Monday, October 10, 2011

தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...






பெயர்                            : தமிழ்மணம்



புனைப்பெயர்                     : பதிவுலக கடவுள்


தொழில்                          : திரட்டுதல், பதிவுகளை



உபதொழில்                       : ரேங் போடுதல் 




உப உபதொழில்                  : கான்ஸ்டபிள் (ட்ராபிக்)


தலைவர்                         : யாருக்கும் தெரியாது


துணைத்தலைவர்                               : பிரபல பதிவர்கள் அல்ல 


பொழுதுபோக்கு                   : பதிவுகளை இணைத்தல்


துணைப்பொழுதுபோக்கு          : பதிவுகளை நீக்குதல்


மேலும் பொழுதுபோக்கு           : எச்சரிக்கை அனுப்புதல்


வயது                            : வயதாகிக் கொண்டிருக்கிறது


பலம்                             :பதிவர்கள்


பலவீனம்                         : அதுவும் அவர்களேதான்


நம்பிக்கை                        : மொக்கைப் பதிவர்களும் 

இலக்கியவியாதிகளாகி விடுவார்கள்


பயம்                             : இன்னும் கொஞ்ச நாளில் 

தமிழ்மணம் முழுதும் மொக்கையாகி விடுமோ?


லட்சியம்                         : நெ.1 திரட்டி


நீண்டகால சாதனை               : காப்பி-பேஸ்ட்டை 

கண்டுகொள்ளாமல் இருந்தது


சமீபத்திய சாதனை                               :காப்பி-பேஸ்ட்டை அதிரடியாக 

தூக்கியது


இதுவரை மறந்தது                :  ஆபாச பதிவுகளை


இனி மறக்க வேண்டியது           :மொக்கை பதிவர்கள் 

திருந்துவார்கள் என்று நம்புவதை 


பாடாய் படுத்துவது                : நட்சத்திரங்கள்


இதுவரை புரியாதது                             : விருதுகள்



விரும்புவது                      : இனி சர்வர் பிரச்சனை 

வரக்கூடாது என்று

விரும்பாதது                     கட்டண சேவை பற்றி கேள்வி 
கேட்பதை




எச்சரிக்கை: பதிவு முற்றிலும் நகைச்சுவைக்காக மட்டுமே. 

337 comments:

«Oldest   ‹Older   201 – 337 of 337
-/பெயரிலி. said...

எந்தா! ரைசு, டீ, பிகர், பிக்சர், ஹீரோ, டெரர் இதெல்லாம் பீரு தமிளு ஆச்சே!

வைகை said...

பெயரிலி. said...
/விரும்பாதது : கட்டண சேவை பற்றி கேள்வி கேட்பதை/

நகைச்சுவைக்கும் உண்மையற்ற தகவலைக் கொடுப்பதற்குமான வேறுபாட்டினை நீங்கள் அறிந்துகொண்டுதான் இப்பதிவினை இட்டிருக்கின்றீர்கள் என் நம்புகிறேன். /உபதொழில் : ரேங் போடுதல்/ இதைத் தமிழ்மணம் செய்வதில்லை. மொக்கைக்குக் கும்மியடிப்பவர்கள் செய்வது :-/////

////ஐயா சோழர் எம் ஏ யே! கொஞ்சம் உப்பரிகையிலிருந்து இறங்கி தேரிலேறி அப்படியே மேலே பின்னூட்டங்களுக்கு நகர்வலம் போய்ப்பாருங்களேன்; என்ன சொல்லியிருக்கிறோமென்று.////

@பெயரிலி
நான் மேலே போட்டுள்ள கமெண்ட்தான் உங்கள் முதல் கருத்துரை.... அதில் ரேங் நாங்கள் போடுவதில்லை என்று கூறியுள்ளதே? இது எந்த அளவு உண்மை? அப்போ வாரா வாரம் முன்னணி பதிவு பட்டியல்னு போட்டு அடிச்சிக்க விடறீங்களே அது உங்க தளம் இல்லையா? இவ்வாறு இருக்கும் போது அந்த கருத்துரையின் உண்மைத்தன்மையை நாங்கள் எவ்வாறு நம்புவது?

எஸ்.கே said...

பெயரிலி சார், ஒரு இணையதளம் சார்பாக, அதன் மீதான ஒரு கருத்தை எதிர்க்க வந்தது மிகவும் நியாயமானதே..ஆனால் நீங்கள் ஆங்காங்கே பயன்படுத்திய வார்த்தைகள் விதம் உண்மையில் உங்கள் நோக்கத்தை சிதைத்து விட்டது:-((

சீரியசாக நினைத்து எழுதாத இந்த பதிவு இவ்வளவு சீரியசாகும் என நான் நினைக்கவில்லை:-(

-/பெயரிலி. said...

@வைகை
/அதை சொல்லும் விதமும் உள்ளது... எப்போது இந்த பதிவை பார்த்தீர்களோ அப்போதே எங்களிடம் முறையான விளக்கத்தை கேட்டுருக்கலாமே? /

முதலாவதாக நான் கேட்டதை மிகவும் நிதானமாகவே சொல்லியிருக்கிறேன் என்பதைக் கவனிக்கவும். ஆனால், நீங்கள் இதையெல்லாம் "peyarili" பின்னூட்டங்களையும் மிகவும் முறையின்றியே விட்டுவிட்டு இப்போது இப்படியாக வசனம் பேசுவது எந்நெறியிலே அடக்கம்? முறையின்றி "அகப்பட்ட தரவுகளை"ப் போட்டுக் குழம்பு வைத்துவிட்டு, உப்பின் அளவைச் சொன்னால், முறையில்லையெனலாமா?

/
////அல்லது மெயிலிலோ அல்லது கமேன்டிலோ சுட்டினால் அதை நீக்குவதை பற்றி யோசித்திருப்போம்... ஆனால் எடுத்த எடுப்பிலே உங்கள் கமென்ட் எல்லாமே முகம் சுளிக்க வைத்ததே தவிர... நீங்கள் சொல்ல வந்த நோக்கம் படவில்லை... /////////

ஒன்றுக்குமேற்பட்ட தடவைகள் இதுக்குச் சொல்லியிருப்பதை மேலே வாசிக்கவில்லையா?

-/பெயரிலி. said...

/ஆனால் நீங்கள் ஆங்காங்கே பயன்படுத்திய வார்த்தைகள் விதம் உண்மையில் உங்கள் நோக்கத்தை சிதைத்து விட்டது:-((/

வார்த்தைகளுக்கு இத்தனை உணர்ச்சிவசப்படுகின்றவர்கள், நீங்கள் வாசித்த பன்னிக்குட்டி வார்த்தைகளுக்கும் அதற்கான திரிந்த பின்னூட்ட வார்த்தைகளுக்கும் சத்தமேயில்லாமலிருந்ததேனோ? ஆக, நீங்கள் மட்டும் நோகக்கூடாது; அவ்வளவுதானா? இப்போதாயினும், அதைக் கண்டிக்கவோ எப்படியாக திரித்து வெளியிட்டுக்கிறாரென்பதைச் சுட்டிக்காட்டவோ உங்களுக்குத் துணிவு உண்டா?

வாழ்க நும் கொற்றம் :-(

கொம்பேறிமூக்கன் said...

ஐயா வாங்க அம்மா வாங்க தமிழ்மணம் ஒரு சூப்பர் திரட்டி எல்லோரும் வந்து தங்கள் பதிவை இனைச்சுக்கொங்க .
இவுக நான் நல்லவன்னு நின்னு கமெண்ட்ஸ் போடுறாரு எல்லோரும் நம்பிருவாங்க ..போங்க சார் போங்க காலைல இருந்து இன்னும் ஒரு மணி நேரம் இருக்குன்னு நான் வேலைக்கு போகன்னு பத்து கமெண்ட்ஸ் போட்டுக்கிட்டு இங்கேயே குத்த வச்சிகிட்டு இருக்கீங்களே ...!!

வைகை said...

@பெயரிலி

/////முதலாவதாக நான் கேட்டதை மிகவும் நிதானமாகவே சொல்லியிருக்கிறேன் என்பதைக் கவனிக்கவும். //

இதற்க்கு வேறு பின்னூட்டம் போட்டிருக்கிறேன்.. அதற்க்கு பதில் சொல்லவும் :)

/////ஆனால், நீங்கள் இதையெல்லாம் "peyarili" பின்னூட்டங்களையும் மிகவும் முறையின்றியே விட்டுவிட்டு இப்போது இப்படியாக வசனம் பேசுவது எந்நெறியிலே அடக்கம்? ///

நீங்கள் எங்கள் முந்தைய பதிவுகளையும் பாருங்கள்.... இங்கு மாடரேசன் இல்லை... எங்களை திட்டி வந்த கமெண்ட்களை கூட அனுமதித்தே உள்ளோம்.. உங்கள் கருத்து உட்ப்பட... சோ உங்களுக்கு எதிரான கருத்து என்று நீங்கள் நினைத்தால் அதற்க்கு நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.. ஏன் அனுமதித்தீர்கள் என்று எங்களை கேட்ப்பது நியாயமில்லை :))

///முறையின்றி "அகப்பட்ட தரவுகளை"ப் போட்டுக் குழம்பு வைத்துவிட்டு, உப்பின் அளவைச் சொன்னால், முறையில்லையெனலாமா?///

நான் உப்பின் அளவை சொன்னது கூட உங்கள் கருத்துக்களில் அடிப்படை நாகரீகம் குறைந்தபோதுதான்.. :)

எஸ்.கே said...

சார்
மற்ற சிலரிடமிருந்து தமிழ்மணத்திற்கு எதிரான கருத்து வந்திருந்த போதும் ‘peyarili’ என்பவரின் கமெண்டை நீங்க பெரிதும் சுட்டிக்காட்ட காரணம் அதிலிருந்த கருத்துக்கள்தானே? சரி, அதை வேண்டுமென்றே அனுமதித்தது என்றெல்லாம் சொல்லவே முடியாது சார். ஏன்னா எல்லோர் கமெண்டையும் அனுமதிப்பது போலவே அதுவும் அனுமதிக்கப்பட்டது. ஆபாசமாக/அநாகரிகமாக உள்ள கமெண்டை மட்டுமே நீக்க விரும்புகிறோம்.

அதிலிலுள்ள கருத்துக்கள் தவறானதென்றால் அவை பொய்யானவை என நீங்கள் கூறிவிட்டால் போதுமே..இதில் அந்த கமெண்ட் அனுமதித்தது எங்கள் குற்றம் என கூறுவது..:-(

-/பெயரிலி. said...

@வைகை

நீங்கள் என் பின்னூட்ட முதற்கருத்திலே சுட்டிய உங்களின் தவறினைப் பற்றி எதையும் தவறென்றே ஒத்துக்கொள்ளாமல், "வாசித்த தரவின் அடிப்படை" என்று தள்ளிவிட்டு அடுத்ததுக்குத் தாவுகின்றீர்கள் என்பதை அறிந்தாலுங்கூட,

//@பெயரிலி
நான் மேலே போட்டுள்ள கமெண்ட்தான் உங்கள் முதல் கருத்துரை.... அதில் ரேங் நாங்கள் போடுவதில்லை என்று கூறியுள்ளதே? இது எந்த அளவு உண்மை? அப்போ வாரா வாரம் முன்னணி பதிவு பட்டியல்னு போட்டு அடிச்சிக்க விடறீங்களே அது உங்க தளம் இல்லையா? இவ்வாறு இருக்கும் போது அந்த கருத்துரையின் உண்மைத்தன்மையை நாங்கள் எவ்வாறு நம்புவது??//

தமிழ்மணம் ராங்க் எப்படியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றதென்பதை நீங்கள் என்றைக்காவது கேட்டிருக்கின்றீர்களா? அல்லது, நீங்கள் அறிந்தவரையிலே எப்படியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றதென்று சொல்லலாமே? இதிலே தமிழ்மணம் நிர்வாகத்தின் பங்கு 0.000000000000001% ஏனும் இருக்கின்றதா என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களைப் போன்ற பன்னிக்குட்டிப்பதிவர்களின் (தவறான வார்த்தையாக நினைக்காதீர்கள்; அப்படித்தானே பதிவின் தலைப்பு சொல்கிறது) பங்கு 99.9999999999999999999999999999999999% இல்லையென்றேனும் தெரியுமா? இவற்றினைப் பற்றி ஏதும் தெரிந்திருக்காவிட்டால், கருத்தினைப் போகும்போக்கிலே சொல்லமுடியாதல்லவா? ஆனால், இக்குறிப்பிட்ட வரிசைப்படுத்தும் விசயத்தை நான் ஒரு சீரியஸான சிக்கலாகவே சொல்லவில்லை; அதை நகைச்சுவை என்றே எடுத்துக்கொண்டு சொல்லிவிட்டுப்போனேன்; அதுகூட சமயங்களிலே தமிழ்மணத்தின்மீதான தாக்குதலுக்குக் காரணமாயிருந்தாலுங்கூட.

-/பெயரிலி. said...

எஸ்கே
இதிலே பெயரிலி என்ற பெயர் திட்டமிட்டே போடப்பட்டெதென எனக்குத் தெரியும். ஆனால், அப்பெயரல்ல பிரச்சனை. அங்கே போட்டிருக்கும் விடயங்கள்... இது போட்ட பய_டேட்டாவின் கிளைவிதிகளே & துணைக்குறிப்புகளே ;-) அதனாலேயே சுட்டினேன்.

-/பெயரிலி. said...

/போங்க சார் போங்க காலைல இருந்து இன்னும் ஒரு மணி நேரம் இருக்குன்னு நான் வேலைக்கு போகன்னு பத்து கமெண்ட்ஸ் போட்டுக்கிட்டு இங்கேயே குத்த /

that's the beauty of having an academic job & attending conferences... what I see in front me is boring you may get time type... yet, in fifteen min lunch. I won't miss, and then drive.... may get back to this comments late night or tomorrow.

All give your best punches on my face. I already have a bulldog's one ;-))

வைகை said...

@பெயரிலி

///தமிழ்மணம் ராங்க் எப்படியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றதென்பதை நீங்கள் என்றைக்காவது கேட்டிருக்கின்றீர்களா? ///

அது அதைப்பற்றி கவலைபடுபவர்கள் கேட்க்கவேண்டியது.. என் தொழில் அதுவல்ல :)


///அல்லது, நீங்கள் அறிந்தவரையிலே எப்படியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றதென்று சொல்லலாமே? ///

அது எனக்கு தேவையே இல்லாத போது அதைப்பற்றிய அக்கறையும் இல்லை :)


/////இதிலே தமிழ்மணம் நிர்வாகத்தின் பங்கு 0.000000000000001% ஏனும் இருக்கின்றதா என்று உங்களுக்குத் தெரியுமா? //

இதை நீங்கள் உங்கள் தளத்திலேயே சொல்லிவிடலாமே? பிறகு ஏன் தமிழ்மணம் முதலிடம் இரண்டாம் இடம் என்று வரிசைப்படுதுகிரீர்கள்?

////உங்களைப் போன்ற பன்னிக்குட்டிப்பதிவர்களின் (தவறான வார்த்தையாக நினைக்காதீர்கள்; அப்படித்தானே பதிவின் தலைப்பு சொல்கிறது)//// பங்கு 99.9999999999999999999999999999999999% இல்லையென்றேனும் தெரியுமா? ////

விடுங்க அண்ணே...உங்கள்ட்ட இருந்து இதை தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? :))

///இவற்றினைப் பற்றி ஏதும் தெரிந்திருக்காவிட்டால், கருத்தினைப் போகும்போக்கிலே சொல்லமுடியாதல்லவா? ஆனால், இக்குறிப்பிட்ட வரிசைப்படுத்தும் விசயத்தை நான் ஒரு சீரியஸான சிக்கலாகவே சொல்லவில்லை; ////
அதை நகைச்சுவை என்றே எடுத்துக்கொண்டு சொல்லிவிட்டுப்போனேன்; அதுகூட சமயங்களிலே தமிழ்மணத்தின்மீதான தாக்குதலுக்குக் காரணமாயிருந்தாலுங்கூட.///

அதாவது நீங்க பதில் விரும்பாதத நைகைசுவையா எடுத்துக்குவிங்க? விமர்சனம்னு நினைச்சா சீரியஸா நாங்க எடுத்துக்கணும்? அப்பிடித்தானே? :))

எஸ்.கே said...

புரிகிறது சார்!
ஆனால் இதில் எங்கள் தவறென்ன?
கமெண்ட் மாடரேசன் இல்லை. மேலும் ஆபாசம்/அநாகரிகம் தவிர எல்லாவித கருத்துக்களையும் ஏற்கலாம் என்பதே எங்கள் முடிவு. அதை இவ்வளவு எதிர்கருத்துக்கள் நீங்கள் இட முடிகிறதபோதே நீங்கள் தெரிந்திருக்க முடியும்.

அந்த கருத்தை போட்டவர் இப்போது மகிழ்ந்து கொண்டிருப்பார். நாங்கள் உங்களிடம் மாட்டிக் கொண்டோம்:-)

அந்த கருத்தை எதிர்த்து கொஞ்சம் காரமாக திட்டிவிட்டு சென்றிருக்கலாம். எங்களிடம் தேவையில்லாமல் வார்த்தை விளையாட்டு விளையாடுகிறீர்கள்:-)

TERROR-PANDIYAN(VAS) said...

@பெயரிலி

//வார்த்தைகளுக்கு இத்தனை உணர்ச்சிவசப்படுகின்றவர்கள், நீங்கள் வாசித்த பன்னிக்குட்டி வார்த்தைகளுக்கும் அதற்கான திரிந்த பின்னூட்ட வார்த்தைகளுக்கும் சத்தமேயில்லாமலிருந்ததேனோ? //

சார் ஒரு சின்ன சந்தேகம். ": கட்டண சேவை பற்றி கேள்வி கேட்பதை" இதான் இங்க பிரச்சனை சொல்றிங்களே. அப்போ அதுக்கு மேல இருக்க பொழுது போக்கு அப்படின்னு போட்டு இருக்க விஷயம் எல்லாம் உண்மையா என்ன? எல்லாமே நக்கலா எழுதபட்டது தான்.

-/பெயரிலி. said...

@வைகை

||
அது அதைப்பற்றி கவலைபடுபவர்கள் கேட்க்கவேண்டியது.. என் தொழில் அதுவல்ல :)

அது எனக்கு தேவையே இல்லாத போது அதைப்பற்றிய அக்கறையும் இல்லை :)//

அப்படியானால், தமிழ்மணம் ரேங் பற்றி பய_டேட்டாவிலே பன்னிக்குட்டிப்பங்காளிராமசாமியாக நீங்கள் ஒன்றும் எல்லாம் அறிந்தவர்போலச் சொல்லியிருக்கக்கூடாது. முற்றுப்புள்ளி :-)


/////இதிலே தமிழ்மணம் நிர்வாகத்தின் பங்கு 0.000000000000001% ஏனும் இருக்கின்றதா என்று உங்களுக்குத் தெரியுமா? //

இதை நீங்கள் உங்கள் தளத்திலேயே சொல்லிவிடலாமே? பிறகு ஏன் தமிழ்மணம் முதலிடம் இரண்டாம் இடம் என்று வரிசைப்படுதுகிரீர்கள்?|/

தமிழ்மணத்துக்கென்று ஒரு பதிவு உண்டு, அதிலே சொல்லப்பட்டவற்றை விமர்சனம் சொல்லமுன் வாசியுங்கள். இரண்டாவது குறிப்பிட்ட தரவரிசைப்பக்கத்தையாவது சொல்லியிருப்பதைப் பாருங்கள்
http://tamilmanam.net/top/blogs/1
|வலைப்பதிவுகளின் முன்னணி பட்டியில் ஒவ்வொரு ஞாயிறும் வெளியிடப்படும். கடந்த ஏழு நாட்களில் வலைப்பதிவுகள் வாசகர்களிடம் பெற்ற பார்வைகளை (ஹிட்ஸ்) முதன்மையாக கொண்டு இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது. மறுமொழிகள், வாசகர் பரிந்துரை வாக்குகள் போன்றவையும் ஒரு காரணியாக இருக்கும்|

இதையெல்லாம் செய்யாமல், சும்மா எனக்கு நீதிதேவன் மயக்கமென்று சொல்லிக்கொண்டிருப்பதாலே ஏதும் நியாயமாகிவிடாதல்லவா? :-(

-/பெயரிலி. said...

/சார் ஒரு சின்ன சந்தேகம். ": கட்டண சேவை பற்றி கேள்வி கேட்பதை" இதான் இங்க பிரச்சனை சொல்றிங்களே. அப்போ அதுக்கு மேல இருக்க பொழுது போக்கு அப்படின்னு போட்டு இருக்க விஷயம் எல்லாம் உண்மையா என்ன? எல்லாமே நக்கலா எழுதபட்டது தான்./

விடிய விடிய இராமர்கதை;விடிஞ்சாப்புறம்... விடுங்க...
1. விமர்சனத்துக்கும் படித்த தரவுகளின் அடிப்படையிலே திரித்துப்போடும் "நக்கலுக்கும்" வேறுபாடு உங்களுக்கும் எனக்கும் தெரியும்
2. பின்னூட்டங்கள் மட்டுமே பிரச்சனையல்ல; போட்ட கருத்தைச் சுட்டி நான் போட்ட விளக்கத்தை ஏற்றுக்கொள்கிறோமென்றோ மறுக்கிறோமென்றோ ஏதும் பதிலுமில்லை.

இனிமேலே சொல்ல ஏதுமில்லை. விளக்கும்வரை விளக்கியாகிவிட்டது. அவ்வளவுதான். மேலே எனக்கிங்கு வேலையில்லை. நன்றி. வருகிறேன்

வைகை said...

@ பெயரிலி

//////////அப்படியானால், தமிழ்மணம் ரேங் பற்றி பய_டேட்டாவிலே பன்னிக்குட்டிப்பங்காளிராமசாமியாக நீங்கள் ஒன்றும் எல்லாம் அறிந்தவர்போலச் சொல்லியிருக்கக்கூடாது. முற்றுப்புள்ளி :-)///////////

நாங்கள் வெறும் ரேங் போடுதல் என்று மட்டும்தான் போட்டுள்ளோம்.... யாரால் எப்படி என்று போடவில்லை.... அது உங்கள் தளத்தில் முன்னணி பதிவுகள் என்று வருவதால் அது நீங்கள்தான் என்று போட்டோம் :)


//////தமிழ்மணத்துக்கென்று ஒரு பதிவு உண்டு, அதிலே சொல்லப்பட்டவற்றை விமர்சனம் சொல்லமுன் வாசியுங்கள். இரண்டாவது குறிப்பிட்ட தரவரிசைப்பக்கத்தையாவது சொல்லியிருப்பதைப் பாருங்கள்
http://tamilmanam.net/top/blogs/1
|வலைப்பதிவுகளின் முன்னணி பட்டியில் ஒவ்வொரு ஞாயிறும் வெளியிடப்படும். கடந்த ஏழு நாட்களில் வலைப்பதிவுகள் வாசகர்களிடம் பெற்ற பார்வைகளை (ஹிட்ஸ்) முதன்மையாக கொண்டு இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது. மறுமொழிகள், வாசகர் பரிந்துரை வாக்குகள் போன்றவையும் ஒரு காரணியாக இருக்கும்|///////

அதெல்லாம் சரி அண்ணே... நீங்கள் சொன்ன அந்த ஹிட்ஸ்... இது தமிழ் மனதில் இருந்து அந்த பதிவுக்கு செல்லும் ஹிட்சா அல்லது ஒட்டுமொத்த ஹிட்சா? அதையும் சொல்லிவிடுங்கள்.. பிறகு சொல்கிறோம் தமிழ்மணதிற்கு இதில் சம்பந்தம் இல்லையென்று..... :))

இதையெல்லாம் செய்யாமல், சும்மா எனக்கு நீதிதேவன் மயக்கமென்று சொல்லிக்கொண்டிருப்பதாலே ஏதும் நியாயமாகிவிடாதல்லவா?///

இங்கு எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை.... நீங்கள் போட்ட கமென்ட் அனைத்தையும் ஒரு முறை படித்துவிட்டு வாருங்கள்... நான் இவ்ளோ அமைதியாக பேசுவதுகூட உங்களுக்கு அபத்தமாக தோணலாம் :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

Dear Mr. -/பெயரிலி,
I understand that you have some concerns over our post. In that case you should have mailed us and informed us about that first. Or you could have expressed that in comments. But the way you have commented in our blog is objectionable by all standards. We did not expect this from a top tamil blogs aggregator. You are admin of a reputed blog aggregator and there is manner to deal with such things.

In the post we mentioned that tamil manam does not like people to question about its paid service. It was actually written for fun. But now everyone must have realized that it is indeed true.

Your paid service itself is an unethical thing. Anything that is paid to be published should be called as advertisement. But you are promoting blogs which pay you. And your Tamilmanam says that you will not accept certain blogs because their contents are not acceptable to you. But you are ready to accept the same blogs if they pay. This clearly shows your real intentions. There is nothing in the world that can’t be criticized.

If you can’t accept criticism please close your aggregator and do your professor, IT and doctor jobs.

Thanks

-/பெயரிலி. said...

/Dear Mr. -/பெயரிலி,/
Dear Mr. பன்னிக்குட்டி ராமசாமி
/I understand that you have some concerns over our post. In that case you should have mailed us and informed us about that first./
It is interesting that when you posted based on your “reading of the data” you did not have mail to Tamilmanam and asked if it were true. Now, when you post and let the people put the comments as the way they want, we should have asked you and informed. What kind of logic is it?
/Or you could have expressed that in comments. But the way you have commented in our blog is objectionable by all standards. /
Let me repeat it one more time; I did in a polite way if you haven’t noticed or did not want to notice. You did not even bother to respond positively/negatively. Then you allowed people even go on ranting as they wanted.
/We did not expect this from a top tamil blogs aggregator. You are admin of a reputed blog aggregator and there is manner to deal with such things. /
Your logic and arguments are always skewed. You can write whatever you want on a “reputed blog aggregator” (these are your words), and we have to listen as always, “customers are always right.” First you did not want to hear what I said in a very cordial manner in my first comment. You let the unleashed verbal diarrhea run in the comment box, and then I tried handle in the same manner, you bring the logic, “You are admin of a reputed blog aggregator and there is manner to deal with such things.” Anyway, all the comments were in my own google account, and if you hadn’t noticed except for one feedback (where I mentioned mostly what I sent you through the official mail when I removed this blog), all are of my personal view as a person who had to work in the admin capacity.

/In the post we mentioned that tamil manam does not like people to question about its paid service. It was actually written for fun. But now everyone must have realized that it is indeed true./
Really? Nice try for another twister ;-) “Tamilmanam does not like the people to question about its paid service”; one runs this blog says it was written for fun and the other says that it was written based on the data we read. Which is the truth? Again, even here I am not angry about asking questions about any service that we give (though I still scratch my head what kind of legal binding that could force Tamilmanam address to these questions), but for putting something “for fun” or “with the data got with ‘reading’” that is not true. Let me ask a simple question; these many people are running this blog, and many responded here. Among all of you, how many really did ask question about paid advertisement to tamilmanam. I know only one who had his comment here asked this week, and I told him that I would pass to the admin who can respond to him (I do not respond to something I do not involve). Once the other admin gets time he certainly would. Among the rest, let me know, “How many of you did really raise any question about the paid service to Tamilmanam, and if you did how many did really not get any response?” Please respond to this so that I can see the statistics and data. Else, please be kind enough to tell me how would you have been reacted in my position for a “fun/reading data” statement.

-/பெயரிலி. said...

/Your paid service itself is an unethical thing. Anything that is paid to be published should be called as advertisement./
I am sorry to get it. Who demands it? ;-) Anyway, if I respond to you in my ethical perspective, if you haven’t seen in the front page (unfortunately it is not where the சூடான இடுகைகள், வாசகர் பரிந்துரை appear ) , we have two permanent slots with “தமிழ்மணம் கட்டணசேவை” tagged blogs highlighted in different color. And some other non-colored blogs stay a little longer but without color codes. We cannot increase more paid blogs hanging there in the front page as they would totally eclipse our own purpose of promoting NON-paid GOOD & CONSTRUCITVE blogs. Hence we alternate the paid blogs (anyway, they are not many either). All these were clearly explained at http://www.tamilmanam.net/purchase_ads.php
and

http://tamilmanam.net/tamilmanam_paid_service.php and also was repeated in last week post ( http://blog.thamizmanam.com/archives/338 please see the comment section) . More than anything, we cannot tag on the paid bloggers’ blogs as there are paid blogs. More than all, one or two time the code made one or two paid blog got stuck in the front page even after I removed. Then, we had to get the bug out. Now some ignorant bloggers want to get their 1 min out of these issues. Now, tell me what kind of ethical question that disturbs you? And, those who commented agreeing with this blog, what kind of ethical stand you have to skew the facts and call it a fun?

-/பெயரிலி. said...

/But you are promoting blogs which pay you. And your Tamilmanam says that you will not accept certain blogs because their contents are not acceptable to you. But you are ready to accept the same blogs if they pay. This clearly shows your real intentions. /
Pray tell me what our real intentions are. Listen! Tamilmanam does have some basic core points. We can NOT promote established religious blogs/astrology+horoscope/ Caste related / political party related blogs (not posts). Some are for what they stand and others are for what menace they can become. If you hadn’t seen what tamilmanam had gone through some fanatic opponent bloggers in the past, please go and dig the TM blog current and previous archives. I had seen rogues who send mail to TM to remove a blogger in the morning as he was of a certain caste/religion and gang up with the same guy in the evening at Nadesan Park bloggers meet to criticize tamilmanam for telling “bloggers have to sort out their own problems.” You may have no idea (see some 2006 posts http://blog.thamizmanam.com/archives/39 http://blog.thamizmanam.com/archives/40 see a post from last week http://blog.thamizmanam.com/archives/344 ). Hence we have to have some basic noise filtered. Although we discard religious blogs for their anytime_start_to_attack_others_religions spots, we do not want them totally removed in the way saying “No place to religion” That’s what I had to say “if you do want keep it a paid blog.” After seeing some religious bloggers’ opposition to that decision in last week, now even that is not an option. Tamilmanam is not here to decide whose god does the best. Period.
Let all of us here. Please tell me what our real intentions are.
/ There is nothing in the world that can’t be criticized./
Did I ever in this discussion contradict this point? Yet, twisting the facts that you even do not take time and effort to know what they are is not criticism; it is simply wrong.

/If you can’t accept criticism please close your aggregator and do your professor, IT and doctor jobs. /
First I do take the criticism, but cannot take hypocrites’ twisting pedagogy after spewing and spreading lies based on “reading data” or for making fun without basic knowledge of what really go on.
Well, you have no right to tell us what we should do for all what I said that you had no right to spread misinformation (it may legally be tackled in US where TMI is registered). For the last time I had checked, we were not asking you about your opinion on if we have to keep TM open or look at our own jobs, but just to STOP defamation and character assassination. You can get the mileage of poking good natured pun on Tamilmanam even to point out its drawbacks, but you do not have the rights to defame with ill-intention and go on repeating it (after having the audacity to add it in TM) with claiming that you are the victims.
Hence, thanks, but no thanks. We know what we have to do with tamilmanam and our professional lives.

/Thanks/
Reciprocating if you really try to understand what I was trying to tell for the past 1.5 days.

PS: sorry; just returned from four hour drive, and before preparing for things to be finished, I want this to be told once and for all. I have no time to correct the grammar and the spelling. My apologies. I do not think this comment is of any “fun/kummi value” unless hitting me back is the fun. Please go on proceed in my expense. As this blog is not in tamilmanam anymore, I do not care of what content is in it. Best wishes.

கைப்புள்ள said...

இங்க என்னதான் நடக்குது? ஒரு போஸ்ட் போட்டா அதில் நகைச்சுவை இருந்தா அதை படிச்சு ரசிங்க. அதில ஏதாவது முரண்பட்டு இருந்தா அதை மட்டும் விவாதிங்க. தனிப்பட்ட மனிதத் தாக்குதல் தேவையா?

தினேஷ்குமார் said...

ஜாங்கு ஜக்கு ஜமக்கு ஜக்கு ஜாங்கு ஜக்கு ஜா..............

Prabu Krishna said...

ha ha ha super.

Prabu Krishna said...

ha ha ha sema fun. comments are Gin.

Ramalakshmi said...

Fact of the matter is, there is something funny in the way the Tamilmanam admin has reacted to the question of advertisement blogs.

1. There are blog posts that persist in the home page for days together, without there being any indication that it is an advertisement blog.

2. When this is pointed out, they just say baldly it is an advertisement blog but are not forthcoming in answering as to why this fact should not be made public in any way whatsoever.

3. In that case, how do they expect bloggers to be vigilant and tell the admin, when any irregularity takes place?

4. No answer to that question either.

5. Something is fishy.

உணவு உலகம் said...

நகைச்சுவைக்காக எழுதியது இவ்வளவு சீரியஸ் ஆயிட்டே!

செங்கோவி said...

பயங்கர டேட்டா பதிவுல இல்லை....ஹி..ஹி..கமெண்ட்ல இருக்கு..பெரிய்ய அப்பாடக்கர் தான் போல.

செங்கோவி said...

தமிழ்மணத்தின் உண்மையான மணத்தை வெளிக்கொண்டு வந்திட்டீங்க போல..

செங்கோவி said...

கருத்து மோதல்னா இது தானா...ரைட்டு, மெத்தப்படிச்சவங்க சொன்னா சரி தான்.

Iyappan Krishnan said...

//

பதிவர் பெயரிலியின் பித்தலாட்டம்.
http://podian.blogspot.com/2008/08/blog-post.html

//

இது மாதிரி ஒரு போராட்டம் ஏற்கனவே நடந்தேறி இருக்கிறது போல :(

Mohamed Faaique said...

அடேங்கப்பா.. எத்தன கொமண்ட்சு.. தெரிஞ்சிருந்தா,, இப்படி ஒரு பதிவ நான் போட்டிருப்பேனே!!! ஜஸ்டு மிஸ்ஸு...

Iyappan Krishnan said...

for follow-up

-/பெயரிலி. said...

ஜீவ்ஸ்
"PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை" இத்தனை ஆண்டுகளாக நடத்துகின்றீர்கள். இன்றுதான் புதிதாக வியக்கின்றீர்கள். ஒவ்வொருமுறையும் காரணமாக நீக்கப்படுகின்றவர்கள் தாக்க நான் வசதிப்பட்ட ஆட்தானே? கேட்டிருந்தால், இதுபோல எத்தனையோ "பெயரிலியை அடிப்போம் வாருங்கள்" இணைப்பினைத் தந்திருப்பேனே! :-(

செங்கோவி,
உங்களுக்குச் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டாலும், இங்கேயும் சொல்லவேண்டுமென்றால், அதையே திரும்பச் சொல்லலாம். விரும்பினால், எழுதுங்கள்.

IlayaDhasan said...

என்ன நடக்குது சார் இங்க?
ரம்யமான பெயரைக் கொண்ட ஒரு பரசுராம் , திடீர்னு, யாரும் தமிழ் மணத்துல இருக்காதீங்கன்னு
பிரபல பதிவுக்கெல்லாம் போயி 'வஞ்சப் புகழ்ச்சி' பண்ணிச்சி. அதுக்கப்புறம் அந்த பிரபல பதிவுகள் இப்ப
'புதிது' அப்படிங்கற ஸ்பெஷல் சூப்பர் ஸ்கிரிப்ட் ஓட ,உலா வருது. அதே குட்டி ,கேபிள் வலைக்கு போயி ,
நீங்க யுடான்ஸ் வச்சிருக்கீங்க ,உங்களுக்கு தமிழ் மணத்தில இருக்கணும்னு அவசியமா அப்படின்னு உசிப்பி
விட்டுது.
இன்ட்லி சூடான பதிவு , அப்படி , இப்படின்னு கலக்கி எல்லோரையும்(அட்லீஸ்ட் என்ன) , முகம் தெரியாத பல பதிவர்களுக்கும்
அடையாளம் சொல்ல வைத்துக் கொண்டிருந்தது , இப்ப திடீர்னு அடக்கி வாசிக்குது.

இப்ப என்னடான்னா , நீ பதிவ இப்படி தான் எழுதணும் , அப்படி தான் எழுதணும், இல்லன்ன தூக்கிருவம் ,ஆனா , நீ காசு கட்டிட்டு
வேணும்னா , என்ன வேண்ணா எழுதிக்கோ அப்படின்னு தமிழ் மண நிர்வாகி சார்புல சொல்றாங்க. அய்யா உடனே , "எனக்கு பால் குடி வயசு, நீ பால் குடிசிகிட்டு இருக்கிறப்ப , நான் என் பொண்டாட்டி கூட ஜல்சா பண்ணிக்கிட்டு இருந்தேன் அவளவு 'பெருசு' என் வயசு அப்படின்னு உங்க அனுபவ முதிர்ச்சிய காட்டி " கலங்க வச்சிராதீங்கப்பு. நாம வேன , நம்ம 'முதிர்ச்சிய' அப்பறம் வேண்ண , தெறந்து பாத்து கண்டுபிடிசிக்கலாம்,தனியா ...

அப்ப இன்னும் கொஞ்ச நாள்ல தமிழ் மணமும் அடங்கி போகணுமுன்னு பயமா? இல்ல எக்கு தப்பா எழுதுறவங்கள ஓரம் கட்டுற மாதிரி எழுதி ,அவங்களையும் கட்டண தாரரா மாத்தணும்னு , இதுவும் ஒரு விளம்பர உத்தியா? இல்ல இங்க சண்ட போடுற மாதிரி போடுற ,எல்லோரும் கூட்டா, ஒன்னும் புரியல.

நடத்துங்க சாமிகளா...

ராமாசாமி சார், நீங்களும் பேசாம , கட்டணம் வாங்கிட்டு தான் ,பெயரிலி கமெண்ட்ஸ் காட்டுவேன், ஏன்ன இங்க தரமான பின்னோடதுகு மட்டுமே இடமுண்டு , நீ பொங்கனும்னா, எனக்கு பே பண்ணிட்டு , தாராளமா பொங்கு அப்படின்னு சொல்லிருங்க.

அய்யா திருவாளர் 'தமிழ் ஸ்மெல்' ...நீங்க 'பாட் ஸ்மெல்' ஆ , நீங்களே ஆயிடீங்க ,அது தான் எனக்கு தோணுது ..நீங்க என்ன 'வெண்ணெ' சொல்லிக்கோங்க , நாங்க பாக்காததா..அதேதான் நீங்களும் , நீங்க பாக்காததா ...வாங்க சார் , லாஸ் எஞ்சலச்கு ,
பே ஏரியால இருந்து ஆறு ஹவர் டிரைவ் தான் ,வாங்க போயி , அந்த ஆம்வே கான்பரன்ஸ் அட்டென்ட் பண்ணிட்டு ,
காந்தி ஹோட்டெல , நார்த் இந்தியன் மீல்ஸ் வெட்டிட்டு , அப்படியே ,டிஸ்னி லேண்ட் உள்ள போயிட்டு , வின்னி த பூ ல இருக்குற
பிக்லேட்ஸ் கட்டவுட்டு பாக்கலாம் , எல்லா டென்சனும் இறங்கி , எப்படி நம்பர் ஒன் திரட்டி ஆகலாம்னு , வெளம்பரம் பண்ண புதுசா
ஐடியா கெடைக்கும் ...ஸ்டீவ் ஜாப்ஸ் போய் சேந்துடாறு தெரியுமா .. நாம ஏன் தமிழ் பாட் ஆரம்பிக்க கூடாது?

IlayaDhasan said...

98. வல்லமை பேசேல
உன்னுடைய சாமர்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே

99. வாதுமுற் கூறேல
பெறியோர்கள் இடத்தில் முறன் பட்டு வாதிடாதே

68. நிலையிற் பிரியேல
உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.

92. முனைமுகத்து நில்லேல
எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே

103. ஊருடன் கூடிவாழ
ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்

104. வெட்டெனப் பேசேல
யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாக பேசாதே

107. ஒன்னாரைத் தேறேல
பகைவர்களை நம்பாதே

108. ஓரஞ் சொல்லேல
எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேச


முக்கிய குறிப்பு: இது காப்பி பேஸ்ட் ரிப்ளை , காசு கட்னாதான் போடுவ்மின்னு சொல்றதுக்கு திரு.அவ்வையார் பாட்டிக்கு
மட்டுமே உரிமையுண்டு.

Iyappan Krishnan said...

பெயரிலி ஐயா

உங்களை தரம் தாழ்த்த வேண்டும் என்றோ அல்லது உங்களை புண் படுத்த வேண்டும் என்றோ போட்டது அல்ல அந்த கமெண்ட். தமிழ் மணத்தின் மீது எனக்கு மற்றவர்களைப் போலவே "அட்டாச்மெண்ட்" காரணம் அதன் பின்னிருக்கும் அனைவரின் உழைப்பும் அர்ப்பணிப்பும். ஆனால் தங்களின் தனிப்பட்ட பின்னூட்டங்களும், புலமை மிக்க சொல்லாடல்களும் வீணாக இப்படி பல சண்டைகளில் விழலாக்குகிறீர்கள் என்ற ஆதங்கம் முதலில் இருந்தே எனக்கு உண்டு. இப்போது வெளிப்படையாகவே சொல்லுகிறேன்.

இதை தமிழ்மணம் தன்னிலை இழக்கக் கூடாது என்ற நினைக்கும் ஆத்மாவின் ஆதங்கமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

btw : Photography-in-tamil அது பலர் கூடி இழுக்கும் தேர். அத்தனைப் புகழும் அதை இழுப்பவர்களுக்கே. நான் செய்வது அதில் ஒன்றும் இல்லை.

IlayaDhasan said...

எழுத விட்டு போச்சு ... ஒரு வேல , தமிழ் மணத்தை புகழ் வது போல் இகழும் , பெயரிலியின் உள்நாட்டு , வெளிநாட்டு ,
உள்குத்து ,வெளிகுத்து சதியா? ...ஒரு விஷயம் நல்லாத் தெரியுது , டைம் கெடைகுரப்ப ,நாங்க கம்ப்ளைன்ட் பண்ண பதிவ
படிப்போம் சொல்றவரு , எல்லா பதிவரையும் ஓரளவு தெரிஞ்சி முன்னாலேயே தெரிஞ்சு வச்ரிகாறு...சார் ,நீங்க எங்கயோ போய்டீங்க,
வாங்க டீ சாபிட்டே பேசலாம்...

யுவகிருஷ்ணா said...

ஃபாலோ-அப் :-)

செங்கோவி said...

//செங்கோவி,
உங்களுக்குச் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டாலும், இங்கேயும் சொல்லவேண்டுமென்றால், அதையே திரும்பச் சொல்லலாம். விரும்பினால், எழுதுங்கள்//

அண்ணன் அப்படித்தான் இணைய தாதா ரேஞ்சுக்கு பில்டப் கொடுபபரு...ஆவ்ரு ஏதோ பயங்கரமா மெயில்ல சொல்லிட்டாரு போல-ன்னு யாரும் நினைச்சுக்க வேண்டாம்...அந்தக் கூத்தை கீழே நீங்களே பார்த்துக்கலாம்...(இதே விளக்கம் ஐடியாமணி ப்ளாக்கிலும் இருக்கு பாஸ்..)

செங்கோவி said...

2011/10/14 admin thamizmanam

பதிவர் செங்கோவி

தமிழ்மணத்தின் உண்மையான மணம் தங்களுக்குச் சங்கடமாயிருப்பின், அறியத்தாருங்கள்; தங்களுக்குச் சிரமமின்றிப் பதிவினை நீக்கிவிடுகின்றேன். தானம் கொடுக்கிற மாட்டைப் பல்லைப் பிடிக்கமட்டும் தெரிகின்றவர்களுக்கு கொஞ்சமேனும் தானம் கொடுக்கின்றவனின் கருத்துகளைக் கேட்க நேரமிருக்காதது ஆச்சரியப்படுவதிற்கில்லை. எல்லோரும் தர்ம அடிகொடுக்கும்போது, ஜனநாயகவாதிகளாகிவிடுகின்றார்கள். கொஞ்சமும் புரிந்துணர்வும் பொறுப்புணர்ச்சியுமில்லாது, கும்மிக்கென்றே பதிவுகளும் பதிவர்களுமியங்கினால், இரு புறங்களுக்கும் பங்கமின்றி நீங்கிவிடுதல் நலம், இல்லையா?

அறியத்தாருங்கள்; தங்களுக்குச் சிரமமின்றிப் பதிவினை நீக்கிவிடுகின்றேன். மணம் தங்கள் மூக்கினை அரிக்கவேண்டாமே!

நன்றி

இரமணிதரன், க.
தமிழ்மணம் உதவிக்குழு

http://tamilmanam.net


2011/10/14 sengovi blog


என்னது என் பதிவை நீக்கப் போகிறீர்களா? தமாஷ் பண்ணாதீங்க பாஸ்.


நான் என் பதிவினை தமிழ்மணத்தில் இணைப்பதில்லையே...உங்கள் பட்டையும் என் வலைப்பூவில் இல்லை.


தமிழ்’மணம்’ ஒவ்வாமையால் நான் எப்போதோ ஒதுங்கிவிட்டேனே..நீங்களாகவே இணைத்துக்கொண்டால் நானா பொறுப்பு? இதற்கு மிரட்டல் தொனியில் மெயில் வேறா?


நல்ல புரிந்துணர்வு..நன்றி.

செங்கோவி said...

2011/10/14 admin thamizmanam

ஒதுங்கிவிட்டீர்களா? தமிழ்மணத்திலே இன்னமும் உங்கள் பதிவு இன்னமும் இணைக்கப்பட்டுக்கொண்டேயிருக்கின்றது,. உங்கள் பதிவினை விலக்கும்படி கேட்டிருந்தீர்களா? அப்படியானால், அறியத்தாருங்கள். அப்படியாக வந்து நான் காணவில்லை. அப்படியாக விலகாவிடத்த்து, தமிழ்மணத்திலே தோன்றிக்கொண்டுதானிருக்கும். நீங்கள் தமிழ்மணத்திலே இணைக்கத்தேவையில்லை. ஆனால், தமிழ்மணம் தரவுத்தளத்திலே இன்னமுமிருக்கின்றது. நீங்களாக ஒதுங்கிக்கொள்வதைச் சேரும்போது, அறியத்தந்தவர், விலகும்போது அறியத்தந்தால் மட்டுமே முடியும். பரவாயில்லை. இப்போது, நீக்குகின்றேன். நீக்கிய குறிப்புள்ள அஞ்சல், உங்கள் மின்னஞ்சல்முகவரிக்கு வரும். உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்

மிரட்டல் செய்வதற்கு தமிழ்மணம் டெரர் கும்பலில்லை. ஓரிடத்திலே பொறுப்பின்றி நீங்கள் எழுதும்போது, விரும்பாவிடத்திலே ஏனிருக்கின்றீர்கள் என்பது கேட்பது மிரட்டல் தொனியென்றால், வேடிக்கைதான்.

==

இரமணிதரன், க.
தமிழ்மணம் உதவிக்குழு

http://tamilmanam.net


2011/10/14 sengovi blog

எனது கமெண்ட்டில் ஏதேனும் மாற்றுக்கருத்து இருந்தால், நீங்கள் அங்கே பின்னூட்டத்தில் தான் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். தேடிப்பிடித்து மின்னஞ்சல் அனுப்புவது எனக்கு நேர விரயம்....உடனே நீக்குங்கள். நன்றி.


2011/10/14 admin thamizmanam

அஞ்சவேண்டாம்; தனிப்பட பதிவனாக என் கருத்தை அங்கே இடவே செய்வேன். அதைத்தான் அங்கே அவர்களுக்குச் செய்திருக்கின்றேனென்பதைக் கவனிக்கவும்.

ஆனால், தமிழ்மணம் பற்றி நீங்கள் சொல்வதைத் தமிழ்மணம் கவனிக்கத்தான் வேண்டும் - சட்டரீதியான காரணங்களுக்காக.

உங்கள் பதிவினை இப்போது, நீக்கி அஞ்சல் அனுப்பியிருந்தேன். கிடைத்திருக்குமென நம்புகிறேன். உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

இரமணிதரன், க.


---------- Forwarded message ----------
From: sengovi blog
Date: 2011/10/14
Subject: Re: தமிழ்மணத்தின் உண்மையான மணம்
To: admin thamizmanam



நீங்கள் தாராளமாக கவனிங்க..

அந்த மெயில் வந்துவிட்டது..நான் ஏற்கனவே தமிழ்மணத்தை நீக்கிவிட்டதால், உறுதிப்படுத்த ஒன்றுமில்லை.


நன்றி.

---------------------------------------------------------------------------------------------------------------------------

செங்கோவி said...

எல்லாரையும் மிரட்டுகிற மாதிரி ‘ஏய்..தமிழ்மணத்தை விட்டு தூக்கிடட்டுமா’-ன்னு கேட்டு பல்பு வாங்கினதைத் தான் அவரு பெருமையா சொல்றார்...வேற ஒன்னும் இல்லை...

செங்கோவி said...

பெயரிலி தவிர்த்த பிற நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள் :

தமிழ்மண அக்கவுண்ட்டை நாங்களாகவே குளோஸ் பண்ணும் வசதியை யாஹூ/கூகுளில் இருப்பது போல் தாருங்கள்..தமிழ்மணம் பிடிக்காமல் ஓடுபவர் உங்களுக்கு மெயில் அனுப்பி நீக்குமாறு கெஞ்சுவார் என எதிர்பார்க்க வேண்டாம்.

அப்புறம், பெயரிலியின் கமெண்ட்களைப் பார்த்து பெருமைப்பட்டுக்கொள்ளுங்கள்.

IlayaDhasan said...

இரமணிதரன், க

IlayaDhasan said...

ரெண்டாயிரத்து நாளில் இருந்து பின்னூட்ட 'தீவிரவாதி' யாக இருந்த ,
அவர் கம்மேன்ட்கல அப்ப இருந்து அப்படியே தொடர்தீங்கன்ன ,
அவர் எப்படி கொஞ்சம் கொஞ்சமா , தமிழின் மணத்தை உலகெங்கும் பரப்ப
அரும் பாடு பட்டு உழசிருக்கருன்னு நல்லா தெரியும். வாழ்க அவர் தொண்டு.
அவர் கூற்று ,நான் தானம் கொடுக்கிறேன் ,கை காசு போட்டு , சர்வர் வச்சி,
உங்க பதிவ ,உங்கள ஊர் அறிய வச்சு பெரிய அப்பா டாகர் ஆகிறேன் ...என்ன பாத்து நீ எப்படி காசு வாங்கிட்டு அத போடலாம்னு கேட்குறியா , என் கிட்ட காசு கொடுக்காம ,பதிவு போட்டா , நான் பிச்ச போட்டதா தானமா வாங்குற பிச்சகார பதிவர்கள்டா நீங்கல்லாம் ...நான் இனிமே பிச்ச போடா மாட்டேன் , போட்டாலும் கேழ்வி கேட்கக் கூடாது , போடுறத 'பொத்திகிட்டு' , வாங்கிட்டு போய்கிட்டே இருக்கணும் ... இதுதாங்க அவர் கொண்ட உயர் கொள்கை ..வாழ்க தமிழ் ...'வீசட்டும்' அதன் மணம் எங்கும் ...

IlayaDhasan said...

இந்த பய டேட்டா- வில் கேட்ட கேள்விக்கு,அய்யா பெயர் இருக்குதுப்பா!

சிம்மத்தோன் said...

பெயரிலி கொஞ்சம் இங்கயும் வாங்களேன்.

http://muthucitharalgal.blogspot.com/2011/10/blog-post.html

ப.கந்தசாமி said...

//வெறும்பய said...

அய்யய்யோ பயமா இருக்கு.. இருங்க பெரியவங்க யாரையாவது கூட்டிட்டு வரேன்..//

என்ன விஷயம்? ஒண்ணும் புரியலயே. யாராச்சும் ஒரு பொழிப்புரை போடுங்கப்பா!

பெரியவங்க வேணுமா? என்னை விட பெரியவங்க இங்க யாரும் இல்லை. எங்க வரணும்? ஒரு ஆட்டோ அனுப்புங்க.

இவ்வளவு பெரிய குருக்ஷேத்திரத்துல நானும் என் பங்க செஞ்சுட்டேன்.

Astrologer sathishkumar Erode said...

முகம் மறைத்து திரியும் பதிவர்கள் சொல்ல தயங்கும் வார்த்தைகளை கூட நீங்க போகிற போக்கில் தூவி விட்டு சென்றீர்கள்..... //
தமிழ்மணத்திற்கு பதிவர்கள் அடிமையா என்ன..?

Astrologer sathishkumar Erode said...

தமிழ்மணத்தில் எப்போது விளம்பர பிரிவு வந்ததோ அப்போதே அதன் தமிழ் சேவையும் கேலிக்குரியதாகிவிட்டது.அப்புறம் எதுக்கு இந்த வீராப்பு..?

பதிவர்கள் எப்படி தமிழ்மணத்தை நம்பி இருப்பதாக தமிழ்மணம் நினைக்கிறதோ அதே போல பதிவர்களை நம்பித்தான் தமிழ்மணமும் இருக்கிறது என்பதை உணர வேண்டும்.சும்மா இந்த ஃப்லிம் காட்டுற வேலையெல்லாம் வேணாம்..

Astrologer sathishkumar Erode said...

தமிழ்மணத்தில் தொழில் நுட்பம் பத்தி விளக்க உரையெல்லாம் பார்த்தா காமெடியா இருக்கு...இப்ப வந்திருக்குற பதிவனுக்கு கூட தெரியும்..அமலாபால் நு பதிவு போட்டா சூடான இடுகைகளில் இடம் பிடிக்கும் ரகசியம்...தமிழ்மணம் டாப் 20 யில் இடம் பிடிக்க அந்த வாரம் முழுக்க தினசரி இரண்டு பதிவு போட்டு எல்லாருடைய பதிவுலியும் கமெண்ட் போட்டுட்டு வந்தா ஹிட் கணக்கு காட்டிடலாம்..கமெண்ட் கணக்கும் காட்டிடலாம்..டாப் 5 இடத்துல வந்துடலாம்..இவ்வளவுதான் தமிழ்மணத்தின் தொழில் நுட்பம்..இதை விட்டுட்டு என்னன்னமோ கட்டுகதை விடுறாரு..

Jaleela Kamal said...

அண்ணே ரொம்ப நாளா புரியாத புதிரா இருந்த இந்த தமிழ் மனத்தை பற்றி புட்டு புட்டு புட்டு வச்சீட்டீங்கண்ணே , ரொம்ப ஜூப்பர் பயோடேட்டா

Shanmugam Rajamanickam said...

சண்டை போடாதிங்க ஏட்டையா,,,

Shanmugam Rajamanickam said...

இந்த சண்டை எப்ப தான் முடியும்?

துணிந்து சொல்பவன் said...

Please see here
http://unmaipesuvom.blogspot.com/2011/10/blog-post.html

Anonymous said...

சுமார் ரெண்டு மணிநேரம் ஆச்சுயா... இந்த பதிவையும் கம்மேன்டையும் படிச்சி முடிக்க...

நல்ல இருந்திச்சி... இன்னொரு பதிவு எழுதுங்க பாஸ் :)

'பரிவை' சே.குமார் said...

பத்த வச்சிட்டியே பரட்டை...

இப்ப பத்திக்கிட்டு எரியுதுல்ல...

சும்மா வலைப்பதிவர் ஒற்றுமை அதிருதுல்ல...

N.H. Narasimma Prasad said...

ரொம்ப பெரிய லெவல்ல சண்டை நடக்குது போல...

HajasreeN said...

இதுதான்யா தொல்லை; ஹாவ் குவாட்டர் பீட்டர்ஸ்செல்லாம் தமிள்பதிவு எளுதவந்தா... அரே தேவுடா! ஏடு கொண்டல வாசா!!///



தமிழ் எண்டு ஒழுங்கா எழுத தெரியாதவன் தமிழ்மண அட்மின் கருமம் டா

தமிழ்கிழம் said...

என்னதான் ஒரு நிர்வாகத்தினை நிர்வகிப்பவர் என்றாலும் அவரும் இரத்தமும் சதையும் சேர்ந்த மனிதர் தானே நண்பர்களே. இருந்தாலும் வார்தையில் கவனம் செலுத்தி இருக்கலாம். மரியாதையான வார்தைகளில் திட்டி இருந்தால்,மூத்த பதிவரிடம் திட்டு வாங்கினாலும் தெரியாது.

அந்நியன் 2 said...

யார் இந்த பெயரிலி ?

படிக்கும் மாணவனை (சதிஷ்)அவமானப் படுத்தியது கண்டனத்திற்குரியது மன்னிப்பு கேட்காவிட்டால் வருத்தப்படபோவது நாம் அல்ல அவர்கள்தான்.

விரிவாக படிக்கவும் பதிவும் எழுதவும் நேரம் இல்லாத காரணத்தினால் என்னால் எதுவும் எழுத முடியவில்லை எல்லோர் எடுக்கும் முடிவிற்கு நான் உறுதுணையாக இருப்பேன்.

மாடல மறையோன் said...

TM is running a service to Tamil bloggers. They have their prescribed polices which are time and again revealed public. If some of you don't find it palatable and your blogs are blocked from TM for violation of TM's principles, how can you find fault ? Will you enter a house in which you are not welcome.

All of you writing here against this so-called TM fellow runner, may open your own aggregator and there, you presribe your liberal codes and welcome like minded bloggers.

மாடல மறையோன் said...

//தமிழ்மணத்தை தூக்கியெறிவோம்
//

Why go on saying this ? Just leave TM and mind your business.

Start a thiratti of your own and allow all kinds of blogs which you like.

As only words, not action, I find all the comments here aginst TM, are cowardly.

எஸ்.கே said...

@ மாடல மறையோன்
சார் இப்ப பிரச்சினை தமிழ்மணம் பிளாக்கை நீக்கினது பிரச்சினையில்லை அவர் பேசின வார்த்தைங்கதான்...
அது என்ன எதிர்க்கிறாங்கல்லாம் ஒரு திரட்டி ஆரம்பிச்சுக்கனுமா? அதெப்பிடி சார் ஒரு கடையில் ஏதாவது வாங்கறப்ப கடைக்காரர் திட்டினா வாடிக்கையாளர் ஏன் இப்படி சொன்னீங்கன்னு கேட்டா நீங்க சொந்தமா கடை ஆரம்பிச்சுக்கோங்கன்னு சொல்வீங்களா?

அவர் பயன்படுத்திய வார்த்தைகள் துளிகூட உங்களுக்கு தப்பா தெரியலையா?

TERROR-PANDIYAN(VAS) said...

@மாடல மறையோன்

//Why go on saying this ? Just leave TM and mind your business.//

Y? do you got fear it wil reveal the true colour of Tamilmanam and more people will walk out? I think its our rights to say we are going out from xyz or entering in xyz and I dont think you have any rights to ask us to mind our business.

//Start a thiratti of your own and allow all kinds of blogs which you like.

As only words, not action, I find all the comments here aginst TM, are cowardly. //

Ref ஏஸ்.கே Reply.. and Finally வெளிநாட்டில் பிச்சைகாரனுக்கு கூட ஆங்கிலம் தெரியும் அதுக்காக தஸ்சு புஸ்சுனு இங்க வந்து சத்தம் போட கூடாது. வாங்க பாஸ் தாய்மொழிக்கு.. :)

F.NIHAZA said...

சீச்சீ.....
இப்படியெல்லாம் கேவலமா.....பேசமுடியுதா.....
படித்தவனுக்கு பண்பாடு தெரியும்....
அரைகுறையா படித்தவர்களுக்கு....நல்ல பண்பாடுகள்....வார்த்தைகளை தெரிந்திருக்க நியாயமில்லை தான்....

mohamedali jinnah said...

தமிழ்மணம் திரட்டி. பற்றி பதிவர்கள்....
http://seasonsnidur.blogspot.com/2011/10/blog-post_17.html
"தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?
Abdul Basith at ப்ளாக்கர் நண்பன்
நமது வலைப்பதிவுகள் பிரபலமாவதற்கு திரட்டிகள் முக்கிய காரணியாக செயல்படுவதை யாராலும் மறுக்க முடியாது. தமிழில் பல திரட்டிகள் இருந்தாலும் அவைகளில் ஒரு சில திரட்டிகள் மட்டும் தான் முன்னிலையில் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான், தமிழ்மணம் திரட்டி. மேலும் படிக்க.."தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?.

விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?
தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???
குட்டி சுவர்க்கம்
சீ தமிழ் மனமே ............................
தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...

smart said...

// வெறும்பய said...
பீச்சென்றோ ஓக்கென்றோ ஏதாச்சும் மரத்தளபாடக்கம்பெனி தொடங்கியிருப்போமே //

இருங்க சார் கோனார் தமிழ் உரையை எடுத்திட்டு வரேன்..//

தமிழ் மாணவர்களுக்கு ஞானத்தை வழக்கும் கோனார் தமிழ் உரை நூலை கொச்சைப்படுத்திய கும்மி குருப்ஸ் தார்மீக மன்னிப்பு கேட்க வேண்டும்

smart said...

அய்யா ராமசாமி,
சாந்தி மற்றும் சமாதானி பற்றிய எனது கருத்தை எல்லாரும் மடரேசன் செய்கிறாங்க அதனால் இங்க பதிவு செய்துகிறேன்.

"இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக." என்று தானே கூறுவார்கள் "சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக." என்று யாரும் {உண்மையான இஸ்லாமிய சகோதரர்கள்} முகமன் செய்வதில்லை! அப்படியே இருந்தாலும் சாந்தி மற்றும் சமாதான்{ समाधन} என்கிற வார்த்தைகள் தூய சமஸ்கிருத அதாவது இந்துக்களின் வார்த்தை என்பதை யாரும் மறுப்பதில்லை. இந்த வார்த்தைகளில் ஒருவர் பயன்படுத்தக் கூடாதென்பது கருத்துரிமை பறிப்பு என்பது தான் சரியாகயிருக்கும்...உண்மையான இஸ்லாமிய சகோதரர்கள் புரிந்து கொள்வார்கள்.

smart said...

மதவாத பிரச்சனையை உருவாக்கிய ராசாக்களா.. உங்கள் பதிவுக்கு வந்தனங்கள்

Shanmugam Rajamanickam said...

smart @ என்ன பாஸ் பெயரிலிக்கு ஆதரவா?

Shanmugam Rajamanickam said...

smart @ என்ன பாஸ் பெயரிலிக்கு ஆதரவா?

வைகை said...

smart said...
// வெறும்பய said...
பீச்சென்றோ ஓக்கென்றோ ஏதாச்சும் மரத்தளபாடக்கம்பெனி தொடங்கியிருப்போமே //

இருங்க சார் கோனார் தமிழ் உரையை எடுத்திட்டு வரேன்..//

தமிழ் மாணவர்களுக்கு ஞானத்தை வழக்கும் கோனார் தமிழ் உரை நூலை கொச்சைப்படுத்திய கும்மி குருப்ஸ் தார்மீக மன்னிப்பு கேட்க வேண்டும்///

அடுத்த காமெடி பதிவு எழுதும்போது உங்கள் கருத்துரையை கவனத்தில் கொள்ளுகிறோம் நண்பரே! உங்கள் நண்பர் பெயரிலி சொல்வது புரியவில்லை என்று கோனார் தமிழ் உரையை தேடினோம்.. இதில் இழிவு படுத்த என்ன இருக்கு? மாறாக அதை பெருமையாகத்தான் சொல்லியிருக்கிறோம்... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் :))

வைகை said...

smart said...
அய்யா ராமசாமி,
சாந்தி மற்றும் சமாதானி பற்றிய எனது கருத்தை எல்லாரும் மடரேசன் செய்கிறாங்க அதனால் இங்க பதிவு செய்துகிறேன்.

"இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக." என்று தானே கூறுவார்கள் "சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக." என்று யாரும் {உண்மையான இஸ்லாமிய சகோதரர்கள்} முகமன் செய்வதில்லை! அப்படியே இருந்தாலும் சாந்தி மற்றும் சமாதான்{ समाधन} என்கிற வார்த்தைகள் தூய சமஸ்கிருத அதாவது இந்துக்களின் வார்த்தை என்பதை யாரும் மறுப்பதில்லை. இந்த வார்த்தைகளில் ஒருவர் பயன்படுத்தக் கூடாதென்பது கருத்துரிமை பறிப்பு என்பது தான் சரியாகயிருக்கும்...உண்மையான இஸ்லாமிய சகோதரர்கள் புரிந்து கொள்வார்கள்.///

இதைப்பற்றி எங்களுக்கு அவ்வளவாக தெரியாமல் பதில் சொல்வது நன்றாக இருக்காது... இருந்தாலும் யாரென உங்களுக்கு பதில் சொல்வார்கள் என்று இந்த கருத்துரையை இங்கே விட்டு வைக்கிறோம்!

வைகை said...

smart said...
மதவாத பிரச்சனையை உருவாக்கிய ராசாக்களா.. உங்கள் பதிவுக்கு வந்தனங்கள்//


உங்கள் வந்தனங்கள் இருக்கட்டும்.. முதலில் உங்களுக்கு எங்கள் கடுமையான கண்டனங்கள்! அது உங்கள் நண்பர் பெயரிலி தனது ஆழ்ந்த அறிவால் கிளப்பிய பிரச்னை.. தேவையில்லாமல் எங்களோடு முடிச்சிட வேண்டாம்!

UNMAIKAL said...

2008ம் வருடமே இணையதளத்தில் கீழ்க்கண்டவாறு பிரசுரமாகியிருப்பதை கண்ணுற்று அதிர்ச்சியாக இருக்கிறது.

1.பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

வார்த்தை ஜாலக்காரரான இவருக்குப் பதில் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சும்மா பொழுதுபோக்குக்காக பின் டெஸ்க்கில் உட்கார்ந்து கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் புரியாத வார்த்தை வரிசைகளை அடுக்கும் இவருக்கெல்லாம் பதில்சொல்வது நமது முட்டாள் தனம். இவன் ஆயிரம் சல்ஜாப்பு சொன்னாலும் அதிகாரத்திமிர் தலைக்கேறி அலையும் ஒரு ஜந்து தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது! ………… ........

SOURCE: பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

2. காலைல வந்து பதிவு எழுதலாமுன்னு கீபோர்டுல கைய வச்சா ஒரு பாலாப்போன எடுபட்ட சனியன் தான் கண்முன்னாடி நிக்கறான். நான் எதை ஒரு ஆல்டர்நேட்டிவ் மீடியா என்று நினைத்தேனோ அதை தன் பொச்சறிப்பிற்கு பயன்படுத்தி அராஜகம் செய்யும் இந்த சனி பகவானின் திருவருவம்!! கண்முன் வந்து தொலைக்கிறது... இந்த சனியனுக்கு பிடித்த எள் உருண்டை மட்டுமே படைப்பதா... இல்லை என் உருண்டை படைப்பதா என்று ஒரே குழப்பம். டமிழ்ஸ்மெல் நிலைமை இவ்வளவு கேவலமாகும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை... இருந்த ஒரே பெண்கலகக்குரலும் கழுத்து நெறிக்கப்பட்டுவிட்டிருக்கிறது.. அதுவும் இந்த சனியனின் வரிகளை மேற்கோள் காட்டியதற்க்காக... என்னடா பரிகாரம்னு ஒரு ஜோசியன்கிட்ட கேட்டா... ரமணீதராய நமஹன்னு காலைல 1008 தடவை அடிச்சு அதை டமிழ்ஸ்மெல் லிஸ்ட் அட்மினுக்கு அனுப்பிவிட்டு பிறகு பதிவு எழுதனும்னு சொல்றாருங்க..
ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....

Source: ரமணீதராய நமஹ+ப்ளடி டமிழ்ஸ்மெல்+பரிகாரம்

3. பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!

மகராசா, வணக்கமுங்க... இடுப்புல துண்டைக்கட்டிக்கிட்டு காலில போட்றுக்கர செருப்ப கக்கத்துலு வச்சுக்குட்டு கும்புடறமுங்க... நீங்க யாரு.. என்னன்னு தெரியாம மோதிட்டமுங்க... உங்களுக்கு கோபம் வந்தா என்னாகுமுன்னு தெரியாம இத்தனை நாள் பொழப்பை கெடுத்துக்கிட்டு எழுதிட்டனுங்க...
உங்க தயவு இல்லைன்னா நாங்க தூக்கியெறியப்படுவோமின்னு இம்புட்டுநாள் தமிழ் மணம் படீங்க தமிழ்படீங்கன்ன பொட்டைவெயிலில வழியில பாத்தவங்ககிட்டல்லாம் சொன்னபோதெல்லாம் தெரியலீங்க... இப்பத்தான் தெரிஞ்சதுங்க உங்க மேன்மை... ………….. ……. …

SOURCE: பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!

.

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

நம்ம பயனர் கணக்க மூடச்சொல்லி மெயில் அனுப்பினோம், பதில் வர நேரமாகும்னு தோணுது, இங்க காமெண்டு போட்டா வேல உடனே நடக்கும் போலிருக்கு. follow-up

smart said...

// TERROR-PANDIYAN(VAS) said...
//நீங்கள் ஏன் தமிழ்மணத்தையும், அதன் நிர்வாகி ரமணிதரனையும் மன்னிக்ககூடாது?//

இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! சீக்கிரம் வந்து மன்னிச்சிடுங்க.. இல்லைனா நாளைக்கு நீங்கள் எல்லாம் இஸ்லாமியர்கள் தானா? அப்படினு பதிவு போட்டாலும் போடுவாரு மணி சார். மன்னிச்சதுக்கு அப்புறம் உங்க முதுகில் சதக் சதக்னு குத்தி பதிவு போட்டால் நான் பொருப்பல்ல.. :)///

ஐயா வைகை அவர்களே,
உங்கள் குழுமம் மதப் பிரச்னைக்கு காரணமில்லை என்று ஒரு தபா சொல்கிறீர்கள் வேறு இடத்தில் மதவெறியை தூண்டி கருத்துயிடுவீங்க உங்க நியாயம் சூப்பரு

smart said...

உங்களுக்கு எதிர் என்றால் அவர் அனைவருக்கு எதிரி என்று நினைப்பதை நிறுத்துங்கள் கும்மி குருப்ஸ்

எஸ்.கே said...

@smart
சார் உங்களுக்கு புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன் அந்த கமெண்ட்ல யாரை பத்தி சொல்லியிருக்காங்கன்னு அவர் சமாதானமா போகலாம் கருத்து சொல்லுங்கன்னு சொல்லிட்டு அடுத்த பதிவே அதற்கு எதிர்மாறா மனசை கஷ்டப்படுத்துற மாதிரி போட்டுட்டார். இப்பயும் அதே மாதிரி செய்யலாம்னு கிண்டல் செய்யற கமெண்ட் அது. இதில மதவெறி எங்க வருது?

இரண்டாவது எதிரின்னு நீங்க சொல்றதும் அவரைத்தான்னா நாங்க அவரை அப்படி இதுவரை நினைக்கலை ஆனா நிறைய வருத்தம் இருக்கு:-(

TERROR-PANDIYAN(VAS) said...

@Smart

//ஐயா வைகை அவர்களே,
உங்கள் குழுமம் மதப் பிரச்னைக்கு காரணமில்லை என்று ஒரு தபா சொல்கிறீர்கள் வேறு இடத்தில் மதவெறியை தூண்டி கருத்துயிடுவீங்க உங்க நியாயம் சூப்பரு//

ஐயா Smart அவர்களே!! அந்த கமெண்ட் அந்த ப்ளாக்ல தப்பு இல்லை. அதுக்கு இரண்டு பதிவுக்கு முன்னாடி சமாதானம் பேசலாம் வாங்கன்னு கூப்பிட்டு அடுத்த பதிவில் அவரு முதுகில் குத்தின லட்சனத்தை ஊரே பார்த்துச்சி. பாவம் நீங்க பார்க்கவில்லை போலும். போய் படிச்சிட்டு அப்புறம் வாங்க விவாதிக்கலாம்.

அங்க அவருக்கு ஆதரவு தெரிவிச்சிகூட ஒரு கமெண்ட் போட்டனே. அதை நீங்க காப்பி பண்ணி இங்க போட்டு உங்க குழு இன பாகுபாடு ஏற்பட கூடாது அப்படினு சொல்லி இருக்காங்கன்னு ஒரு கமெண்ட் போட உங்களுக்கு மனசு வராட்டியும் இப்படி ஒரு கமெண்ட் போட மனசு வந்ததை நினைத்து... நன்றி சொல்ல உங்களுக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@Smart

//உங்களுக்கு எதிர் என்றால் அவர் அனைவருக்கு எதிரி என்று நினைப்பதை நிறுத்துங்கள் கும்மி குருப்ஸ்//

உங்களுக்கு நண்பர் என்றால் அவர் செய்வது எல்லாம் சரி என்று நினைப்பதை நிறுத்துங்கள் smart. அவர் மேல உங்களுக்கு இருக்க பாசம் உங்க கண்ணை மறைக்குது. ஐடியா மணி கொடுத்து வச்சவர் இப்படி ஒரு நண்பர் கிடைக்க... :)

smart said...

//உங்களுக்கு நண்பர் என்றால் அவர் செய்வது எல்லாம் சரி என்று நினைப்பதை நிறுத்துங்கள் smart. அவர் மேல உங்களுக்கு இருக்க பாசம் உங்க கண்ணை மறைக்குது. ஐடியா மணி கொடுத்து வச்சவர் இப்படி ஒரு நண்பர் கிடைக்க... :)//

நான் அந்த நிர்வாகி செய்து சரியா தவறா என்று சொல்லவில்லை மதவெறியைத் தான் கண்டிக்கிறேன். அவர் ஏன் நண்பருமல்ல

smart said...

//எதிர்மாறா மனசை கஷ்டப்படுத்துற மாதிரி போட்டுட்டார். இப்பயும் அதே மாதிரி செய்யலாம்னு கிண்டல் செய்யற கமெண்ட் அது. இதில மதவெறி எங்க வருது?//
அதான் "இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!" என்று ஆரம்பிக்கிறாரே? அப்படிஎன்றால் என்ன அர்த்தம்? கடந்தப் பதிவில் அவரென்ன இஸ்லாத்தை ஆதரித்தா அல்லது எதிர்த்தா பதிவிட்டார்?
உங்கள் சேட்டை தெரிகிறது.. கொஞ்சம் ஒத்துக் கொள்ளுங்கள்

எஸ்.கே said...

//நான் அந்த நிர்வாகி செய்து சரியா தவறா என்று சொல்லவில்லை மதவெறியைத் தான் கண்டிக்கிறேன். அவர் ஏன் நண்பருமல்ல.//

என்ன சார் நீங்க? அவர் சொல்றது ஐடியா மணி என்கிற பதிவரை நீங்க நிர்வாகின்னு நினைச்சுகிட்டீங்க!

எஸ்.கே said...

//அதான் "இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!" என்று ஆரம்பிக்கிறாரே? அப்படிஎன்றால் என்ன அர்த்தம்? கடந்தப் பதிவில் அவரென்ன இஸ்லாத்தை ஆதரித்தா அல்லது எதிர்த்தா பதிவிட்டார்?
உங்கள் சேட்டை தெரிகிறது.. கொஞ்சம் ஒத்துக் கொள்ளுங்கள்//
:-) சார் இதுவும் அதே பதிவரை கிண்டல் செய்யும் நோக்கில் சொன்னதுதான் முதல்ல தமிழ்மணத்தை எதிர்ப்பவர்களே வாங்க சமாதானம் செய்வோன்னார் அப்புறம் அடுத்த பதிவே தமிழ்மணம் விட்டு போனவங்க கோழைன்னு சொன்னார்.

இப்ப இவங்களுக்கு நாட்டாமை செய்ய கூப்பிடுறார். இப்பவும் அதேமாதிரி முதுகுல குத்தினாலும் குத்துவாரு அதானல மன்னிப்பு கேளுங்கன்னு நக்கலா சொன்னார்.

//இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!// இப்படி ஆரம்பிக்கிறது தப்புங்கிறீங்க ஆனா அவங்களைத்தானே அந்த பதிவர் நாட்டாமை செய்ய அழைக்கிறார்.

ஒன்னு புரிஞ்சுக்குங்க பிரச்சினை இங்கதான் ஆரம்பிச்சிச்சு ஆனா இப்ப அது வேற(மத) பிரச்சினையா மாறி போச்சு. இதுக்கெல்லாம் எங்களை குறை சொல்வது நியாயமா?

TERROR-PANDIYAN(VAS) said...

@Smart

//நான் அந்த நிர்வாகி செய்து சரியா தவறா என்று சொல்லவில்லை மதவெறியைத் தான் கண்டிக்கிறேன். அவர் ஏன் நண்பருமல்ல //

அண்ணே! நீங்க முதலில் உக்காருங்க. ரொம்ப கோவமா இருக்கிங்க நினைக்கிறேன். இதில் எங்க அண்ணே மதவெறி வந்துச்சி? எங்க கோவம் பெயரிலி ஐய்யா அவர்கள் திட்டியதால் அவர் மேலதான். அடுத்து மணியன்ணன் வாங்க சமாதானமா பேசலாம் சொன்னாங்க. அங்ககூட எங்க கமெண்ட் எல்லாம் மரியாதையாதான் இருக்கும். ஆனா பாருங்க கடிதம் எழுதரேன் போய்ட்டு வாங்க அப்படினு சொல்லிட்டு நாங்க நம்பி திரும்பினதும் கத்தி எடுத்து சதக் சதக்குனு முதுகிலே குத்திட்டாரு அண்ணே. அங்ககூட நான் மரியாதையாதான் கமெண்ட் போட்டேன்.

இன்னும் ஒரு முக்கியமான விஷயம். அந்த ரைட் சைட் பாருங்களேன். இந்த பக்கம்.. இந்த பக்கம் About Me அப்படினு இருக்கா? அங்க ஒரு 17 பேரு இருக்கா? அதில் யாராவது ஒருத்தவங்க ப்ளால இந்த மதபிரச்சனை பற்றி எழுதி இருக்கா பாருங்க... :))

இப்படி எதையுமே பாக்காம கோவபட்டா எப்படி அண்ணே.. :)

smart said...

"உங்களுக்கு எதிர் என்றால் அவர் அனைவருக்கு எதிரி என்று நினைப்பதை நிறுத்துங்கள் கும்மி குருப்ஸ்"
இங்கு அவர் என்பது அந்த பெயரிலி என்ற நிர்வாகியைத் தான் சொன்னேன்

நிர்வாகியை பிடிக்காவிட்டால் அவரை ஒரு மத எதிரியாக திரித்துக் காட்டும் விதத்தைத் தான் இங்கு குறிப்பிடுகிறேன்.

மேலே உள்ள உங்கள் சில கமெண்ட்கள் வைத்து நானும் திரிக்க முடியும் உதாரணம் கோனார் தமிழ் உரை ... ஆனால் எனக்கு எதிரி நீங்கள் அல்ல உங்கள் குழும கருத்தே

TERROR-PANDIYAN(VAS) said...

@Smart

//அதான் "இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!" என்று ஆரம்பிக்கிறாரே? அப்படிஎன்றால் என்ன அர்த்தம்? கடந்தப் பதிவில் அவரென்ன இஸ்லாத்தை ஆதரித்தா அல்லது எதிர்த்தா பதிவிட்டார்?
உங்கள் சேட்டை தெரிகிறது.. கொஞ்சம் ஒத்துக் கொள்ளுங்கள் //

ஐ!!! பாருடா கண்டுபிடிப்ப... :) நேத்து எங்களை கூப்பிட்டு முதுகில் குத்தினாரு இன்னைக்கு வேற ஒருத்தவங்களை கூப்பிட்டு இருக்காரு. யாரை அவரு கூப்பிட்டு இருக்காரோ அவங்களைதானே எச்சரிக்கை பண்ண முடியும்... :) கடைசிவரைக்கு மணி அண்ணன் எழுதின போன இரண்டு பதிவை / கமெண்ட்ஸ் படிக்காமலே கருத்து சொல்றிங்க பார்த்திங்களா.. குறும்பு அண்ணே நீங்க... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@Smart

//நிர்வாகியை பிடிக்காவிட்டால் அவரை ஒரு மத எதிரியாக திரித்துக் காட்டும் விதத்தைத் தான் இங்கு குறிப்பிடுகிறேன்.//

அச்சசோ!! அவரை பிடிக்கவில்லைன்னு யார் சொன்னது? இப்போ கூட அவரு எங்களை திட்டி போட்ட கமெண்ட் எடுக்க சொல்லுங்க நாங்க அவரு பேச்சி பழம் விடறோம். ஆனா மத பிரச்சனை நாங்க தூண்டரோம் எல்லாம் சொல்ல கூடாது. மறுபடியும் வேணும்னா போய் எங்க 17 பேரு ப்ளாக் பாருங்க... :) மணி ப்ளாக்ல போட்ட கமெண்ட் முழுக்க முழுக்க மணியை நக்கல் பண்ண. அவரும் அதுக்கு நக்கலா பதில் சொல்லிட்டாரு. ஆனா நீங்கதான் இப்போ ஏதோ அந்த கமெண்ட் வச்சி குளிர் காயா முயற்சி பண்ற மாதிரி இருக்கு... :))

smart said...

@TERROR-PANDIYAN(VAS) said...
அதுபோல நிர்வாகியின் தளத்தில் ஏதாவது மதச்சம்மந்தமாக இருக்கா என்ன? ஒரு கருத்தை வைத்து அவர் மத விரோதி என முடிவெடும் போது, உங்கள் கருத்தும் அப்படியே. இஸ்லாமிய சகோதரர்களே என்று சொல்லாமலிருந்தால் பிரச்சனையில்லை. நீங்கள் கூறியதால்தான் கேட்கிறேன். ஏப்படி அந்த நிர்வாகி கருத்தை மத விமர்சனமாகக் காட்டமுடியும்?

எஸ்.கே said...

//நிர்வாகியை பிடிக்காவிட்டால் அவரை ஒரு மத எதிரியாக திரித்துக் காட்டும் விதத்தைத் தான் இங்கு குறிப்பிடுகிறேன்.//
சார் முதல்ல நாங்க எங்க சார் மத எதிரியா திரிச்சோம்? மத்தவங்க பதிவு போடுறதுக்கு எங்களை ஏன் சொல்றீங்கன்னே தெரியலை

//மேலே உள்ள உங்கள் சில கமெண்ட்கள் வைத்து நானும் திரிக்க முடியும் உதாரணம் கோனார் தமிழ் உரை ... ஆனால் எனக்கு எதிரி நீங்கள் அல்ல உங்கள் குழும கருத்தே
//
எந்த கருத்து பிடிக்கலன்னு சொல்லுங்க மறுபடியும் மதம்னு ஆரம்பிக்காதீங்க.:-(

TERROR-PANDIYAN(VAS) said...

@Smart

//அதுபோல நிர்வாகியின் தளத்தில் ஏதாவது மதச்சம்மந்தமாக இருக்கா என்ன? ஒரு கருத்தை வைத்து அவர் மத விரோதி என முடிவெடும் போது, உங்கள் கருத்தும் அப்படியே. இஸ்லாமிய சகோதரர்களே என்று சொல்லாமலிருந்தால் பிரச்சனையில்லை.//

REF Comment No.294... :)

smart said...

@SK
// வெறும்பய said...
பீச்சென்றோ ஓக்கென்றோ ஏதாச்சும் மரத்தளபாடக்கம்பெனி தொடங்கியிருப்போமே //

இருங்க சார் கோனார் தமிழ் உரையை எடுத்திட்டு வரேன்..//

தமிழ் மாணவர்களுக்கு ஞானத்தை வழக்கும் கோனார் தமிழ் உரை நூலை கொச்சைப்படுத்திய கும்மி குருப்ஸ் தார்மீக மன்னிப்பு கேட்க வேண்டும்.
முடியுமா?
இதுபோன்ற வார்தைகளுக்காகவா அறிஞர்கள் உரை எழுதினார்கள்
அதுவும் சாதி வம்மமும் தெரிகிறது என்று சொல்லவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// smart said...
@SK
// வெறும்பய said...
பீச்சென்றோ ஓக்கென்றோ ஏதாச்சும் மரத்தளபாடக்கம்பெனி தொடங்கியிருப்போமே //

இருங்க சார் கோனார் தமிழ் உரையை எடுத்திட்டு வரேன்..//

தமிழ் மாணவர்களுக்கு ஞானத்தை வழக்கும் கோனார் தமிழ் உரை நூலை கொச்சைப்படுத்திய கும்மி குருப்ஸ் தார்மீக மன்னிப்பு கேட்க வேண்டும்.
முடியுமா?
இதுபோன்ற வார்தைகளுக்காகவா அறிஞர்கள் உரை எழுதினார்கள்
அதுவும் சாதி வம்மமும் தெரிகிறது என்று சொல்லவா?//////

அண்ணே உங்களுக்கு என்ன வேணும்?

எஸ்.கே said...

smart சார் என்னதான் சொல்லவரீங்க?
நீங்க குறிப்பிட்ட கமெண்ட் பெயரிலி அவர்களின் நக்கலுக்கு பதில் நக்கலடித்தது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

அப்புறம் ஒன்னு புரிஞ்சுக்குங்க பெயரிலி சார் இங்க போட்ட ஒரு கமெண்ட் கஷ்டப்படுத்திடுச்சுன்னு இஸ்லாம் நண்பர்கள் பதிவு போடுறாங்க. இதில் கும்மி குரூப் மதவெறியை தூண்டுறதா சொல்றது உங்களுக்கே நியாயமா இருக்கா?

மீண்டும் டெரர் பாண்டியனின் கமெண்டில் உள்ள வார்த்தையை குறிப்பிட்டுதான் பேசுகிறீர்கள் என்றால் அந்த கமெண்ட் போடப்பட்டுள்ள பதிவையும் அதற்கு முந்தைய 2 பதிவையும் பார்த்தால் உண்மை தெரியும்

TERROR-PANDIYAN(VAS) said...

@Smart

//இதுபோன்ற வார்தைகளுக்காகவா அறிஞர்கள் உரை எழுதினார்கள்
அதுவும் சாதி வம்மமும் தெரிகிறது என்று சொல்லவா? //

எங்க எங்க எங்க தெரியுது. லைட்டா விளக்குங்க. ஐ திங்க் நீங்க சின்ன புள்ளையா இருக்க அப்போ நிறையா கற்பனை கதை படிப்பிங்க.. :)

பாஸ் நீங்களும் நிறைய ஜோக் சொல்றிங்க ஆனா எனக்குதான் சிரிப்பு வர மாட்டுது... :)

நீங்க கேக்கர கேள்வி எல்லாம் மதபிரச்சனை அப்படினு யார் பேசராங்களோ அங்க கேக்கனும்.. அங்க கேட்டா அடிப்பாங்கனு சம்பந்தமே இல்லாம இங்க வந்து.. நான் சொல்லுகிறென் இந்திய பொருளாதார சீர்கேட்டுக்கு டெரர் கும்மி தான் காரணம் அப்படினு பேச கூடாது.... :))

இப்போ சொல்றேன்.. இருங்க போல்ட் பண்ணிக்கிறேன். இல்லைனா நீங்க கவனிக்க மாட்டிங்க மத சம்பந்தமான இந்த பிரச்சனையில் நானோ டெரர் கும்மி நண்பர்களோ தலையிடவில்லை..வில்லை..லை

smart said...

//சார் முதல்ல நாங்க எங்க சார் மத எதிரியா திரிச்சோம்? மத்தவங்க பதிவு போடுறதுக்கு எங்களை ஏன் சொல்றீங்கன்னே தெரியலை//

நீங்கள் அந்த திரிப்பிற்கு சம்மந்தமில்லாவிட்டால் உங்கள் குழு ஏன் அத்தகைய மதப் பதிவுக்கெல்லாம் ஆதரவு கருத்திடவேண்டும்?

ஆதாரம் வேறு கேட்டு நச்சரிப்பீங்க...
http://ragariz.blogspot.com/2011/10/letter-to-thamizhmanam.html
நம்ம ராமசாமி ஐய்யா இட்ட கருத்து? அந்த மத திரிப்பு பதிவுக்கு ஆதரவுதானே?

NaSo said...

திரு ஸ்மார்ட் அவர்களே, இங்கே கும்மி க்ரூப்ஸ் நண்பர்களின் கமெண்ட்டில் எங்கு மத துவேசம் இருக்கிறது என்பதைக் காட்ட முடியுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// smart said...
//சார் முதல்ல நாங்க எங்க சார் மத எதிரியா திரிச்சோம்? மத்தவங்க பதிவு போடுறதுக்கு எங்களை ஏன் சொல்றீங்கன்னே தெரியலை//

நீங்கள் அந்த திரிப்பிற்கு சம்மந்தமில்லாவிட்டால் உங்கள் குழு ஏன் அத்தகைய மதப் பதிவுக்கெல்லாம் ஆதரவு கருத்திடவேண்டும்?

ஆதாரம் வேறு கேட்டு நச்சரிப்பீங்க...
http://ragariz.blogspot.com/2011/10/letter-to-thamizhmanam.html
நம்ம ராமசாமி ஐய்யா இட்ட கருத்து? அந்த மத திரிப்பு பதிவுக்கு ஆதரவுதானே?////////

ஹலோ மிஸ்டர் ஸ்மார்ட், தயவு செய்து எங்கள் பொறுமையை சோதிக்காதீர்கள், அங்கு என் கமெண்ட்டுகளை பாருங்கள்,


********

பன்னிக்குட்டி ராம்சாமி said... 13
/////நீங்கள் இல்லாமல் எங்களால் ஹிட்ஸ் கொடுக்கமுடியும். எங்களை போன்ற பதிவர்கள் இல்லாமல் உங்களால் பத்து பைசா கூட சம்பாதிக்க முடியாது. எங்களை வைத்துதான் உங்களுக்கு விளம்பரம், வருமானம் எல்லாம் என்பதை நினைவில் வையுங்கள். நீங்கள் கொடுக்கும் தரவரிசையை வைத்து எங்களால் ஒரு வேளை சாப்பிடக்கூட முடியாது சார்...ஆனால், எங்கள் பதிவுகளை வைத்து நீங்க ஒரு ஹோட்டலை வாங்கும் அளவிற்கு சம்பாதிக்க முடியும்.//////

செம செம....


பன்னிக்குட்டி ராம்சாமி said... 14
//////எங்கள் பதிவுகளில் யாரேனும் ஒருவர் அனானியாக வந்து ஆபாசமாகவும் அருவருக்க தக்கதாகவும் பின்னூட்டமிட்டால், அந்த பின்னூட்டங்களுக்கு நாங்கள் தான் பொறுப்பு என்று குற்றம்சாட்டி எங்கள் பதிவுகளை தமிழ்மணத்திலிருந்து நீக்கும் உங்கள் நிர்வாகிகள், இப்போது பெயரிலியாகிய உங்கள் நிர்வாகி டெர்ரர்கும்மி தளத்தில் எடுத்த பின்னூட்ட வாந்திக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?.///////

அப்படி போடுங்க.....

**************


நீங்கள் தான் திரித்துக்கூற முயற்சி செய்கிறீர்கள். எங்களை பிடிக்கவில்லை என்றால் நான்கு வார்த்தை நன்றாக திட்டி விட்டு போகவும், இப்படி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி, நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்!

TERROR-PANDIYAN(VAS) said...

@Smart

//நீங்கள் அந்த திரிப்பிற்கு சம்மந்தமில்லாவிட்டால் உங்கள் குழு ஏன் அத்தகைய மதப் பதிவுக்கெல்லாம் ஆதரவு கருத்திடவேண்டும்?//

ஐயா! நீங்கள் எழுத்து கூட்டி வாசிக்க நன்றாக அறிவிர்கள் என்று நினைக்கிறேன். நான் தங்களுக்காக நீங்கள் சொன்ன பதிவில் இருந்து பன்னிகுட்டி அவர்கள் ஆதரித்த கருத்தை நகல் எடுத்து இங்கு இட்டு உள்ளேன். தயவு செய்து அதை படித்து அதில் மதம் எங்கு வந்தது என்று கூறவும்...

பன்னிக்குட்டி கமெண்ட் :-

பன்னிக்குட்டி ராம்சாமி said... 13
/////நீங்கள் இல்லாமல் எங்களால் ஹிட்ஸ் கொடுக்கமுடியும். எங்களை போன்ற பதிவர்கள் இல்லாமல் உங்களால் பத்து பைசா கூட சம்பாதிக்க முடியாது. எங்களை வைத்துதான் உங்களுக்கு விளம்பரம், வருமானம் எல்லாம் என்பதை நினைவில் வையுங்கள். நீங்கள் கொடுக்கும் தரவரிசையை வைத்து எங்களால் ஒரு வேளை சாப்பிடக்கூட முடியாது சார்...ஆனால், எங்கள் பதிவுகளை வைத்து நீங்க ஒரு ஹோட்டலை வாங்கும் அளவிற்கு சம்பாதிக்க முடியும்.//////

செம செம....


பன்னிக்குட்டி ராம்சாமி said... 14
//////எங்கள் பதிவுகளில் யாரேனும் ஒருவர் அனானியாக வந்து ஆபாசமாகவும் அருவருக்க தக்கதாகவும் பின்னூட்டமிட்டால், அந்த பின்னூட்டங்களுக்கு நாங்கள் தான் பொறுப்பு என்று குற்றம்சாட்டி எங்கள் பதிவுகளை தமிழ்மணத்திலிருந்து நீக்கும் உங்கள் நிர்வாகிகள், இப்போது பெயரிலியாகிய உங்கள் நிர்வாகி டெர்ரர்கும்மி தளத்தில் எடுத்த பின்னூட்ட வாந்திக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?.///////

அப்படி போடுங்க....

smart said...

@ நாகராஜசோழன் MA TERROR-PANDIYAN(VAS) & எஸ்.கே & all kummi groups


http://ensaaral.blogspot.com/2011/10/blog-post_17.html

இந்த திரிப்பு பதிவுக்கும் ஆதரவு தெரிவிச்ச காரணம் என்னாங்க தலைவர்களா?


பை தி பை ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

இது அவரின் தனிப்பட்ட கருத்து என்று ஜகா வாங்க கும்மி குருப் ஒன்றும் நிறுவனமல்ல என நினைக்கிறேன்,.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பகிர்வுக்கு நன்றி
//

இதுக்கு பேர் மதவாதமா? சூப்பர்

எஸ்.கே said...

//நீங்கள் அந்த திரிப்பிற்கு சம்மந்தமில்லாவிட்டால் உங்கள் குழு ஏன் அத்தகைய மதப் பதிவுக்கெல்லாம் ஆதரவு கருத்திடவேண்டும்?//

சார் அந்த பதிவுகளுக்கெல்லாம் ஆதரவு கருத்திட்டா மதவெறியர்களா? மதம் சாரா எத்தனையோ பேர் அப்படி ஆதரவு கருத்திடுகிறார்கள். இங்கே பொதுவான விஷயம் தமிழ்மண எதிர்ப்புதானே அன்றி மதமல்ல.

அப்படி மதவெறியர்களாக இருந்தால் வெறும் கருத்து போட மாட்டார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.

smart said...

இன்னும் எல்லா பதிவுக்கும் சென்று ஆதாரம் எடுக்க நேரமில்லை :)

smart said...

Mr.Ramesh,

மதவெறி உங்களூக்கு என்று சொல்லவில்லை ஆனால் மதவெறிக்கு ஆதரவு என்று சொல்கிறேன். மறுப்பீர்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////smart said...
இன்னும் எல்லா பதிவுக்கும் சென்று ஆதாரம் எடுக்க நேரமில்லை :)/////

உங்கள் நோக்கம் எங்களை மதவாதத்தை தூண்டுபவர்களாகக் காட்டுவதுதானே? உங்கள் மனசாட்சிக்கே தெரியும் உண்மை என்னவென்று, தூங்குபவர்களை எழுப்பிடலாம், ஆனால் தூங்குவது போல் பாவனை செய்பவர்களை எழுப்ப இயலாது. நன்றி, இனி எங்களால் இங்கே உங்களுக்கு பதில் அளிக்க இயலாது. வேறு நல்ல இடமாக பார்த்து உங்கள் வேலையை தொடங்கவும்....!

smart said...

@KummiGroups
இன்னும் விளக்கமாக சொல்வதென்றால் மதவெறி கூட வேண்டாம்...

மத எதிர்ப்பாக திரிக்கும் பதிவுக்கு உங்கள் ஆதரவு என்றுதானே அர்த்தம்?

TERROR-PANDIYAN(VAS) said...

@Smart

//இந்த திரிப்பு பதிவுக்கும் ஆதரவு தெரிவிச்ச காரணம் என்னாங்க தலைவர்களா?//

அன்பு மிக்க நண்பருக்கு! அங்க ரமேஷ் தெரிவித்த இரண்டு வார்த்தை பகிர்விற்க்கு நன்றி அவர்களுடைய மன உணர்வை பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி சொல்லி இருக்கிரார். இதில் எங்கே இருக்கிரது மத வெவெவெவெறி... :)


//இது அவரின் தனிப்பட்ட கருத்து என்று ஜகா வாங்க கும்மி குருப் ஒன்றும் நிறுவனமல்ல என நினைக்கிறேன்,. //

பதிவு செய்த ஒரு நிறுவனமே ஜகா வாங்கும் பொழுது. எந்தவித பதிவும் இல்லாமல் வெறும் அன்பால் மட்டும் சேர்ந்து இருக்கும் நாங்கள் சொன்னால் என்ன்ன்ன்ன்னன தப்பு.... :))

ஆனா சொல்ல மாட்டோம்.

smart said...

ராமசாமியாரே ,
//உங்கள் நோக்கம் எங்களை மதவாதத்தை தூண்டுபவர்களாகக் காட்டுவதுதானே? //
எனது கருத்து உங்களுக்கு ஒருவர்[பெயரிலி] பிடிக்காவிட்டால் அவரை எதிரியாக கருதி, மத திரிப்பு பதிவுக்கு ஆதரவு கொடுக்குரீர்கள் என்கிறேன்.

TERROR-PANDIYAN(VAS) said...

@smart

//இன்னும் எல்லா பதிவுக்கும் சென்று ஆதாரம் எடுக்க நேரமில்லை :) //

ஐ!!! பொய்ய்ய்ய்யி.. தேடி பார்த்து ஒன்னும் கிடைக்கவில்லை தானே. தேடினாலும் கிடைக்காது.. :)

எஸ்.கே said...

//மத எதிர்ப்பாக திரிக்கும் பதிவுக்கு உங்கள் ஆதரவு என்றுதானே அர்த்தம்? //

எதை மத எதிர்ப்பு/மதவெறி என நினைப்பதும் நாங்கள் ஆதரவாக இருப்பதாக நினைப்பதும் உங்கள் நினைப்பே! நாங்கள் எங்கள் நிலையை சொல்லிவிட்டோம்.

smart said...

//ஐ!!! பொய்ய்ய்ய்யி.. தேடி பார்த்து ஒன்னும் கிடைக்கவில்லை தானே. தேடினாலும் கிடைக்காது.. :)//

ஐய்யா தமிழ் மணத்தில் ஆதரவாக ஓட்டிட்டாலும் ஆதரவு என்றுதானே அர்த்தம்

மேலே கொடுத்துள்ள ரமேஷ் அவர்களின் அதரவு என்ன? பொதுவான பதிவா? முழுக்க முழுக்க திரிப்பு பதிவுதானே

அருண் பிரசாத் said...

@ டெரர்
சாப்டாச்சா மச்சி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// smart said...
ராமசாமியாரே ,
//உங்கள் நோக்கம் எங்களை மதவாதத்தை தூண்டுபவர்களாகக் காட்டுவதுதானே? //
எனது கருத்து உங்களுக்கு ஒருவர்[பெயரிலி] பிடிக்காவிட்டால் அவரை எதிரியாக கருதி, மத திரிப்பு பதிவுக்கு ஆதரவு கொடுக்குரீர்கள் என்கிறேன்.///////

அண்ணே நீங்க சொல்றது உண்மையா இருந்தா, இன்னிக்கு அந்த மாதிரி மத ரீதியான பதிவுகள் 25 க்கு மேல வந்திருக்கு, அது எல்லாத்திலேயும் போய் நாங்க சராமாரியா வாக்கும், கமெண்ட்டும் போட்டிருக்கனுமே?

பெயரிலி எங்கள் எதிரியல்ல, அவரது கருத்துக்கள் எங்களை காயப்படுத்தியது உண்மை. ஆனா பெயரிலி எதிரி என்றோ அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்கியோ எங்கும் பதிவோ பின்னூட்டமோ நாங்கள் இடவில்லை என்று உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுக்கு மேலயும் உங்களுக்கு புரியலேன்னா உக்காந்து அழுவுறத தவிர வேற வழியில்லண்ணே.......

smart said...

//எதை மத எதிர்ப்பு/மதவெறி என நினைப்பதும் நாங்கள் ஆதரவாக இருப்பதாக நினைப்பதும் உங்கள் நினைப்பே! நாங்கள் எங்கள் நிலையை சொல்லிவிட்டோம்//
Final question:
உங்கள் தளத்தில் வந்த கருத்து ஒரு மத எதிர்ப்பு வாதமாக திரிக்கப்பட்டதற்கு உங்கள் குழுவின் கருத்தென்ன?
அந்த சாந்தி..சமதான வரிகள் பற்றிய உங்கள் கருத்தென்ன?

TERROR-PANDIYAN(VAS) said...

@Smart

/மேலே கொடுத்துள்ள ரமேஷ் அவர்களின் அதரவு என்ன? பொதுவான பதிவா? முழுக்க முழுக்க திரிப்பு பதிவுதானே//

சபாஷ்!!! இது ஒரு நல்ல்ல்ல்ல் கேள்வி. இதுக்கு பதில் சொல்ல நான் கடமை பட்டு இருக்கேன். இந்த வாய்ப்பை வழங்கிய உங்களுக்கு நன்றி...

அங்க ரமேஷ் மட்டும் தான் ஓட்டு போட்டு இருக்காரா? அங்க ஓட்டு போட்டு இருக்க எல்லாரையும் நீங்க போய் கேட்டிங்களா? எதுக்கு எங்களை மட்டும் தேடி வந்து கேக்கறிங்க? எப்படியாவது எங்க மேல மதசாயம் பூசி உங்க பிரண்ட காப்பாத்த தானனனன... நாங்க ஏமார மாட்டோமே... :)

smart said...

//இப்போ சொல்றேன்.. இருங்க போல்ட் பண்ணிக்கிறேன். இல்லைனா நீங்க கவனிக்க மாட்டிங்க மத சம்பந்தமான இந்த பிரச்சனையில் நானோ டெரர் கும்மி நண்பர்களோ தலையிடவில்லை..வில்லை..லை//

அப்படிஎன்றால் அந்த ரமேஷ் அவர்களின் தலையீட்டைப் பற்றி மட்டும் சொல்லுங்க சார்

TERROR-PANDIYAN(VAS) said...

@Smart

//Final question:
உங்கள் தளத்தில் வந்த கருத்து ஒரு மத எதிர்ப்பு வாதமாக திரிக்கப்பட்டதற்கு உங்கள் குழுவின் கருத்தென்ன?
அந்த சாந்தி..சமதான வரிகள் பற்றிய உங்கள் கருத்தென்ன? /

TV பேட்டியில் கேக்கர மாதிரியே கேக்கரிங்களே... சட்டம் தன் கடமையை செய்யும்... :)

smart said...

///அங்க ரமேஷ் மட்டும் தான் ஓட்டு போட்டு இருக்காரா? அங்க ஓட்டு போட்டு இருக்க எல்லாரையும் நீங்க போய் கேட்டிங்களா? எதுக்கு எங்களை மட்டும் தேடி வந்து கேக்கறிங்க? எப்படியாவது எங்க மேல மதசாயம் பூசி உங்க பிரண்ட காப்பாத்த தானனனன... நாங்க ஏமார மாட்டோமே... :)//

Exactly that is what I am trying to say. மற்றவர்கள் ஆதரிப்பது அடுத்தப் பிரச்சனை நீங்கள் ஆதரிப்பதுதான்.
back to the point

நிர்வாகியை பிடிக்காவிட்டால் அவரை ஒரு மத எதிரியாக திரித்துக் காட்டும் விதத்தைத் தான் இங்கு குறிப்பிடுகிறேன்.

எஸ்.கே said...

இதை பற்றி ஏற்கனவே எங்கள் நபர் வைகை உங்களுக்கு பதில் கூறிவிட்டார். இருந்தாலும் மறுபடியும் உங்களுக்காக.

இதைப்பற்றி எங்களுக்கு அவ்வளவாக தெரியாமல் பதில் சொல்வது நன்றாக இருக்காது... இருந்தாலும் யாரென உங்களுக்கு பதில் சொல்வார்கள் என்று இந்த கருத்துரையை இங்கே விட்டு வைக்கிறோம்!

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

சாப்டேன் மச்சி! நீ சாப்டியா? என்ன சாப்படு?

எஸ்.கே said...

நிர்வாகியை பிடிக்காவிட்டால் அவரை ஒரு மத எதிரியாக திரித்துக் காட்டும் விதத்தைத் தான் இங்கு குறிப்பிடுகிறேன்.
//

சார் நாங்க அப்படி திரிக்கலை. அப்படி உங்களுக்கு தெரிஞ்சா நாங்க என்ன செய்வது?:-(

இப்படியே முடிவில்லாமல் பேசி ஒரு பயனுமில்லை. எங்கள் கருத்து பிடிக்கவில்லை ஆனாலும் நாகரீகமாகவே எதிர்க்கருத்து சொன்னீர்கள் அதற்கு மிக்க நன்றியுடன் விடை பெறுகிறோம்!

smart said...

//இதைப்பற்றி எங்களுக்கு அவ்வளவாக தெரியாமல் பதில் சொல்வது நன்றாக இருக்காது... இருந்தாலும் யாரென உங்களுக்கு பதில் சொல்வார்கள் என்று இந்த கருத்துரையை இங்கே விட்டு வைக்கிறோம்!//

உங்கள் கருத்து சரியாகத்தான் இருக்கிறது. இதைப்பற்றி உங்களுக்கு அவ்வளவாக தெரியாவிட்டா உங்களிடம் இப்படி கேட்க வேண்டிய அவசியமில்லை எனக்கு. ஆனால் குழுவில் உள்ள மற்ற நண்பர்கள் ஏன் அத்தகையப் பதிவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதாலையே இந்த கேள்விகள்

TERROR-PANDIYAN(VAS) said...

//நிர்வாகியை பிடிக்காவிட்டால் அவரை ஒரு மத எதிரியாக திரித்துக் காட்டும் விதத்தைத் தான் இங்கு குறிப்பிடுகிறேன்.//

போங்க போங்க நீங்க திரும்ப திரும்ப பேசறிங்க. எனக்கு பசிக்கிது. நான் சாப்பிட போரேன். டாடா.. குட் நைட். நாளைக்கு திரும்ப செத்து செத்து விள்ளாடலாம். ஆனா மறக்காம வரனும்... :)

smart said...

//போங்க போங்க நீங்க திரும்ப திரும்ப பேசறிங்க. எனக்கு பசிக்கிது. நான் சாப்பிட போரேன். டாடா.. குட் நைட். நாளைக்கு திரும்ப செத்து செத்து விள்ளாடலாம். ஆனா மறக்காம வரனும்... :)//
நான் எதற்கு செத்து விளையாடனும் அமைதியாக பேசியதற்கு தண்டனையா?
இப்படி பேசும் கும்மி குருஸ்களிடம் எப்படி நாகரீகமாக பேசமுடியும்? ஒரு வகையில் பெயரிலி செய்து சரிதானோ என தோன்ற வைக்கிறது.

இருந்தாலும் யாருக்கும் நான் ஆதரவில்லை. மத திரிப்பு கருத்துக்கே எனது எதிர்ப்பு குரல்

எஸ்.கே said...

நான் எதற்கு செத்து விளையாடனும் அமைதியாக பேசியதற்கு தண்டனையா?//
சார் அவர் காமெடியா சொன்னார் உங்க மனசை கஷ்டப்படுத்தியிருந்தா மன்னிச்சிருங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////smart said...
//போங்க போங்க நீங்க திரும்ப திரும்ப பேசறிங்க. எனக்கு பசிக்கிது. நான் சாப்பிட போரேன். டாடா.. குட் நைட். நாளைக்கு திரும்ப செத்து செத்து விள்ளாடலாம். ஆனா மறக்காம வரனும்... :)//
நான் எதற்கு செத்து விளையாடனும் அமைதியாக பேசியதற்கு தண்டனையா?
இப்படி பேசும் கும்மி குருஸ்களிடம் எப்படி நாகரீகமாக பேசமுடியும்? ஒரு வகையில் பெயரிலி செய்து சரிதானோ என தோன்ற வைக்கிறது.

இருந்தாலும் யாருக்கும் நான் ஆதரவில்லை. மத திரிப்பு கருத்துக்கே எனது எதிர்ப்பு குரல்/////

சார் நீங்க தமிழ்படமெல்லாம் பார்க்கிறதில்லையா? அது வடிவேல் காமெடில வரும் வசனம், ஒரு நகைசுவைக்கு சொன்னா இப்படி எடுத்துக்கிறீங்களே?
வந்ததுல இருந்தே பார்க்கிறேன் உங்க நோக்கம் எங்களை எப்படியாவது எந்தவிதத்திலேயாவது குறை சொல்லனும்னே இருக்கு? ஏன் சார் ஏன்?

TERROR-PANDIYAN(VAS) said...

@Smart

//நான் எதற்கு செத்து விளையாடனும் அமைதியாக பேசியதற்கு தண்டனையா?
இப்படி பேசும் கும்மி குருஸ்களிடம் எப்படி நாகரீகமாக பேசமுடியும்? ஒரு வகையில் பெயரிலி செய்து சரிதானோ என தோன்ற வைக்கிறது.//

மேலே பல கமெண்டுகளில் ஐய்யா அவர்களை நான் மரியாதையாக கூறி இருந்தாலும் நகைசுவையாக சொன்ன ஒரு வரியை மிகவும் கஷ்ட்டபட்டு திரிக்க முயற்சி செய்து இருப்பதாலும். ஐயா அவர்கள் இங்கு வந்த நோக்கம் எப்படியாவது எங்களை கெட்டவர்கள் என்று காட்டி பெயரிலி தவறு செய்யவில்லை என்று காட்டுவது தான் என்பது உள்ளங்கை நெல்லிகனி போல் தெரிகிரது. ஆனாலும் Smart அவர்கள் இந்த விஷயத்தில் பெயிலாகி விட்டார் என்று தோன்றுகிரது... எனவே பெட்டர் லக் நெக்ஸ்ட டைம் என்று சொல்லி உண்மையாகவே சாப்பிட போகிறேன்... :) :)

smart said...

@ Terror,
//மேலே பல கமெண்டுகளில் ஐய்யா அவர்களை நான் மரியாதையாக கூறி இருந்தாலும் நகைசுவையாக சொன்ன ஒரு வரியை மிகவும் கஷ்ட்டபட்டு திரிக்க முயற்சி செய்து இருப்பதாலும். ஐயா அவர்கள் இங்கு வந்த நோக்கம் எப்படியாவது எங்களை கெட்டவர்கள் என்று காட்டி பெயரிலி தவறு செய்யவில்லை என்று காட்டுவது தான் என்பது உள்ளங்கை நெல்லிகனி போல் தெரிகிரது. ஆனாலும் Smart அவர்கள் இந்த விஷயத்தில் பெயிலாகி விட்டார் என்று தோன்றுகிரது... எனவே பெட்டர் லக் நெக்ஸ்ட டைம் என்று சொல்லி உண்மையாகவே சாப்பிட போகிறேன்... :) :)//

நான் என்ன கும்மியடிக்கவா இங்கு வைத்தேன் சீரியசாக பேசிக் கொண்டியிருக்கும் போது உங்கள் நகைச்சுவை என்ன வேண்டிகிடக்கிறது. அப்படியே ஆனாலும் பெயரிலியின் கமெண்டை நகைச்சுவையாக எதுக்கொள்வீங்களா என்ன?


மதப் பிரச்சனை வந்தால் எப்படியும் உங்கள் அணி பலமாகும் என்பதற்காகயும் நீங்கள் ஆரம்பத்தில் திரிபு பதிவுகளுக்கு ஆதரவு தந்தீர்கள். அடுத்து சுதாரித்து கருத்து ஏதுமில்லை என்று கணியம் காப்பவர் போல காட்ட முயல்கிறீர்கள் என்பதை தெரிந்து கொண்டேன்.
ஆனால் எனக்கென்ன இன்னொரு கவலைஎன்றால் மொக்கைப் பதிவுகளையும் குப்பை பதிவுகளையும் மதமாற்றும் பதிவுகளையும் விலக்கிய தமிழ்மணத்திற்கு மதரீதியான தாக்குதல் தொடுக்க உதவியுள்ளது உங்கள் பதிவு என்பதுதான்.

பிரிதொரு சந்தர்பத்தில் சந்திப்போம்

TERROR-PANDIYAN(VAS) said...

@Smart

/பிரிதொரு சந்தர்பத்தில் சந்திப்போம் //

இராஜதந்திரங்களிள் உங்களுக்கு இன்னும் பயிற்சி தேவைபடுகிறது போய் வாருங்கள்.


நன்றி : வசனம் உதவி 23ம் புலிகேசி.

(சீரியசா பேசரேன் சொல்லி சிரிப்பு காட்டிட்டு)

வெளங்காதவன்™ said...

@டெரர் பாண்டி-

யோவ் மச்சி! தக்காளி இன்னும் பேசிகிட்டா இருக்கீங்க?

சூரியனைப் பார்த்து குரைப்பவை குரைக்கட்டும்...

போயி புள்ள குட்டிங்கள படிக்க வைப்போம் மச்சி!

Kabeera said...

எங்கள் நட்சத்திர இடுகைகளில் சொல்லப்பட்ட முடிவுகளை மீண்டும் ஒருமுறை வலியுறுத்த விரும்புகிறோம். தமிழ்மணம் காத்திரமான பதிவுகளைத் திரட்டும் தளமாகப் பயணிக்க விரும்புகிறது. வெற்று ஆரவார மொக்கைப் பதிவுகள் தமிழ்மணம் முகப்பை ஆக்கிரமிப்பது குறித்து பல பதிவர்களும் வாசகர்களும் எங்களுக்கு விடுத்த வேண்டுகோள்களைச் சார்ந்தே தற்பொழுது சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்த நடவடிக்கைகள் தமிழ்மணத்தை ஒரு ஆக்கப்பூர்வமான பாதைக்கு கொண்டு செல்லும் என நம்புகிறோம். தமிழ்மணத்தின் இந்தக் கருத்தினைச் சார்ந்த விமர்சனங்களை வரவேற்கும் அதே நேரத்தில் இந்த கொள்கை முடிவினை விரும்பாதவர்கள் தமிழ்மணத்தில் இருந்து விலகிக் கொள்வதையும் வரவேற்கிறோம்

Kabeera said...

எங்கள் நட்சத்திர இடுகைகளில் சொல்லப்பட்ட முடிவுகளை மீண்டும் ஒருமுறை வலியுறுத்த விரும்புகிறோம். தமிழ்மணம் காத்திரமான பதிவுகளைத் திரட்டும் தளமாகப் பயணிக்க விரும்புகிறது. வெற்று ஆரவார மொக்கைப் பதிவுகள் தமிழ்மணம் முகப்பை ஆக்கிரமிப்பது குறித்து பல பதிவர்களும் வாசகர்களும் எங்களுக்கு விடுத்த வேண்டுகோள்களைச் சார்ந்தே தற்பொழுது சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்த நடவடிக்கைகள் தமிழ்மணத்தை ஒரு ஆக்கப்பூர்வமான பாதைக்கு கொண்டு செல்லும் என நம்புகிறோம். தமிழ்மணத்தின் இந்தக் கருத்தினைச் சார்ந்த விமர்சனங்களை வரவேற்கும் அதே நேரத்தில் இந்த கொள்கை முடிவினை விரும்பாதவர்கள் தமிழ்மணத்தில் இருந்து விலகிக் கொள்வதையும் வரவேற்கிறோம்

வெளங்காதவன்™ said...

//அதே நேரத்தில் இந்த கொள்கை முடிவினை விரும்பாதவர்கள் தமிழ்மணத்தில் இருந்து விலகிக் கொள்வதையும் வரவேற்கிறோம்///

ஹா ஹா ஹா!

இது டெரர் குரூப்-க்கும் என்னை மாதிரி சொத்துல உப்புப் போட்டு சாப்பிடுபவர்களுக்கும் சேராது தானே?
#ஆமா, நீங்க யாரு?

அருண் பிரசாத் said...

பல்வேறு காரணங்களால், இந்த பதிவு திசை திருப்பபடுவதால்..... இங்கு கமெண்ட்ஸ் டிஸ்சேபில் செய்யபடுகிறது...

தமிழ்மணம் பிரச்சனையில் எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக இன்றைய பதிவில் விளக்கி இருக்கிறோம்

http://www.terrorkummi.com/2011/10/blog-post_19.html

நன்றி!

«Oldest ‹Older   201 – 337 of 337   Newer› Newest»