Wednesday, August 21, 2013

நெனப்புதான் பொழப்பை கெடுத்துச்சாம்..!


எங்களுக்கு ஒரு சில பொண்ணுங்ககிட்ட
பிடிக்காத ஒரு விஷயம் இருக்கு..

டெல்லி கற்பழிப்பு கேஸ்ல மாட்டினவனையும்.,
ரோட்ல அழகா ஒரு பொண்ணு போறப்ப
திரும்பி பார்க்கறவனையும் ஒரே தட்டுல
வெச்சி பேசுவாங்க..

நாயே., பேயே, பொறுக்கியேன்னு கவிதை,
கட்டுரை எல்லாம் எழுதி திட்டுவாங்க..

" ஒட்டு மொத்த பெண் இனத்தின் குரலாய்
ஒலிக்கிறது "-னு கமெண்ட் போட வேற
கெளம்பிருவாங்க நாலு பொண்ணுங்க..

இல்ல நாங்க தெரியாமத்தான் கேக்கறோம்..
உங்களுக்கு என்னதாம்மா பிரச்னை...??

நீங்க பியூட்டி பார்லர் போவீங்க.,
இல்ல வீட்லயே ஒரு மணி நேரம்
கண்ணாடி முன்னே நிப்பீங்க..
அழகழகா டிரஸ் வாங்கி போட்டுப்பீங்க..
ரோட்ல ஸ்டைலா நடந்து போவீங்க..

அட இந்த பொண்ணு அழகா இருக்கேன்னு
( உங்களை இல்ல.. உங்க கூட வர்ற பொண்ணை )
நம்ம பையன் திரும்பி பாத்துட்டா போதும்..

உடனே.. " பொறுக்கி, நாயேன்னு " திட்டுவீங்க..

உங்களுக்கு ஒண்ணு தெரியுமா..?

அவன் ரோட்ல புதுசா ஒரு பைக் போனாலோ.,
வோக்ஸ்வேகன் கார் போனாலோ கூடத்தான்
திரும்பி பார்ப்பான்..

ஏன்னா நாம எல்லோரும் அழகா இருக்கறதை
ரசிக்கிற மனதோட தான் இருக்கோம்..

ஒரு குழந்தை சிரிச்சா ரசிக்கிறோம்..
ஒரு அழகான பூவை பாத்தா ரசிக்கிறோம்..
ஒரு மயிலை பாத்தா ரசிக்கிறோம்..
ஒரு நாய்குட்டியை கூட ரசிக்கிறோம்..

ஆனா அழகான பொண்ணுங்கள பாக்கும்போது
மட்டும் பசங்க ஜென் மனநிலைக்கு போயிடணுமா..?

அவன் பேசினா ஜொள்ளு.,
நீங்க பேசினால் ப்ரெண்ட்லி.,
அவன் கைய பிடிச்சா பொறுக்கி
நீங்க கைய பிடிச்சா பீலிங்..

இது உங்களுக்கே ஓவரா இல்ல..

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்...

எங்களுக்கு தெரிஞ்ச வரை நிஜமாலுமே அழகா
இருக்குற எந்த பொண்ணும் பசங்க மேல
இப்படி இவ்ளோ கம்ப்ளெயிண்ட் சொல்றதில்ல..

( ஆண்கள் எல்லோருமே பொறுக்கிகள் என
நினைத்துக்கொண்டிருக்கும் சில லூசுகளுக்கு மட்டும் )

6 comments:

Unknown said...

சூப்பர் மொக்க இளவரசரே!ஒங்களப் போல நாலு பேரு,...........நோ,நீங்க ஒருத்தரே போதும் ஆண்வர்க்கம் தல நிமிந்து நடக்கும்!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Ay jolly today fight

வவ்வால் said...

யோ மெய்யாலுமே நீர் தான்யா லூசு,"நம்மளை பார்த்து பொறுக்கினு" ஃபீல் செய்துட்டா...அப்போ ரொம்ப்ப புடிச்சு போச்சுனு அர்த்தம்யா... இப்போ நாம செய்ய வேன்டியதுலாம் பொறுக்கீனு சொன்ன புள்ள அப்டிக்கா ,இப்டிக்கா போறப்போலாம் கொஞ்சம் பவ்யம் காட்டணோம் ,அதாவது தம் அடிச்சிட்டுட்டு இருந்தா பின்னாடி மறைச்சுக்கணும் ,அதாவது நாம நல்லவானா ஆகப்போறோம்னு சிக்னல் காட்டனும் ,அப்பாலிக்கா சிக்னல் சிங்க் ஆகி "திவ்யமா காரியம் கைக்கூடிறும்" :-))

Unknown said...

#நம்ம பையன் திரும்பி பாத்துட்டா போதும்..

உடனே.. " பொறுக்கி, நாயேன்னு " திட்டுவீங்க..#
அது யாரு நம்ம பையன் ?அவன் ரொம்ப நல்லவனாத்தான் இருக்கணும் !

karthik said...

இவளுங்க glamor னு எல்லாத்தையும் காட்டுவாங்க....ஆனா நாம மட்டும்.....பார்க்ககூடாது....

karthik said...

இவளுங்க glamor னு எல்லாத்தையும் காட்டுவாங்க....ஆனா நாம மட்டும்.....பார்க்ககூடாது....