Wednesday, March 13, 2013

குட்டிச் சுட்டீசும் குட்டிச் சாத்தான்களும்

குட்டிச் சுட்டீசில் நம்ம டெரர் கும்மி பக்கிகள் கலந்துக்கிட்டா எப்படி இருக்கும் என ஒரு கற்பனை...

அண்ணாச்சி: எலெய் நீ எத்தன படிக்கிற?

மாலுமி: நான் இன்னிக்கு குடிக்கவே இல்லை அங்கிள்

அண்ணாச்சி: எலேய் குடிகார பயலே. நீ குடிச்சியான்னு கேட்கலை என்ன படிக்கிறன்னு கேட்டேன்.

மாலுமி: 2 குவாட்டர்.

அண்ணாச்சி: என்னது 2 குவாட்டரா? அது என்னாலே படிப்பு?

மாலுமி: ரெண்டாங்கிளாஸ் படிக்கிறேன். கால் பரிச்சை முடிஞ்சிருக்கு. அதான் ரெண்டு குவாட்டர் ன்னு சொன்னேன்.

அண்ணாச்சி: அட நீ வருங்காலத்துல கவர்மெண்ட்டுக்கு பெரிய பிசினஸ் கொடுப்ப போல. சரி உங்களுக்கு பிடிச்ச உணவு எதும்மா?

மாலுமி: ஊறுகாய் அங்கிள்

அண்ணாச்சி: விளங்கும்லே!!. சரி பெரியாள் ஆனா நீ என்ன வேலைக்கு போவ?

மாலுமி: டாஸ்மாக்ல மேனேஜர். அப்பத்தான் சரக்கு ப்ரீயா கிடைக்கும்.
=================================
அடுத்து டெரர் பாண்டியன் வரார்.


அண்ணாச்சி: வா தம்பி. ஏன் அழுகுர?

டெரர் : உங்க ஸ்டுடியோல எல்லோருக்கும் பால் கொடுத்தாங்க. எனக்கு மட்டும் கொடுக்கலை.

அண்ணாச்சி: என்னாலே சொல்ற? உனக்கு மட்டும் கொடுக்கலையா? ஏன் தரலை?

டெரர் : நான் ஒட்டகப்பால் கேட்டேன் அங்கிள்

அண்ணாச்சி: எலெய் நாங்கெல்லாம் ஒட்டகத்த புத்தகத்துல பார்த்ததோட சரிதம்லே. உனக்கு ஒட்டக பால் கேக்குதா?
===============================
                                 
அடுத்து ரமேஷ் வரார்...

அண்ணாச்சி: உனக்கு ஸ்கூல்லையே பிடிச்ச மிஸ் யாரு?

ரமேஷ்: சத்துணவு மிஸ். அவங்கதான் எனக்கு ரெண்டு முட்டை எடுத்து தருவாங்க

அண்ணாச்சி:விளங்கும். சரி வேற மாதிரி கேக்குறேன். ஸ்கூல்லையே உனக்கு பிடிச்ச பீரியட்  சொல்லு பாப்போம்

ரமேஷ்: லஞ்ச் பீரியட். அந்த பீரியட்லதான் சாப்பிட முடியும்.

அண்ணாச்சி: எலெய் எவம்லே இவனை கூட்டிட்டு வந்தது. சரியான தின்னி பண்டாரமா இருப்பம் போல.

ரமேஷ்: பணியாரமா? எங்க அங்கிள்? எங்க எங்க?

அண்ணாச்சி: அவ். சரி உனக்கு அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமா?

ரமேஷ்: வேலைக்கார ஆண்டிதான் பிடிக்கும்...

அண்ணாச்சி: (ஷாக்காகி) என்னாலே சொல்ற.

ரமேஷ்: இல்ல அங்கிள். அம்மா அப்பா வேலைக்கு போயிடுவாங்கள்ள. வேலைக்கார ஆண்டிதான் எனக்கு காலைல பூஸ்ட்,பிஸ்கட், மதியம் பப்பு பூவா அப்புறம் ஜூஸ் இப்படி ஏதாச்சும் கொடுத்துக்கிட்டே இருப்பாங்க.

அண்ணாச்சி: உங்களை எல்லாம் வச்சி ப்ரோக்ராம் பண்றதுக்கு நான் சந்நியாசம் போயிடுவேன் போங்கலே நீங்களும் உங்க ப்ரோக்ராமும்.

10 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Welcome

vinu said...

ஒரு போட்டோவைப் புடிச்சாலும் புடிச்சீரு டேமேஜர் உம்ம அலப்பறைக்கு ஒரு அளவே இல்லியா???

NaSo said...

இதுல யாரு குட்டி சாத்தான்னு சொல்லவே இல்லை?

பெசொவி said...

super!

What about other partners of this blog?

Yoga.S. said...

வணக்கம்,ரமேசு!நல்லாருந்திச்சு!!!!இன்னும் சில பேர சேத்துருக்கலாமே?ஹி!ஹி!ஹீ!!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Yoga.S. said...

வணக்கம்,ரமேசு!நல்லாருந்திச்சு!!!!இன்னும் சில பேர சேத்துருக்கலாமே?ஹி!ஹி!ஹீ!!!!
//

next part will come soon

Prem S said...

கலக்கலு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Prem s said...

கலக்கலு
//

thanks

Yoga.S. said...

மீள்பதிவு?(சரக்கு ஸ்டாக் இல்ல!)

உலக சினிமா ரசிகன் said...

நண்பர்களே...
நாளை ‘பதிவர் பட்டாபட்டி’ மறைந்து ஏழாம் நாள்.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,
நாளை சனிக்கிழமை 18-05-2013 அன்று,
பதிவுலகம், பேஸ்புக் ஆகிய இணைய தளங்களில், பதிவுகள்,ஸ்டேட்டஸ்,கருத்துக்கள்
எதுவும் வெளியிடாமல்...
அன்னாருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என
இணைய நண்பர்கள் தீர்மானித்து உள்ளார்கள்.

அனைவரும் இச்செய்தியை தங்கள் தளங்களில் பகிருமாறு,
இணைய நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.