Tuesday, April 24, 2012

மீண்டும் சில கீச்சுகள்

எனது சில கீச்சுகள் மீண்டும் இங்கே.

*.என் தூண்டிலில் சிக்கிய மீன் எனக்கே சொந்தமென்றால் இவர் ஏன் கத்துகிறார்.? ஒருவேளை இவரின் கூடைக்குள் என் தூண்டிலைப் போட்டதாலோ ?

*.ரயிலில் ஒரு இடத்திற்குச் செல்வதற்காக பதிவு செய்திருந்தேன்.சொன்னதுபோலவே இன்று எனக்காக ஒரு ரயிலையும், துணைக்கு சிலரையும் அனுப்பியிருந்தனர்

*.என்னைக் கனவு காணச் சொன்ன எனது ஆசிரியர் என் கனவில் வந்து இது உன் பாடத்திட்டத்தில் இல்லையே எனத் திட்டினார்.

*.மர மண்டையாக இருப்பதிலும் ஒரு பயன் இருக்கிறது. எப்பொழுதேனும் தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் மூழ்கிப் போகமாட்டோம்!

*.நேற்று கனவில் ஒரு முட்டை வந்தது. இன்னும் ஒரு மாதம் கழித்து அந்தக் கனவு வந்திருந்தால் கோழிக்குஞ்சாக வந்திருக்கும்!