Friday, December 16, 2011

டெரர் கும்மி விருதுகள் 2011 - போட்டி தேதி, விதிமுறைகள்.






அனைவருக்கும் வணக்கம்,

கடந்தவாரம் ஞாயிற்று கிழமை எங்கள் டெரர் கும்மியின் ஓராண்டு நிறைவை ஒட்டி நாங்கள் அறிவித்த டெரர் கும்மி விருதுகள் 2011 முயற்சிக்கு நீங்கள் அளித்துவரும்  ஆதரவிற்கு மிகவும் நன்றி. அதோடு  எங்கள் டெரர் கும்மி இரண்டாம் ஆண்டில் அடிவைப்பதற்கும் வாழ்த்துக்கள் கூறிய  சொன்ன அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.ஒருவித தயக்கத்துடன்தான் இந்த விருதுகள் அறிவிப்பை அறிவித்தோம்,ஆனால் நீங்கள் தந்த/தந்துகொண்டிருக்கும் ஆதரவு எங்களை மேலும் உற்சாகப்படுத்துகிறது. பல நண்பர்கள் கருத்துரைகளிலும், மின் மடலிலும் மற்றும் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு தங்கள் யோசனைகளையும் சொன்னார்கள் அவர்களுக்கு எங்களது நன்றிகள். பலபேர் எங்களிடம் சொன்ன ஒரு யோசனை விருதுகளின் பிரிவை அதிகப்படுத்துவது,  அதோடுமட்டுமல்லாது  அவர்களே பல பிரிவுகளையும் சொன்னார்கள்.  கண்டிப்பாக அவற்றையெல்லாம் புறந்தள்ளாமல் எடுத்துக்கொள்கிறோம்.

எங்கள் ஆண்டு நிறைவையே நாங்கள் மறந்திருந்த வேளையில் திடீரென்று நண்பர்களால் நினைவுபடுத்தப்பட்டு அந்த சந்தோசத்தை உங்களோடு பகிரவே இதை ஏற்பாடு செய்தோம். கால அவகாசம் குறைவாக இருந்ததால் குறைவாகச் செய்தாலும் நிறைவாக செய்யவேண்டும் என்பதற்காக இந்த வருடம் இந்த பிரிவுகளை மட்டும் முடிவு செய்தோம். இனி வரும் ஆண்டுகளில் உங்கள் யோசனைப்படியே இன்னும் பிரமாண்டமாய் செய்வதற்கு எங்கள் முயற்சிகள் தொடரும் என்று இந்த வேளையில் சொல்லிக்கொள்கிறோம். போட்டிக்கு உங்கள் பதிவுகளை இணைப்பதற்கென்று எங்கள் நடுவர்களின் யோசனைகளுடன் சில விதிமுறைகளை வகுத்துள்ளோம். தகுதியான பதிவை தேர்ந்தெடுக்க மட்டுமே இந்த விதிமுறைகள் என்ற உங்கள் புரிதலுக்கு நன்றி.

போட்டிக்கான விதிமுறைகள்.

1. போட்டிக்கு இணைக்கப்படும் பதிவுகள் முழுக்க முழுக்கத் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும்ஆகவே தமிழில் எழுதும்  அனைத்துப்  பதிவர்களும்  இதில் கலந்துகொள்ளலாம்.

2. இணைக்கப்படும் பதிவுகள் 2011 ஜனவரி முதல் தேதியில் இருந்து 2011 டிசம்பர் 31 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் வெளிவந்ததாக இருக்கவேண்டும்.

3. இணைக்கப்படும் பதிவுகள் போட்டியாளர் தன் சொந்த வலைப்பதிவில் எழுதியதாக இருக்கவேண்டும், குழும பதிவுகளுக்கு அனுமதி இல்லை மேலும் குழுமமாக செயல்படும் தளத்தில் வெளிவந்த தனிநபர் பதிவுகளுக்கும் அனுமதி இல்லை.


4. ஒரு போட்டியாளர் ஒரு பிரிவுக்கு ஒரு பதிவு மட்டுமே இணைக்கலாம். அதிக பட்சமாக மூன்று  பிரிவுகளுக்கு தங்கள் பதிவுகளை இணைக்கலாம்.


5. போட்டியாளரின் விபரங்கள் நடுவர்களுக்கு கொடுக்கப்படமாட்டாது, பதிவுகள் மட்டுமே நடுவர்களின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்.

6. இணைக்கப்பட்ட பதிவுகளை பற்றியோ அல்லது மற்ற பதிவுகள் பற்றிய விபரங்கள் அறியவோ டெரர் கும்மி உறுப்பினர்களுடன் எந்த தொடர்பும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

7. போட்டியாளர்கள் போட்டி சம்பந்தமாக நடுவர்கள் யாரையும் தொடர்பு கொண்டால் போட்டியில் இருந்து உடனடியாக எந்தவித முன்னறிவிப்பும் இன்றி போட்டியிலிருந்து நடுவர்களால் நீக்கப்படுவார்கள்.

8. போட்டியாளர்கள் தங்கள் சொந்தப் பதிவை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும், மற்ற தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட பகிர்வுகள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது.

9. ஒரு நபருக்கு அதிகபட்சமாக 2 வலைப்பூக்களை மட்டுமே அனுமதிக்கபடும், வலைப்பூக்கள் நவம்பர் 30, 2011 க்கு முன்பு தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.

10.  புதுமுக பதிவர் பிரிவிற்கு இணைக்கப்படும் வலைத்தளங்கள்  2011 ஆம் வருடம் தொடங்கப்பட்டதாக இருக்க வேண்டும்.  மேலும் சம்பந்தப்பட்ட பதிவர் வலையுலகிற்கும் புதியவராக இருத்தல் வேண்டும், ஏற்கனவே வலையுலகில் எழுதிகொண்டிருக்கும் பதிவர்கள் கடந்த வருடத்தில் புதிதாக ஒரு வலைத்தளம் உருவாக்கியிருந்தால் அது புதுமுக பதிவர் பிரிவில் ஏற்றுக்கொள்ளபடமாட்டாது.

11. புதுமுக பதிவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்கள் 3 பொது பிரிவுகளில் தலா ஒரு பதிவையும் புதுமுகபிரிவில் தங்கள் சிறந்த மூன்று பதிவுகளையும் இணைக்க அனுமதிக்கப்படுகிறது. அதாவது புதுமுக பதிவர்கள் மட்டும் அதிகப்ட்சமாக 4 பிரிவுகளில் கலந்து கொள்ளலாம்.

12. இணைக்கும் பதிவுகளில் கூடுமானவரை தீவிர தனிமனித தாக்குதல், ஜாதி மத துவேசம், ஊனமுற்றவர்களை கிண்டல் செய்வது இவையெல்லாம் இல்லாமல் இருப்பது நலம்.

13. ஒருமுறை இணைத்த பதிவுகளை மறுபடியும் மாற்ற இயலாது. ஆகவே சரியான பிரிவில் சரியான பதிவை இணைத்துவிடுங்கள்.

14. போட்டிக்கு இணைப்பதற்கான சுட்டி டிசம்பர் 26ம் தேதி உங்களிடம் அறிமுகப்படுத்தப்படும், அன்றிலிருந்து ஜனவரி 6 ம் தேதி வரை இணைக்கப்படும் பதிவுகள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

15. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு புத்தக கூப்பனாக மட்டுமே வழங்கப்படும், ஒவ்வொரு பிரிவுக்கும் முதல் பரிசு ரூ.600 - க்கான கூப்பனும், இரண்டாம் பரிசு ரூ.400 - க்கான கூப்பனும் தபாலில் அனுப்பப்படும்.  ஹால் ஆஃப் ஃபேம் பதிவருக்கு மட்டும் ரூ.1000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும். வெற்றிபெறும் வெளிநாட்டில் உள்ள பதிவர்கள்  கண்டிப்பாக உள்ளூர் முகவரி தரவேண்டும். புத்தகங்கள் எப்படி வாங்குவது என்பதை முடிவு அறிவித்தவுடன் சொல்லுகிறோம்.

16. போட்டி சம்பந்தமான எந்த முடிவையும் முன்னறிவிப்பின்றி மாற்றவோ நிறுத்தவோ டெரர்கும்மிக்கு முழு அதிகாரம் உள்ளது. 

இந்த வேளையில்மற்றொன்றையும்  சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம், இந்த போட்டியில் நடுவர்களாக செயல்படும் யாரும் போட்டிக்கு தங்கள் பதிவை இணைக்கமாட்டார்கள். அனைத்து நடுவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை இங்கு நன்றி சொல்லிக்கொள்கிறோம். விதிமுறைகளில் அல்லது போட்டி சம்பந்தமான ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தயங்காமல் கருத்துரையிலோ அல்லது terrorkummi@gmail.com என்ற இந்த மின்னஞ்சல் முகவரிக்கு  தொடர்புகொள்ளுங்கள். போட்டியில் கலந்துகொள்ளப்போகும் அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறிக்கொண்டு விரைவில் பதிவுகளை  இணைப்பதற்கான அறிவிப்போடு உங்களை சந்திக்கிறோம்.



62 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கலந்துகொள்ள போகும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

follow up

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கலந்து கொண்டு வெற்றி பெற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். ஏதேனும் சந்தேகம் இருப்பின் கமெண்ட்டிலும் கேட்கலாம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கலந்து கொண்டு வெற்றி பெற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். ஏதேனும் சந்தேகம் இருப்பின் கமெண்ட்டிலும் கேட்கலாம்.//

போட்டி முடிவுல சோறு போடுவீங்களா சார்?

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கலந்துகொள்ள போகும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்//

ஏன்? உனக்கு நண்பரா இல்லைனா வாழ்த்து சொல்ல மாட்டியா? :-)

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

கலந்து கொண்டு வெற்றி பெற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். ஏதேனும் சந்தேகம் இருப்பின் கமெண்ட்டிலும் கேட்கலாம்.//

போட்டி முடிவுல சோறு போடுவீங்களா சார்?//

உன்னைய மாதிரி ஆளுகளுக்கு முதுகுல கோடு போடுவோம் சார் :-))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கலந்துகொள்ள போகும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்//

ஏன்? உனக்கு நண்பரா இல்லைனா வாழ்த்து சொல்ல மாட்டியா? :-)//

யாதும் ஊரே
யாவரும் நண்பர்களே

செல்வா said...

கலந்துகொள்ள போகும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

Unknown said...

அய்யா ரூல்ஸ் போட்டுட்டீங்களா...!

மாணவன் said...

பதிவுப் போட்டியில் கலந்துகொள்ளப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்! :-)

வெளங்காதவன்™ said...

கலந்துகொ(ல்ல)ள்ளப் போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

#அந்த புத்தகப் பரிசுக் கூப்பன்கள், இங்கே ஏற்றுக்கொள்ளப் படும்.... முப்பது சதம் கழிவு போக, மீதிப் பணம் செட்டில் செய்யப்படும்....

:-)

Unknown said...

வாழ்த்துக்கள்

வெளங்காதவன்™ said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கலந்து கொண்டு வெற்றி பெற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். ஏதேனும் சந்தேகம் இருப்பின் கமெண்ட்டிலும் கேட்கலாம்.//

போட்டி முடிவுல சோறு போடுவீங்களா சார்?
///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

இராஜராஜேஸ்வரி said...

அருமையான போட்டியை சிறப்பாக நடத்தும்"டெரர் கும்மி க்கு வாழ்த்துக்கள்..

MANO நாஞ்சில் மனோ said...

நடத்துங்கய்யா நடத்துங்க நானும் கலந்துக்குறேன்...!!!

ஸ்ரீராம். said...

மூன்றாவது விதியின் படி எங்கள் ப்ளாக்கை எதில் சேர்ப்பீர்கள்?

ஸ்ரீராம். said...

கலந்து கொள்ளப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள். நடத்தும் உங்களுக்கு 'எங்கள்' வாழ்த்துகள், பாராட்டுகள்.

அனுஷ்யா said...

மிக்க நன்றி... கூடவே வாழ்த்துக்களும்...

Admin said...

நன்றி..

Anonymous said...

நாங்களும் கலந்துக்கலாமா?

உங்க கருத்த சொல்லுங்க

காதல் - காதல் - காதல்

தமிழ்வாசி பிரகாஷ் said...

ரெடி, ஸ்டார்ட், விடு ஜூட்....ஹி ஹி...

NaSo said...

கலந்துகொள்ள போகும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

Yoga.S. said...

வணக்கம்,போட்டி விதிமுறைகள் சரியானவையே!சொந்தத்தில் வலைப்பூ வைத்து,காத்திரமான பதிவிடும் அனைத்துப் பதிவர்களும் கலந்து சிறப்பிக்க வாழ்த்த வயதில்லை,அதனால்,ஆண்டவன் ஆசீர்வாதம் கிட்ட வேண்டுகிறேன்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Online Works For All has left a new comment on the post "டெரர் கும்மி விருதுகள் 2011 - போட்டி தேதி, விதிமுற...":

World No.1 Money Making Site. 100% Without Investment Job.

Visit Here: http://adf.ly/4FKbj///

யார்டா நீங்க. சாவடிக்கிரானுகளே!!!

அருண் பிரசாத் said...

இங்க கமெண்ட் போட்டா என்ன ஆகும்?

மாணவன் said...

// அருண் பிரசாத் said...
இங்க கமெண்ட் போட்டா என்ன ஆகும்?//

டெரர்கும்மிலேருந்து வந்து புடிச்சுகிட்டு போய்டுவாங்க மாம்ஸ்... :-)

அருண் பிரசாத் said...

ஓ... இவனுங்கதான் புள்ள புடிக்கற கோஷ்டியா?...

டிராகன் said...

இதில் டெர்ரர் பாண்டியனின் காவிய படைப்பு ஏதாவது இடம் பெறுமா ?

டிராகன் said...

தமிழில் அழாகாக எழுதும் அண்ணன் ,இனமானா சிங்கம் ,இம்சை அரசன் அவர்களுக்கு ''' தமிழ்கொண்டான் '''என்ற விருதை டெர்ரர் கும்மி கௌரவ பரிசாக அளிக்க வேண்டும் வலியுறுத்த படுத்தப்படும் என்று அரசாங்க செய்தி குறிப்பு கூறுகிறதே !! அது உண்மையா ?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சந்தேகமே இல்ல....

நாங்க தயாராக இருக்கிறோம்....

குறையொன்றுமில்லை. said...

நான் குறையொன்றுமில்லை ப்ளாக் கடந்த ஒருவருடமாக எழுதி வருகிரேன்
நகைச்சுவை,, கதைகள், பயண அனுபவங்கள் என்று மூன்று பிரிவிலும் என்
என் பதிவுகளை இணைக்க முடியுமா. சிறு கதை சில சமயம் 2, 3, பகுதிகளாக
போட்டிருக்கேன். அதையும் அனுப்பலாமா லிங்க் மட்டும் அனுப்பினால் போதுமா?
பயண அனுபவங்களும் நிறைய பகுதிகளில் பகிர்ந்து கொண்டிருக்கேன். எல்லா
பகுதிகளின் லிங்க் அனுப்பனுமா? என் அனுபவங்கள் பற்றியும் நிறைய எழுதி இருக்கேன்
அதை எப்படி பகிர்ந்து கொள்ள ? கொஞ்சம் தெளிவு படுத்தமுடியுமா? என் மெயில்
echumi@gmail.com

நீங்க கொடுத்திருக்கும் மைல் ஐடியில் என் மெசேஜ் போக மாட்டேங்குது அதனால தான் இங்க சொல்ரேன்

வைகை said...

ஸ்ரீராம். said...
மூன்றாவது விதியின் படி எங்கள் ப்ளாக்கை எதில் சேர்ப்பீர்கள்?////

வணக்கம், மூன்றாவது விதியின்படி உங்கள் தளங்கள் குழுமமாகத்தான் கணக்கில் எடுக்கப்படும், கண்டிப்பாக அடுத்தவருடம் குழுமங்களுக்கும் தனி பிரிவை ஏற்படுத்துகிறோம். உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள். புரிதலுக்கு நன்றி :-)

வைகை said...

@ லக்ஷ்மி அம்மா

/////நான் குறையொன்றுமில்லை ப்ளாக் கடந்த ஒருவருடமாக எழுதி வருகிரேன்
நகைச்சுவை,, கதைகள், பயண அனுபவங்கள் என்று மூன்று பிரிவிலும் என்
என் பதிவுகளை இணைக்க முடியுமா.////

கண்டிப்பாக எந்த பிரிவை வேண்டுமானாலும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் ( 9 & 10 தவிர ) ஆனால் அதிகபட்சம் மூன்று பிரிவுகளில் மட்டும்தான் உங்கள் பதிவுகளை இணைக்கலாம்.



/////சிறு கதை சில சமயம் 2, 3, பகுதிகளாக
போட்டிருக்கேன். அதையும் அனுப்பலாமா லிங்க் மட்டும் அனுப்பினால் போதுமா?/////

கண்டிப்பாக தொடர் கதைகளுக்கு அனுபதி இல்லை, ஒரு பிரிவுக்கு ஒரு லிங்க் மட்டும்தான் இணைக்கமுடியும், அவ்வாறுதான் நாங்கள் இணைக்கும் பக்கத்தை வடிவமைத்துள்ளோம்.அகவே ஒரே பதிவில் முடிந்த கதைகளை மட்டுமே இணைக்கமுடியும்.

////பயண அனுபவங்களும் நிறைய பகுதிகளில் பகிர்ந்து கொண்டிருக்கேன். எல்லா
பகுதிகளின் லிங்க் அனுப்பனுமா? என் அனுபவங்கள் பற்றியும் நிறைய எழுதி இருக்கேன்
அதை எப்படி பகிர்ந்து கொள்ள ?//////

இதிலும் அதுபோலதான்.. ஒரே ஒரு லிங்க் மட்டும்தான் இணைக்கமுடியும். அது உங்கள் அனுபவமோ அல்லது பயணக்கட்டுரையோ எதுவாக இருந்தாலும் உங்களுக்கு எது சிறந்த இடுகை என தோன்றுகிறதோ அந்த ஒரு இடுகையை மட்டும் இணையுங்கள்.

/////கொஞ்சம் தெளிவு படுத்தமுடியுமா? என் மெயில்////

உங்கள் சந்தேகங்கள் பலபேருக்கு தோன்றலாம்.. ஆகவே உங்கள் மெயிலுக்கு அனுப்பாமல் இங்கேயே பதில் சொல்கிறோம்.. இன்னும் இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள்... :-))

வைகை said...

எனக்கு பிடித்தவை said...
நாங்களும் கலந்துக்கலாமா?

உங்க கருத்த சொல்லுங்க///

தாராளமாக கலந்துக்கலாம்.. உங்களுக்காகத்தான் இந்த போட்டியே :-)

Unknown said...

Intha varusam.. pathugal kammiya thaan eluthi irukken..

irunthalum potti pootu parppom.. :-)

Potti sirappaga nadakka valthukkal..

சுதா SJ said...

சூப்பர்

TERROR-PANDIYAN(VAS) said...

பதிவுலகில் பாபு said..

//irunthalum potti pootu parppom.. :-) //

அடடா... இவரு தமிழ்ல எழுதி இருக்காரா இல்லை ஆங்கிலமா... யார்டா அங்க. ஆங்கிலத்தில் எழுதிய தமிழ் பதிவு செல்லாதுன்னு ரூல்ல சேருங்கபா... :)

TERROR-PANDIYAN(VAS) said...

துஷ்யந்தன் said...

// சூப்பர் //

என்ன ஒரு வார்த்தையில் முடிச்சிடிங்க.. :) இந்த பதிவு மிகவும் சூப்பராக இருக்கிறது. அப்படினு சொல்லனும். நன்றி.. :))

Madhavan Srinivasagopalan said...

//என்ன ஒரு வார்த்தையில் முடிச்சிடிங்க.. :) இந்த பதிவு மிகவும் சூப்பராக இருக்கிறது. அப்படினு சொல்லனும். நன்றி.. :)) //

விடுங்க பாஸ்..
நாமென்ன 'வார்த்தை விளையாட்டா' நடத்துறோம் ?

குறையொன்றுமில்லை. said...

சிறுகதையாவது ஒரு பகுதியில் முடிந்திருக்கும். பயணக்கட்டுரை, அனுபவ பகிர்வு எல்லாம் அப்படி ஒரு பகுதியில் அடங்காது. அனுபவம் , பயணம் ரெண்டும் ஒரே தலைப்பில் வருதே, நகைச்சுவகூட ஒரே பதிவில் சொல்லலாம். நிறைய பகுதிகள் எழுதி இருக்கும்போது ஒருபகுதி மட்டும் அனுப்பினா அதில் ஒரு முழுமையே இருக்காதே.

திண்டுக்கல் தனபாலன் said...

என்னையும் சேத்துக்கிவீங்களா?
என் வலையில்:
"நீங்க மரமாக போறீங்க..."

ad said...

சரி,எப்போ அறிவிப்பிங்க? லிங்க் மட்டும் அனுப்பினா போதுமா?அல்லது pdf போன்ற கோப்புக்களாக மாற்றி மின்னஞ்சலில் அனுப்பவேண்டுமா?

ad said...
This comment has been removed by the author.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.பி.ஜெ.கேதரன் said...

சரி,எப்போ அறிவிப்பிங்க? லிங்க் மட்டும் அனுப்பினா போதுமா?அல்லது pdf போன்ற கோப்புக்களாக மாற்றி மின்னஞ்சலில் அனுப்பவேண்டுமா?
//

வருகைக்கு நன்றி. விரைவில் பதிவுகளை இணைப்பது எப்படி என தொடர்பு கொள்கிறோம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

திண்டுக்கல் தனபாலன் said...

என்னையும் சேத்துக்கிவீங்களா?
என் வலையில்:
"நீங்க மரமாக போறீங்க..."//

வாங்க வாங்க

வைகை said...

Lakshmi said...
சிறுகதையாவது ஒரு பகுதியில் முடிந்திருக்கும். பயணக்கட்டுரை, அனுபவ பகிர்வு எல்லாம் அப்படி ஒரு பகுதியில் அடங்காது. அனுபவம் , பயணம் ரெண்டும் ஒரே தலைப்பில் வருதே, நகைச்சுவகூட ஒரே பதிவில் சொல்லலாம். நிறைய பகுதிகள் எழுதி இருக்கும்போது ஒருபகுதி மட்டும் அனுப்பினா அதில் ஒரு முழுமையே இருக்காதே.///

வணக்கம் அம்மா,
நீங்கள் சொல்வதுபோல் பல பகுதிகளாக உள்ள பதிவுகளை இணைப்பதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளது மேலும் நடுவர்களுக்கும் அது கொஞ்சம் கடினமாக தோன்றலாம், அதனால்தான் ஒரே பகுதியாக வந்த பதிவுகளை மட்டும் இணைக்கும்படி செய்திருக்கிறோம். முடிந்தவரை ஒரே பகுதியில் வந்த பதிவுகளை தேர்ந்தெடுத்து இணையுங்கள். புரிதலுக்கு நன்றி.

சம்பத்குமார் said...

வணக்கம் நண்பர்களே..

புதுமுகப்பதிர்வராக 4 பிரிவுகளில் பதிவுகளை இணைக்கப்போவதில் மிக்க மகிழ்ச்சி..

இணைப்பு சுட்டி வரும் நாளை எதிர்பார்த்திருக்கிறேன் (டிசம்பர் 26)

உங்களது முயர்ச்சி வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்

நன்றி
சம்பத்குமார்

அக்கப்போரு said...

அண்ணே நானும் ஒரு ப்ளாக் வச்சுருக்கேன் ( நம்புணே). ஆனா இதுல எப்டி இணைக்கிறதுநு தெரியல. கொஞ்சம் சொல்லுனே

என்றும் அன்புடன்
அக்கப்போரு ( S.S.L.C. - மூன்றாம் ஆண்டு)

சி.பி.செந்தில்குமார் said...

கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்.. லக்‌ஷ்மி மேடம் கேட்ட சந்தேகம் நிறைய பேருக்கு தோன்றும், உடனடி பதில் கொடுத்து அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்தமைக்கு வைகைக்கு ஸ்பெஷல் பாராட்டு.. போட்டியின் விதிகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இருக்கு

அதே போல் ஒரே தலைப்பில் பலர் எழுதும் தொடர் பதிவுக்கு இணைக்கலாமா? என்பதையும் தெளிவு படுத்தி விடுங்கள்

என் தனிப்பட்ட கருத்து அதில் சுவராஸ்யம் குறைவு என்பதால் + ரிப்பீட்டாக ஒரே மாதிரி வரும் என்பதால் நடுவர்கள் கடுப்பாகக்கூடும்

இது என் தனிப்பட்ட கருத்தே

டெரர் கும்மி குரூப் நண்பர்கள் தங்கள் நிலைப்பாட்டை தெளிவு படுத்தவும்

சி.பி.செந்தில்குமார் said...

<>>இணைக்கும் பதிவுகளில் கூடுமானவரை தீவிர தனிமனித தாக்குதல், ஜாதி மத துவேசம், ஊனமுற்றவர்களை கிண்டல் செய்வது இவையெல்லாம் இல்லாமல் இருப்பது நலம்.
\

குட். அதே பொல ஆபாசம் தவிர்க்கவும் என்பதை நம் ஆட்கள்க்கு சொல்லவே தேவை இல்லை

சி.பி.செந்தில்குமார் said...

>>பதிவுலகில் பாபு said...

Intha varusam.. pathugal kammiya thaan eluthi irukken..

irunthalum potti pootu parppom.. :-)

Potti sirappaga nadakka valthukkal..


ராமநாராயனன் மாதிரி வத வதன்னு படம் எடுக்காம மணீரத்னம், ஷங்கர் எப்பவாவ்து படம் எடுத்து ஹிட் தர்லையா? பாபு, நாம இணைக்கப்போவது 3 தானே? சியர் அப்

சி.பி.செந்தில்குமார் said...

டெரர் கும்மியில் உள்ள நண்பர்கள் போட்டியில் பங்கு கொள்ளக்கூடாது என்பதில் உள்ள நடைமுறை சிக்கல் எனக்குப்புரிகிறது, தகுதியான படைப்பாக இருந்தாலும் உள் ஆளூங்களூக்கே குடுக்கறாங்க என்ற விமர்சனத்தை தவிர்க்க நினைக்கறீங்க, ஆனாலும் இதனால் குரூப்பில் உள்ள பல திரமைசாலிகள் குறிப்பாக கோமாளி செல்வா போன்றவர்கள் வாய்ப்பை இழக்கிறார்கள்

எனவே முடிவை மறு பரிசீலனை செய்யலாம், அதாவது நடுவர்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவிக்கலாம்.

இதுவும் என் தனிப்பட்ட கருத்தே

வைகை said...

அக்கப்போரு said...
அண்ணே நானும் ஒரு ப்ளாக் வச்சுருக்கேன் ( நம்புணே). ஆனா இதுல எப்டி இணைக்கிறதுநு தெரியல. கொஞ்சம் சொல்லுனே//

நம்பிட்டோம்ண்ணே... 26-ம் தேதி வரை காத்திருங்கண்ணே.. விபரமா சொல்றோம் :-))

வைகை said...

சம்பத் குமார் said...
வணக்கம் நண்பர்களே..

புதுமுகப்பதிர்வராக 4 பிரிவுகளில் பதிவுகளை இணைக்கப்போவதில் மிக்க மகிழ்ச்சி..

இணைப்பு சுட்டி வரும் நாளை எதிர்பார்த்திருக்கிறேன் (டிசம்பர் 26)

உங்களது முயர்ச்சி வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்///

நீங்கள் பங்குபெறுவதில் எங்களுக்கும் மகிழ்ச்சிதான்,
வாழ்த்துக்களுக்கு நன்றி :-)

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்.. லக்‌ஷ்மி மேடம் கேட்ட சந்தேகம் நிறைய பேருக்கு தோன்றும், உடனடி பதில் கொடுத்து அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்தமைக்கு வைகைக்கு ஸ்பெஷல் பாராட்டு.. போட்டியின் விதிகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இருக்கு

அதே போல் ஒரே தலைப்பில் பலர் எழுதும் தொடர் பதிவுக்கு இணைக்கலாமா? என்பதையும் தெளிவு படுத்தி விடுங்கள்

என் தனிப்பட்ட கருத்து அதில் சுவராஸ்யம் குறைவு என்பதால் + ரிப்பீட்டாக ஒரே மாதிரி வரும் என்பதால் நடுவர்கள் கடுப்பாகக்கூடும்

இது என் தனிப்பட்ட கருத்தே

டெரர் கும்மி குரூப் நண்பர்கள் தங்கள் நிலைப்பாட்டை தெளிவு படுத்தவும்///

நன்றி சிபி,
ஒரே பகுதியாக இருக்கும் எந்த தலைப்பிலான பதிவுகளையும் கண்டிப்பாக இணைக்கலாம், தங்களுடைய எந்தப்பதிவை எந்தப்பிரிவில் இணைப்பது போன்றவை முழுக்க முழுக்க போட்டியாளர்களின் விருப்பம். இணைக்கப்படும் ஏனென்றால் போட்டியாளர்கள் தங்களுடைய சிறந்த பதிவையே இணைக்க விரும்புவார்கள், தொடர்பதிவு தலைப்பில் எழுதிய பதிவுகள் அவர்களுக்கு சிறந்ததாக தெரிந்தால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. பதிவுகள் விதிமுறைகளுக்கு ஒத்து இருந்தால் எங்களுக்கும் மகிழ்ச்சிதான். :-))

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
<>>இணைக்கும் பதிவுகளில் கூடுமானவரை தீவிர தனிமனித தாக்குதல், ஜாதி மத துவேசம், ஊனமுற்றவர்களை கிண்டல் செய்வது இவையெல்லாம் இல்லாமல் இருப்பது நலம்.
\

குட். அதே பொல ஆபாசம் தவிர்க்கவும் என்பதை நம் ஆட்கள்க்கு சொல்லவே தேவை இல்லை//

கண்டிப்பாக.. அதனால்தான் அந்த வரியை தவிர்த்தோம் :-))

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
டெரர் கும்மியில் உள்ள நண்பர்கள் போட்டியில் பங்கு கொள்ளக்கூடாது என்பதில் உள்ள நடைமுறை சிக்கல் எனக்குப்புரிகிறது, தகுதியான படைப்பாக இருந்தாலும் உள் ஆளூங்களூக்கே குடுக்கறாங்க என்ற விமர்சனத்தை தவிர்க்க நினைக்கறீங்க, ஆனாலும் இதனால் குரூப்பில் உள்ள பல திரமைசாலிகள் குறிப்பாக கோமாளி செல்வா போன்றவர்கள் வாய்ப்பை இழக்கிறார்கள்

எனவே முடிவை மறு பரிசீலனை செய்யலாம், அதாவது நடுவர்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவிக்கலாம்.

இதுவும் என் தனிப்பட்ட கருத்தே//

கருத்துக்கு நன்றி சிபி,
இந்த முடிவு தீவிரமாக யோசித்து நண்பர்களின் ஒப்புதலுக்கு பிறகு எடுத்ததுதான்.. இதில் யாருக்கும் எந்த வருத்தமும் இல்லை, கண்டிப்பாக எங்களைவிட தகுதியானவர்களுக்குதான் பரிசு செல்லும் என்ற நம்பிக்கையில் எடுத்த முடிவுதான் இது.

செல்வாவ விடுங்க.. டெரர் பாண்டியனின் காவிய படைப்புகளையும் பாபுவின் காப்பிய படைப்புகளையும் இணைக்க முடியவில்லை என்பதில் தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தம்தான் :-))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

செல்வாவ விடுங்க.. டெரர் பாண்டியனின் காவிய படைப்புகளையும் பாபுவின் காப்பிய படைப்புகளையும் இணைக்க முடியவில்லை என்பதில் தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தம்தான் :-))//

மாடியில் இருந்து கீழே குதித்து குதித்து சிரித்தேன் :))

சி.பி.செந்தில்குமார் said...

>>ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

செல்வாவ விடுங்க.. டெரர் பாண்டியனின் காவிய படைப்புகளையும் பாபுவின் காப்பிய படைப்புகளையும் இணைக்க முடியவில்லை என்பதில் தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தம்தான் :-))//

மாடியில் இருந்து கீழே குதித்து குதித்து சிரித்தேன் :))

ஐ ஜாலி, இப்போ எந்த ஹாச்பிடல்ல நர்ஸ் கூட கட்லை?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@CP

யோவ் நான் ரொம்ப டீசண்டு தெரியுமா?

வெளங்காதவன்™ said...

தங்கங்களா!!!

அந்த லிங்க்க எப்பைய்யா கொடுப்பீங்க???

#நெறையப் பேரு குத்த வச்சு ஒக்காந்து இருக்காங்க சார்!!!!

Rathnavel Natarajan said...

நன்றி.
இன்று எனது மூன்று பதிவுகளை அனுப்பியிருக்கிறேன்.
வாழ்த்துகள்.