Friday, June 24, 2011

கொல்றானே! கொல்றானே!!


அருண்: செல்வா, உன் சொந்த ஊர் எது?

செல்வா: எனக்கு சொந்தமா ஒரு தெரு கூட இல்லைண்ணா

அருண்: டேய் @#$@#, காலைல நீ எந்த ஊருல இருந்துடா வந்தே?

செல்வா: நான் காளைல வரலைண்ணா...பஸ்ல வந்தேன்

அருண்: கொல்றானே... சரி நீ எந்த ஊருக்கு சாயந்திரம் போவே...

செல்வா: எங்க வீடு இருக்கற ஊருக்குண்ணா...

அருண்: அந்த ஊருதான் எங்கடா இருக்கு?

செல்வா: எங்க வீடு இருக்குதுல்ல அங்கதான் இருக்கு...

அருண்: சரி விடு, அந்த ஊர் பேரு என்ன?

செல்வா: இதை மொதல்லயே தெளிவா கேட்டு இருக்கலாம்ல... கோபி...

அருண்: அது யாரு? உங்க அண்ணணா?

செல்வா: இல்லைண்ணா... கோபிசெட்டிபாளையம்.

அருண்: அடப்பாவி அங்கதாண்டா நான் 4 வருஷத்துக்கு முன்னாடி வேலை செஞ்சேன்

செல்வா: என்னன்னா இப்படி சொல்லுறீங்க... அப்போ எனக்கு ஒரு போன் பண்ணி இருக்காலாம்ல...

அருண்: அப்போ உன்னையோ உன் போன் நம்பரோ தெரியாதே..

செல்வா: அப்படியா... இந்தாங்க நோட் பண்ணிக்கோங்க....9900012345... மறக்காம கோபிக்கு போய் போன் பண்ணுங்க...

அருண்: டேய் நான் இப்போ அங்க இல்லை...

செல்வா: அதனால என்ன 4 வருஷத்துக்கு முன்னாடி இருந்தீங்கல்ல...அப்போ போன் பண்ணுங்க

அருண்: @#$@% #%^#$^#

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*



செல்வா : அண்ணா , நான் இன்னிக்கு கோவில்பட்டி போறேன்!

ரமேஷ் : அப்படியே எங்க வீட்டுக்கும் போயிட்டு வா.

செல்வா : சரி

ரமேஷ் : புது வீடு , போகும்போது LCD TV, DVD PLAYER எதாச்சும் வாங்கிட்டு போ!

செல்வா : சரி னா , எங்க வீட்டுக்குப் போகும்போது வாங்கிட்டு போறேன் ,

ரமேஷ் : ராஸ்கல் , நான் சொன்னது வரும்போது வாங்கிட்டு வா!

செல்வா : சரி னா , உங்க வீட்டுல இருந்து எங்க வீட்டுக்கு வரும்போது வாங்கிட்டு வந்திடறேன்!

ரமேஷ் : !$@#$%#%&$%((_$%@#!%&)

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*


டெரர் கும்மிக்காக
“அருண்பிரசாத்”
 

30 comments:

செல்வா said...

பாவம் னா நீங்க :-) ஹி ஹி

செல்வா said...

எல்லோரும் பயந்து ஓடிட்டாங்களோ ?

Madhavan Srinivasagopalan said...

யாரை திட்டுறது..
செல்வாவையா....
ரமேஷையா..
அருணையா...?

karthikkumar said...

அருண்: @#$@% #%^#$^#///

ரமேஷ் : !$@#$%#%&$%((_$%@#!%&)///

@ அருண் // இங்க வாங்க மொதல்ல.. இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு சொல்லுங்க :)

செல்வா said...

//யாரை திட்டுறது..
செல்வாவையா....
ரமேஷையா..
அருணையா...?//

அருண் , ரமேஷ் ரண்டுபேரையும் திட்டுங்க,
என்னைய பாராட்டுங்க... ஹி ஹி

அருண் பிரசாத் said...

என்னங்கடா கடை காத்து வாங்குது?

அருண் பிரசாத் said...

@ karthikkumar

// அருண்: @#$@% #%^#$^#///

ரமேஷ் : !$@#$%#%&$%((_$%@#!%&)///

@ அருண் // இங்க வாங்க மொதல்ல.. இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு சொல்லுங்க :)//
என்ன மச்சி..எவ்வளோ தெளிவா எழுதி இருக்கேன் கண்ணு தெரியலையா?

அருண் பிரசாத் said...

எல்லா பயலும் உண்மையாவே பிஸி ஆகிட்டானுங்களா? இல்ல என் பதிவை பார்த்து ஓடிட்டாங்களா?

இல்ல செல்வா மொக்கையால ஏதாவது ஆகி இருக்குமோ?

செல்வா said...

எல்லோருமே பயந்து போய்ட்டாங்க னா :-)

இம்சைஅரசன் பாபு.. said...

பதிவ படிச்சு மயங்கிட்டாங்க போல மக்கா ...

rajamelaiyur said...

//
அருண்: செல்வா, உன் சொந்த ஊர் எது?

செல்வா: எனக்கு சொந்தமா ஒரு தெரு கூட இல்லைண்ணா
//
அவருக்கு சொந்தமா ஒன்னுமே இல்ல ...

rajamelaiyur said...

நல்ல காமெடி

மாணவன் said...

//பாவம் னா நீங்க :-) ஹி ஹி//

படிக்கிற நாங்களும்தான் பாவம்... :))

மாலுமி said...

யாருப்பா இந்த கடை மொதலாளி??????
யாரும் இல்லனா நான் கொஞ்சம் உட்காந்து சரக்கு அடிசுகலமா ?????

தினேஷ்குமார் said...

ஹையையோ லீவ்ல கூட தேடிவந்து கொல்றாங்களே ...

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் என்னலேய் நடக்குது இங்கே..???

MANO நாஞ்சில் மனோ said...

ஆளை கொல்லனும்னா அருவாளை கொண்டு வந்து சதக்'ன்னு ஒரு போடு போட்டுட்டு போயிருங்கலேய், அதுக்காக இப்பிடி மயக்க மருந்து கூட போடாம கொல்லாதீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் என்னலேய் நடக்குது இங்கே..???//

செல்வாவை குற்றாலத்துல போட்டு தள்ளிருந்தா இப்படி ஆயிருக்குமா?

கடம்பவன குயில் said...

//செல்வா: அதனால என்ன 4 வருஷத்துக்கு முன்னாடி இருந்தீங்கல்ல...அப்போ போன் பண்ணுங்க//

செல்வாவின் அறிவுக்கு இப்பல்லாம் அளவே இல்லாமல் போய்ட்டது.

கடம்பவன குயில் said...

//செல்வா: அதனால என்ன 4 வருஷத்துக்கு முன்னாடி இருந்தீங்கல்ல...அப்போ போன் பண்ணுங்க//

செல்வாவின் அறிவுக்கு இப்பல்லாம் அளவே இல்லாமல் போய்ட்டது.

வைகை said...

karthikkumar said...
அருண்: @#$@% #%^#$^#///

ரமேஷ் : !$@#$%#%&$%((_$%@#!%&)///

@ அருண் // இங்க வாங்க மொதல்ல.. இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு சொல்லுங்க :)//////////


$$$^&$#^&^*^(&*)(&^%*$#%^^&*(**&^%$#$%^&*(*&^%$#$%^&*()))))(*&^%$#$%^&*())*&^%$#@#$%^&*()*&^%$#@#%^&*())

வைகை said...

அருண் பிரசாத் said...
என்னங்கடா கடை காத்து வாங்குத?///


உருளைக்கிழங்கு சாப்ட்டு பதிவு போட்டியா மச்சி?

வைகை said...

இம்சைஅரசன் பாபு.. said...
பதிவ படிச்சு மயங்கிட்டாங்க போல மக்கா ..///

ஓ...இதுதான் அறிவுல மயங்குறதா?

வைகை said...

மாலுமி said...
யாருப்பா இந்த கடை மொதலாளி??????
யாரும் இல்லனா நான் கொஞ்சம் உட்காந்து சரக்கு அடிசுகலமா ????//

உனக்கு இல்லாததா மச்சி? நீ சரக்கு என்ன...

வைகை said...

கடம்பவன குயில் said...
//செல்வா: அதனால என்ன 4 வருஷத்துக்கு முன்னாடி இருந்தீங்கல்ல...அப்போ போன் பண்ணுங்க//

செல்வாவின் அறிவுக்கு இப்பல்லாம் அளவே இல்லாமல் போய்ட்டது///

செல்வாங்கிறது யாரு?

அம்பாளடியாள் said...

அருமையான நகைச்சுவை வாழ்த்துக்கள்....

சுதா SJ said...

அவ்வ
உங்க பக்கம் வந்த முதல் நாளே இப்புடி பயம் காட்டுறின்களே பாஸ்

சுதா SJ said...

அசத்தல் காமெடி பாஸ்
திரையில் நகைச்சுவை காட்சி பார்த்த பீலிங்

அன்புடன் நான் said...

"கொல்றானே! கொல்றானே!!"

goma said...

செந்தில் அமர்க்களமாகப் பொருந்துகிறார்...