Thursday, February 24, 2011

நடுநிசி நாய்கள் 18+ ஒரு பார்வை!


முதலில் எனக்கு இதைப்பார்க்க வேண்டும் என்ற ஆர்வம்  சிறிதும் இல்லை..இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு மெல்லிய ஆசை தலைதூக்கியது! எவ்வளவோ பார்த்திட்டோம் இதையும் பார்த்தால் என்ன  என்று?! ஆனால் என் எண்ணத்தை என் நண்பர்களிடம் சொன்னபோது...அதிகமாக பயமுறுத்தினார்கள்... அதன் கொடூரமான காட்சிகளை உன்னால் பார்க்க முடியாது..நீ சின்னப்பையன் இந்த வேண்டாத வேலை வேண்டாமென்று..இன்னும் என்னென்னமோ சொன்னார்கள்..இருந்தாலும் நான் முடிவெடுத்து விட்டேன்! நடு நிசி நாய்களை பார்த்து விடுவதென்று!
 
முடிவெடுத்து விட்டேனே தவிர என்றைக்கு என்று முடிவு செய்யவில்லை...பகலில் கண்டிப்பாக முடியாது! இரவு நேரம்தான் லாயக்கு..ஆனால் இரவில் வீட்டை விட்ட வெளியில் சென்றால் காரணம் கேட்பார்கள், உண்மையான காரணம் கூற முடியாது! தடுத்து விடுவார்கள்..என் ஆசை நிராசை ஆகிவிடும்! இருந்தாலும் அதற்கான நாளும் தோதாக வந்தது....வீட்டில் ஒரு திருமணத்திற்கு முதல் நாளே கிளம்பி சென்று விட்டார்கள்...இன்றைய நாளை தவற விடக்கூடாது என்று முடிவெடுத்துக்கொண்டேன்...நண்பர்களிடம் சொல்லாமல் தனியாக சென்று ரசிப்பது என்று முடிவெடுத்துக்கொண்டேன்! ஏனென்றால்....நண்பர்கள் நடு நிசி நாய்களைப்பற்றி சொன்னவிதம் அப்படி! இதில் இன்செஸ்ட் கூட இருக்கும் என்றார்கள்..அதனால் அவர்களுடன் பார்க்க கூச்சமாக இருந்தது..அதனால்தான் அவர்களைத்தவிர்த்தேன்!
 
மாலை மங்கியதும் என் கண்கள் கடிகாரத்திலே நிலைத்திருந்து..ஒன்பது மணிக்கு கிளம்பினால்தான் நண்பர்கள் குறிப்பிட்ட அந்த தியேட்டருக்கு அருகில் செல்ல முடியும்!அதனால் கடிகாரத்துக்கு போட்டியாக நிமிடங்களை எண்ணிக்கொண்டிருந்தேன்! ஒன்பது மணி அடித்ததும் பரபரவென செயல்பட்டு வீட்டை பூட்டிக்கொண்டு அந்த தியேட்டரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்! நடக்கும்போது என் மனதில் எதிர்பார்ப்பு..பயம்..போன்ற கலவையான உணர்சிகள் வந்து போனது! இருந்தாலும் பார்த்தே தீருவது என்ற முடிவுடன் நடந்தேன்!
 
தியேட்டருக்கு அருகில் சென்றதும் நான் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லை..அதனால் கூச்சத்தை விட்டு ஒரு டீக்கடை பார்த்து ஒதுங்கி நின்றேன்! நேரம் ஆக ஆக...ஒன்றன் பின் ஒன்றாக வரத்துவங்கியது........இன்னும் கொஞ்சம் நேரம் காத்திருந்தேன்......
 
 
மணி பன்னிரெண்டை கடந்ததும் நான் எதிர்பார்த்தபடியே...நடுநிசி நாய்கள் கூட்டமாக வந்து தியேட்டருக்கு முன்னாள் விளையாடதுவங்கியதுகள்! அவைகளின் கொஞ்சல் என்ன....கொடூரமான சண்டை என்ன...அப்பா.....எனக்கு மகிழ்ச்சியும் பயமும் மாறி மாறி வந்தது...ஒரு மணிநேரம் அந்த நடுநிசி நாய்களை ரசித்துவிட்டு வீடு திரும்ப ஆரம்பித்தேன்!
 
சரி....இதுக்கு ஏன் 18+ என்கிறீர்களா?.....நான் எண்ணியபோது நடுநிசி நாய்கள் பதினெட்டுக்கு மேல் இருந்தது...கரெக்ட்டாக தெரியவில்லை..அதனால்தான் 18+ என்று போட்டேன்! உங்களுக்கும் இந்த நடுநிசி நாய்கள் அனுபவம் வேண்டுமா? அந்த தியேட்டருக்கு செல்லுங்கள்!
 

டெரர் கும்மிக்காக
வைகை

49 comments:

மாணவன் said...

vadai

எஸ்.கே said...

தங்கள் பார்வை நியாயமானதாகவும் நடுநிலையாகவும் சீராகவும் உள்ளது! வாழ்த்துக்கள்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தங்கள் பார்வை நியாயமானதாகவும் நடுநிலையாகவும் சீராகவும் உள்ளது! வாழ்த்துக்கள்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை உங்க சுய சரிதை ரொம்ப நல்லா இருந்தது. நீங்க,மாணவன், வெறும்பய .. மிச்சம் 15+ யாரு?

எஸ்.கே said...

ப்ளீஸ் ரமேஷ் சார்!

கமெண்டையாவது விட்டு வையுங்க..!:-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ப்ளீஸ் எஸ்.கே சார்!

கமெண்டையாவது விட்டு வையுங்க..!:-)

எஸ்.கே said...

101 டால்மேஷன்ஸ்!
Beethovan
Eight Below

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடநாதாரிகளா...... இதுக்கு ஏன்யா இப்படி......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// எஸ்.கே said...
தங்கள் பார்வை நியாயமானதாகவும் நடுநிலையாகவும் சீராகவும் உள்ளது! வாழ்த்துக்கள்!////////

போட்டிருக்கும் கண்ணாடி அப்படி.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வைகை உங்க சுய சரிதை ரொம்ப நல்லா இருந்தது. நீங்க,மாணவன், வெறும்பய .. மிச்சம் 15+ யாரு?////////

வெறும்பய ஒரு ஆளே 16 பேருக்கு சமம்னு நேத்து நீதானே சொன்னே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////எஸ்.கே said...
ப்ளீஸ் ரமேஷ் சார்!

கமெண்டையாவது விட்டு வையுங்க..!:-)//////

விடுங்க எஸ்கே இதையாவது பண்ணட்டும்.......

karthikkumar said...
This comment has been removed by the author.
karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தங்கள் பார்வை நியாயமானதாகவும் நடுநிலையாகவும் சீராகவும் உள்ளது! வாழ்த்துக்கள்!

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////எஸ்.கே said...
ப்ளீஸ் ரமேஷ் சார்!

கமெண்டையாவது விட்டு வையுங்க..!:-)//////

விடுங்க எஸ்கே இதையாவது பண்ணட்டும்...////:))

Unknown said...

//எனக்கு மகிழ்ச்சியும் பயமும் மாறி மாறி வந்தது...ஒரு மணிநேரம் அந்த நடுநிசி நாய்களை ரசித்துவிட்டு வீடு திரும்ப ஆரம்பித்தேன்!//

எதுக்கு மகிழ்ச்சி..

Unknown said...

//தங்கள் பார்வை நியாயமானதாகவும் நடுநிலையாகவும் சீராகவும் உள்ளது! வாழ்த்துக்கள்!//

இதுக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம் # ட்வுட்.

Unknown said...

தங்கள் பார்வை நியாயமானதாகவும் நடுநிலையாகவும் சீராகவும் உள்ளது! வாழ்த்துக்கள்!

எல்லோரும் சொல்றாங்க... நாமும் சொல்லிவைப்போம்..

செல்வா said...

//முடிவெடுத்து விட்டேனே தவிர என்றைக்கு என்று முடிவு செய்யவில்லை...பகலில் கண்டிப்பாக முடியாது! இரவு நேரம்தான் லாயக்கு..//

அதே நடுநிசி நாய்கள் .. அத எப்படி பகல்ல பாக்க முடியும் ? ஹி hi

செல்வா said...

//அதனால் கடிகாரத்துக்கு போட்டியாக நிமிடங்களை எண்ணிக்கொண்டிருந்தேன்!//

என்னே ஒரு வர்ணனை ..

செல்வா said...

//சரி....இதுக்கு ஏன் 18+ என்கிறீர்களா?.....நான் எண்ணியபோது நடுநிசி நாய்கள் பதினெட்டுக்கு மேல் இருந்தது...கரெக்ட்டாக தெரியவில்லை..அதனால்தான் 18+ என்று போட்டேன்! //

கண்டிப்பா ரொம்ப சரிதான் .. ஹி ஹி

Madhavan Srinivasagopalan said...

நா சொன்ன 18+ பதிவ இன்னும் படிக்கலையா நீங்க.. ?

NaSo said...

இதிலே ரமேஷ் பேர காணோம். அதனால் நான் வெளிநடப்பு செய்கிறேன்..

சி.பி.செந்தில்குமார் said...

சிரிப்புப்போலீஸ் ரமேஷ் மற்றும் அவரது ஆஃபீஸ் நண்பர்களை நாய்கள் அதுவும் நடு நிசி நாய்கள் என அவமானப்படுத்தியதால் நான் அவமானம் தாங்க முடியாமல்

ஒரு பதிவை டைப் பண்ணப்போறேன். ஹி ஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சி.பி.செந்தில்குமார் said...

சிரிப்புப்போலீஸ் ரமேஷ் மற்றும் அவரது ஆஃபீஸ் நண்பர்களை நாய்கள் அதுவும் நடு நிசி நாய்கள் என அவமானப்படுத்தியதால் நான் அவமானம் தாங்க முடியாமல்

ஒரு பதிவை டைப் பண்ணப்போறேன். ஹி ஹி///

me too..ஹி ஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25

இம்சைஅரசன் பாபு.. said...

டேய் யாருடா என் நண்பன் ரமேஷை கலாய்க்கிறது ...

இம்சைஅரசன் பாபு.. said...

//.பயம்..போன்ற கலவையான உணர்சிகள் வந்து போனது!//
நல்ல காலம் பயத்துல உச்ச ...கக்கா போனது எல்லாம் எழுதாம விட்டீங்களே

VELU.G said...

ஐயோ... ஐயோ

VELU.G said...

நான் பாத்தபோது 19 இருந்துச்சே..

ஓ அப்ப நீங்கதான் பாத்திட்டு இருந்தீங்களா.


ஹ ஹ ஹ ஹ ஹ ஹா

மாணவன் said...

தங்கள் பார்வை நியாயமானதாகவும் நடுநிலையாகவும் சீராகவும் உள்ளது! வாழ்த்துக்கள்!

எல்லோரும் சொல்றாங்க... நாமும் சொல்லிவைப்போம்..

:))

வினோ said...

முடியல... எப்படி தான் இப்படியோ..

TERROR-PANDIYAN(VAS) said...

@ALL

After a very lonnnnggggg time வணக்கமுங்கோ... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@வைகை

//ஆனால் இரவில் வீட்டை விட்ட வெளியில் சென்றால் காரணம் கேட்பார்கள்//

ரா பிச்சை எடுக்க போறேன் சொல்லு.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@வைகை

//அதனால் அவர்களுடன் பார்க்க கூச்சமாக இருந்தது..அதனால்தான் அவர்களைத்தவிர்த்தேன்!//

பிட்டி படம் பாக்க போற மாதிரியே பேசரான் பாரு.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@வைகை

//ஒரு மணிநேரம் அந்த நடுநிசி நாய்களை ரசித்துவிட்டு வீடு திரும்ப ஆரம்பித்தேன்!//

ஒரு!
நடுப்பகல் நாய்!
நடுநிசி நாய்களை!
ரசிக்கிறதேததத!!!

(ராஸ்கல்! உன்னை எங்க பார்த்தாலும் கல்லாலே அடிப்பேன். இதை வேற நான் நடுநிசில படிக்கிறேன்)

TERROR-PANDIYAN(VAS) said...

@வைகை

//நான் எண்ணியபோது நடுநிசி நாய்கள் பதினெட்டுக்கு மேல் இருந்தது..//

நீ, நான், ரமேஷ், பன்னிகுட்டி, இம்சை, மாணவன், எஸ்.கே, அருண், பிரசாத், கார்த்தி, செல்வா, சௌந்தர், நாகு, மாலுமி, வெறும்பய, தில்லுமுல்லு..... இல்லையே 16 தான வருது... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////TERROR-PANDIYAN(VAS) said...
@ALL

After a very lonnnnggggg time வணக்கமுங்கோ... :))//////////

ஆமா இவரு பெரிய அமெரிக்க ஜனாதிபதி, வணக்கம் சொல்லாம வரமாட்டாரு, ராஸ்கல், நட்ட நடுராத்திரில பேய் மாதிரி வந்துட்டு பேச்சப்பாரு...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////TERROR-PANDIYAN(VAS) said...
@வைகை

//நான் எண்ணியபோது நடுநிசி நாய்கள் பதினெட்டுக்கு மேல் இருந்தது..//

நீ, நான், ரமேஷ், பன்னிகுட்டி, இம்சை, மாணவன், எஸ்.கே, அருண், பிரசாத், கார்த்தி, செல்வா, சௌந்தர், நாகு, மாலுமி, வெறும்பய, தில்லுமுல்லு..... இல்லையே 16 தான வருது... :))//////

மச்சி வெறும்பய ஒரு ஆளே 16 பேருக்கு சமமாம்........

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//ஆமா இவரு பெரிய அமெரிக்க ஜனாதிபதி, வணக்கம் சொல்லாம வரமாட்டாரு, ராஸ்கல், நட்ட நடுராத்திரில பேய் மாதிரி வந்துட்டு பேச்சப்பாரு...? //

ராஸ்கல்!! நீ எப்போடா வந்த? அமெரிக்க ஜனாதிபதி வணக்கம் சொல்ல மாட்டாரு. Gud Morning தான் சொல்லுவாரு. எச்ச பாத்திரம் எல்லாம் கழுவி வச்சியா? உம் மொதலாலி திட்ட போறாரு... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//மச்சி வெறும்பய ஒரு ஆளே 16 பேருக்கு சமமாம்........//

இப்போ யாரு சாப்பிடர சாப்பாடு அளவு கேட்டா? :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

//ஆமா இவரு பெரிய அமெரிக்க ஜனாதிபதி, வணக்கம் சொல்லாம வரமாட்டாரு, ராஸ்கல், நட்ட நடுராத்திரில பேய் மாதிரி வந்துட்டு பேச்சப்பாரு...? //

ராஸ்கல்!! நீ எப்போடா வந்த? அமெரிக்க ஜனாதிபதி வணக்கம் சொல்ல மாட்டாரு. Gud Morning தான் சொல்லுவாரு. எச்ச பாத்திரம் எல்லாம் கழுவி வச்சியா? உம் மொதலாலி திட்ட போறாரு... :)///////

நான் போனாத்தானே வர்ரதுக்கு, நாந்தான் இங்கேயே பாய் விரிச்சி படுத்துட்டேனே? மச்சி பாத்திரம் கழுவுறது இன்னிக்கு உன் ஷ்ஃப்ட்டு மறந்துட்டியா? மொதலாளி கூப்புடறாரு பாரு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

//மச்சி வெறும்பய ஒரு ஆளே 16 பேருக்கு சமமாம்........//

இப்போ யாரு சாப்பிடர சாப்பாடு அளவு கேட்டா? :)////////

பாடி வெயிட்ட வெச்சிப் பாத்தாலும் அப்படித்தான் வருது.............

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

என்னடா ப்ளாக் வச்சி இருக்க நீ... 242 கமெண்ட். இதுக்கு மேல அங்க மனுஷன் கமெண்ட் போட முடியுமா. வேற எவனாவது இளிச்சவாயன் மாட்ரேஷன் போடாம ப்ளாக் வச்சி இருந்தா சொல்லு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

என்னடா ப்ளாக் வச்சி இருக்க நீ... 242 கமெண்ட். இதுக்கு மேல அங்க மனுஷன் கமெண்ட் போட முடியுமா. வேற எவனாவது இளிச்சவாயன் மாட்ரேஷன் போடாம ப்ளாக் வச்சி இருந்தா சொல்லு.//////

242 கமெண்ட்டு இருந்தா து உன்ன என்ன பண்ணுது? வேற இளிச்சவாயன் வேணுமா உனக்கு? எல்லாப்பயலும் வெவரமாயிட்டான், இனி அப்படி ஒரு ஆளா இனி கண்டுபிடிச்சித்தான் கொண்டுவரனும்.........

Unknown said...

அருமை

சி.பி.செந்தில்குமார் said...

>>பன்னிக்குட்டி ராம்சாமி said... 44

//////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

என்னடா ப்ளாக் வச்சி இருக்க நீ... 242 கமெண்ட். இதுக்கு மேல அங்க மனுஷன் கமெண்ட் போட முடியுமா. வேற எவனாவது இளிச்சவாயன் மாட்ரேஷன் போடாம ப்ளாக் வச்சி இருந்தா சொல்லு.//////

242 கமெண்ட்டு இருந்தா து உன்ன என்ன பண்ணுது? வேற இளிச்சவாயன் வேணுமா உனக்கு? எல்லாப்பயலும் வெவரமாயிட்டான், இனி அப்படி ஒரு ஆளா இனி கண்டுபிடிச்சித்தான் கொண்டுவரனும்.........


ஏன்? நான் இல்லையா?

குறையொன்றுமில்லை. said...

நடு நிசி நாய்களை நல்லா பாத்திருக்கீங்க அதுக்குனு ஒரு பதிவு வேர. என்னத்தைச்சொல்ல.

குறையொன்றுமில்லை. said...

நடு நிசி நாய்களை நல்லா பாத்திருக்கீங்க அதுக்குனு ஒரு பதிவு வேர. என்னத்தைச்சொல்ல.

இராஜராஜேஸ்வரி said...

அருமை!!!!!!!!!!!!!!!!!!