Friday, March 25, 2011

பேய்க் கதை

முன்குறிப்பு : கொஞ்சநாள் முன்னாடி சரித்திரக் கதை ஒன்னு படிச்சிருப்பீங்க. அதே மாதிரி பேய்க்கதை ஒன்னு இன்னிக்கு!

எச்சரிக்கை : இதய பலகீனம் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் இதைப் படிப்பதைத் தவிர்க்கவும்.

தனது தலைக்கு மேலே அசுர வேகத்தில் சுற்றிக்கொண்டிருந்த அந்த கற்றாடியிலிருந்து வரும் குளிர்காற்று கூட அவனை உஷ்ணமாக்கிக்கொண்டிருந்தது அந்த செய்தி அவன் காதில் விழுந்ததிலிருந்து. ஆம் சற்று முன்னர்தான் அவனது அறைத்தோழன் அந்த கொடூர செய்தியை போட்டுடைத்தான். சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் இந்த அறையில் வசித்துக்கொண்டிருந்த ஒரு கன்னிப்பெண் அந்த ஃபேனில் ஒரு கயிறை மாட்டி ... அவன் சொல்லும்போதே பாதி அழுதுவிட்டான் குமார். " போதுண்டா போதும். மேல சொல்லிடாத , இப்பவே வயித்தக்கலக்குது." என்று பயத்தில் மிரண்டு போனான் குமார்.

குமார் பற்றியும் அவனது அறைத்தோழன் அஸ்வின் பற்றியும் நீங்கள் தெரிந்துகொள்வது கதையின் சாரத்தை உங்களுக்குச் சற்று உணர்த்தலாம். குமாரும் அஸ்வினும் சென்னையில் ஒரு தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிகின்றனர். அஸ்வின்தான் முதலில் சென்னைக்கு வந்தவன். இந்த அறையினை முதன்முதலில் வாடகைக்கு எடுத்தவனும் அஸ்வின்தான். பின்னர் தனது அலுவலகத்தில் வேறொரு பணியிடம் காலியாகவே தனது நண்பனான குமாரிடம் தகவல் சொன்னதும் அவன் அஸ்வின் பணிபுரியும் நிறுவனத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டதும் கூடுதல் தகவல்கள். சரி இனி மேலே நடப்பதைக் காண்போம்.

குமாரின் கண்கள் மேலே சுற்றிகொண்டிருந்த காற்றாடியிலேயே நிலைத்து நின்றிந்தது. அதன் ஒவ்வொரு சுற்றுகளிலும் அவனது ஆசைகள் கனவுகள் கலைக்கப்பட்டுக் கொண்டிருந்தது என்றால் மிகையான சொல்லாகாது. அப்படி ஒரு உயிர்பயம் அவனிடம். நேரம் இரவு எட்டை நெருங்கிகொண்டிருந்தது.  வெளியில் யாரோ நடப்பது போன்ற ஒரு உணர்வு சட்டென மின்னி மறைந்தது. குமாரின் இருதயம் நிமிடத்திற்கு 72 என்ற கணக்கினைப் பொய்யாக்கியே தீருவேன் என்று துடிக்க ஆரம்பித்தது. மேலும் கொலுசொலியும் , மல்லிகைப்போ வாசமும் வருவதாக உணர்ந்தான் குமார். உண்மையில் இது வரை பார்த்த சில திரைப்படங்களின் தாக்கம் அவனுக்கு இந்த உணர்வினைக் கொடுத்துக்கொண்டிருந்தது.

வெளியில் சென்றுவிட்டு வந்த அஸ்வின் " டேய் குமார் , வா சாப்பிடப் போலாம் " என்றான். " போ .. போலாம் " என்றவன் சட்டென எழுந்து வேகமாம வெளியேறினான். சாதரணமாக அவ்வளவு பயத்தில் இருப்பவர்கள் இருந்த இடத்தில் இருந்து எழுவதற்கே சில காலம் ஆகலாம். ஆனால் குமார் எப்படி எழுந்தான் என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றலாம். எல்லாக் கதைகளிலும் அதே போன்று கூறினால் சற்று போர் அடிக்கலாம் என்பதால் குமார் தற்பொழுது எழுந்துவிட்டான். ஆனால் குமாரின் முகத்தில் இருந்த அந்தப் பயமும் நடுக்கமும் அவனிடம் இருந்து விலகவில்லை என்பதை அஸ்வினின் கண்களில் தெரிந்த குமாரின் உருவம் காட்டிக்கொடுத்தது. ஆனால் அஸ்வின் எதையும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை .. எருமை மேல் மழை பெய்தது போல அமைதியாக சாப்பிடச் சென்றவனைத் தடுத்து தான் பயந்து போயிருப்பதைக் கூறிவிட நினைத்தவனை பின்நோக்கி ஏதோ இழுப்பது போன்று உணர்ந்தான். ஆனால் அவனுக்குப் பின்னல் திரும்பிப்பார்க்கும் எண்ணம் சற்றும் இல்லை. சடாரென முன்னோக்கி இழுத்தவன் அவனது சட்டை பின்னால் இருந்த ஆணியில் பட்டுக்கிழிந்ததும் இல்லாமல் வேகமாக கீழேயும் விழுந்தான்.

கீழே விழுந்ததில் ஏற்பட்ட சத்தத்தில் திரும்பிய அஸ்வின் வேகமாக குமாரின் அருகில் வந்து " இங்க ஏன்டா விழுந்த ? இந்த இடத்தில்தான் அந்தப் பொண்ணு..."  என்று ஆரம்பித்தவனுக்கு மேற்கொண்டு வார்த்தைகள் வர மறுத்தன. அவன் மறுபடியும் அந்த விசயத்தைக் கூறவேண்டும் என்று எண்ணவில்லை. ஆனால் குமாருக்குப் புரிந்திருந்தது. பயமும் கலக்கமும் அதிர்ச்சியும் அவனது முகத்தில் ஓடியதை நம்மால் மறுக்க முடியாது. இருந்த போதிலும் குமார் சாப்பாட்டுக் கடை நோக்கி நடக்கத் தொடங்கினான். அவனது நடையில் ஒரு கழுதையின் மன்னிக்க...  ஒரு குரங்கின் மீண்டும் மன்னிக்க .. அவனது நடை ஒரு கூகை நடப்பது போன்று இருந்தது. அப்படியே நடந்து சென்றவன் செத்த பிணம் போல சாப்பாட்டுக் கடையின் பெஞ்சில் அமர்ந்தான். அங்கே இருந்த தொலைக்காட்சியில் மாண்ட மயிலாட ஓடிக்கொண்டிருந்தது என்று நான் சொல்லுவேன் என்று நீங்கள் கருதினால் அந்த என்னத்தை எச்சில் தொட்டு அழித்து விட்டு மேற்கொண்டு படிக்கவும். அங்கிருந்த தொலைக்கட்சிப்பெட்டியில் " திருவிளையாடல் " என்ற பக்திப் பரவசமான படம் ஓடிக்கொண்டிருந்தது. இந்தப் படத்தில் " பாட்டும் நானே பாவமும் நானே " என்ற பாடலில் முதலில் ஒரே ஒரு சிவாஜி பின்னர் பல சிவாஜியாக மாறிய காட்சியில் குமாருக்கு மூளையின் ஏதோ ஒரு முலையில் மின்னல் வெட்டியது. சட்டென அங்கிருந்து எழுந்தவன் தனது அறையை நோக்கி ஓடினான். இதைப் பார்த்துக்கொண்டிருந்த அஸ்வினின் இதழோரத்தில் ஒரு குரூரப் புன்னகை தோன்றி மறைந்தது.

தனது அறைக்கு ஓடிய குமார் நொடிப்பொழுதில் கையில் தனது தொலைபேசியுடன் ஓடிவந்தான். ஓடிவந்தவன் நேராக தொலைக்காட்சிப் பெட்டி அருகில் சென்று தொலைபேசியை வைத்துவிட்டு அதனை பதிவு செய்ய ஆரம்பித்தான். திரும்பி அஸ்வினைப் பார்த்தவன் அதே குரூரப் புன்னகையுடன் " இந்தப் பாட்ட ரெகார்ட் பண்ணினா தெரியும் " என்று கூறிவிட்டு சாப்பிட அமர்ந்தான்.

நேரம் இரவு 10 மணி என்பதை அந்தக் கடிகாரம் அவ்வளவு சத்தகாமத் தெரிவித்திருக்க வேண்டாம். ஏற்கெனவே நடுங்கிக்கொண்டிருந்த குமார் என்ன ஆவான் என்று உங்களின் படபடப்பு புரிகிறது. ஆனால் நீங்கள் நினைப்பது போல குமார் ஒன்றும் நடுங்கிக்கொண்டிருக்க வில்லை. நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருக்கிறான். அப்படியானால் அவன் இவ்வளவு நேரம் பயந்தது எதற்காக , அந்த காற்றாடியில் என்ன இருந்தது என்று அறியும் ஆவல் இருப்பது
நியாயமானதே. நீங்கள் நினைப்பதுபோல் அந்தக் காற்றாடியில் அந்தப் பெண் தூக்குப் போட்டெல்லாம் தொங்கவில்லை. இருபது வருடங்களுக்கு முன்னர் அந்தக் காற்றாடியில் ஒரு பெண் தனது குழந்தைக்குத் தொட்டில் கட்டி தூங்கச் செய்திருக்கிறாள் என்பதே அந்தச் செய்தி.! பின்னர் ஏன் குமார் பயந்து நடுங்கினான் என்று உங்களுக்கு விளக்கக் கடமைப் பட்டுள்ளேன்.

குமாரின் அலுவலகத்தில் ஒரு மிக முக்கியமான வேலை அவனிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வேலையை நினைத்தே அவன் பயந்து கொண்டிருந்தான். பின்னர் ஒருமுறை குமார் கீழே விழுந்ததும் அஸ்வின் " அந்த பொண்ணு " என்று கூறி மேலும் கூறாமல் விட்டதற்குக் காரணம் அஸ்வினுக்குத் திக்கு வாய் என்பதால் மட்டுமே. மேலும் அவன் திருவிளையாடல் பாடலை ரெகார்ட் செய்திடக் காரணம் அவன் நீண்ட நாட்களாக அந்தப் பாடலைக் கேட்கக் காத்திருந்தான்!!

நீதி : இதைப் படித்து பயந்தவர்களுக்கு எந்தவித நிதி உதவியும் அளிக்கப்படாது என்பதைத் தெரிவித்துகொள்கிறேன் :-)






15 comments:

Arun Prasath said...

ai vadai

Arun Prasath said...

ரொம்ப நாள் கழிச்சு வடை

Arun Prasath said...

யாருமே இல்லாத கடையில் வடை வாங்கிய அருண் வாழ்க

செல்வா said...

மறுபடியும் அருண் வாழ்க .. ஹி ஹி

சௌந்தர் said...

இந்த குமார் யாரு செல்வகுமார் தானே

Unknown said...

arumaina nagaichuvai kathai :)

Unknown said...

neraia spelling mistake irruku parunga

பெசொவி said...

//எச்சரிக்கை : இதய பலகீனம் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் இதைப் படிப்பதைத் தவிர்க்கவும்.
//

ங்கொய்யால................இதை எழுதினதே ஒரு கொயந்தப் பையந்தானடா!

karthikkumar said...

akbar said...
neraia spelling mistake irruku parunga////



அட நீங்க வேற இந்த கதையே மிஸ்டேக் தான்... ஹி ஹி ...:))

karthikkumar said...

"பேய்க் கதை"////
@ செல்வா /// செல்வா கதைன்னு போட்ருந்தா அப்படியே வேறபக்கம் போயிருப்போம்ல...:))

karthikkumar said...
This comment has been removed by the author.
vinu said...

என்னத்தை எச்சில் தொட்டு



ithu thappuuuuuuuu; it should be moonu suzi nagaram use panni irrukkanum..........

he he he he

MoonramKonam Magazine Group said...

சூப்பர் ! பயமுறுத்தும் கதைதான் :-)

£€k#@ said...
This comment has been removed by the author.
Unknown said...

அய்யோ..யோ.. படிசுத்து... பயந்துத்தேன்.