Monday, April 30, 2012

டெரர் கும்மியின் வரலாறும் அந்த பக்கிகளின் சுயவிவரமும்:

முன் டிஸ்கி: இந்த பதிவுல சில இடங்கள்ள அடைப்புக்குறிக்குள்ள சிவப்பு கலர்ல சில வரிகள் இருக்கும். ஏன்னா அதுக்கெல்லாம் சிவப்பு பாண்ட் யூஸ் பண்ணிருக்கோம். ஹிஹி.

பலகோடி மக்களால் தினமும் வாசிக்கப்படும் டெரர் கும்மி என்கிற எங்களது வலைப்பூ ஏன் உருவாக்கப்பட்டது(அததாண்டா நாங்களும் கேக்குறோம் ஏண்டா இந்த ப்ளாக் உருவாக்குனீங்க ?). அதில் மெம்பராக(ஆமா பெரிய ப்ளூ கிராஸ், லயன்ஸ் கிளப் மெம்பெரு, வந்துட்டானுக) இருக்கும் சிங்கக்குட்டிகளின் விவரம்(அ விட்டுடீங்க ஆப்பீசர்ஸ்) இதையெல்லாம் கேட்டு தினமும் கோடிக்கணக்கான் ஈமெயில் எங்களுக்கு வந்துக்கிட்டு இருக்கு.(அத்தனை பயலுகளையும் தேடி வந்து உதைக்க போறானுக)

அதனால மக்களோட ஆசைய நிறைவேற்றும் விதமாக(அவங்க ஆசையே நீங்க பதிவு எழுத கூடாதுன்னுதானடா) எல்லாத்தையும் ஓப்பனா சொல்லிரலாம்னு ஒரு முடிவுக்கு வந்துட்டோம்(விதி). ஒரு நாள் டெரர் கும்மி நண்பர்கள்(அப்போ சும்மா நண்பர்கள்) கார்ல போயிக்கிட்டு இருக்கும்போது பொதுமக்கள் எல்லோரும் எங்க காரை வழிமறிச்சி(உங்க காரை வழி மறிச்சா பிக்பாகெட்காரனுக்கு கூட பத்து பைசா தேறாதேடா. நீங்க பெட்ரோலுக்கு பதிலா மண்ணெண்ணெய்ல கார் ஓட்டுற பயபுள்ளைகதானடா) காருக்கு முத்தம் கொடுத்தாங்க. அப்போ எங்களுக்கு தோனுச்சு இந்த மக்களுக்காக நாம என்ன பண்ணப்போரோம்ன்னு(அப்படியே காரோட மலை உச்சிக்கு போயி குதிச்சிடுங்கடா. மக்களுக்கு ரொம்ப நல்லது பண்ண மாதிரி இருக்கும்).

அதான் மக்களுக்காக சேவை செய்ய(அப்படியே உப்புமா, ராகி மால்ட்டும் செய்யுங்கடா. நல்லா இருக்கும்) எங்கள் சொந்த வேலைகளை விட்டுட்டு(மாடு,ஒட்டகம் மேய்க்கிற வேலைதானடா) டெரர்கும்மி என்கிற உன்னதமான வலைப்பூ ஒன்றை கஷ்டப்பட்டு(ஏன் ஒரு பயலுக்கும் ID create பண்ணத்தெரியலியா?) உருவாக்கினோம். இப்போ எல்லோருடைய சந்தேகமும் தீர்ந்ததா டெரர்கும்மி எப்படி உருவாச்சுன்னு?

டெரர்கும்மியில் உள்ள நண்பர்கள் எல்லோரும் ஒரு பதிவரா நினைச்சு பழகாம நண்பர்களா பழகுரதாலதான் எங்களால ஒற்றுமையா இருக்க முடியுது. நாங்கள் சந்திக்கும்போது பிளாக் பத்தி பேசாமல் எங்களைப் பற்றியும், எங்கள் குடும்பங்களைப் பற்றியும் மட்டுமே பேசுவதால் எங்களால் மிகவும் சந்தோசமாக இருக்க முடிகிறது.

பன்னிக்குட்டி ராம்சாமி:

ஒருகாலத்துல தினமும் இவரோட நூத்துக்கணக்கான கமெண்ட்ஸ் ப்ளாக் உலகில் பார்க்கலாம். அவ்ளோ பெரிய அப்பாட்டக்கர். காலைல கக்கா போறாரோ இல்லியோ எல்லா பதிவுக்கும் கமென்ட் போவார் ச்சீ போடுவார். பிலாக்குலையும்,போரம்லையும் பொழுத போக்கிட்டு இவரோட ஆபீஸ் வேலைய செய்ய ஏதோ ரெண்டு அல்லக்கைகளை வெச்சிருந்தாராம். இப்போ கொஞ்ச நாளா பதிவு எழுதுறதில்ல, கமெண்ட்டும் போடுறதில்ல. என்னன்னு விசாரிச்சா, அந்த அல்லக்கைக இவர் பாஸ்வெர்ட தூக்கிட்டு ஊரவிட்டு ஓடிப் போய்ட்டானுங்களாம்..

வைகை:

ஏதோ சைட்டுக்கு போறேன் சைட்டுக்கு போறேன்னு அடிக்கடி சொல்லுவாரு. இவரு வெப்சைட் வெப்சைட்டாதான் போறாருனு இன்னும் அவங்க டேமேஜருக்கு தெரியாது.

மாணவன்:

ஊருக்கெல்லாம் ஒரு தத்துவமும், எங்களுக்கெல்லாம் ஒரு தத்துவமும் சொல்லும் மாணவன் செல்லுக்கு இப்போதெல்லாம் போன் செய்தால் "the studying user is currently busy" அப்படின்னே வருது. படிக்கிறானா இல்லை யாரையாவது படிக்க வைக்கிரானான்னே தெரியலை.

டெரர் பாண்டியன்:

டெரர் கும்மியின் தலைவர் அப்படின்னு அவரே சொல்லிப்பாரு. ஒட்டகத்தோட லிவிங் டுகெதர் வாழ்க்கைல இருப்பதா துபாய்ல ஒரு தகவல் உண்டு. இவருக்கு தமிழே தகறாரு... இதுல இங்கிலிஷ்ல தப்பு தப்பா எழுதுறாருனு Error பாண்டியன்னு பேர் வெச்சா அதையும் இவர் தப்பா எழுதி Terror பாண்டியன் ஆகிட்டாரு. கெரகம் இவனை புது பிளாக் கிரியேட் பண்ண சொல்ல போய் அதுவும் தப்பாவே வந்துடுச்சு.

இம்சை அரசன் பாபு

இவர்தான் வாழும் வள்ளுவர். ஓடும் ஒளவையார். தமிழ்காத்த புலவர். திருவள்ளுவர் இப்போது உயிரோடிருந்திருந்தால் இவரிடம் அப்ரசண்டி ஆக வாழ்ந்து காலம் தள்ளியிருப்பார். புறநானுறு இவருக்கு புஸ்வானம். அகநானூறு இவருக்கு அசால்ட்டு. இவரது தமிழ் புலமைக்கு ஒரு சான்று:

"அன்பு தம்பி செல்வா ,
அருமையான எழுத்து நடை ,ஆழ்ந்த கருத்துக்கள் அற்புத சிந்தனைகள் மேலும் இது போல எழுத்து ..அல்லது கிறுக்கி தள்ளு கூடிய சீக்கிரம் நீ ஒரு தமிழ் இளகிய மேதி என்று இப்பதிவுலகம் கூறும் ..அப்போ உன்னை ஆற தலைவி நெற்றியில் முத்தமிட்டு .வீர திலகமிட்டு என் தோளில் த்ஹோக்கி சென்று ........கொய்யால குழி தோடி மூடிவிடுவேன் ...மேலும் ஒரு கல் தூக்கி வச்சிடுவேன் ..பின்ன தப்பிட்ட ன்னா ....தாங்கமுடியலை சாமி ..."

இப்பவே கண்ணைக்கட்டுவதால் மிச்ச மீதி பக்கிகளின் விவரங்கள் அடுத்த பதிவில் வெளிவரும்.

Tuesday, April 24, 2012

மீண்டும் சில கீச்சுகள்

எனது சில கீச்சுகள் மீண்டும் இங்கே.

*.என் தூண்டிலில் சிக்கிய மீன் எனக்கே சொந்தமென்றால் இவர் ஏன் கத்துகிறார்.? ஒருவேளை இவரின் கூடைக்குள் என் தூண்டிலைப் போட்டதாலோ ?

*.ரயிலில் ஒரு இடத்திற்குச் செல்வதற்காக பதிவு செய்திருந்தேன்.சொன்னதுபோலவே இன்று எனக்காக ஒரு ரயிலையும், துணைக்கு சிலரையும் அனுப்பியிருந்தனர்

*.என்னைக் கனவு காணச் சொன்ன எனது ஆசிரியர் என் கனவில் வந்து இது உன் பாடத்திட்டத்தில் இல்லையே எனத் திட்டினார்.

*.மர மண்டையாக இருப்பதிலும் ஒரு பயன் இருக்கிறது. எப்பொழுதேனும் தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் மூழ்கிப் போகமாட்டோம்!

*.நேற்று கனவில் ஒரு முட்டை வந்தது. இன்னும் ஒரு மாதம் கழித்து அந்தக் கனவு வந்திருந்தால் கோழிக்குஞ்சாக வந்திருக்கும்!