Thursday, February 3, 2011

மொக்கைகள்


முன்குறிப்பு : இன்னிக்கு நீங்க வீட்டுல இருந்து கிளம்புபோது எதாச்சும் கெட்ட சகுனம் வந்துச்சா ?

*.தூங்கும்போது ஏன் கண்ண மூடிட்டே தூங்குறோம்னு தெரியுமா ? கண்ண திறந்திட்டே தூங்கினா நமக்கு வர்ற கனவு எல்லோருக்கும் தெரிஞ்சிடும்ல, அதான்!

*.50000 கொடுத்து பைக் வாங்கினாலும் 50 பைசா கொடுத்து காத்து (AIR )அடிக்கலைனா ஐம்பதாயிரமும் வீண்தான்.பொருளோட விலைய வச்சு அத மதிப்பிடாதீங்க.

*.வெள்ளைப் பூனைக்கும் கருப்புப் பூனைக்கும் என்ன வித்தியாசம்?வெள்ளைப் பூனை வெள்ளைக் கலர்ல இருக்கும் , கருப்பு பூனை கருப்புக் கலர்ல இருக்கும்.

*.கோழி நம்மல கடிக்குமா? அதுக்கு முதல்ல பேசவே தெரியாது , அப்புறம் எப்படி கடி ஜோக் சொல்லும்!?நீதி:கோழிக்கு அறிவு இருக்கா?


*.என்னதான் ஒரு District கோணல் மாணலா இருந்தாலும் , அத தமிழ்ல சொல்லும்போது மா'வட்டம்' அப்படின்னுதான் சொல்லுவாங்க!

*.பள்ளிக்கூடத்துலேயே பிறந்து வளர்ந்தாலும் பல்லிக்கு எழுதப் படிக்கத் தெரியாது;அதுமாதிரிதான் நாம எங்க பிறக்கிறோம்கறது முக்கியம் இல்ல


*.கொம்பு இல்லாத ஆட்ட மொட்டை ஆடு அப்படின்னு சொல்லுறோம் , அப்படின்னா கொம்பு இல்லாத மனுசன மொட்டை மனுசன்னு சொல்லலாமா?


*.உனக்குப் பிடித்ததை மட்டும் தரவே நான், மிகப் பிடித்ததைச் சொல் டீயா காப்பியா? - டீக்கடை நாயர். நீதி : ஒரு டீ விலை 5 ரூபாய்.

*.மீன் செத்தா கருவாடு மட்டும் இல்ல , குழம்பு கூட வைக்கலாம்! உங்களுக்கு கொடுக்கப்பட்ட மீன என்ன பண்ணப்போறீங்கங்கிறது உங்க கைலதான் இருக்கு.!

*.பூமி எவ்ளோ வேகமா எவ்ளோ நேரம் சுத்தினாலும் அது கிறுகிறுப்பு வந்து கீழ விழுந்திடாது! நீதி : பூமி கீழ விழுந்த எங்க போய் விழும்?

*.என் மேல் உனக்கு அப்படி என்ன பாசம் ? எத்துனை முறை திருட்டுத்தனமாக பிறரிடம் அனுப்பினாலும் என்னிடமே வருகிறாய்! கிழிந்துபோன 5 ரூபாய் நோட்டு!

*.எலிக்கு ஏன் இறக்கை இல்லைன்னு தெரியுமா.? பாவம் அதுக்குத்தான் பறக்கத் தெரியாதே, அதான் வேண்டாம்னு சொல்லிடுச்சு!


*.பேனா முனை கத்தி முனையவிட எவ்ளோ கூர்மையா இருந்தாலும் அத வச்சு ஒரு இளநீர் கூட சீவ முடியாது! நீதி:உங்களுக்குத் தெரியாததா?

*.யானைய விட எறும்பு ஒரு விசயத்துல பெரிசு, அது என்னனு தெரியுமா..? யானைக்கு நாலு கால் , எறும்புக்கு ஆறு கால்.!


*.நிலா ஏன் அமாவாசை அன்னிக்கு வரதில்லைன்னு தெரியுமா.? ஏன்னா இருட்டா இருக்கும்ல , அதனால கண்ணு தெரியாம வரமுடில.!

*.மனோ : ஏன்டா அண்டாக்குள்ள தலைய வச்சு தூங்குற.? செல்வா : நீங்கதானே என்னோட முகம் பால்வடியும் முகம்னு சொன்னீங்க.!


*.நிலா ஏன் வெள்ளையா இருக்குனு தெரியுமா .? ஏன்னா அதுதான் வெயில்ல அதிக நேரம் அலையுரதில்லையே.!

*.வாத்தியார் பெருசா கோழி பெருசா..? கோழிதான் பெருசு.! ஏன்னா கோழி போடுற முட்டைல ஆம்லேட் போடலாம் வாத்தியார் போடுற முட்டைல போட முடியாது.!


*.திருடர் தலை மறைவு அப்படின்னு சொல்லுராங்கள்ள , அப்படின்னா அவுங்க தலைய எடுத்து எதாவது எடத்துல ஒளிச்சு வச்சிருவாங்களா ..?

*.எலிமருந்து வச்சா எலி செத்திடுது , பூச்சி மருந்து வச்சா பூச்சி செத்திடுது , அப்படின்னா வெடி மருந்து வச்சா வெடி செத்திடுமா .?

*.எலிமருந்து வச்சிட்டு அந்த காகித்துமேல விஷம் அப்படின்னு எழுதினா கூட எலி அத தின்னுட்டு செத்திருதே ஏன்.? ஏன்னா அது தற்கொலை பண்ணிக்கிது.!

*.பாம்பின் கால் (call) பாம்பறியும் அப்படின்னு சொல்லுறாங்க ., அப்படினா நாம கால் (call) பண்ணினா அதுக்கு தெரியாதா.?

நீதி : இத படிச்சிட்டு எதாச்சும் திட்டணும்னு தோணுதுங்களா ? ஹி ஹி ..

39 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இதுக்கு டெரர் ப்ளாக்கையே படிச்சிருக்கலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

*.தூங்கும்போது ஏன் கண்ண மூடிட்டே தூங்குறோம்னு தெரியுமா ? கண்ண திறந்திட்டே தூங்கினா நமக்கு வர்ற கனவு எல்லோருக்கும் தெரிஞ்சிடும்ல, அதான்!//

சில நேரம் நாம கண்ட கனவே நம்மக்கு நியாபகம் இருக்காதே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

*.50000 கொடுத்து பைக் வாங்கினாலும் 50 பைசா கொடுத்து காத்து (AIR )அடிக்கலைனா ஐம்பதாயிரமும் வீண்தான்.பொருளோட விலைய வச்சு அத மதிப்பிடாதீங்க.//

Air அடிக்க இப்ப ஒரு ரூபாய்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

.கோழி நம்மல கடிக்குமா? அதுக்கு முதல்ல பேசவே தெரியாது , அப்புறம் எப்படி கடி ஜோக் சொல்லும்!?நீதி:கோழிக்கு அறிவு இருக்கா?//

கோழி கடிக்காது கொத்தும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

*.என்னதான் ஒரு District கோணல் மாணலா இருந்தாலும் , அத தமிழ்ல சொல்லும்போது மா'வட்டம்' அப்படின்னுதான் சொல்லுவாங்க!///

கோணலா இருந்தாலும் என்னோடதாக்கும். சிம்ரன்

செல்வா said...

//இதுக்கு டெரர் ப்ளாக்கையே படிச்சிருக்கலாம்
//

ஹி ஹி ஹி .. பாவம் நீங்க

செல்வா said...

//சில நேரம் நாம கண்ட கனவே நம்மக்கு நியாபகம் இருக்காதே..//

உங்களுகுக் கூட கனவு வருமா ?

Madhavan Srinivasagopalan said...

போச்சுடா.. ஏற்கனவே இந்த பிளாக்குல காத்தடிக்குது.. இனமே ஈ எறும்பு கூட வரதா ?

செல்வா said...

//போச்சுடா.. ஏற்கனவே இந்த பிளாக்குல காத்தடிக்குது.. இனமே ஈ எறும்பு கூட வரதா ?//

ஒரு விசயத்த பண்ணினா முழுசா முடிச்சிடனும் .. ஹி ஹி

மாணவன் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 1
இதுக்கு டெரர் ப்ளாக்கையே படிச்சிருக்கலாம்//

இதுக்கு நான் உங்க பிளாக்கையே படிச்சிருக்கலாம்.........ஹிஹிஹி

வைகை said...

இதுக்கு போலிச இன்னொரு பதிவு போடசொல்லி படிக்கலாம்!

செல்வா said...

//இதுக்கு நான் உங்க பிளாக்கையே படிச்சிருக்கலாம்.........ஹிஹிஹி
//

பாவம் போலீஸ்கார்

செல்வா said...

// வைகை said...
இதுக்கு போலிச இன்னொரு பதிவு போடசொல்லி படிக்கலாம்!//



அவரே பயந்து போய் கிடக்குறாரு

வைகை said...

மாணவன் said...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 1
இதுக்கு டெரர் ப்ளாக்கையே படிச்சிருக்கலாம்//

இதுக்கு நான் உங்க பிளாக்கையே படிச்சிருக்கலாம்.........ஹிஹி///

ஒரே சிந்தனை....நண்பேண்டா.....

மாணவன் said...

//நீதி : இத படிச்சிட்டு எதாச்சும் திட்டணும்னு தோணுதுங்களா ? ஹி ஹி//

ச்சே ச்சே... அதெல்லாம் ஒன்னும் தோனல... ஆனால் நம்ம அண்ணன் வெறும்பயதான் உங்கள பார்க்கனும்னு சொன்னாரு....ஹிஹி

வைகை said...

இத படிச்சிட்டு எதாச்சும் திட்டணும்னு தோணுதுங்களா ? ஹி ஹி ////////


இல்ல....இதெல்லாம் தஞ்சாவூர் கல்வெட்டுல செதுக்கசொல்லி வருங்கால சந்ததிகளுக்கு வழிகாட்டுவோம்!

Anonymous said...

அனைத்தும் கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டிய வாசகங்கள்

வைகை said...

கோழி நம்மல கடிக்குமா? அதுக்கு முதல்ல பேசவே தெரியாது , அப்புறம் எப்படி கடி ஜோக் சொல்லும்!?நீதி:கோழிக்கு அறிவு இருக்கா?////


கோழி - இவனுக்கே இல்ல...நம்மள கேக்குறான் பாரு?

வைகை said...

இன்னிக்கு நீங்க வீட்டுல இருந்து கிளம்புபோது எதாச்சும் கெட்ட சகுனம் வந்துச்சா ?/////

இன்னிக்கு நான் வீட்ட விட்டு எங்கயும் போகல....ஆனா காலைல மொதல்ல போலிசு பிளாக்க படிச்சேன்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

இன்னிக்கு நீங்க வீட்டுல இருந்து கிளம்புபோது எதாச்சும் கெட்ட சகுனம் வந்துச்சா ?/////

இன்னிக்கு நான் வீட்ட விட்டு எங்கயும் போகல....ஆனா காலைல மொதல்ல போலிசு பிளாக்க படிச்சேன்!//

அப்போ சீக்கிரம் சங்குதான். ஹிஹி

MANO நாஞ்சில் மனோ said...

பேஸ்புக்லதான் வச்சி கொல்லுரானுங்கன்னா இங்கேயும் இந்த நாசமா போன வைரஸ் வந்தாச்சா...
வெளங்கிரும்...

சி.பி.செந்தில்குமார் said...

செல்வாவை புரிஞ்சுக்கவே முடியல.. ஆன்மிகப்பதிவு போடறாரு திடீர்னு மொக்கை போடறாரூ..?

NaSo said...

:))

Arun Prasath said...

வந்தேன்

Arun Prasath said...

25 ..
வடை வென்றேன்

Arun Prasath said...

யாருமே இல்லாத கடைல வடை வாங்குவோர் சங்கம்

Unknown said...

வணக்கம் உறவுகளே உங்களின் வலைத்தளத்தினை இதிலும் இணையுங்கள்

http://meenakam.com/topsites

http://meenagam.org

karthikkumar said...

நான் போய் போலிஸ் ப்ளாக் படிக்க போறேன் (அந்த கொடுமையே தேவலை).... :)

இம்சைஅரசன் பாபு.. said...

//இத படிச்சிட்டு எதாச்சும் திட்டணும்னு தோணுதுங்களா ? //

இல்ல மக்கா உன்னை வெட்டணும் போல தோணுது ...

Anonymous said...

//என் மேல் உனக்கு அப்படி என்ன பாசம் ? எத்துனை முறை திருட்டுத்தனமாக பிறரிடம் அனுப்பினாலும் என்னிடமே வருகிறாய்! கிழிந்துபோன 5 ரூபாய் நோட்டு!//


செல்லாத நோட்டுனு சொல்லுங்க..

இம்சைஅரசன் பாபு.. said...

//நான் போய் போலிஸ் ப்ளாக் படிக்க போறேன் (அந்த கொடுமையே தேவலை).... ://

காரி துப்ப போறேன்னு சொல்லுங்க .படிக்க போறேன்னு பொய் சொல்ல கூடாது

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஏன் இந்த கொலை வெறி...
இருந்தாலும் சூப்பர்..
என்ன பண்றது ஏதாவது புதுசுபுதுசா யோசிச்சாதான் நாங்கொல்லாம் வற்றோம்..

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா... நடத்துங்க... நடத்துங்க....!!!

Unknown said...

hey naanthan firstu...

Unknown said...

mee the 35..vadai enakkey..

Unknown said...

அட அட
ஒரு தத்துவமும்
நூறு பைசாவுக்கு சமம் ...

வாழ்க உங்கள் தொண்டு

Unknown said...

கோமாளி ப்ளோகில் பொரிக்க படவேண்டிய தத்துவங்கள்

Unknown said...

Air அடிக்க இப்ப ஒரு ரூபாய்.

sorry wrong info..

my place 2rupes..

Anonymous said...

ஹா ஹா ..,ரொம்ப சந்தோஷமா இருக்குங்க மக்களே ..,யெஸ் ..,சிக்னலுக்காக ரெண்டு கூட்ஸ் வண்டி நின்னுட்டு இருந்தது ..,தக்காளி மக்க இன்னிக்கி ஒன்னு கிரீன் சிக்னல் விழுந்து ஓடிடுச்சி !! இனி நான் தான் .அந்த கூட்ஸ் வண்டி யாரும் இல்ல மக்களே எங்க அண்ணன் தான் .அவனுக்கு தான் நாளைக்கி கல்யாணம் .