண்டகால சாதனை                            : பஸ்சும் விடத்தெரிந்து கொண்டது
சமீபத்திய எரிச்சல்                             : சென்னைக்குச் சென்றும் ரமேசையே பார்க்க வேண்டி வந்தது
நீண்டகால எரிச்சல்                            : பிரபல பதிவர் ஆகியும் (?) இன்னும் சர்ச்சைகள் வராதது
நண்பர்கள்                                                 : எல்லோரும்
எதிரிகள்                                                     : எல்லோரும்
ஆசை                                                           : ஐம்பதிலும் ஆசை வரும்
நிராசை                                                       : மீண்டும் ஐம்பது வருமா?
நம்பிக்கை                                                 : தானும் ஒரு பதிவர்
பயம்                                                             : பார்ட் 2...?
லட்சியம்                                                   : பார்ட்3...?
இதுவரை மறந்தது                               : வயதை
மறக்க வேண்டியது                              : சாப்பாடு (ஓசி அல்ல)
மறக்க முடியாதது                                 : அதெல்லாம் பப்ளிக்ல சொல்ல முடியாது
விரும்புவது                                               : கடலை (சாப்பிட அல்ல)
விரும்பாதது                                             : பெண்கள் காவலனாக காலத்தை ஓட்டுவதை




Wednesday, July 6, 2011

" கரண்ட் கட் " ரொம்ப நல்லது ( ஹி, ஹி.! )


Current நியூஸ் எதாவது எழுதலாம்னு
சன் நியூஸ் பார்த்திட்டு இருந்தேன்...

அப்ப கரண்ட் கட் ஆயிடுச்சி..!
ஆஹா...!
கிடைச்சிடுச்சே " கரண்ட் நியூஸ்..! "

கரண்ட் கட் ஆகறதால எவ்ளோ
நன்மைகள் இருக்கு தெரியுமா..!?

1. கரண்ட் பில் அதிகமா வராது.,

2. T v ஓடாது.., ஜவ்வு மிட்டாயில இருந்து
கொஞ்ச நேரம் தப்பிச்சுக்கலாம்..!

3. குழந்தைங்க வெளிய போயி
விளையாடுவாங்க..
உடம்புக்கு நல்லது தானே..!

4. நாம ரொம்ப Punctual-ஆ இருப்போம்..,
கரண்ட் போறதுக்குள்ள வேலைகளை
Correct-ஆ செய்யணுமில்ல...!

5. கடிகாரத்தை பார்க்காமலே Time
தெரிஞ்சிக்கலாம்..,
கரண்ட் போனா - 12 மணி
கரண்ட் வந்தா - 2 மணி

6. போர் அடிக்குதுன்னு Books படிப்போம்..,
General Knowledge வளரும்..!

7. Fan ஓடாது., புழுக்கமா இருக்கும்.,
அதனால வியர்வை வெளியேறும்..
அது உடம்புக்கு நல்லதுன்னு டாக்டரே
சொல்றார்ல..

8. நைட் கரண்ட் போனா.. வீட்லயே
" Candle Light Dinner " சாப்பிடலாம்..
ஹோட்டல் செலவு மிச்சம்..

9. அதே மாதிரி நைட்ல கரண்ட் கட் ஆனா..
ரமேஷ்., டெரர் மாதிரி ஆளுங்க எல்லாம்
பக்கத்து வீட்டு பொண்ணுக்கு லவ் லெட்டர்
கொடுக்க தலையில் முக்காடு போடாமல்
போகலாம்...

10. குறிப்பா ரமேஷ் பதிவு போடும்
நேரத்துல கரெண்ட் கட் ஆகிடுச்சுனா..
அது நாட்டுக்கும்., நாட்டு மக்களுக்கும்
பாதுகாப்பு..


என் மனைவிகிட்ட ஒரு Point
சொல்லுன்னு சொன்னேன்.
அப்ப அவங்க சொன்னது இது..,

11. கரண்ட் இல்லாததால.,
நீங்க Computer முன்னாடி உட்காராம..,
என்கூட நாலு வார்த்தை பேசிட்டு
இருப்பீங்க...!

இவ்ளோ நல்ல விஷயம் இருக்கே...,
அப்புறம் ஏன் எல்லோரும் " கரண்ட் கட் "
" கரண்ட் கட்னு " புலம்பறாங்க...??!!

" ரோஜா செடியில் முள்ளு இருக்கேன்னு
பீல் பண்றதை விட..
முள்ளு செடியில ரோஜா இருக்கேன்னு
நினைச்சி சந்தோஷப்படணும்.!! "

அதனால " கரண்ட் கட்" -ஐ ஈஸியா
எடுத்துகிட்டு.. ஜாலியா இருங்க மக்கா..!!
.
.

Tuesday, July 5, 2011

அவ்ளோ பெரிய அப்பாடக்கரா..?!


















இதென்ன அநியாயம்..?
சுத்த பகல் கொள்ளையால்ல இருக்கு..?!!

பின்ன.., ஒருத்தர் இருக்குற ஏரியான்னா
கூட பரவாயில்ல.. எதோ கவனிக்காம
விட்டுட்டோம்னு சொல்லலாம்..

ஆனா இது 16 பேர் இருக்குற ஏரியா..
( சரி.. சரி.., ஒருத்தர் சுத்த வேஸ்ட்..
15 பேர் இருக்குற ஏரியா..! போதுமா..?! )

இத்தனைக்கும் இங்கே வாட்ச்மேனா
நாங்க ஒரு ( சிரிப்பு ) போலீசையே
நிறுத்தி வெச்சி இருக்கோம்.

அப்படி இருந்தும் இங்கே வந்து
நம்மகிட்டயே ஒருத்தன் ஆட்டையை
போட்டு இருக்கான்னா.. அவன் எவ்ளோ
பெரிய அப்பாடக்கரா இருப்பான்..?!

( " போலீஸ்கார்.. போலீஸ்கார்..! அந்த
திருட்டு பய இங்கே வந்து.. கைவரிசையை
காட்டிட்டு போற வரை எங்கே ஒளிஞ்சிட்டு
வேடிக்கை பாத்துட்டு இருந்தீங்க..?!! " )

ஆனா நாங்க இந்த விஷயத்தை சும்மா
விட போறது இல்ல...

எவ்ளோ செலவானாலும் சரி..,
( Rs 100 , Rs 200, Rs 300.. ) 
CBI, FBI வரை போயாச்சும் அந்த
களவாணி பய யார்னு கண்டுபிடிச்சு.,
கட்டி வெச்சு உதைக்க போறோம்..!!

என்ன மக்களே..! ஏன் அப்படி பார்க்கறீங்க..?
எதுக்குடா இவங்க இவ்ளோ டென்ஷன்
ஆகறாங்கன்னா...

நேத்து வரைக்கும் எங்க பிளாக் அட்ரஸ்..
www.terrorkummi.blogspot.com னு இருந்துச்சு..

ஆனா இன்னிக்கு வந்து பாத்தா..
www.terrorkummi.com னு இருக்கு..

அப்ப எங்க பிளாக் ஏரியாவுக்கு
வந்து அந்த  " Blogspot " -ஐ களவாண்டுட்டு
போனவன் எவன்..??!

இப்ப அவனை தான் நாங்க தேடிட்டு
இருக்கோம்..அவன் மட்டும் எங்க கையில
சிக்கினான்.. சட்னி தான்..!!

டிஸ்கி : @ All மக்கள்ஸ்..!!

சரி., சரி..! நீங்களும் உங்க பிளாக் அட்ரஸ்ல
இருக்குற " Blogspot " ஐ பத்திரமா பாத்துக்கோங்க..
சொல்லிபுட்டோம்.. ஆமா..!

( இது ஒரு விழிப்புணர்வு பதிவு..!!!!
ஹி., ஹி., ஹி...!! )
.
.

Monday, July 4, 2011

வெண்ணிற ஆடை மூர்த்தியின் தத்துவங்கள்


ஏழையாக இருப்பது நல்லது. வியாதி வந்தால் டாக்டர் சீக்கிரம் குணப்படுத்திவிடுவார்.
==============================
E.C.G என்பது ஜீவன் ஈஸியாகப் போகுமா இல்லை அவஸ்தைப்பட்டு போகுமா என்று கோடிட்டு காட்டும் வரைபடம்.
==============================
அபராதம் என்பது தவறாக நடந்துகொண்டதற்கு செலுத்தப்படும் வரி. வரி என்பது சரியாக நடந்துகொண்டதற்கு செலுத்தப்படும் அபராதம்.
==============================
செல்வா: அப்பா நம்ம கார யாரோ திருடிட்டு போறாங்க.
அப்பா: அவங்க யாருன்னு பாத்தியா?
செல்வா: இல்லப்பா ஆனா கார் நம்பர் நோட் பண்ணினேன்.
==============================
வக்கீல்: போலீஸ் விசிலடிச்சு,கையை ஆட்டி கூப்பிட்ட போது ஏன் காரை நிறுத்தலை?
பெண்: நான் அந்த மாதிரி பெண் இல்லைங்க..
==============================
நல்லவேளை நான் தமிழ்நாட்டில் பிறந்தேன். வடநாட்டில் பிறந்திருந்தால் ஹிந்தி தெரியாமல் கஷ்டப்பட்டிருப்பேன்.
==============================
மூக்கில் ரத்தம் கசியாமல் இருக்க மற்றவர் விசயத்தில் மூக்கை நுழைக்காமல் இருப்பதே நலம்.
==============================
வந்தது போகட்டும் என்பதற்காக செய்யப்படுவது சாதாரண ஆபரேசன். வராமலே போகட்டும் என்பதற்காக செய்யப்படுவது குடும்பக்கட்டுப்பாடு ஆபரேசன்.
==============================
அவர் யாரிடமும் ஷட்-அப் என்று சொல்ல மாட்டார். அவர் ஒரு பல் டாக்டர்.
==============================
எங்கள் தாத்தா நூறு வயது வரை உயிரோடு இருப்பதற்கு காரணம் ஆப்பிள் தான். ஆம் இதுவரை அவர் ஆப்பிள் சாப்பிட்டதே இல்லை.
==============================
உடல் முழுதும் முடி இருப்பவனுக்கு குளிக்க சோப்பு தேவையில்லை. ஷாம்பூ போதும். வழுக்கை தலையோடு இருப்பவனுக்கு ஷாம்பூ தேவையில்லை. சோப்பு போதும்.
==============================
ஒரு பெண்ணுக்கு அழகுதான் அவளது சொத்து என்றால் நிறைய பெண்களுக்கு சொத்து வரி கட்ட அவசியமே இருக்காது.
==============================
மொட்டைத்தலை உள்ளவனுக்கு மயிர் கூச்செறியும் கதை சொல்லலாமா?
==============================
எப்போதும் இளமையாக இருக்க வேண்டுமெனில் வயதானவர்கள் பக்கத்திலேயே இருங்கள்.
==============================
உடல் எடையை குறைக்க அவன் தினமும் பூண்டு சாப்பிட்டு வந்தான். ஆனால் எடை குறையவில்லை. நண்பர்கள் குறைந்துவிட்டனர்.
==============================
ஒரு பெண்ணுக்கு புகுந்தவீடு பிறந்த வீடு என இரண்டு இருக்கும்போது ஏன் ஆணுக்கு சின்ன வீடு பெரிய வீடு இருக்க கூடாது?
==============================
திருமண மோதிரம்: உலகத்திலேயே விரலுக்கு போடும் மிகச் சிறிய விலங்கு
==============================
ஒரு பெண் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுவாள் திருமணம் ஆகும்வரை. ஒரு ஆண் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டான் திருமணம் ஆகும்வரை.
==============================
உலகத்திலேயே ஒரே ஒரு பெண்தான் நல்லவள் இல்லை. அவள்தான் என் மனைவி என பல கணவன்மார்கள் நினைப்பதுண்டு.
==============================
சமையலறையில் நிகழும் விபத்தைதான் ஏன் மனைவி எனக்கு டின்னராக பரிமாறுகிறாள்
==============================
இரண்டு கல்யாணம் செய்து கொள்பவனுக்கு தண்டனை - இரண்டு மாமியார்கள்.
==============================
கணவன்: ஏன் உறவுக்காரங்க வந்தா நீ சரியா கவனிக்கிறதில்லை?
மனைவி: ஏன் இப்படி சொல்றீங்க. என் மாமியாரைவிட உங்க மாமியாரத்தான நான் நல்லா கவனிக்கிறேன்.
==============================
நண்பர் 1 : கார் ஓட்டும்போது விபத்து ஏற்பட்டிருக்கிறதா?
நண்பர் 2 : உண்டு. என் மனைவியை முதன் முதலாக ஒரு பெட்ரோல் பாங்கில்தான பார்த்தேன்.
==============================
தூக்கத்தில் உளறுவது பற்றி அவன் கவலைப்பட மாட்டான். அவனுடைய மனைவிக்கும் அவனுடைய ஸ்டெனோ வுக்கும் ஒரே பேர்தான்.
==============================
குழந்தைகள் வேகமாக வளர்வதே ஸ்கூல் யூனிபார்ம் வாங்கியபின் 2,3 மாதங்களில்தான்
==============================
டெலிபோனை கண்டுபிடித்தவர் கிரகாம்பெல். அவருக்கு மட்டும் ஒரு மகள் இருந்திருந்தால் அவர் டெலிபோனை கண்டுபிடித்தே இருக்க மாட்டார்.
======================================
ஒரு பத்திரிகை ஆசிரியருக்கு வந்த கடிதம்:

அய்யா என் மனைவி என்னை விவாகரத்து செய்ய திட்டமிட்டிருந்தாள். உங்கள் பத்திரிகையில் வந்த "விவாகரத்தும், அதன் விபரீத விளைவுகளும்" என்கிற அருமையான கட்டுரையை படித்ததும் மனம் திருந்தி விவாகரத்து முயற்சிகளை கைவிட்டுவிட்டாள்.

பின் குறிப்பு: இத்துடன் நான் என் சந்தாவை கேன்சல் செய்கிறேன். இனிமேல் உங்கள் பத்திரிக்கையை எனக்கு அனுப்ப வேண்டாம்.
==============================
நன்றி: வெண்ணிறாடை மூர்த்தி. அவர் எழுதிய புத்தகத்தில் தொகுத்தது