Saturday, January 8, 2011

நகைகள் விற்பனைக்கு....!

நான் இணையத்தில் படித்த சில நல்ல ஜோக்குகளை மொழிபெயர்த்து இங்கே அவ்வப்போது அளிக்க விரும்புகிறேன்! ரசித்து மகிழுங்கள்! நன்றி!
 
அமெரிக்காவிலுள்ள சிறிய ஊர் ஒன்றின் நீதிமன்றத்தில் ஒரு வழக்குக்கு சாட்சியம் அளிக்க வந்திருந்த மிகவும் வயதான பெண்மணியிடம் வக்கீல் கேட்டார்:

"திருமதி ஜோன்ஸ், என்னை உங்களுக்குத் தெரியுமா?" அதற்கு அந்தப் பெண்மணி,

"ஏன், கண்டிப்பாக எனக்கு உங்களைத் தெரியும் திரு. வில்லியம்ஸ். உங்களை  எனக்கு சின்னக் குழந்தையிலிருந்து தெரியும், உண்மையைச் சொன்னால் நீங்கள் எனக்கு ஒரு பெரிய ஏமாற்றம். பொய் சொன்னீர்கள், உங்களுடைய மனைவிக்கு துரோகம் செய்தீர்கள், நம் மக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்ததோடில்லாமல் அவர்களுக்கு பின்புறம் போய் அவதூறு பேசினீர்கள். நீங்கள் ஏதோ பெரிய வக்கீல் என்று இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் ஆனால் நீங்கள் வெறும் பேப்பர் தள்ளும் இயந்திரத்தின் பெறுமானமே இருப்பீர்கள் என்பதை உங்களுடைய மூளையால் இன்னமும் உணர முடியவில்லை. ஆமாம், எனக்கு உங்களைத் தெரியும்."

இதைக் கேட்ட வக்கீல் திக்கித்து நின்றுவிட்டார். என்ன செய்வது என்று
தெரியாமல் எதிரே அமர்ந்திருந்த எதிர்கட்சி வக்கீலை காண்பித்து கேட்டார்,

"திருமதி ஜோன்ஸ், எதிர்கட்சி வக்கீலை உங்களுக்குத் தெரியுமா?"

அவள் மறுபடியும், "ஏன், கண்டிப்பாகத் தெரியும். திரு. பிராட்லியை எனக்கு
அவருடைய இளமைக் காலத்திலிருந்து தெரியும். அவர் ஒரு சோம்பேறி,
கண்மூடித்தனமாக எதையும் நம்புபவர், அது மட்டுமின்றி அவருக்கு குடியில்
பிரச்சினை இருக்கிறது. எவருடனும் ஒருங்கான உறவை அவரால் உருவாக்க முடிவதில்லை, அவருடைய சட்டப் படிப்பு இந்த மாநிலத்திலேயே மோசமானது. அது மட்டுமின்றி அவருடைய மனைவிக்கு துரோகம் செய்து மூன்று பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கின்றார். அதில் ஒரு பெண் உங்களுடைய மனைவி என்பதும் எனக்குத் தெரியும். ஆமாம், எனக்கு அவரைத் தெரியும்."

எதிர்கட்சி வக்கீல் கிட்டத்தட்ட மயக்கம் போடாத குறை.

நீதிபதி இரண்டு வக்கீலையும் தனது மேஜைக்கு அழைத்து மிகவும் மெல்லிய குரலில் கூறினார், "கொய்யாலே! உங்க ரெண்டு பேர்ல எவனாச்சும் அவகிட்ட என்னைத் தெரியுமான்னு கேட்டீங்க, உங்க ரெண்டு பேரை எலக்ட்ரிக் சேருக்கு அனுப்பிடுவேன்!"

**************************

ஒரு ஆள் ஒரு குதிரை வாங்கினாரு. அந்த குதிரையை விற்றவன் விக்கிறப்ப சொன்னான். “சார் இது அதிசய குதிரை. அப்பாடின்னு சொன்னா ஓட ஆரம்பிக்கும். அய்யயோன்னு சொன்னா நின்னுடும்”


அந்த ஆள் ஆச்சரியப்பட்டு குதிரை வாங்கிட்டாரு. குதிரையில ஏறி “அப்பாடி”ன்னாரு. குதிரை ஓட ஆரம்பிச்சிச்சு. பயங்கர வேகம். அங்க மலை சரிவு வேற. அது ஒரு பள்ளம் ஓரத்துக்கு வந்துச்சு. அந்த ஆள் பயந்து “அய்யய்யோ”ன்னு கத்தினாரு.
 

குதிரை உடனே நின்னுடுச்சு.
 

அவர் “அப்பாடி”ன்னு சொல்லிகிட்டே பெருமூச்சு விட்டாரு. குதிரை உடனே...

**************************

ஒரு ஆரம்ப பள்ளிக்கூடம். அங்க ஒரு கிளாசுக்கு டீச்சர் ஒரு கேமரா கூடவே சில பசங்களோட ஃபோட்டோக்களோட வந்தாங்க. ஒரு பையன் கேட்டான். 

“டீச்சர் ஏன் நீங்க கேமராவை எடுத்துட்டு வந்தீங்க” 

டீச்சர் ஆச்சரியமாகி “குரூப்பா சில போட்டோ எடுத்துக்கிட்டீங்கன்னா. நீங்கெல்லாம் பெரிசா ஆனதுக்கப்புறம், உங்க நண்பர்கள், சொந்தகாரங்க கிட்ட அந்த போட்டோக்களை காமிச்சு பெருமையா சொல்லலாம், இவ ரமேஷ் போலீசாயிட்டான், இவன் ராம் தொழிலதிபராயிட்டாம், இவன் சங்கர் வக்கீலாயிட்டான், இவன் பாபு டாக்டராயிட்டா.....  ”
 

அப்ப பின்னால இருந்து ஒரு குரல் வந்துச்சுச்சு ”இது எங்க கிளாஸ் டீச்சர் இப்ப உயிரோட இல்ல.”

**************************

ஃபிளாஷ் நியூஸ்: இரண்டு பேர் உட்காரும் வசதியுள்ள ஒரு பிளேன் ஒரு கல்லறைத் தோட்டத்தில் விழுந்து நொறுங்கியது. அப்பகுதி சர்தார் போலீஸ்கள் 500 உடல்களை தோண்டியெடுத்தனர். மேலும் உடல்கள் தோண்டப்பட்டு வருகின்றன......

**************************
பார்க்க முரட்டுத் தனமா இருந்த ஒரு ஆள் தன்னோட பைக்கில ஒரு பாருக்கு போனான். வண்டியை பாருக்கு முன்னாடி நிறுத்திட்டு உள்ளே போய் சாப்ட்டு வெளியே வந்தான். அங்கே அவன் பைக்கை காணோம்!
 

“அப்படியா!”ன்னுட்டு பாருக்குள்ளே போய், ”நான் இன்னும் ஒரு கிளாஸ் சாப்பிடப் போறேன். நான் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள என் பைக் வரலை, எங்க ஊர்ல நான் என்ன பண்ணேனோ அது இங்கயும் நடக்கும்!” அப்படின்னு கோபமா கத்தினாரு. 
 

உடனே பார் மேனேஜேரு அங்க இருந்த ஆளுங்க எல்லாம் எப்படியோ தேடி அவர் வண்டியை கண்டு பிடிச்சு பா முன்னாடி நிறுத்திட்டாங்க. பைக்கரானும் கிளம்பினான். கிளம்புறப்ப ஒருத்தர் கேட்டாரு...
 

“சார் உங்க ஊர்ல என்ன நீங்க பண்ணீங்க?”
 

அவன் பதில் சொன்னான் “வீட்டுக்கு நடந்தே போனேன்!”

**************************

இரண்டு சர்தார்ஜிகள் எகிப்தில் உள்ள பிரமிடுகளை சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்கள். பிரமிடில் மம்மிக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சடலம் மற்ற எல்லா சடலங்களையும் விட மிகவும் நசுங்கி இருந்தது.

அதைக் காட்டி ஒரு சர்தார்ஜி சொன்னார், “இந்த உடல் நசுங்கி இருப்பதைப் பார்த்தால், அநேகமாக இவன் ஒரு லாரியில் அடிபட்டு இறந்தவனாக இருக்க வேண்டும்”. மற்றொரு சர்தார்ஜி சொன்னாராம் “நீங்கள் சொல்வது உண்மைதான். அவனுக்கு அருகில் பாருங்கள் B.C.2500 என்று லாரியின் நம்பர் பிளேட்டைக் கூட எழுதி வைத்திருக்கிறார்கள்” என்று!

**************************
ஸ்காட்லாண்ட் யார்ட் போலீஸ், நியூயார்க் போலீஸ், சர்தார் போலீஸ் மூணு பேருக்கும் சிறந்த போலீஸ் அவார்டுக்காக போட்டி வச்சாங்க. போட்டி என்னன்னா ஒரு காட்டுக்குள்ள போய் ஒரு பெரிய சிங்கத்தை முடிஞ்சவரை சீக்கிரமா புடிச்சிட்டு வரனும். யார் சீக்கிரம் புடிச்சிட்டு வராங்களோ அவங்க ஜெயிச்சாங்க!
 

முதல்ல ஸ்காட்லாந்துயார்டு போலீஸ் போனாரு. 15 நிமிசத்தில ஒரு பெரிய சிங்கத்தை புடிச்சிட்டு வந்துட்டாரு. அடுத்து நியூயார்க் போலீஸ் போனாரு. அவரும் ஒரு சிங்கத்தை 15 நிமிசத்தில புடிச்சிட்டு வந்துட்டாரு. கடைசியா சர்தார் போலீஸ் போனாரு. 15 நிமிசம் ஆச்சு வரலை. அரை மணி நேரம், இரு மணி நேரம் ஆச்சு. ஆனா அவர் வரவே இல்லை. அவரை தேடிக்கிட்டு நடுவர்களும் மற்ற போலீஸ்களும் போனாங்க. நடுக்காட்டுல அந்த சர்தார் போலீஸ் ஒரு கரடியை ஒரு மரத்தில கட்டி வச்சு அடிச்சிகிட்டு இருந்தாரு.
 

”மரியாதையா ஒத்துக்கோ நீ ஒரு சிங்கம்னு!”




டெரர் கும்மிக்காக 

எஸ்.கே




68 comments:

சௌந்தர் said...

”மரியாதையா ஒத்துக்கோ நீ ஒரு சிங்கம்னு!”////

இது தான் டாப்பு நம்ம ஆளுங்க நம்ம ஆளுங்க தான்

எஸ்.கே said...

இன்னும் நிறைய ஜோக் இருக்கு சௌந்தர்! அப்பப்ப போடுறேன்!

செல்வா said...

ஐயோ சாமி , எனக்கு அந்த கடைசியா இருக்குற போட்டவ விலைக்குத் தருவீங்களா..?

எஸ்.கே said...

//கோமாளி செல்வா said...

ஐயோ சாமி , எனக்கு அந்த கடைசியா இருக்குற போட்டவ விலைக்குத் தருவீங்களா..?//

உங்களுக்கு இல்லாததா? எடுத்துக்குங்க1

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

தொடருங்கள் சகோதரா...மேலும் நல்ல ஜோக்குகள் தாருங்கள்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே எதோ ஜோக்கு சொல்றேன்னு சொன்னீங்க எங்க?

செல்வா said...

//உங்களுக்கு இல்லாததா? எடுத்துக்குங்க//

அதுக்கு காசு கேப்பீங்களா ..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நகைகள் விற்பனைக்கு....!
///

Y this title?

எஸ்.கே said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே எதோ ஜோக்கு சொல்றேன்னு சொன்னீங்க எங்க?//

வெந்துகிட்டு இருக்கு வெந்தவுடனே சொல்றேன்!

எஸ்.கே said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நகைகள் விற்பனைக்கு....!
///

Y this title?//

நகை என்றால் நகைச்சுவை சிரிப்பு!

எஸ்.கே said...

//கோமாளி செல்வா said...

//உங்களுக்கு இல்லாததா? எடுத்துக்குங்க//

அதுக்கு காசு கேப்பீங்களா ..?//

நோ காசு, அதுக்கு பதில் 2 மொக்கை போதும்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நகைகள் விற்பனைக்கு....!
///

Y this title?//

நகை என்றால் நகைச்சுவை சிரிப்பு!//


அப்டின்னா நகைக்கடைக்கு போய் நகை கேட்டா டெரர் மாதிரி கேனத்தனமா சிரிப்பாங்களா?

செல்வா said...

/
நோ காசு, அதுக்கு பதில் 2 மொக்கை போதும்!//

ஐ அப்படின்னா நான் ஈசியா வாங்கிடுவேன்!

செல்வா said...

//அப்டின்னா நகைக்கடைக்கு போய் நகை கேட்டா டெரர் மாதிரி கேனத்தனமா சிரிப்பாங்களா?
//

சிரிப்பு போலீசுனா என்ன ?

NaSo said...

சிரிச்சு மாளலை. தொடருங்க எஸ்கே..

Madhavan Srinivasagopalan said...

எல்லாமே செம.. எஸ்.கே.
அந்த போலீசு, நம்ம சிரிப்பு போலீஸ்தான..?
'நடந்தே போனதா' சொல்ல நெனைச்ச இவ்ளோ பலன் இருக்குமா ? கிரேட்.

இதேமாதிரி (இதையே இல்லை) நெறையா சொல்லுங்க எஸ்.கே..

எஸ்.கே said...

//அப்டின்னா நகைக்கடைக்கு போய் நகை கேட்டா டெரர் மாதிரி கேனத்தனமா சிரிப்பாங்களா?//

சில நேரங்களில் சில மனிதர்கள்!

எஸ்.கே said...

நன்றி சௌந்தர்!
நன்றி செல்வா!
நன்றி பிரஷா!
நன்றி ரமேஷ்!
நன்றி நாகா!
நன்றி மாதவன்!

சௌந்தர் said...

கோமாளி செல்வா said... 3
ஐயோ சாமி , எனக்கு அந்த கடைசியா இருக்குற போட்டவ விலைக்குத் தருவீங்களா..?///

உன் போட்டோ வை நீ ஏன் விலைக்கு கேக்குறே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் மூணு கமெண்ட் போட்டேன். எஸ்.கே மூணு தடவை நன்றி சொல்லாததால் வெளிநடப்பு செய்கிறேன்

எஸ்.கே said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் மூணு கமெண்ட் போட்டேன். எஸ்.கே மூணு தடவை நன்றி சொல்லாததால் வெளிநடப்பு செய்கிறேன்//

நன்றி ரமேஷ்!
நன்றி ரமேஷ்!
நன்றி ரமேஷ்!

(பேசாம டவாலியா ஆகியிருக்கலாம்!)

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//நான் மூணு கமெண்ட் போட்டேன். எஸ்.கே மூணு தடவை நன்றி சொல்லாததால் வெளிநடப்பு செய்கிறேன்//

தயவுசெஞ்சி திரும்பி வந்துடாத... :)

எஸ்.கே said...

நன்றி டெரர்!

(அப்புறம் சொல்லலன்னு சொல்லக் கூடாதுல்ல!)

TERROR-PANDIYAN(VAS) said...

@SK

//(அப்புறம் சொல்லலன்னு சொல்லக் கூடாதுல்ல!)//

பார்டா!! ரமேஷ வெளிய போக சொன்னா இவரு நன்றி சொல்றாரு... :)

எஸ்.கே said...

//TERROR-PANDIYAN(VAS) said...

@SK

//(அப்புறம் சொல்லலன்னு சொல்லக் கூடாதுல்ல!)//

பார்டா!! ரமேஷ வெளிய போக சொன்னா இவரு நன்றி சொல்றாரு... :)//

ஜெனரல் சார் விட்ருங்க! என்னை போலீஸ்கிட்ட மாட்டி விடாதீங்க!

இம்சைஅரசன் பாபு.. said...

//நான் மூணு கமெண்ட் போட்டேன். எஸ்.கே மூணு தடவை நன்றி சொல்லாததால் வெளிநடப்பு செய்கிறேன்//
எஸ் கே மூணு தடவை அவன் மூஞ்சில துப்பு ........எங்க ஊர்ல இப்படி தான் நன்றி சொல்லுவோம் ன்னு போடு மக்கா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே said... 21

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் மூணு கமெண்ட் போட்டேன். எஸ்.கே மூணு தடவை நன்றி சொல்லாததால் வெளிநடப்பு செய்கிறேன்//

நன்றி ரமேஷ்!
நன்றி ரமேஷ்!
நன்றி ரமேஷ்!

(பேசாம டவாலியா ஆகியிருக்கலாம்!)
///

பேசாம எப்படி டவாலி ஆக முடியும்? அப்புறம் எப்படி மூணு தடவ கூப்பிடுவீங்க # டவுட்டு

எஸ்.கே said...

//பேசாம எப்படி டவாலி ஆக முடியும்? அப்புறம் எப்படி மூணு தடவ கூப்பிடுவீங்க # டவுட்டு//

ஜட்ஜ்கிட்ட இருக்கிற சுத்தியலை எடுத்துட்டு வந்து யாரை கூப்பிடுனுமோ அவங்க தலையில் மூன்று தடவை தட்டி தட்டி கூப்பிட வேண்டியதுதான்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே said...

//பேசாம எப்படி டவாலி ஆக முடியும்? அப்புறம் எப்படி மூணு தடவ கூப்பிடுவீங்க # டவுட்டு//

ஜட்ஜ்கிட்ட இருக்கிற சுத்தியலை எடுத்துட்டு வந்து யாரை கூப்பிடுனுமோ அவங்க தலையில் மூன்று தடவை தட்டி தட்டி கூப்பிட வேண்டியதுதான்!///

அவர் சுத்தியலை குடுப்பாரா?

karthikkumar said...

"கொய்யாலே! உங்க ரெண்டு பேர்ல எவனாச்சும் அவகிட்ட என்னைத் தெரியுமான்னு கேட்டீங்க, உங்க ரெண்டு பேரை எலக்ட்ரிக் சேருக்கு அனுப்பிடுவேன்!" ////

சூப்பர் சார் கலக்குங்க :)

logu.. said...

”மரியாதையா ஒத்துக்கோ நீ ஒரு Dubakooornu...

logu.. said...

\\ karthikkumar said...
"கொய்யாலே! உங்க ரெண்டு பேர்ல எவனாச்சும் அவகிட்ட என்னைத் தெரியுமான்னு கேட்டீங்க, உங்க ரெண்டு பேரை எலக்ட்ரிக் சேருக்கு அனுப்பிடுவேன்!" ////

சூப்பர் சார் கலக்குங்க :)\\


Chumma sonna epooodi?
Undaavum, karandium yar vangi tharuvanga?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நன்றி எஸ்கே உங்க போட்டோ ரொம்ப நல்லாருக்கு..... வெரி நைஸ்..... ஐ லைக் இட்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா எந்த நகைய விக்கிறீங்க? எதையுமெ காணோம்?

logu.. said...

\\ பன்னிக்குட்டி ராம்சாமி said...
நன்றி எஸ்கே உங்க போட்டோ ரொம்ப நல்லாருக்கு..... வெரி நைஸ்..... ஐ லைக் இட்.....!\\

Solrathoda vachikonga..
lavatitu poidatheenga..
paavam s.k sir..

Unknown said...

சூப்பர் பாஸ்! தொடர்ந்து கலக்குங்க!!
:-)

ஜெயந்த் கிருஷ்ணா said...

எல்லா ஜோக்கும் ரோமப் நல்லாயிருக்கு...

என்னாச்சு மக்கள் ஒருத்தரையும் காணோம்...

வெங்கட் said...

// மரியாதையா ஒத்துக்கோ நீ ஒரு சிங்கம்னு! //

இது நம்ம சிரிப்பு போலீஸ் தானே..?

ஹா., ஹா., ஹா

இம்சைஅரசன் பாபு.. said...

எஸ் கே கடைசில உங்க போட்டோ சூப்பர் ....நல்ல இருக்கு .......

வைகை said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்?!! உண்மைலே அந்த போட்டாவில் உள்ளது யாரு? சாயல பாத்தா சின்ன வயசு போலிஸ் மாதிரி தெரியுது!!

வைகை said...

வெறும்பய said...
எல்லா ஜோக்கும் ரோமப் நல்லாயிருக்கு...

என்னாச்சு மக்கள் ஒருத்தரையும் காணோம்../////////


எல்லோரும் ஜோதிய பாக்க போய்ட்டாங்க!!

வைகை said...

அருமையான நகைச்சுவை துணுக்குகள்!
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி!!

TERROR-PANDIYAN(VAS) said...

@வைகை

//சாயல பாத்தா சின்ன வயசு போலிஸ் மாதிரி தெரியுது!!//

சாயாம பார்த்த பன்னிகுட்டி ராமசாமி தெரியராரா?

வைகை said...

கோமாளி செல்வா said...
ஐயோ சாமி , எனக்கு அந்த கடைசியா இருக்குற போட்டவ விலைக்குத் தருவீங்களா..//////////


இதுக்கு ஏன் இவளோ கஷ்டம் செல்வா?!! போலிச கேட்டா இன்னொரு போட்டோ தருவாருள்ள!!

வைகை said...

இதுக்கு ஏன் இவளோ கஷ்டம் செல்வா?!! போலிச கேட்டா இன்னொரு போட்டோ தருவாருள்ள!!/////////


எப்பிடி பாத்தாலும் அப்பிடித்தான்!! நான் போலிச விட்டுகொடுக்க மாட்டேன்!!!

வைகை said...

எஸ்.கே said...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே எதோ ஜோக்கு சொல்றேன்னு சொன்னீங்க எங்க?//

வெந்துகிட்டு இருக்கு வெந்தவுடனே சொல்றேன்////////////

சொல்லாதிங்க எஸ்.கே!! மூஞ்சில வென்னீர ஊத்துங்க! தெளியட்டும்!!

TERROR-PANDIYAN(VAS) said...

//எப்பிடி பாத்தாலும் அப்பிடித்தான்!! நான் போலிச விட்டுகொடுக்க மாட்டேன்!!! //

சொன்னா கேளுலே ரமேசு இம்புட்டு அழகா இருக்க மாட்டான்... :)

வைகை said...

TERROR-PANDIYAN(VAS) said...
//எப்பிடி பாத்தாலும் அப்பிடித்தான்!! நான் போலிச விட்டுகொடுக்க மாட்டேன்!!! //

சொன்னா கேளுலே ரமேசு இம்புட்டு அழகா இருக்க மாட்டான்... :////////

ஓ...அதான் மேட்ரா?!! அப்ப இது ரமேசு இல்லையோ?!!!

TERROR-PANDIYAN(VAS) said...

@வைகை

//ஓ...அதான் மேட்ரா?!! அப்ப இது ரமேசு இல்லையோ?!!! //

ரமேச பார்த்தா வெஷம் குடிக்காமலே செத்து போய்டுவ.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

50

வைகை said...

TERROR-PANDIYAN(VAS) said...
@வைகை

//ஓ...அதான் மேட்ரா?!! அப்ப இது ரமேசு இல்லையோ?!!! //

ரமேச பார்த்தா வெஷம் குடிக்காமலே செத்து போய்டுவ////////////

அவர ஒருவாட்டி எங்க ஊருக்கு வரசொல்லுங்க....எங்க வயலெல்லாம் ஒரே பூச்சி!! இவரு மூஞ்சிய காமிச்சா எல்லாம் செத்திருமா? எனக்கு பூச்சிமருந்து செலவு மிச்சம்! அவருக்கு ஒரு டீ வாங்கி கொடுக்கிறேன்!(இதுவே அதிகமோ?)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

TERROR-PANDIYAN(VAS) said...

@வைகை

//ஓ...அதான் மேட்ரா?!! அப்ப இது ரமேசு இல்லையோ?!!! //

ரமேச பார்த்தா வெஷம் குடிக்காமலே செத்து போய்டுவ.///


டெரர் பேரை நினைச்சாலே சாவுதான்

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//டெரர் பேரை நினைச்சாலே சாவுதான் //

ஆமாம்லே!! நான் காலபைரவன்... :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//டெரர் பேரை நினைச்சாலே சாவுதான் //

ஆமாம்லே!! நான் காலபைரவன்... :))//

அவரு யாரு மச்சி உன் மாமனாரா?

எஸ்.கே said...
This comment has been removed by the author.
எஸ்.கே said...

@வைகை, டெரர், ரமேஷ்:

என்ன இது சின்ன பசங்களாட்டம் சண்டை போட்டுகிட்டு? வளர்ந்தவங்கதானே நீங்க? போங்க போய் பெரியவங்களாட்டம் அடிச்சிகிங்க!

TERROR-PANDIYAN(VAS) said...

@எஸ்.கே

//என்ன இது சின்ன பசங்களாட்டம் சண்டை போட்டுகிட்டு? வளர்ந்தவங்கதானே நீங்க? போங்க போய் பெரியவங்களாட்டம் அடிச்சிகிங்க! //

நோ டபுள் மீனிங் ப்ளீஸ்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே said...

@வைகை, டெரர், ரமேஷ்:

என்ன இது சின்ன பசங்களாட்டம் சண்டை போட்டுகிட்டு? வளர்ந்தவங்கதானே நீங்க? போங்க போய் பெரியவங்களாட்டம் அடிச்சிகிங்க!//

@ TERROR

டேய்பன்னாடை பரதேசி, மானம் கெட்டவனே இளையதளபதி விஜய் மாதிரி அழகானவனே(இதை விட கேவலமா திட்ட முடியாது)

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எஸ்.கே said...

@வைகை, டெரர், ரமேஷ்:

என்ன இது சின்ன பசங்களாட்டம் சண்டை போட்டுகிட்டு? வளர்ந்தவங்கதானே நீங்க? போங்க போய் பெரியவங்களாட்டம் அடிச்சிகிங்க!//

@ TERROR

டேய்பன்னாடை பரதேசி, மானம் கெட்டவனே இளையதளபதி விஜய் மாதிரி அழகானவனே(இதை விட கேவலமா திட்ட முடியாது//////////

நோ..நோ..நோ பேட் வோர்ட்ஸ்.....

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//டேய்பன்னாடை பரதேசி, மானம் கெட்டவனே இளையதளபதி விஜய் மாதிரி அழகானவனே(இதை விட கேவலமா திட்ட முடியாது) //

என்ன திட்ட சொன்னா பாராட்டர? :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//டேய்பன்னாடை பரதேசி, மானம் கெட்டவனே இளையதளபதி விஜய் மாதிரி அழகானவனே(இதை விட கேவலமா திட்ட முடியாது) //

என்ன திட்ட சொன்னா பாராட்டர? :))//

I know u dont have soodu suranai

எஸ்.கே said...

இதோ பாருங்க! பெரியவங்க என்ன சொல்லிருக்காங்க? முதல்ல சாமா பேத தானம். கடைசியாகதான் தண்டத்தை முயற்சிக்கனும்!

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//I know u dont have soodu suranai//

பார்டா மறுபடியும் பாராட்டரான்... :)

வினோ said...

செமயா இருக்கு எஸ் கே.. மிக்க நன்றி....

middleclassmadhavi said...

ஜோக்ஸ் எல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா, கல்லறையில 2500 B.C.ன்னு எப்படிப் போட்டிருக்கும்?

எஸ்.கே said...

//middleclassmadhavi said...

ஜோக்ஸ் எல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா, கல்லறையில 2500 B.C.ன்னு எப்படிப் போட்டிருக்கும்?//

நன்றிங்க மாதவி!

அது பிரமிட் ஒவ்வொரு சவப்பெட்டிக்கு அருகில் எந்த வருடம் என விவரமிருக்கும்!

Angel said...
This comment has been removed by the author.
Angel said...

ella jokesum nalla irukku.
B.C 2500 (before christ)
NALLA SIRICHEEN